லேபிள்கள்

திங்கள், 5 நவம்பர், 2012

வெள்ளையான பற்கள் வேண்டுமா...? இதை சாப்பிடுங்க!!!


பற்கள் அழகாகவும், பளிச்சென்று வெள்ளையாக இருக்கவும் தினமும் இரு முறை பற்களை துலக்குவோம். இவ்வாறு பற்களை துலக்குவதால் வாயானது புத்துணர்ச்சியுடன் இருப்பதோடு, ஈறுகள் பலமடைந்து, வாயிலிருந்து வரும் துர்நாற்றம் இல்லாமலும் இருக்கும். ஆனால் இப்படி பற்களை துலக்கினால் மட்டும் தான் பற்கள் வெள்ளையாகுமா என்ன?

இல்லை, பற்கள் வெள்ளையாக பல வழிகள் இருக்கிறது. ஒன்று டூத் பிரஸ்-ஆல் அல்லது விரலால் பற்களை துலக்குவது. மற்றொன்று, இப்போது எங்காவது வெளியூருக்குச் செல்லும் போது சில சமயம் பிரஸை மறந்து விடுவோம். அப்போது ஒரு சில உணவுகளை உண்டாலே பற்களானது சுத்தமாகிவிடும். அது என்னென்ன உணவுகள் என்று படித்துப் பாருங்கள்...

ஸ்ட்ராபெர்ரி : இயற்கையாகவே ஸ்ட்ராபெர்ரி ஒரு டூத் பேஸ்ட். இதில் சிட்ரஸ் ஆசிட் இருக்கிறது. இதனால் இதை உண்பதால் பற்களானது சுத்தமாவதோடு, வெள்ளையாகவும் ஆகும். வேண்டுமென்றால் தினமும் ஸ்ட்ராபெர்ரியை நறுக்கி அதனை பற்களில் தேய்த்தால், பற்களானது சுத்தமாகும். பற்கள் வெள்ளையாக வேண்டுமென்றால், ஸ்ட்ராபெர்ரியை அரைத்து அத்துடன் பேக்கிங் சோடாவை சேர்த்து, பின் துலக்க வேண்டும்.

ஆப்பிள் : ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆன்ஸிடன்ட் பாக்டீரியாவை அழித்து, வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்குவதோடு, பற்களை வெள்ளையாக்குகிறது. ஆகவே தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிடுங்கள்.

எலுமிச்சை : எலுமிச்சையில் சிட்ரிக் ஆசிட் இருப்பதால், இது பற்களுக்கு மிகவும் சிறந்த ஒன்று. ஒரு துண்டு எலுமிச்சையை எடுத்து தினமும் பற்களை துலக்கினால், பற்களானது சுத்தமாகவும், பாக்டீரியாவை அழித்து, ஈறுகளை வலுவாக்கும். வேண்டுமென்றால் எலுமிச்சையுடன் சிறிது உப்பை தொட்டு தினமும், பல் துலக்குவதற்கு 5 நிமிடத்திற்கு முன் துலக்கி வந்தால், பற்கள் வலுவடைந்து, வெள்ளையாகும்.

சீஸ் : சீஸ் கூட ஒரு வகையான டூத் பேஸ்ட். எப்போது சீஸை உண்டாலும் வாயில் எச்சிலானது ஊற்றும். சொல்லப்போனால், உண்மையில் சீஸ் ஆனது எச்சிலை அதிகமாக சுரக்கும். அப்படி எச்சில் சுரந்தால் பற்களானது சுத்தமாவதுடன், வாயில் துர்நாற்றத்தை குறைத்து, கிருமிகளையும் அழிக்கும். ஆகவே இத்தகைய உணவுகளை உண்டு, பற்களை வெள்ளையாகவும், வாயை புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts