லேபிள்கள்

வியாழன், 21 ஜூன், 2012

கிச்சன் கிளினிக் ...வீட்டுக்குறிப்புக்கள்!


சமையல் அறையில் பாத்திரங்கள் கழுவும் 'சிங்க்எப்போதும் தண்ணீர் படும் இடம் என்பதால், பாசியும் அழுக்கும் படிந்திருக்கும். இதனால், ஒருவித நாற்றமும் கிளம்பும். இதைப் போக்க சிங்க் சுவர்களில், கிளீனரை ஊற்றி நன்றாகத் தேய்த்துக் கழுவவும். அதன் பின் ஒரு நாப்தலின் உருண்டையை சிங்கினுள் போட்டு வைத்தால் கரப்பான் போன்ற பூச்சித் தொல்லையை தவிர்க்க முடியும். சமையல் அறைக் குப்பைக் கூடையை சிங்கிற்கு கீழ் வைக்கலாம். மூடும் வசதியுடைய கூடை நல்லது. இந்தக் குப்பைக் கூடையில் இருந்து கிளம்பும் நாற்றத்தைத் தடுக்க ஒரு சிறிய கிண்ணத்தில் பேக்கிங் சோடாவைக் கொட்டி, கூடைக்குப் பக்கத்திலேயே வைப்பது பலன் தரும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை பேக்கிங் சோடாவை மாற்றினால் போதும்.
 பாத்திரம் துலக்கப் பயன்படுத்தும் ஸ்பான்ச், கிருமிகள் தங்கும் இடம். அதன் ஒரு சதுர இன்ச் பரப்பிலேயே லட்சத்துக்கும் மேற்பட்ட பாக்டீரியாக்கள் குடியிருக்கும். ஸ்பான்ச்சில் உள்ள ஈரப்பதத்தால் வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலியை உருவாக்கும் கிருமிகள் அதில் உருவாகலாம். இதைத் தவிர்க்க வாரம் ஒருமுறை இந்த ஸ்பான்ச்சை மாற்றிவிட வேண்டும். அல்லது ப்ளீச்சிங் தூள் கலந்த வெந்நீரில் 15 நிமிடங்கள் ஊற வைத்து அலசி எடுத்தால், கிருமிகள் ஒழிந்துவிடும். கேஸ் அடுப்பை எண்ணைய்ப் பிசுக்கு இல்லாமல் சுத்தமாக வைத்திருக்க.... அடுப்பிலும் சமையல் மேடையிலும் திரவ சோப்பை ஊற்றி நன்கு தேய்த்து ஊறவிட வேண்டும். அதன் பின் தண்ணீர் ஊற்றி சுத்தமாகத் துடைத்தால்,  அடுப்பு, மேடை இரண்டுமே பளிச் பளிச். இரண்டு லிட்டர் அளவுத் தண்ணீரில் அரை கப் வினிகர், கால் கப் பேக்கிங் சோடாவைக் கலந்து சமையல் அறைத் தரையைத் துடைக்கலாம்.
 பாட்டிலில் இருந்து வீசும் துர்நாற்றம் போக, பாட்டிலில் பாதி அளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு கடுகு அல்லது ஆப்ப சோடாவை போட்டுக் குலுக்கி ஊற வைத்துக் கழுவினால் வாடை அகன்றுவிடும். பாட்டிலும் பளீரிடும்.
 முட்டை கீழே விழுந்து உடைந்துவிட்டால், அதன் மீது சிறிதளவு உப்பைத் தூவி, பிறகு துடைத்து எடுத்தால் சுத்தம் செய்வதும் எளிது; வாடையும் இருக்காது.
 மட்டன், சிக்கன் போன்ற இறைச்சி வகைகளை மிக்ஸியில் அரைத்து எடுத்ததும் உடனடியாக மிக்ஸி ஜாரை சுத்தம் செய்ய வேண்டும். ஜாரினுள் இரண்டு பிரட் துண்டுகளைப் போட்டு அரைத்தெடுத்தால், பிசுக்கும் வாடையும் பறந்துவிடும்.
 மைக்ரோ வேவ் அவனில் வைக்கக் கூடிய கிண்ணத்தில் தண்ணீர் நிரப்பி, அதில் எலுமிச்சை அல்லது ஆரஞ்ச் தோல்களைப் போட்டு சிறிது நேரம் சூடாக்கினால்... 'மைக்ரோ வேவ் அவன்சுத்தமாக இருக்கும். அதில் ஏற்படும் கெட்ட வாடையையும் தவிர்க்க முடியும்.
 சமைக்கும் பொருளின் அமிலத்தன்மை, பயன்படுத்தும் தண்ணீர், தரம் குறைந்த அலுமினிய உள் பாத்திரம் போன்றவற்றால் குக்கரின் உட்புறம் எளிதில் நிறம் மாறி விடும். எனவே சமைக்கும்போது குக்கரில் ஊற்றும் தண்ணீரில் சிறிதளவு புளி அல்லது நறுக்கிய எலுமிச்சைத் துண்டு ஒன்றைப் போட்டுவிட்டால் குக்கர் மீண்டும் பழைய பளபளப்பை அடையும்.
 சமையலின்போது பாத்திரங்கள் அடிப்பிடித்தால், அதில் சோப் நீரை நிரப்பி சில நிமிடங்கள் கொதிக்கவைத்து பின் கழுவுங்கள். கரை இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும்.
 கண்ணாடிப் பாத்திரங்களை உப்பும் வினிகரும் கலந்த கலவையைக் கொண்டு சுத்தம் செய்யலாம்.
 உப்பு ஜாடியில் சிறிதளவு சோள மாவைப் போட்டுவைத்தால், உப்பு நீர்த்துப்போகாமல் இருக்கும்.
/

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts