லேபிள்கள்

திங்கள், 15 ஜனவரி, 2018

குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா?

குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கலாமா?
குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒரு கலை மட்டும் அல்ல அது ஒரு விஞ்ஞானமும் கூட. அந்த விஞ்ஞான உண்மைகளை குழந்தை மனோதத்துவ மருத்துவர்கள் (Child Psychologist) புத்தங்களாகத் தந்துள்ளனர். ஆனால் அவற்றைஎல்லாம் படிக்க பெற்றோருக்கு மனதில்லை, நேரமும் இல்லை. அவர்களுக்குத் தெரிந்த வரை, அவர்கள் எப்படி வளர்ந்தார்கள் என்பதை வைத்து குழந்தைகளையும் வளர்க்க முற்படுகிறார்கள். எந்த விஞ்ஞான கல்வியும் இல்லாத பல போலி மருந்துவர்கள் தொலைக் காட்சிகளில் பேசுவதும், சிகிச்சை அளிப்பதும் இன்று கண்கூடாக பார்க்க முடிகிறது.
அந்தக் காலங்களில் 8 அல்லது 10 குழந்தைகளை வைத்து ஒரு தாயார் அவதிப்பட்டபோது குழந்தைகளை அடித்து துன்புறுத்தி பணியவைத்தார். "அடியாமாடு படியாது" என்பதும் "முருங்கையை ஒடிச்சுவளர்க்கணும்; பிள்ளையை அடிச்சு வளர்க்கணும்" என்பதும் ஊரறிந்த பழமொழி. ஆக குழந்தைகளைத் துன்புறுத்தி கட்டுப்பாடு பண்ணுவது தான் நம் நாட்டின் வழிமுறையாக இருந்திருக்கிறது. ஆனால் விஞ்ஞான உண்மைகள் அடிப்படையில் இந்த அநாகரிகமுறை கைவிடப்பட்டிருக்கிறது. நவீன உலகில் குழந்தைகள் சித்திரவதை செய்ய வேண்டியதில்லை, பேசிப் புரிய வைத்து விரும்பத்தக்க நடைமுறையை ஏற்படுத்திவிடலாம் என்று வந்திருக்கிறது. இன்று குழந்தைகளை அடிப்பதும் குற்றமாகிவிட்டது; இருப்பினும் அது ஒரு புறம் இருக்கட்டும்.

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது!
இன்று பல பெற்றோர்கள், அதுவும் ஓரளவு வசதி படைத்தவர்கள் குழந்தைகளை எந்தக் கஷ்டமும் அனுபவிக்காதவாறு வளர்க்க முற்படுகிறார்கள். தெருவில் விளையாட விடுவதில்லை, சைக்கிள் மிதிக்க அனுமதிப்பதில்லை, மற்றநண்பர்களோடு பழக விடுவதில்லை, பஸ்ஸில் செல்ல அனுமதிப்பதில்லை, தனியாக ஒரு இடத்திற்கு செல்ல அனுமதிப்பதில்லை. இப்படி வளர்க்கப்பட்ட பல குழந்தைகள் மனித திறமையின்றி தைரியமின்றி கோழைகளாவும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களாகவும், கோபக்காரர்களாகவும், வீட்டிலேயே தூங்கி வழியும் மனிதர்களாகவும் காண முடிகிறது..
வாட்ஸ் அப்பில் வந்த ஒரு கதையினை எடுத்துக்காட்டி உங்களது கேள்விக்கு பதில் தருகிறேன் (இந்த கட்டுரையின் ஆசிரியர் பெயர் அதில் குறிப்பிடவில்லை எனவே அதை பகிர இயலவில்லை)
கழுகுகள் நமக்கு கற்றுத்தரும் பாடம்
கழுகுகளை, வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்தியும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.
குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே  இருந்து விட்டால் வலிமையாகவும், தந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல. எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை, குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது. தாய்ப்பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.
அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது. அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம். அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்கவிட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.
என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் கூட்டிலிருந்து வெளியே தள்ளிவிடுகிறது. அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.
குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது. குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது. மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.
இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும் காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது. அது சுதந்திரமாக ஆனந்தமாக தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.
கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்தச் சுதந்திரத்தையும்  ஆனந்தத்தையும்  தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது. பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது.
ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும்  பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும்  அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான். கப்பல் துறைமுகத்தில் இருப்பது  முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.கழுகிற்கும் கப்பலுக்கும் மட்டுமல்ல; மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.
தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.ஆனால் அந்த தவறை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை.
பெற்றோர் செய்யும் தவறு
அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம். ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்தபோது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.
ஆனால் இந்தக் காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறிவிடுகிறார்கள். அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட' என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று நான் சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.
இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது அவசியமே. தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லை தான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.வீட்டு வேலைகள் பிள்ளைகள் செய்தாலென்ன?விடுமுறை காலங்களில் சம்பளத்திற்கு வேலை செய்தால் என்ன தவறு? வளர்ந்துவிட்ட பணக்கார நாட்டுப் பிள்ளைகள் கூட படிக்கும் காலத்தில் வேலை செய்கிறார்களே.
"I have learnt so much from my mistakes…. I am thinking of making few more" என்கிறார் ஒரு அறிஞர். தவறுகள் செய்தாலும் சில பாடங்கள் சரியாக கற்றுக்கொள்ளட்டும். வேலை செய்யாவிட்டால் தானே தவறுகள் செய்ய வாய்ப்புகிடைக்கும்
வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே. அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்.அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பதுபோலத் தான். சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போதுபெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம். ஆனால் கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல என்று அந்தக் கட்டுரை நீழ்கிறது.இதில் நல்ல கருத்தும் இருக்கிறது.
"Life is tough; But you are tougher" என்பதை பிள்ளைகளுக்கு உணர வையுங்கள்.சாதிக்க துடிக்கும் உங்களது தங்க மகன் செய்ய வேண்டிய முதல் காரியம், தினமும் காலை 5 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். அதற்கு நீங்கள் தான் பயிற்சி கொடுக்க வேண்டும். இன்புற்று தூங்குபவனை தட்டி எழுப்ப தாட்சணயம் பார்க்காதீர்கள்.
நான் சொல்லும் பதில் இதுதான். குழந்தைகளை இயற்கையாகவே ஓடி விளையாட அனுமதியுங்கள். தோட்டம் பக்கம் போனால் போகட்டும். பயிர் செய்யட்டும். ஆடு மாடுகள் கூட மேய்க்கட்டும். சைக்கிள் கூட ஓட்டட்டும். மற்ற குழந்தைகளுடன் விளையாடட்டும், ஊருக்கு தனியே போகட்டும்.
 புதிதாக எதையும் செய்யட்டும். பொத்தி பொத்தி வளர்த்தால் அந்தக் குழந்தை விடிந்தபின் தூங்கும் மனிதனாகவும், உடல் வளர்ச்சி இருந்தும் கோழையாகவும், பணக்கஷ்டம் இருக்கும் போதும் சொகுசு விரும்பியாகவும், சுருக்கமாகச் சொன்னால் ஆஸ்தி இருந்தும் வாழத் தகுதியில்லாத ஏழை மனிதனாகவும் உருவாகக்கூடும்
http://chittarkottai.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 13 ஜனவரி, 2018

வாய்ப் புண் Oral Ulcer

வாய்ப் புண் Oral Ulcer
வாய்ப்புண் (Mouth Ulcer) என்றால் என்ன?
வாய்ப் பகுதியிலுள்ள தோல் அதிக மென்மையாவதன் மூலம் வெளிப்படும் நரம்புப் பகுதியே வாய்ப்புண் (மவுத் அல்சர்) என்படுகிறது. இப்பகுதியில் நீரோ, உணவோ வேறு எந்த ஒரு பொருளோ பட்டால் "சுர்ர்" என்று நொடிப்பொழுதில் அது பாதிப்படைந்தவருக்கு எரிச்சலை அதிகப்படுத்தும்.
யாருக்கு வாய்ப்புண் ஏற்படும்?
வாய்ப்புண் ஒரு தொற்று நோயல்ல. இது பாக்டீரியாக்களினால் ஏற்படும் தொந்தரவாகும். நோய் எதிர்ப்பு சக்திக் குறைவாயுள்ளவர்களை இது அதிகமாகத் தாக்குவதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. குறிப்பாக விட்டமின் B12, இரும்புச் சத்து மற்றும் ஃபோலிக் அமிலக் குறைபாடு உள்ளவர்களுக்கு அதிக அளவில் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன.

வாய்ப்புண் ஏற்பட என்ன காரணம்?
மருந்துகள்: ஆச்சரியப்பட வைக்கும் வகையில் வேறொரு நோய்க்காக உட்கொண்டு வரும் மருந்துகள், ஒருவருக்கு வாய்ப்புண் ஏற்படக் காரணமாக அமைகின்றன. நீங்கள் உட்கொண்டு வரும் ஏதேனும் ஒரு மருந்து இத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்துகிறதா? எனப் பரிசோதியுங்கள்.
பரம்பரை / மரபு நோய்: பெற்றோரில் எவரேனும் ஒருவருக்கு வாய்ப்புண் வாடிக்கையான நிகழ்வாக இருந்திருந்தால், பிள்ளைகளுக்கும் அவை தொடரும் என்பது புள்ளிவிபரங்கள் தரும் செய்தி.
ஹார்மோன் மாற்றங்கள்: ஆண்களைவிட, பெண்களுக்கு அதிகம் வாய்ப்புண் ஏற்படுவதாக அறிக்கைகள் சொல்கின்றன. பிரசவ காலங்களிலும் இறுதி மாதவிடாயின் போதும் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் வாய்ப்புண்களை தோற்றுவித்து விடுகின்றனவாம். உணவு ஒவ்வாமை (அலர்ஜி): உணவு ஒவ்வாமையினால்கூட வாய்ப்புண்கள் ஏற்படுவதாக மருத்துவ அறிக்கைகள் சொல்கின்றன.
காயம்: உணவை மெல்லும்போது தவறுதலாகக் கன்னத்தின் உட்புறத்தில் சில நேரங்களில் கடித்துக் கொள்வதுண்டு. முரட்டுத்தனமாகப் பல் விளக்குபவர்கள், பிரஷ்ஷைக் கொண்டு வாயின் உட்புறத்தில் ஏற்படுத்திக் கொள்ளும் மெல்லியக் காயங்கள் மூலமும் வாய்ப்புண் ஏற்படுகிறதாம்.
பாக்டீரியா: வாயில் ஏற்கனவே தங்கியுள்ள பாக்டீரியாக்கள். வினை வாயிலேயே உள்ளது என்ற நினைப்பைக் கொண்டு சுத்தப்படுத்துதலைப் பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.
இயந்திர வாழ்க்கை முறை: அதிக அளவில் உணர்ச்சி வசப்படுவதாலோ, மன அழுத்தம் அதிகரிப்பதாலோ வருகிறதாம். பரபரப்பாக மாறிவிட்ட நம் இயந்திர வாழ்க்கை முறையில் நிதானித்து, மனத்தை இலேசாக்கும் விஷயங்களில் ஈடுபடுவது குறைந்து விட்டதும் ஒரு காரணம்.
உணவுப் பழக்கம் (டயட்): முறையற்ற உணவு முறை முக்கியக் காரணமாம். அத்துடன் முட்டை, காஃபி, உறைபாலேடு (சீஸ்), ஸ்ட்ராபெர்ரி, பைனாப்பிள் போன்ற அமிலத்தன்மை உள்ள உணவுகளை அதிகம் உண்ணுவதால் வாய்ப்புண் ஏற்படுகிறது.
பற்பசை (டூத் பேஸ்ட்): Sodium lauryl sulphate அதிக அளவில் கலந்துள்ள சில பேஸ்ட்களை உபயோகிப்பதாலும் வாய்ப்புண் ஏற்படுகிறது.
மாற்றங்கள்: திடீரென கைவிடப்படும் புகைப்பிடித்தல் பழக்கத்தினால் வாய்ப்புண் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. என்றாலும், இத்தகைய வாய்ப்புண்கள் தற்காலிகமானவையே.
தடுக்க வழியுண்டா?
அறவே ஒழிக்க முடியாவிட்டாலும் கீழ்க்கண்டவற்றைக் கடைபிடித்து வருவதன் மூலம் வாய்ப்புண்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம்:
நல்ல உணவுப் பழக்க வழக்கம்
தினசரி மிதமான உடற்பயிற்சி
மன அழுத்தத்தைக் குறைப்பது
தேவையான அளவு தூங்கி ஓய்வெடுப்பது
இத்துடன், உப்பு நீர் அல்லது நுண் கிருமிகளை அழிக்கவல்ல ஆண்ட்டி பாக்டீரியா (மவுத்வாஷ்) கொண்டு வாயைக் கொப்பளித்தல், வாயை இயன்றவரையில் சுத்தமாக வைத்திருத்தல், தினமும் காலையிலும் இரவில் உறங்குவதற்கு முன்னும் மருத்துவர் பரிந்துரைக்கும் முறையில் பல் துலக்குதல் போன்றவை வாய்ப்புண் அண்டாமல் தடுக்கும்.
வாய்ப்புண்ணுக்காக வீட்டு வைத்தியம் ஏதாவது?
வாய்ப்புண் வலியால் அவதிப்படுபவர்கள் கீழ்க்கண்டவற்றில் எளிமையானதொரு வீட்டு வைத்தியத்தைத் தேர்ந்தெடுத்து செய்து பார்க்கலாம்.
தேன், சுத்தமான நெய் அல்லது கிளிசரின் (Glycerin) ஆகியவற்றினை வாய்ப்புண் உள்ள இடத்தில் தடவுவது பலன் தரும்.
வாழைப்பழத்தைத் தயிருடன் கலந்து, காலை உணவாக உட்கொண்டால், வாய்ப்புண் மூலம் ஏற்படும் எரிச்சல் அன்று முழுவதும் மறையும்.
தக்காளிப் பழத்தை சிறு துண்டுகளாக்கி வாயில் போட்டு மென்று தின்பது வாய்ப்புண்ணை ஆற்றிவிடும். மிதமான சூடுள்ள நீரில் உப்பு மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து (மவுத் வாஷ்) கொப்பளிப்பது பலன் அளிக்கும்.
மஞ்சள் தூளை நீரிட்டுக் கொதிக்க வைத்து, சிறிது ஆறிய பின் மிதமான சூட்டில் வாய்க் கொப்பளித்தால் பலன் கிடைக்கும்.
மாதுளம்பழத் தோலை நீரில் கொதிக்க வைத்து, வடிகட்டிய நீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தால் வாய்ப்புண் எரிச்சல் மறையும்.
கவனத்தில் கொள்ள வேண்டியது:
வாய்ப்புண் என்பது தற்காலிகமான நோயாகும். வேறொரு செயல் மூலம் ஏற்படுவதாகும். குறைந்த பட்சம் ஒரு வாரம், அதிக பட்சம் பத்து நாட்களில் வாய்ப்புண் குணமாகி விட வேண்டும். அதுவல்லாமல் வாய்ப்புண் தொடர்ந்து கொண்டிருக்கும் பட்சத்தில் தாமதிக்காமல் உடனடியாகப் பல் மருத்துவரை அணுகி முழுமையான பரிசோதனை செய்து கொள்வது அவசியம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 11 ஜனவரி, 2018

கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்!

கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்!
அதிக எடையை குறைக்கவும் , கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள்
உடல் எடை எக்கச்சக்கமாக எகிறியதால் அதைக் குறைக்க முடியாமல் ஜிம், உடற்பயிற்சி, உணவில் கட்டுப்பாடு என்று கஷ்டப்பட்டு வருபவர்கள் ஏராளம். அன்றாடம் சரியாக உணவு உண்டு வந்தாலே அதிக உடல் எடையானது குறைந்து விடுவதோடு ஆரோக்கியமாகவும் வாழலாம். அதிக எடை, குறிப்பாக கொழுப்பு கூடாமல் தடுக்கும் சில உணவுகள் இதோ

மஞ்சள்: மஞ்சளானது ஒரு சிறந்த மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அத்தகைய மஞ்சளை தினமும் உணவில் சேர்த்து வந்தால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து, அதிக ரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்கும். ரத்த சுழற்சியானது நன்கு நடைபெற்று, இதய நோய் ஏற்படாமலும் இருக்கும்.
ஏலக்காய்: இது ஒரு சிறந்த உணவுப் பொருள். இதை உண்டால் உடலில் உள்ள உடல் செயலியல் மாற்றம் அதிகரிப்பதோடு, உடலில் உள்ள கொழுப்புகளைக் கரைத்து விடும். மேலும் இது ஒரு சிறந்த செரிமானப் பொருள். ஆகவே எந்த உணவு உண்டாலும், அதே நன்றாக ஜீரணமாகிவிடும். ஆகவே ஏலக்காயை தினமும் உணவுப் பொருட்களில் சேர்த்தால், உடல் எடை குறையும்.
மிளகாய்: உணவில் சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. மேலும் இதில் உள்ள  'கேப்சைசின்', உடல் செயலியல் மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். கேப்சைசின் என்பது வெப்ப ஊட்ட பொருள். அது இருக்கும் உணவுப்பொருளை உண்பதால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்துவிடும்.
கறிவேப்பிலை: கறிவேப்பிலை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் இருக்கும் கொழுப்பு மற்றும் நச்சுப்பொருட்களை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், கறிவேப்பிலையை அரைத்து தண்ணீரில் கரைத்துக் குடிக்க வேண்டும்.
பூண்டு: இது ஒரு சிறந்த கொழுப்பை கரைக்கும் பொருள். ஏனெனில் இதில் சல்பர் இருக்கிறது. பூண்டில் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டிபாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து உடலை விரைவில் 'ஸ்லிம்' ஆக மாற்றும்.
கடுகு எண்ணெய்: இதில் மற்ற எண்ணெய்களை விட குறைந்த அளவு கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் பேட்டி ஆசிட், இரூசிக் ஆசிட் மற்றும் லினோலிக் ஆசிட் போன்றவை இருக்கின்றன. இதுமட்டுமல்லாமல் ஆன்டி ஆக்சிடன்ட், தேவையான வைட்டமின்கள் உள்ளதோடு, தேவையற்ற கொழுப்புகளை அகற்றும். அதனால் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முட்டைக்கோஸ்: இதை சமைத்தும் உண்ணலாம் அல்லது பச்சையாகவே சாப்பிடலாம். அது உடலில் சேரும் கொழுப்புகளை வேறுவிதமாக மாற்றி மற்ற உடலில் நடைபெறும் செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும். இதனால் உடலானது பருமனடையாமல் இருக்கும்.
தேன்: இது உடல் எடையைக் குறைக்க ஒரு சிறந்த வீட்டு மருந்து. இதனை உண்டால் உடலில் சேரும் கொழுப்புகளை சாதாரணமாக உடலில் நடைபெறும் செயல்களுக்கு பயன்படுத்திக் கொள்ளும். ஆகவே தினமும் ஒரு டேபிள் ஸ்பூன் தேனை சூடான தண்ணீரில் கலந்து, விடியற்காலையில் குடிக்க  வேண்டும்.
மோர்: பால் பொருளில் கொழுப்புகள் அதிகமாக இருக்கும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் மோரில் 2.2 கிராம் கொழுப்பும், 99 கலோரியும் மட்டுமே உள்ளது. ஆகவே இதைப் பருகுவதால் உடலுக்குத் தேவையான அளவு ஊட்டச்சத்துகள் கிடைப்பதோடு, கொழுப்பு மற்றும் கலோரியானது அதிகமாக சேராமல் எடையும் சரியான அளவு இருக்கும்
http://chittarkottai.com

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 9 ஜனவரி, 2018

சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்

சிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்
சிலர் வேலை உள்ளது என்று சிறுநீர் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். இன்னும் சிலரோ எவ்வளவு தான் அவசரமாக இருந்தாலும், வெளியிடங்களில் சிறுநீர் கழிக்காமல் அடக்கிக் கொள்வார்கள்.
நீங்கள் அப்படிப்பட்டவரா? அப்படியெனில் இந்த கட்டுரையை தவறாமல் படிக்க வேண்டும். ஏனெனில் இங்கு சிறுநீரை அடக்குவதால் ஏற்படும் ஆபத்துக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.


எத்தனை முறை வீட்டில் உள்ளோர் கூறினாலும், அதை பொருட்படுத்தாமல் பலர் சிறுநீரை அடக்கிக் கொண்டு இருப்பார்கள். அத்தகையவர்களுக்கு சிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்களை இக்கட்டுரை தெளிவாக விளக்கும்.
அசௌகரியம் மற்றும் வலி.
நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
கவனச்சிதறல்.
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாது. உதாரணமாக, பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக் ஓட்டினால், சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின் அது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
சிறுநீர்ப்பையில் நோய்த்தொற்று.
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்
சிறுநீரக நோய்.
சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.
பயனுள்ள குறிப்பு.
மேற்கூறிய பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமெனில், எப்போது சிறுநீர் கழிக்க வேண்டுமென்று தோன்றுகிறதோ, அப்போது உடனே சிறுநீர் கழிக்க வேண்டும். மேலும் வெளியிடங்களில் சிறுநீர் கழிக்க தயங்குபவராக இருப்பின், வெளியே இருக்கும் போது தண்ணீர் அதிகம் குடிப்பதை தவிர்த்திடுங்கள். ஏனெனில் தண்ணீர் அதிகம் குடித்தால், சிறுநீர்ப்பை விரைவில் நிறைந்துவிடும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஹெல்மெட் ஹைஜீன் ஒரு அலர்ட் ரிப்போர்ட்

ஹெல்மெட் ஹைஜீன் ஒரு அலர்ட் ரிப்போர்ட்
போலீஸ் கெடுபிடிக்குப் பயந்து ஹெல்மெட் அணிபவர்களே அதிகம்! நாம் வேண்டாவெறுப்பாக ஹெல்மெட் அணிந்தாலும், அது என்னவோ நம்மைக் காக்கும் வேலையைச் செய்துகொண்டே இருக்கிறது. கடும் வெயிலில், வியர்வையில் குளிப்போம்; தலையில் பெருகும் வியர்வை, ஹெல்மெட்டையும் நனைத்துவிடும். வண்டியை பார்க்கிங் செய்யும் இடத்தில், சுற்றுச்சூழல் பிரச்னைகளால் ஹெல்மெட் மூலம் தொற்று ஏற்படும் அபாயம் உண்டு;


மழைக்காலத்தில், ஈரத்தில் ஊறி, அதிகமாகப் பாதிக்கப்படுவதும் ஹெல்மெட்தான். கவனிக்காமல்விட்டால், தலையில் ஒவ்வாமை, பொடுகு மற்றும் முடிகொட்டுதலுக்குக் காரணமாகிவிடும். எனவே, ஹெல்மெட்டை சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க வேண்டிது அவசியம்.
நம்மில் பலரும் வெளியில் கிளம்பும்போது சோதித்துப் பார்க்காமலேயே ஹெல்மெட்டை அணிந்துகொள்கிறவர்கள்தான். இது தவறு. பொதுவெளியில் வண்டியை நிறுத்தி, ஹெல்மெட்டை அதனுடன் வைத்துவிட்டுச் செல்வதால், அதில் அழுக்குகளும் தூசும் படிந்திருக்கும். சிறுசிறு பூச்சிகள்கூட ஹெல்மெட்டின் உட்பகுதியில் ஏறிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. எனவே, ஒவ்வொரு முறையும் ஹெல்மெட்டைத் தலையில் அணியும் முன், நன்கு பரிசோதித்து, சுத்தம் செய்துகொள்ள வேண்டியது அவசியம்.

எப்போதுமே கண்களைப் பாதுகாக்கும் வகையில், ஃபைபர் கண்ணாடிகள் பொருத்தப்பட்ட ஹெல்மெட்டைப் பயன்படுத்துங்கள். இந்த வெயில் காலத்தில், இரு சக்கர வாகனங்களை ஓட்டும்போது, சூரியக் கதிர்களால் கண்கள் பாதிப்படையும். சில நேரங்களில் புழுதி, பூச்சிகள் கண்ணில்பட்டு பாதிப்பை ஏற்படுத்திவிடும். பளிச் என நன்றாகச் சுத்தம்செய்யப்பட்ட, ஃபைபர் கண்ணாடி பொருத்தப்பட்ட ஹெல்மெட் அணிவது, பல்வேறு தொந்தரவுகளில் இருந்து  கண்களைப் பாதுகாக்கும்.

பலருக்கும் வேகமான காற்றோ, பனியோ காதில் புகுவது தொந்தரவு தரும் விஷயம். அலர்ஜி காரணமாக,  தும்மல், சைனஸ் ஏற்படும். சளி, தும்மல், ஆஸ்துமா, சைனஸ், இருமல் போன்ற தொந்தரவு உள்ளவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது, காலை, மாலை என எந்த நேரமாக இருந்தாலும் ஹெல்மெட் அணிந்தே செல்ல வேண்டும்.

அதிக வெப்பத்தில், புகை,மாசு நிறைந்த இடங்களில் வண்டி ஓட்டும்போது, முகம் கருமையாகிவிடும். சூரியனிடம் இருந்து வரும் வீரியம் மிக்க புற ஊதாக் கதிர்கள் இதற்கு முக்கியக் காரணம். ஹெல்மெட் அணிந்திருந்தால், இப்படி முகம் பாதிக்கப்படுவது தடுக்கப்படும். தினமும் குளிப்பதோடு, மூன்று முறை நல்ல தண்ணீரில் முகம் கழுவ வேண்டும்.

ஹெல்மெட் வாங்கும்போது தாடைப் பகுதியைப் பாதுகாக்கும் வகையில், உங்களது முகத்துக்கு ஏற்றவாறு பார்த்து வாங்க வேண்டும். `ஹெல்மெட் போடுவதால் முடி கொட்டுகிறது' எனச் சிலர் சொல்வார்கள். அது முழுக்க உண்மை இல்லை. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களுக்கு, சூரியக் கதிர்களால் முடியில் இருக்கும் செல்கள் பாதிக்கப்படும். சுற்றுப்புற மாசு முடியைப் பாதித்து, பொடுகை ஏற்படுத்தக்கூடும். ஹெல்மெட்டைப் சுத்தமாகப் பயன்படுத்தினால், தலைமுடி பாதிக்கப்படாது.

ஹெல்மெட்டை சுத்தம் செய்வது எப்படி?
ஹெல்மெட்டை சுத்தம்செய்து பயன்படுத்தினால், திடீர் ஆபத்தை மட்டும் அல்லமுகத்தின் அழகு மற்றும் ஆரோக்கியத்தையும் காக்கலாம்.
வாரம் ஒரு நாளாவது ஹெல்மெட்டின் உட்பகுதியில் நல்ல வெயில்படும்படி வைக்க வேண்டும். துடைப்பதற்கு சுத்தமான பருத்தித் துணியைப் பயன்படுத்தலாம்.

ஹெல்மெட்டை சுத்தம் செய்ய பிரத்யேக ஷாம்பு, ஸ்ப்ரேக்கள் சந்தையில் கிடைக்கின்றன. இரண்டு, மூன்று நாட்களுக்கு ஒருமுறை இவற்றைப் பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.
உட்பகுதிகளைத் தனியாகக் கழற்றி எடுத்து, மீண்டும் பொருத்தும் வகையிலான ஹெல்மெட்டை வாங்குவது நல்லது. இவற்றை சோப்பு நீரில் 5 – 10 நிமிடங்கள் ஊறவைத்துக் கழுவுவது எளிது
http://www.tamilyes.com/t53483-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 5 ஜனவரி, 2018

இடது கைப்பழக்கம் சரியா?

இடது கைப்பழக்கம் சரியா?

டது கையால் எழுதுவது, பொருளை எடுப்பது, வீசுவது, பிடிப்பது, இடது காலால் உதைப்பது, தள்ளுவது எனஎல்லா செயல்களுக்கும் இடது கை, காலைப் பயன்படுத்துபவர்களைக் கிண்டல் செய்வார்கள் பலர். வேறு சிலரோ, `இடது கைப் பழக்கம் அதிர்ஷ்டம்' என்பார்கள். உலகில், 10 சதவிகிதம் பேர் இடது கைப் பழக்கம் உள்ளவர்கள்தான். மிகப்பெரிய பிரபலங்கள் பலரும் இடது கைப் பழக்கம் கொண்டவர்கள். இடது கையைப் பயன்படுத்துவது ஏதேனும் குறைபாடாஇயல்பான விஷயம்தானாசிலர் மட்டும் ஏன் எல்லாவற்றுக்கும் இடது கை, காலைப் பயன்படுத்துகிறார்கள்?


பொதுவாக, இடது மூளை, வலது புற உடலை இயக்கும். அதுபோல, வலது மூளை, இடது புற உடலை இயக்கும். அதிகமாக இடது கை, கால்களைப் பயன்படுத்துவோரின் உடலில், வலது மூளை அதிகமாக ஆதிக்கம் செலுத்தும்.
எப்படிப் பெரும்பாலானவர்களுக்கு வலது கைப் பழக்கமோ, அப்படிச் சிலருக்கு இடது கைப் பழக்கம் இயற்கையாக, இயல்பாக வருகிறது. இது ஒரு நோயோ, குறைபாடோ கிடையாது. சில பெற்றோர், குழந்தைகளின் இடது கைப் பழக்கத்தைத் திருத்த வேண்டும் என, குழந்தையை மிரட்டியும் அடித்தும் துன்புறுத்துகின்றனர். திருத்துவதற்கு இது ஒன்றும் தவறே அல்ல; இயல்பான செயல்பாடு என்ற புரிதல் அவசியம்.

சில சமயங்களில் ஏதேனும் விபத்து ஏற்பட்டு, இடது மூளை பாதிக்கப்படும்போது, வலது மூளை ஆதிக்கம் பெறுகிறது. இதனால், திடீரென இடது கைப் பழக்கத்துக்கு மாறுவார்கள் சிலர். இதுவும் இயல்பான ஒரு மாற்றமே.
இடது கைப் பழக்கம் உள்ள குழந்தைகளை அடித்து, திருத்த முயற்சிக்காமல், அவர்களின் போக்கில் விட வேண்டும்.
இடது கைப் பழக்கம் உள்ளவர்களைக் கட்டாயப்படுத்தி வலது கைப் பழக்கத்துக்கு ஈடுபடுத்தினால், அவர்களின் செயல்திறன் குறைந்துபோகலாம்.
இடது கைப் பழக்கம் உள்ளவர்களால், பலதரப்பட்ட பணிகளை (Multi tasking) ஒரே நேரத்தில் செய்ய முடியும். ஆதலால், கட்டாயப்படுத்தி அவர்களின் பழக்கத்தை மாற்றக் கூடாது.

சாப்பிடுவதற்கு மட்டும் வலது கையால் சாப்பிடச் சொல்லி அறிவுறுத்தலாம். இந்தப் பழக்கம் அவர்களால் முடியுமா என்பதை, மருத்துவர் உதவியுடன் முடிவு செய்யலாம்.
http://www.tamilyes.com/t53461-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 3 ஜனவரி, 2018

மொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா?

மொபைல் போன்களின் பேட்டரி தடிக்கிறதா?

பலர், தங்களுடைய மொபைல் போனில் உள்ள லித்தியம் அயன் பேட்டரி, சற்று தடித்துப் போய் விட்டதாகவும், இது நாளுக்கு நாள் அதிகமாவதாகவும் தெரிவித்து, இதன் காரணத்தை அறிய விரும்புகின்றனர். சிலர், பேட்டரி தொடர்ந்து செயல்படவில்லை என்றும் கூறி, இதனால் என்ன விளைவுகள் ஏற்படும் என்றும் கேட்டுள்ளனர்.



ஏன் பேட்டரி தடித்துப் பெரிதாகிறது?: தற்போது பயன்பாட்டில்
இருக்கும், எடுத்துச் செல்லக் கூடிய, லேப்டாப் கம்ப்யூட்டர், ஸ்மார்ட் போன், டேப்ளட் பி.சி. இ புக் ரீடர், உடல்நலம் காட்டும் சிறிய கடிகாரம் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களில், லித்தியம் அயன் பேட்டரி பயன்படுத்தப்படுகிறது. குறுக்கப்பட்ட சிறிய அளவில் ஆக்கப்பட்ட பேட்டரிகள் நமக்குக் கூடுதல் வசதிகளையே அளிக்கின்றன. ஆனால், இதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட பேட்டரிகளைக் காட்டிலும், லித்தியம் அயன் பேட்டரிகள் சில எதிர் விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளன. இந்த வகை பேட்டரிகளில், அதில் உள்ளாக உள்ள செல்களுக்கும், மேல் உலோக கவசங்களுக்கும் இடையே மிகச் சிறிய இடைவெளி மட்டுமே உள்ளது. இதனால், பேட்டரி எப்போதும் ஒருவித அழுத்தத்திலேயே உள்ளது.
லித்தியம் அயன் பேட்டரிகளை அதிக வெப்பம் பாதிக்கும் போது, அவை தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்படுகையில், அதிக நாட்கள் பயன்பாட்டில் இருந்ததனால், சில வேளைகளில், உள்ளே இருக்கும் செல்களிலிருந்து, எளிதில் நெருப்பு பிடிக்கக் கூடிய எலக்ட்ரோ லைட் மிக்சர் (electrolyte mixture) உருவாகலாம். அதிர்ஷ்டவசமாக, நெருப்பு பிடிக்காமல் இருக்க உள்ளாக பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நெருப்பு பிடித்து, கேஸ் வெளியேறாததால், பேட்டரியின் தடிமன் பெருகத் தொடங்குகிறது. இந்த தடிமன் குறைவாக இருக்கும் நிலையில், நாம் அதிகம் அது குறித்து கவலைப்படுவதில்லை. ஆனால், அது ஸ்மார்ட் போனின் உருவத்தைப் பாழடிக்கும் நிலைக்கு வரும்போது, நாம் இந்த பேட்டரியின் தடிமன் குறித்து கவலைப் படுகிறோம். சில வேளைகளில், நாம் போனுக்குள் மைக்ரோ எஸ்.டி. கார்ட் போன்றவற்றை இணைக்கையில், பின்புற மூடியைக் கழட்டி எடுக்கையில், இந்த தடிமன் அதிகமான லித்தியம் அயன் பேட்டரி, ஸ்பிரிங் விசையில் இருந்து விடுபட்டது போல, வெளியே துள்ளிக் குதிக்கிறது. அல்லது பின்புற போன் மூடியை வெளியே தள்ளுகிறது.

பேட்டரியை நீக்கும் வழிகள்: இதனால், லித்தியம் அயன் பேட்டரி பயன்பாட்டிற்கு உகந்தது அல்ல என்ற முடிவிற்கு வருவது தவறாகும். பேட்டரியின் உள்ளாக, பல நிலைகளில் பாதுகாப்பான வழி முறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்யப்பட்டல், அதனை நிறுத்தும் வழிகள், உள்ளாக வெப்பம் பரவுவதை அளந்து, அறிந்து நிறுத்தும் வழிகள் போன்றவற்றைக் கூறலாம். இத்தகைய பேட்டரிகள், எந்த நிலையிலும், தீ பிடித்தது என்ற நிலை ஏற்பட்டதில்லை என்றே கூறலாம்.
வீணான பேட்டரியை என்ன செய்திடலாம்?:
 எனவே, பயன்படுத்த முடியாத நிலைக்கு, உங்கள் சாதனத்தின் லித்தியம் அயன் பேட்டரி சென்றுவிட்டால், அதனை எடுத்துவிட்டு, அதே அளவிலான, மின் திறன் கொண்ட பேட்டரியைப் புதியதாக வாங்கிப் பொருத்த வேண்டியதுதான் சரியான வழியாகும். இருப்பினும், அந்த பழைய பேட்டரியை திடீரென குப்பையில் எரிந்துவிடக் கூடாது. அதனை அழிப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். அவை வெடித்து அல்லது நெருப்பினை உண்டாக்கும் என்ற அச்சத்துடன், சில வழிமுறைகளைப் பின்பற்றி அழிக்க வேண்டும். அவை என்ன என்று இங்கு பார்க்கலாம்.
பேட்டரி தடிமன் அதிகமாகி விட்டது என்பதை உறுதி செய்தால், உடனடியாக அதனைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். அது இணைக்கப்பட்டுள்ள சாதனத்தினையும் இயக்கக் கூடாது. சாதனத்தினை 'பவர் ஆப்' (power off) செய்து, பேட்டரியிலிருந்து மின் சக்தி செல்வதை நிறுத்த வேண்டும். குறிப்பாக அதனை சார்ஜ் செய்திடவே கூடாது. தடிமன் அதிகமாகிப் போன பேட்டரியில், பாதுகாப்பு வளையங்கள் வேலை செய்யாது. எனவே, அது எப்போதும் வெடிக்கக் கூடிய சிறிய பந்து என்று கருத வேண்டும். நம் அறையில், நெருப்பு பிடிக்கக் கூடிய வாயுவை வெளியிடும் சாதனம் ஒன்று உள்ளதாகவே கருத வேண்டும்.

பேட்டரியை உடனே நீக்குக:
 பயனற்றுப் போன பேட்டரியை உடனே சாதனத்திலிருந்து நீக்கிவிட வேண்டும். அதை அழுத்தியோ, அதன் உருவினை மாற்றியோ, வெளியில் உள்ள பின்புற மூடியைச் சரி செய்தோ, பயன்படுத்த முயற்சிக்கவே கூடாது.
பேட்டரியைத் துளையிட்டு, அதன் தடிமனைக் குறைக்க முயற்சிப்பது, முட்டாள்தனமான வேண்டாத முயற்சியாகும். உள்ளிருக்கும், உங்களுக்கு அழிவைத் தரக்கூடிய வாயுவினை நீங்களாகவே வலிந்து பெறும் வழி இது.
நீங்கள் பயன்படுத்தும் சாதனத்தினை நீங்களே திறந்து பார்க்க முடியும் என்றால், அதிலிருந்து பேட்டரியை உங்களால் எடுத்து நீக்க முடியும் என்றால், உடனே பேட்டரியை நீக்கவும்.
அல்லது அதற்கான தொழில் நுட்ப பணியாளரிடம் கொடுத்து பேட்டரியை எடுத்துவிடவும். அல்லது உங்கள் சாதனத்தினை இந்த பேட்டரி கெடுத்துவிடும் வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. பேட்டரிக்குள்ளாக, கூர்மையான ஒரு சாதனத்தைப் பயன்படுத்தி, இந்த வீக்கமுற்ற பேட்டரியின் தடிமனைக் குறைத்துவிடலாம் என்று ஒரு போதும் எண்ண வேண்டாம். உங்களால் பேட்டரியை நீக்க முடியாவிட்டால், அதனை ஒரு டெக்னீஷியனிடம் கொண்டு செல்ல நாளாகும் என்றால், அந்த சாதனத்தினை, குளிர்ச்சியான இடத்தில் வைத்துப் பாதுகாக்கவும். பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம்.

கெட்டுப் போன பேட்டரியை விட்டெரிய வேண்டாம்:
 வீணாகிப் போன லித்தியம் அயன் பேட்டரியை, எந்த நிலையிலும், குப்பைகள் உள்ள இடத்தில் விட்டெறியும் பழக்கத்தினை விட்டுவிடுங்கள். கூர்மையான சாதனம் கொண்டு திறக்க முயற்சித்த பேட்டரியையும் பயன்படுத்த வேண்டாம். எடுத்து எறிந்துவிட வேண்டாம். அதுவரை சாதாரண பேட்டரியாய் இருந்தது, திறக்க வேண்டி முயற்சி எடுத்ததனால், எளிதில் நெருப்பினை வழங்கும் அபாயமான ஒரு பொருளாக மாறுகிறது. எனவே, வீட்டில் வைத்திருப்பதும் சரியல்ல. எனவே, சரியான முறையில் அதனை அழித்திட, இதனை விற்பனை செய்திடும் கடைகளை அணுகி அவர்களிடம் தந்துவிடலாம். வெளிநாடுகளில், இதற்கெனவே மறு சுழற்சி மையங்கள் இருக்கின்றன. இந்தியாவில், நம் நகரங்களில் அது போன்ற மையங்கள் இல்லை.

பேட்டரியை நீக்கியவுடன், அதன் முனைகளை, மின் சாதனங்களை முடக்கப் பயன்படுத்தும் டேப்களைக் கொண்டு மூடவும். இதனால், எதிர்பாராத சூழ்நிலைகளில், இரு முனைகளுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டு, பெரும் விபத்து நேரும் அபாயம் தடுக்கப்படுகிறது. உங்களால் பேட்டரியை நீக்க முடியாத நிலையில், அது பயன்படுத்தப்படும் சாதனத்தையே பேட்டரி மற்றும் சாதனம் பழுது பார்க்கும் கடைகளுக்குச் சென்று, அவர்கள் உதவியுடன் பேட்டரியை நீக்கி அவர்களிடமே தந்துவிட்டு வந்துவிடலாம்.

பேட்டரிகள் தடிப்பதனை எப்படி தடுக்கலாம்?: மேலே தரப்பட்டுள்ள தகவல்களைப் படித்தவுடன், "என்னிடம் இது போல தடிமன் அதிகரித்த பேட்டரி எதுவும் என் சாதனங்களில் இல்லை. ஆனால், இது போல தடிமன் கூடுவதை எப்படி தடுப்பது?" என்ற வினா வரலாம். அதற்கான சில வழிமுறைகள் இதோ:
1. லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு வெப்பம் என்பதே ஆகாது. எனவே, அது பயன்படுத்தப்படும் சாதனங்களை, குளுமையான இடத்தில் வைத்துப் பயன்படுத்தவும். அல்லது, வெப்பம் அதிகம் உள்ள இடத்தில் வைத்திருப்பதனைத் தடுக்கவும். சிலர் காரில் டேஷ் போர்டில், இந்த வகை சாதனங்களை வைத்துவிட்டு சென்றுவிடுவார்கள். நேரடியாக வெயிலில் சாதனமும், பேட்டரியும் வெப்பமடையத் தொடங்கும். இது பேட்டரியின் தடிமனை நிச்சயம் அதிகரிக்கச் செய்திடும்.
2. உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தப் போவதில்லையா? உள்ளிருக்கும் பேட்டரியை எடுத்து, குளுமையான இடத்தில் வைத்துவிடவும்.
3. சரியான சார்ஜரைப் பயன்படுத்த வேண்டும். லித்திய அயன் பேட்டரியைத் தேவைக்கு அதிகமாக சார்ஜ் செய்வது அதில் பாதிப்பினை ஏற்படுத்தும். பெரும்பாலானவர்கள், சாதனத்துடன் தரப்பட்ட சார்ஜர் பழுதாகிப்போன பின்பு, குறைந்த விலைக்குக் கிடைக்கும் வேறு நிறுவன சார்ஜரை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்குகின்றனர். இந்த செயலினை மேற்கொள்வது, லித்தியம் அயன் பேட்டரியை, அதிகமாக சார்ஜ் செய்திடும் வழிக்குக் கொண்டு சென்று, விரைவில், அதன் தடிமனை அதிகரிக்கிறது.
4. பழைய பேட்டரிகளை உடனே மாற்ற வேண்டும். உங்கள் லேப் டாப் பேட்டரி, இதுவரை 5 மணி நேரம் வரை மின் சக்தியினைக் கொடுத்துவிட்டு, தற்போது 30 நிமிடங்களிலேயே தன் பணியை முடித்துக் கொள்கிறதா? பேட்டரியின் உள்ளிருக்கும் பொருட்கள் வீணாகிவிட்டன என்று இது காட்டுகிறது. உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.
5. தொடர்ந்து சார்ஜ் செய்திடும் நிலையில், உங்கள் சாதனத்தினை வைத்திருக்க வேண்டாம். பேட்டரி ஒன்றைக் கட்டாயமாக முழுமையாக 100% சார்ஜ் செய்திட வேண்டும் என்பது கட்டாயமல்ல. சற்றுக் குறைவாக சார்ஜ் செய்வதே, லித்தியம் அயன் பேட்டரிகளுக்கு நல்லது. எனவே, மின் இணைப்பில் வைத்துவிட்டு 100% சார்ஜ் ஆன பின்னரும், அதனை இணைப்பில் வைத்திருப்பது நல்லதல்ல. வெகுநேரம் தொடர்ந்து பணியாற்றச் செல்வதால், தொடர் மின் இணைப்பில் சார்ஜ் செய்கிறேன் என்ற நிலையை ஏற்க வேண்டாம். இப்போதெல்லாம், இவற்றை சார்ஜ் செய்திட பவர் பேக் எனப்படும் பேட்டரிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம்.
லித்தியம் அயன் பேட்டரியில் நீங்கள் இதுவரை அதிகக் கவனம் செலுத்தாமல் இருந்தால், இனி அடிக்கடி அதன் நிலையினைப் பார்த்து மேலே தரப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
http://www.tamilyes.com/t53304-topic

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 1 ஜனவரி, 2018

கவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்

கவனமாய் ஹார்ட் டிஸ்க்கைப் பயன்படுத்துவோம்

கம்ப்யூட்டரை இயக்கிப் பயன்களை அனுபவிக்கையில், மவுஸ், கீ போர்ட், மானிட்டர், இணைக்கப்பட்டிருந்தால் பிரிண்டர் என அனைத்தையும் கவனமாகப் பாதுகாக்கிறோம். இவை எல்லாம் கெட்டுப் போய், இயக்கத்தை நிறுத்தினால், புதியதாக ஒன்று வாங்கி இணைத்துப் பயன்படுத்தலாம். ஆனால், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போய் முடங்கிவிட்டால் என்ன செய்வீர்கள். ஹார்ட் டிஸ்க் புதியதாக ஒன்று
வாங்கி இணைத்துப் பயன்படுத்தலாம்.



ஆனால், அது அவ்வளவு எளிதா என்ன? மேலும், அதில் உள்ள டேட்டாவினை மீட்டு எடுக்க முடியவில்லை என்றால், நம்முடைய பல்லாண்டு உழைப்பு அல்லவா வீணாகிவிடும். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை, அனைத்து பாகங்களும், ஒரு நாளில் இயங்கா நிலையை அடையும். ஆனால், எவை எப்போது தங்களின் இயக்கத்தினை நிறுத்தும் என எதிர்பார்க்க முடியாது. அந்த வகையில், நம்மால் இயன்ற வகையில், ஹார்ட் டிஸ்க்கினைப் பயன்படுத்துவதனைச் செம்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
ஒரு ஹார்ட் டிஸ்க்கின் வாழ் நாள் குறைந்திடப் பல காரணங்கள் உள்ளன. இவற்றில் நாம் எதனை நம் அளவில் தவிர்க்கலாம் அல்லது சரி செய்திடலாம் என இங்கு பார்க்கலாம்.

நாமாக ஏற்படுத்தும் சேதம்: ஹார்ட் டிஸ்க் ஒன்றை முற்றிலுமாகப் பயனற்றுப் போகச் செய்வது அதில் நாமாக ஏற்படுத்தும் சேதம் தான். நாமாக எப்படி சேதம் ஏற்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க் தான், மிகப் பத்திரமாக ஒரு மூடப்பட்ட, உறுதியான அலுமினியம் டப்பாவில் அடைக்கப்பட்டு உள்ளதே. காற்று கூடப் போகமுடியாதபடி அல்லவா இருக்கிறது என்ற கேள்வி உங்கள் மனதில் வரலாம். நாம் எண்ணுவதெல்லாம் சரிதான். ஆனால், ஹார்ட் டிஸ்க்கில் தான், அதன் செயல்பாட்டின் போது, நகரும் பகுதிகளைக் கொண்டதாக உள்ளது. இந்த நகரும் பகுதிகள் எல்லாம், மிகவும் சிறிய தவறான அசைவில் கூட கெட்டுப் போகும் வாய்ப்பு கொண்டவை. ஹார்ட் ட்ரைவ் செயலாற்றுகையில், வேகமாகச் சுழலும். அப்போது ஏற்படும் சிறிய அதிர்ச்சி கூட அதற்குப் பிரச்னையைத் தரும். சுழலாத போதும் அதிர்ச்சி தரும் வகையில் அதன் மீது தாக்கத்தினை ஏற்படுத்தக் கூடாது. அப்படியானல், அதனை எப்படி பாதுகாக்கலாம்?

கம்ப்யூட்டரில் ஹார்ட் டிஸ்க் ஒன்றை இன்ஸ்டால் செய்த பின்னர், அதனை கம்ப்யூட்டரிலிருந்து எடுக்கக் கூடாது. அப்படி எடுப்பதாக இருந்தால், அதனை இன்னொரு கம்ப்யூட்டர் கேபினில் மாற்றி இணைப்பதற்காகத்தான் இருக்க வேண்டும். இதனை மிக மெதுவாகவும், விரைவாகவும், அதற்கேற்ற உபகரணங்களைக் கொண்டும் மேற்கொள்ள வேண்டும். கம்ப்யூட்டர் செயல்பாட்டில் இருக்கையில், அதனை அசைத்துப் பார்ப்பது கூடாது. வெளியே எடுப்பதாக இருந்து, எடுத்துவிட்டால், அதனைப் பத்திரமான ஓர் இடத்தில் வைத்துப் பாதுகாப்பாக வைத்திட வேண்டும்.

ஹார்ட் ட்ரைவ்களைப் பொறுத்தவரை, லேப்டாப் கம்ப்யூட்டர்களில் உள்ளவை தான், ஆபத்தினை விளைவிக்கும் சூழ்நிலைகளை அதிகம் எதிர் கொள்பவை ஆகும். இதற்காக, லேப்டாப் இயங்குகையில், அடுக்கி வைக்கப்பட்ட முட்டைகளின் மீது நடப்பது போல நடக்க வேண்டாம். ஆனாலும், சற்று கூடுதலான எச்சரிக்கையுடன் அதனைக் கையாள வேண்டும். டேபிளின் மீதோ, அல்லது சுவர் மீதோ, இது மோதினால், பிரச்னை ஏற்பட்டு, அதில் பதியப்பட்டுள்ள டேட்டாவுக்குச் சேதம் ஏற்படலாம். அவை கரப்ட் ஆகலாம்.
அதிக வெப்பம்:
 ஹார்ட் டிஸ்க்குகளின் பெரிய எதிரி, அவை சந்திக்கும் அளவிற்கு அதிகமான வெப்பம் தான். ஹார்ட் ட்ரைவ்கள் அனைத்துமே, ஒரு குறிப்பிட்ட அளவு வரையே உஷ்ணத்தைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருப்பவை ஆகும். இது அவற்றைத் தயாரிக்கும் நிறுவனம் மற்றும் வகையைப் பொறுத்ததாகும். ஒவ்வொரு ஹார்ட் டிஸ்க்கும் எந்த அளவில் உஷ்ணத்தைத் தாங்கும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிற்குள்ளாகவே, அது சந்திக்கும் உஷ்ணநிலை இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வகையில், பாதுகாப்பான சூழ்நிலையை அதற்குத் தர வேண்டும். இந்த பாதுகாப்பான சூழ்நிலை என்பது, கம்ப்யூட்டர் ஷெல் வழியாக, காற்றானது நன்றாகச் சென்று வர வேண்டும். உள்ளே செல்வதும், வெளியேறுவதும் சரியாக இருக்க வேண்டும். இதற்கென அமைக்கப்பட்ட விசிறிகள் சரியான வேகத்தில் எப்போதும் சுழல வேண்டும். நாம் அமர்ந்திருக்கும் அறை, நாம் பணியாற்றத் தேவையான சரியான வெப்ப சூழ்நிலையைத் தந்து கொண்டிருக்கலாம். ஆனால், அதே சூழ்நிலை கம்ப்யூட்டர் மற்றும், அதன் உள்ளே இருக்கும் சாதனங்களுக்கும் கிடைக்கிறது என்று எண்ணக் கூடாது.

இதனை உறுதி செய்திட, அவ்வப்போது கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றைக் கழற்றி, அதன் உள்ளே சென்று தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். பொருத்தப்பட்டுள்ள சிறிய மின் விசிறிகளின் சுழலும் தகடுகளில் தங்கியிருக்கும் தூசியை நீக்க வேண்டும். அவற்றின் சுழலும் வேகம் சரியாக இருப்பதனை உறுதி செய்திட வேண்டும். லேப்டாப் கம்ப்யூட்டர்களில், குறைவான தூசி செல்வதையும், அதிகமான காற்று சென்று வருவதையும் உறுதி செய்திட வேண்டும்.

சிதறியபடி பதியப்படும் பைல்கள் (File fragmentation): பைல்களைச் சிதறியபடி ஹார்ட் டிஸ்க்கில் பதிவது நேரடியாக ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்காது. இருப்பினும், பைல் ஒன்று, பல துண்டுகளாக, பல இடங்களில் சேவ் செய்யப்பட்டிருந்தால், அதனைத் தேடும்போதும், படிக்கும் போதும், மேலும் எழுதும்போதும், ஹார்ட் டிஸ்க் தேவைக்கு அதிகமாகச் சுழன்று அதில் உள்ள டேட்டாவினைப் படிக்கவும் எழுதவும் முயற்சிக்கும். இதனால், ஹார்ட் டிஸ்க்கின் செயல்திறன் கூடுதலாகி, அதன் வாழ்நாள் குறையும் அபாயம் ஏற்படுகிறது. பைல் ஒரே இடத்தில் தொடர்ச்சியாக எழுதப்பட்டிருந்தால், இந்த பிரச்னை ஏற்படாது. இந்த பாதிப்பு உடனடியாகத் தெரியாது. ஆனால், பாதிப்பு ஏற்படத்தான் செய்யும்.

இதனை எப்படித் தீர்க்கலாம்? இதற்கான வழி defragmentation தான். இது NTFS வகை ட்ரைவ்களில் பெரிய பிரச்னையே அல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னால் பயன்படுத்தப்பட்டு வந்த FAT32 ட்ரைவ்களில் தீர்வு காண வேண்டிய பிரச்னையாகும். இத்தகைய ட்ரைவ்களை இன்னும் பயன்படுத்துவோர், கட்டாயம் அவர்களின் ஹார்ட் டிஸ்க்குகளை defragment செய்திட வேண்டும். இதற்கு இணையத்தில் நிறைய டூல்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால், அதற்காக, அடிக்கடி defragment செய்திடுவதும் தவறு.
டிபிராக் செய்வதனால், கம்ப்யூட்டரின் செயல்பாடு கூடுதல் வேகத்தில் இருக்கும். பைல்களைக் கண்டறிவதும், அவற்றைக் கையாள்வதும் வேகமாக நடக்கும். மேலும், பெற இயலாத பைல்களைத் தேடிக் கண்டறிவதும் எளிதான செயலாக மாறும்.

அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும்: ஹார்ட் ட்ரைவினைப் பொறுத்தவரை அதனை பூட் செய்வதும், ஷட் டவுண் செய்வதுமே அதற்கு அதிக சிரமம் தரும் செயலாகும். அடிக்கடி அதனைச் சுழலவிடுவதும், சுழல்வதைத் திடீரென நிறுத்துவதும், ஹார்ட் டிஸ்க்கினை விரைவில் கெட்டுப் போக வைத்திடும். இதில் நமக்குச் சிக்கலான ஒரு சூழல் ஏற்படுகிறது. எந்நேரமும் ஹார்ட் டிஸ்க்கினை இயக்கத்தில் வைத்திருக்க முடியாது. அதற்காக, அதனை அடிக்கடி இயக்குவதும் நிறுத்துவதும் அதற்குக் கேடு விளைவிக்கும். இரண்டிற்கும் இடையேயான பாதுகாப்பான கோடு எதுவாக இருக்கும்? இப்போது கம்ப்யூட்டரை standby அல்லது hibernation என இரு நிலைகளில் வைக்கும் வசதி உள்ளது. குறைந்த நேரம் நீங்கள் கம்ப்யூட்டரை விட்டுச் செல்வதாக இருந்தால், இந்த இரு நிலைகளில் ஒன்றில் வைத்துவிட்டுச் செல்லலாம். அதிக நேரம் எனில், கம்ப்யூட்டர் இயக்கத்தை நிறுத்திவிட்டுச் செல்வதே நல்லது. அதாவது ஹார்ட் டிஸ்க்கினை முழுமையாக நிறுத்துவது இங்கு விரும்பத்தக்கது.

மின்சக்தியில் ஏற்றத் தாழ்வு: மின்சாரம் நமக்கு எப்போதும் ஒரே சீராகக் கிடைப்பதில்லை. அதன் பயன்பாட்டு சக்தியில் ஏற்றத் தாழ்வு ஏற்படும். இது மிகக் குறைவான நானோ செகண்ட் அளவில் ஏற்பட்டாலும், டிஜிட்டல் சாதனங்களில் பிரச்னையை ஏற்படுத்தும். கம்ப்யூட்டருக்குச் செல்லும், மின்சார ஓட்டத்தில் இந்த ஏற்றத் தாழ்வு இருந்தால், அது நிச்சயம் ஹார்ட் டிஸ்க்கினைப் பாதிக்கும். இதனை ஆங்கிலத்தில் surges என்று சொல்வார்கள். இதிலிருந்து ஹார்ட் டிஸ்க்கினை எப்படிப் பாதுகாக்கலாம்? சர்ஜ் ப்ரடக்டர் (surge protector)என்னும் பாதுகாப்பு சாதனம் இதற்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது.

இவை, மின்சக்தி ஓட்டத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளை உடனுடக்குடன் கண்டறிந்து, அவற்றை இந்த சாதனங்களுக்குக் கடத்தாமல் திருப்பி விடும் வேலையை மேற்கொள்கின்றனர். நம் கம்ப்யூட்டரையும், ஹார்ட் டிஸ்க்கினையும் பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால், இது போன்ற ஒரு சர்ஜ் புரடக்டரை வாங்கி இணைப்பது நல்லது.

மேலே சுட்டிக் காட்டப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிகளைப் பின்பற்றிய பின்னரும், உங்கள் கம்ப்யூட்டர் அல்லது ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும் வாய்ப்புகள் ஏற்படும். இருப்பினும் இந்த தகவல்களைத் தெரிந்து கொண்டு, அவற்றிடம் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கண் தெரியாதவர்கள் ஏன் கருப்பு கண்ணாடி போடுகிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

கண் பார்வை மங்கலாக இருந்தால் அதற்கு கண்ணாடி போடுகிறார்கள். கண்கள் தெரியாமல் இருந்தாலும் கண்ணாடி போடுகிறார்கள். பொதுவாக கண்களில் ஏற்படு...

Popular Posts