லேபிள்கள்

புதன், 19 நவம்பர், 2025

மலச்சிக்கல்பிரச்சினை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.

மலம் கழிப்பதில் சிரமம் ஒருவரின் தினசரி அட்டவணையில் தலையிடுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும்.

அதற்கான காரணங்கள் பல இருக்கலாம் உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது, மன அழுத்தம், ஒழுங்கற்ற தூக்கம் வரை.

இது பொதுவாக சமாளிக்கக்கூடியது என்றாலும், மலச்சிக்கல் நாள்பட்டதாக இருந்தால் உடனடி மருத்துவ கவனிப்பு தேவை.

மலச்சிக்கலை தவிர்க்க பொதுவான சில தினசரி தவறுகளை தவிர்க்க ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது. மலச்சிக்கல் ஏற்பட்டால் தவிர்க்க வேண்டிய 3 விஷயங்களைப் பற்றி பார்க்கலாம். தினமும் உங்களால் உங்கள் குடலை சுத்தம் செய்ய முடியாவிட்டால், உங்கள் உடலில் ஏதோ பிரச்சனை உள்ளது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

சீரகம்:

ஜீரகம், ஆயுர்வேதத்தில் ஜீரகா என்று அழைக்கப்படுகிறது. இது ஜீர்னா என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டது, அதாவது செரிமானம். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, இது பசியின்மை, வயிற்றுப்போக்கு, எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி ஆகியவற்றிற்கு அற்புதமானது. ஆனால் மலச்சிக்கலுக்கு அல்ல.

ஆகவே, சீரகத்தை மலச்சிக்கல் இருக்கும்போது பயன்படுத்த வேண்டாம்.

தயிர்:

தயிர் சுவையானது, இயற்கையில் சூடான தன்மை கொண்டது. இது மேலும் மனம் மற்றும் உடலில் உள்ள அனைத்து இயக்கங்களையும் நிர்வகிக்கிறது. இது இயற்கையில் உறிஞ்சக்கூடியது மற்றும் ஜீரணிக்க கடினமானது. இது "மலச்சிக்கலுக்கு பொருந்தாது." எனவே உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், குணமாகும் வரை தயிரை தவிர்க்கவும்.

காஃபின்:

காஃபின் நமது செரிமான அமைப்பில் உள்ள தசைகளைத் தூண்டி, குடலின் எளிதான இயக்கத்தை ஏற்படுத்தும் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். ஆனால் காஃபின் (குறிப்பாக அதிகப்படியான காஃபின்) நீரிழப்பை ஏற்படுத்துகிறது. இது எதிர் விளைவைக் கொடுக்கும் மற்றும் மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். எனவே உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால், அதைத் தவிர்க்கவும்.

உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருவர் டீ/காபியுடன் தங்கள் நாளை "தொடங்கக்கூடாது". "அதற்கு பதிலாக வெதுவெதுப்பான நீர் அல்லது 1 டீஸ்பூன் பசு நெய்யுடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள், குறிப்பாக உங்களுக்கு மலச்சிக்கல் இருந்தால் இதனை செய்ய வேண்டும்.



--

ஞாயிறு, 16 நவம்பர், 2025

பாக்கெட் ஊறுகாய் பெரும் ஆபத்து - மாங்காய், எலுமிச்சை, நெல்லிக்காய். ஊறுகாய் உடலுக்கு உகந்ததா

நினைத்தாலே உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும் சுவை ஓர் உணவுப் பண்டத்துக்கு உண்டா? நிச்சயம் உண்டு. அது ஊறுகாய்.

இதன் துணை இருந்தால் போதும், வெறும் சாதத்தில் தண்ணீர்விட்டுச் சாப்பிட்டால்கூட கவளம் கவளமாக உள்ளே இறங்கும். மாங்காய், நார்த்தங்காய், எலுமிச்சை, ஆவக்காய், நெல்லி. என ஊறுகாயில்தான் எத்தனை வகைகள்! இதன் மேல் உள்ள கட்டுக்கடங்காத ஆசை, சிக்கன், மீன், இறால். என அசைவத்திலும் செய்து பார்க்க இதன் ரசிகர்களைத் தூண்டியிருக்கிறது.

ஊறுகாய்

கர்நாடக இசையில் `துக்கடா' என்று ஒரு பிரிவு உண்டு. அதாவது, கச்சேரியில் பிரதான பாடல்கள், கீர்த்தனைகள் இவற்றுக்கெல்லாம் இடம் கொடுத்துவிட்டு, மிச்ச நேரத்தில் பாடப்படும் அல்லது இசைக்கப்படும் குட்டி கீர்த்தனைகள். நம் பாரம்பர்யத்தைப் பொறுத்தவரை ஊறுகாய் என்பது `துக்கடா'வைப்போலத்தான். தொட்டுக்கொள்ள உதவும் ஓர் உணவுப் பண்டம். யாரோ இப்படி வைத்திருந்தாலும், ஊறுகாயை நம்மால் அப்படிப் பார்க்க முடியாது. பழைய சாதம், தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ள உதவும் ஒன்றுதானே என இதைச் சாதாரணமாகக் கருத முடியாது; ஒதுக்க முடியாது. எத்தனையோ பதார்த்தங்கள் நிறைந்த அறுசுவை விருந்தாக இருந்தாலும், ஊறுகாய் இல்லாமல் விருந்து முழுமைப் பெறுவதில்லை. மற்ற பதார்த்தங்களின் சுவை குறையும்போது, சாப்பாட்டை உள்ளே தள்ள கைகொடுப்பது இதுதான்.

மாங்காயின் மேல் தமிழர்களுக்கு அதிக ஆர்வம் உண்டு. முக்கனிகளில் ஒன்றல்லவா?! அது காயாகவோ, கனியும் வரையோகூட சிலரால் பொறுக்க முடியாது. பிஞ்சாக இருக்கும்போதே பறித்துவிடுவார்கள். புளிப்பும் இனிப்பும் இல்லாத துவர்ப்புச் சுவை உள்ள மாம்பிஞ்சை என்ன செய்ய? அதற்குத்தான் `மாவடு'வைக் கண்டுபிடித்தார்கள் நம்மவர்கள். தயிர்சாதம்-மாவடு காம்பினேஷன்போல அற்புதமான சேர்மானம் வேறு எந்த உணவுக்கும் இல்லை என்றே சொல்லலாம். சரி. ஊறுகாயை ஏன் கண்டுபிடித்தார்கள் மனிதர்கள்? குளிர்சாதனப் பெட்டியெல்லாம் வராத காலத்தில் உணவை எதிர்காலத் தேவைக்குப் பதப்படுத்தி வைக்க கண்டுபிடிக்கப்பட்ட வழிமுறை, உப்புபோட்டு ஊறவைத்தல் அல்லது பதனப்படுத்தி வைத்தல் அல்லது உப்புக்கண்டம். எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆங்கிலத்தில் இதை `Pickling' என்கிறார்கள். `4,000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே இந்தியாவில் இந்த வழக்கம் இருந்திருக்கிறது' என்கிறார்கள் உணவு வரலாற்று ஆசிரியர்கள்.

எலுமிச்சை-ஊறுகாய்

இந்தியாவில் கோடையில் கடும் வெப்பம் நிலவும். அந்தக் காலங்களில் உணவு உற்பத்தி மிகவும் குறைவாகவே இருக்கும். குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமாக இருக்கும் உணவைப் பதப்படுத்தி வைத்தால், அது கோடையில் உதவும்தானே! அதற்காகத்தான் பதப்படுத்தும் வழிமுறையைக் கண்டுபிடித்தார்கள். எலுமிச்சை, நெல்லி, மாங்காய். என ஏதோ ஒரு காய். அதை நன்றாக நறுக்கி, நிறைய உப்புச் சேர்த்து, தாளிதப் பொருள்களைக் கலந்து, எண்ணெய் ஊற்றி சில நாள்கள் வைத்திருந்தால் ஊறுகாய் ரெடி. இதைத் தனியே ஒரு ஜாடியில் வைத்திருந்தால் போதுமானது. எந்த தட்பவெப்பநிலையிலும் இருக்கும். கைபடாமல் வைத்திருந்தால் வெகு நாள்களுக்குக் கெட்டுப் போகாது. தொலைதூரப் பயணங்களில் கை கொடுக்கும்.

கன்னடத்தில் `உப்பினக்காயி', தெலுங்கில் `பச்சடி', மலையாளத்தில் `உப்பில்லித்துட்டு', மராத்தியில் `லோன்ச்சா', குஜராத்தியில் `அதானு', இந்தியில் `ஆச்சார்' என ஊறுகாய்க்குப் பல பெயர்கள். ஆனால், இதன் பூர்வீகம் இந்தியா என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. நியூயார்க் ஃபுட் மியூஸியத்தின் `பிக்கில் ஹிஸ்டரி டைம்லைன்' (Pickle History Timeline), `கி.மு.2030 காலகட்டத்திலேயே இந்தியாவில் வெள்ளரியை ஊறவைத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள்' என்று குறிப்பிடுகிறது. `தனிப்பாடல் திரட்டு' நூலில் கவி காளமேகம், `திங்க ணுதலார் திருமனம்போ லேகீறி.' என ஊறுகாயை உட்பொருளாக்கி ஒரு பாடலே பாடிவைத்திருக்கிறார். வட இந்தியாவில் பலருக்குச் சப்பாத்திக்குக்கூட சைடுடிஷ் இதுதான். அங்கே பல காய்களைக் கொண்டு மிக்ஸடு ஊறுகாய் எல்லாம் செய்து நாக்கைச் சப்புக்கொட்ட வைக்கிறார்கள்.

நார்த்தை-ஊறுகாய்

ஆங்கிலத்தில் புழக்கத்தில் இருக்கும் `பிக்கிள்' (Pickle) என்ற வார்த்தை, டச்சு மொழியில் உள்ள `பெக்கெள்' (Pekel)-ல் இருந்து வந்தது என்கிறார்கள். இதற்கு அர்த்தம் `உப்பு நீர்'. ஹாப்சன் -ஜாப்சன் எழுதிய `The definitive glossory of british India' என்ற புத்தகத்தில், 1563-ம் ஆண்டிலேயே இந்தியில் ஊறுகாய்க்குச் சொல்லப்படும் `ஆச்சார்' என்ற வார்த்தை புழக்கத்தில் இருந்தது குறிப்பிடப்பட்டிருக்கிறது. போர்ச்சுக்கீசிய மருத்துவரான கார்ஸியா டே ஆர்ட்டா (Garcia da Orta) முந்திரியில் உப்பு சேர்த்து பதப்படுத்தப்படுவதை `ஆச்சார் என்று இவர்கள் குறிப்பிடுகிறார்கள்' என எழுதிவைத்திருக்கிறார்.



--

வியாழன், 13 நவம்பர், 2025

தெரிந்து கொள்வோம்

கல் உப்புக்கும், தூள் உப்புக்கும் உள்ள வேறுபாடு என்ன? தூள் உப்பை எப்படி உற்பத்தி செய்கின்றனர்?

கல் உப்பு மற்றும் தூள் உப்புக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள் அவற்றின் சுவை, அமைப்பு மற்றும் தயாரிப்பு முறை ஆகியவற்றில் உள்ளன.

கல் உப்பு கடல் நீரை ஆவியாக்குவதன் மூலமோ அல்லது உப்பு நீர் ஏரிகளிலிருந்து வரும் நீரை ஆவியாக்குவதன் மூலமோ உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர் ஆதாரத்தை பொறுத்து, இது சில சுவடு தாதுக்கள் மற்றும் மினரல்களை விட்டுச் செல்கிறது. தாதுக்கள் கல் உப்புக்கு சுவையையும், வண்ணத்தையும் சேர்க்கின்றன. இது பலவிதமான கரடுமுரடான அளவிலும் வருகிறது.

தாதுக்களை அகற்ற தூள் உப்பு பதப்படுத்தப்படுகிறது மற்றும் பொதுவாக கட்டியாக சேர்வதை தடுக்க ஏதாவது ஒரு ரசாயனம் சேர்க்கப்படுகின்றது. பெரும்பாலான தூள் உப்புகளில் அயோடின் (ஐழனiநெ) சேர்க்கப்படுகின்றது.

கல் உப்பு மற்றும் தூள் உப்பு ஆகியவை ஒரே அடிப்படை ஊட்டச்சத்து மதிப்பைக் கொண்டுள்ளன.

கல் உப்பு மற்றும் தூள் உப்புகள் அதன் எடைக்கு ஏற்றவாறு சோடியத்தை (ளுழனரைஅ) கொண்டுள்ளது.

ரசாயனம் சேர்க்கப்படாத காரணத்தால் கல் உப்பு பெரும்பாலும் ஆரோக்கியமானதாக கருதப்படுகின்றது. நீங்கள் எந்த வகை உப்பை உபயோகித்தாலும் மிதமான முறையில் உபயோகியுங்கள். ஒரு நாளைக்கு சோடியத்தை 2,300 மில்லி கிராமிற்கும் குறைவாக உபயோகியுங்கள்.

கண்ணாடிக் கதவில் துப்பாக்கியால் சுட்டால் துளை உண்டாவதும், கல்லால் அடித்தால் தூளாக உடைந்து போவதும் ஏன்?

இயக்கத்தில் உள்ள எந்த பொருளிலும் ஓரளவு விசை இயக்க ஆற்றல் (மiநெவiஉ நநெசபல) உள்ளது. இந்த துப்பாக்கியிலிருந்து வெளியேறுகின்ற குண்டு மணிக்குப் பல நூறு மைல் வேகத்தில் செல்வதால், அதன் உந்தம் மிகுதியாக இருக்கும். மேலும் அவ்வளவு வேகத்தில் செல்லும் குண்டு சுழன்றுகொண்டே செல்லும்.

அவ்வாறு பாய்ந்து செல்லும் குண்டு கண்ணாடி கதவால் தடுக்கப்படும்போது, அதன் சிறு அளவு உந்தம் கண்ணாடிக்கு மாற்றப்பெறுவது உண்மையே... அதே நேரத்தில் துப்பாக்கிக்குண்டு சுழன்ற வண்ணம் வேகமாக செல்வதால் கண்ணாடி கதவில் துளையை உருவாக்கி அதன் வழியே வெளியேறி விடுகிறது.

மாறாக கதவை நோக்கி வீசியெறியப்பட்ட கல் குறைந்த வேகத்தில் செல்கிறது. அது கண்ணாடி பலகையை தொடும்போது அதன் முழு உந்தமும் கண்ணாடிக்கு மாற்றப்பெறுகிறது. இவ்வாறு கல்லில் பொதிந்திருந்த முழு ஆற்றலும் கண்ணாடிக்கு மாற்றம் பெறுவதோடு கண்ணாடி மூலக்கூறுகள் வலிமை குன்றி பிணைக்கப்பட்டிருக்கும் பகுதிகளிலும் பரவுகிறது. இதன் விளைவாக கல்லெறிபட்ட கண்ணாடி கதவுப்பகுதிகள் உடைந்து சிதறுகின்றன.



--

ஞாயிறு, 9 நவம்பர், 2025

கம்பளிப்பூச்சியைஒழிக்க டிப்ஸ்

வீட்டு தோட்டங்கள் மற்றும் செடி கொடிகளில் அதிகமாக இருக்கும் பூச்சி வகைகளில் முக்கியமானது கம்பளிப்பூச்சி.

அதனை பார்க்கும் போது உடலின் சருமத்தில் மயிர் கால்களில் அரிப்பு எடுக்கும். உண்மையில் அவை பார்ப்பதற்கு அருவருப்பாக இருக்கும். அவை சருமத்தில் பட்டால் அரிப்பாக இருக்கும். சிலருக்கு தோல் முழுக்க சிவப்பையும் தடிப்பையும் உண்டாக்கிவிடும். தோல் மொத்தமாக வாங்கி விடக்கூடும். இப்படி பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கக்கூடிய கம்பளி பூச்சி அதிகம் இருக்கும் இடம் முருங்கை மரம் தான். அப்படி மரத்தின் கம்பளி பூச்சி வராமல் தடுக்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

வேப்பிலை மூலிகை புகை:

கம்பளிப் பூச்சிகள் செடிகள் மற்றும் மரங்கள் மீது அட்டை போல ஒட்டிக் கொள்ளும். அதனை அப்புறப்படுத்தும் விஷயம் என்பது மிகவும் கடினம். அதனை நெருப்பில் போட்டு தான் அளிக்க முடியும். சிலர் மரங்களில் தீப்பந்தத்தை கொளுத்தி வைப்பார்கள். அதனால் கம்பளிப்பூச்சி அழிந்தாலும் கூட முருங்கை மரமும் கூடவே வீணாகிவிடும்.

இதற்கு என்ன தீர்வு என்றால் செடி அல்லது மரங்கள் என்ற இடத்தில் கம்பளிப்பூச்சி உள்ளது என்பதை பார்த்து கொள்ள வேண்டும். அதற்குக் கீழ் மரத்துக்கு சற்று தள்ளி காலடிக்கு பள்ளம் தோண்ட வேண்டும். அதில் காய்ந்த சருகுகள், ஓலைகள் மற்றும் குச்சிகள் சேர்த்து அல்லது அடுப்புக்கரி உடன் பேப்பர் சேர்த்து எரியவிட வேண்டும். அது நன்றாக எரியும் போது அதில் ஒரு கைப்பிடி வேப்பிலையை பச்சையாக அல்லது காய்ச்சலுடன் இருப்பதை சேர்த்து விட வேண்டும். 15 நிமிடங்கள் வரை அந்த நெருப்பு நன்றாக எரிய வேண்டும். அதனைப்போலவே அதிலிருந்து புகையும் வரவேண்டும். காலை மாலை என இரண்டு வேளையும் இதனை செய்து வந்தால் கம்பளிப்பூச்சி வேரோடு அழிந்து விடும். அந்த நெருப்பு செடி மற்றும் மரத்தை எதுவும் செய்யாது.

சோப்புத் தண்ணீர்:

சோப்புத் தண்ணீரை கம்பளிப்பூச்சியை அழிப்பதற்கு நாம் பயன்படுத்தலாம். செடிகள் மீது அதிக அளவு இந்த முறையை பின்பற்ற வேண்டாம். ஆனால் செடியிலிருந்து வீட்டிற்குள் வரும்போது இந்த முறை உங்களுக்கு மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். துணி பவுடர் எந்த பிராண்ட் ஆக இருந்தாலும் அதனை எடுத்து ஒரு டம்ளர் நீர் விட்டு நுரை வரும் வரை நன்றாக கலக்கிக் கொள்ளவேண்டும். அந்த நீரை அப்படியே கம்பளிப்பூச்சி இருக்கும் இடத்தில் ஊற்ற வேண்டும். கம்பளிப் பூச்சிகள் வரும் இடங்களில் அதனை ஊற்றி வைக்கலாம். இப்படி செய்தால் வீட்டிற்குள் கம்பளி பூச்சி வராமல் தடுக்க முடியும்.

பெருங்காயம் மஞ்சள் கரைசல்:

செடிகளையும் மரங்களையும் பாதிப்பில்லாமல் மீட்பதற்கு கம்பளி பூச்சி வரும் மழைக் காலங்களுக்கு முன்னரே இதை மரங்கள் செடிகளில் அடித்துவிட வேண்டும். கால் லிட்டர் தண்ணீருடன் 50 கிராம் அளவு கட்டி பெருங்காயம் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு பிறகு இறக்கி ஆறவிடவும். மற்றொரு பாத்திரத்தில் 200 கிராம் அளவுக்கு விரலி மஞ்சளை அரைத்து ஒரு லிட்டர் நீரில் கரைத்து கொதிக்க விடவும். அதன் பிறகு இறக்கி பெருங்காயம் கரைசல் மஞ்சள்தூள் இரண்டையும் கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளலாம். ஒரு பங்கு கரைசலுடன் இரண்டு பங்கு நீர் சேர்த்து செடி மரங்களின் மீது அடித்து விட்டால் கம்பளிப்பூச்சி எப்போதுமே வராது. மற்ற பூச்சிகளும் வராமல் தடுக்க முடியும்.

பப்பாளி இலை கரைசல்:

பப்பாளி இலையை எடுத்து அதனை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து அகலமான பாத்திரம் ஒன்றில் ஊற்றிக் கொள்ள வேண்டும். பப்பாளி இலையை அடிக்கடி நீருடன் கலக்க வேண்டும். அப்படி செய்தால் நிலை மென்மையாக கூடும். இதனை குறைந்தது 10 மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து சாறை எடுத்துக்கொள்ளவும்.

அதனை நீர் சேர்க்காமல் அப்படியே ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி செடிகளின் மீது மூன்று வேளையும் பரவலாக தெரிவித்தால் எந்த பூச்சிகள் அண்டாது. கம்பளி பூச்சி அதிகமாக இருந்தால் நாளொன்றுக்கு ஆறு வேளை தெளித்து வந்தால் கம்பளிப் பூச்சிகள் அப்படியே அழிந்து விடும். இதனைப் போலவே வேப்ப இலைகளை கொண்டும் கம்பளிப்பூச்சியை ஒழிக்கலாம்.



--

வியாழன், 6 நவம்பர், 2025

எலியைத் துரத்தஇயற்கையான வழிகள்.

அனைவரது வீட்டிலும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சினை எது என்றால் அது எலியாக தான் இருக்கும். எலி தொல்லையால் நிறைய பேருக்கு நோய்கள் வந்துள்ளது.

அப்படி இருக்கும் எலிகளை நம் வீட்டில் உள்ள இயற்கைப் பொருட்களைக் கொண்டே விரட்ட முடியும். அதை பற்றி இதில் நாம் தெரிந்து கொள்வோம்.

நாம் என்னென்ன மருந்துகள், எலி பொறி, பிஸ்கெட் போன்றவற்றை வாங்கி வைத்தாலும் அந்த எலி எல்லாவற்றையும் சாப்பிட்டுவிட்டு நமக்கே டிமிக்கி கொடுத்து விடுகிறது. பார்ப்பதற்கு சிறியதாக இருந்தால் கூட அதற்கு புத்திசாலித்தனம் அதிகம். உணவுப்பொருட்களை சாப்பிடுவது எலக்ட்ரிக் கேபிள் போன்ற அனைத்தையும் விடாமல் கடித்து விடும். அதுமட்டுமில்லாமல் இதை அப்படியே விட்டால் நிறைய குட்டிகளை போட்டு வீட்டையே எலி வீடாக மாற்றிவிடும். குழந்தைகள் இருக்கும் வீட்டில் மிகவும் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். அவர்களின் விளையாட்டு பொருட்களில் எலிகள் வாயை வைக்கும் போது அவற்றின் மூலம் பரவும் பாக்டீரியாக்கள் குழந்தைகளுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

இயற்கையான பொருட்களை வைத்து நாம் எலியை விரட்டி விடலாம். அதை என்னென்ன என்பதை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எலிகளுக்கு புதினா போன்ற நறுமணம் வரக்கூடிய வாசனை என்றால் பிடிக்கவே பிடிக்காது. இனி எலி இருக்கும் இடங்களில் ஒரு சிறிய பஞ்சில் புதினா எண்ணெயை நனைத்து ஆங்காங்கே வைத்துவிட்டால், ஓரிரு நாட்களில் எலி அந்த வாசனை பிடிக்காமல் ஓடிவிடும்.

எலியைப் பிடிக்க முதலில் எலிக்கு என்ன பிடிக்குமோ அதை நாம் வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு பொடியை வீட்டின் மூலை முடுக்குகளில் தூவி விடுங்கள். அதை விரும்பி சாப்பிட்டுவிட்டு எலி வயிறு வீங்கி இறந்துவிடும்.

வெங்காயம் எப்போதும் ஒரு நெடிய மனம் தரக்கூடியது. எனவே எலி வரும் இடங்களில் இதை வைத்துவிட்டால் நெடி மணத்துக்கு அது ஓடிவிடும்.

எலி அடிக்கடி நடமாடும் இடங்களில் கோகோ பவுடரை கலந்து போட்டு விடுங்கள். இது தாகத்தை ஏற்படுத்தி தண்ணீர் குடித்தவுடன் இறக்க வைத்து விடும்.

அடுத்தது எலியை விரட்ட மூலைமுடுக்குகளில் மிளகு பொடியை தூவி வைத்தால் போதும். அது நெடி தாங்கமுடியாமல் ஓடிவிடும்.

பூண்டை உரித்து லேசாக நசுக்கி தண்ணீரில் போட்டு எலி வரும் பாதையில் வையுங்கள். பூண்டின் வாசனை பிடிக்காமல் எலி ஓடி விடும்.

எலிக்கு கிராம்பு வாசனை என்றாலே பிடிக்காது. எனவே எலி வரும் இடத்தில் ஒரு துணியில் கிராம்பு எண்ணெய் ஊற்றி போட்டுவிடுங்கள். எலி ஓடிவிடும்.

விளக்கெண்ணெய்யின் பிசு பிசுபிசுப்பு தன்மை மற்றும் வாசனை எரிச்சலைக் கொடுக்கும். இதை கண்டு எலி ஓட ஆரம்பித்துவிடும். எனவே எலி வருகிற இடத்தில் சில சொட்டு விளக்கெண்ணெய்யை ஊற்றி எலி வராது.

எலி வராமல் இருக்க சில விஷயங்களையும் நீங்கள் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு உணவுப் பொருட்களை வெளியில் வைக்காமல் இருக்க வேண்டும். எலிகளின் எச்சங்களை உடனே சுத்தம் செய்ய வேண்டும். இது மற்ற பூச்சிகளை ஈர்க்க கூடும். எலிக்கு இருண்ட, மங்கலான, குப்பைகள் இருக்கும் இடங்கள் என்றால் பிடிக்கும். எனவே வீட்டை எப்பொழுதும் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும் வைத்திருங்கள். எனவே வீட்டை எப்போதும் சுத்தமாக காற்றோட்டமான வைத்து கொள்ள வேண்டும். வீட்டின் ஜன்னல்களை அடைத்து வைத்தால் ஈ, கொசுத்தொல்லை, எலித்தொல்லை இல்லாமல் இருக்கும்.



--

திங்கள், 3 நவம்பர், 2025

எப்போதும் ஏ சியில்இருப்பதால் ஏற்படும் தீமைகள்.

ஏசியின் பயன்பாடு சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும். அது சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடும்.

இதனால் சருமம் வறட்சி அடையும். உதடுகளும் உலர்ந்து போய் விடும். எந்நேரமும் ஏசியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சூரிய ஒளியானது போதுமான அளவு கிடைக்காது. இதனால் வைட்டமின் டி குறைபாடு உருவாகும். ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது. அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற் போல இருப்பது ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் தீவிரமாகும்.

இந்த வைட்டமின், கருவுறுதலில் ஆரம்பித்து இதயம், நுரையீரல் சீராக இயங்குவது வரை தேவையான ஒன்றாகும். இது கிடைக்காமல் போனால் எலும்புகள் பலவீனமடையும். மூட்டுவலி, முதுகுவலி போன்றவை எளிதாக வரும்

நீண்ட நேரம் ஏசியில் உட்கார்ந்திருப்பது உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் ஒரு நல்ல இரவு தூக்கத்தைப் பெற்றாலும், ஏ.சியில் தூங்குவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.. அது உங்கள் உடலில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். எனவே நீண்ட நேரம் ஏசியில் உட்காருவதால் ஏற்படும் தீமைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.

வறண்ட கண்கள்: ஏசியில் தங்குவது உங்கள் கண்களை வறட்சியாக்கும். எலக்ட்ரானிக் கேஜெட்களை நாம் அதிகமாகச் சார்ந்திருப்பதன் காரணமாக உலர் கண் நோய்க்குறி நாட்களில் மிகவும் பொதுவானதாகி வருகிறது. இதனால் வறட்சி ஏற்படுகிறது. உங்களுக்கு ஏற்கனவே உலர் கண் நோய்க்குறி இருந்தால், நீண்ட நேரம் ஏசியில் இருப்பது அறிகுறிகளை மோசமாக்கும். ஒருவர் நீண்ட நேரம் ஏசியில் இருக்கக் கூடாது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

வறண்ட சருமம் மற்றும் முடி உதிர்தல்: காற்றுச்சீரமைப்பிகள் நம் சருமத்திற்கும் கூந்தலுக்கும் நிறைய தீங்கு விளைவிக்கும். காற்றில் இருந்து ஈரப்பதத்தை அகற்றுவதால் தோல் மற்றும் முடி வறண்டு சேதமடைகிறது. ஈரப்பதம் இல்லாததால் முன்கூட்டிய முதுமை, தேவையற்ற தோல் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.

நீரிழப்பு: ஏசி நீரிழப்புக்கும் வழிவகுக்கும். அறையில் இருந்து அதிக ஈரப்பதத்தை ஏசி உறிஞ்சுகிறது, இது நீரிழப்பு உணர்வை ஏற்படுத்தும்.

சுவாச பிரச்சனைகள்: அதிக நேரம் ஏசியில் இருப்பது சுவாச பிரச்சனைகளை உண்டாக்கும். இது மூக்கு, தொண்டை மற்றும் கண்களில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். நீங்கள் வறண்ட தொண்டை, நாசியழற்சி மற்றும் நாசி அடைப்பை அனுபவிக்கலாம்.

ஆஸ்துமா மற்றும் ஒவ்வாமை: ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, ஏசி ஆஸ்துமா நிலைமையை மோசமாக்கும்.. உங்கள் ஏசி சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், அது ஒவ்வாமையைத் தூண்டி ஆஸ்துமாவை மோசமாக்கும்.



--

புதன், 29 அக்டோபர், 2025

நகங்களில் எந்தெந்த அறிகுறி இருந்தால் என்ன நோய்க்கான அறிகுறி என்று தெரிந்து கொள்ளலாம்.

நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம்.

 ஆல்ஃபா கெரட்டின்' (Alpha-keratin) என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது நகப்பூச்சுக்களை பூசுவதும் என அனைத்து மனநிலைக்கும் பலிகடா ஆவது நகங்கள்தான். அழகை மட்டுமல்ல, ஆரோக்கியத்தையும் சொல்லும் நகத்தைப் பராமரிப்பது எப்படி, எந்த நகத்தில் எந்த அடையாளம் இருந்தால், அது எந்த நோயின் அறிகுறி என்பது பற்றியெல்லாம் விளக்குகிறோம்

நகம், விரலுக்கு ஒரு கவசம் போன்றது. நகத்தின் மிகப்பெரிய வேலையே விரலின் முனைகளைப் பாதுகாப்பதுதான். நகத்தில் பல பாகங்கள் இருக்கின்றன. இந்த அமைப்புகள் கை மற்றும் கால்விரல் நகங்களுக்குப் பொதுவானவை.

* மேற்புறத்தில் பளிச்சென்றும் வழுவழுப்பாகவும் இருக்கும் பாகமே நகத்தின் உறுதியான பாகம். இதில் நரம்புகளும் ரத்தக்குழாய்களும் இல்லை.

நகங்களின் அமைப்பு, அவற்றின் நிறம், வடிவம் ஆகியவற்றைப் பார்த்து, உங்களுக்கு எந்த நோய் இருக்கலாம் என்று சொல்லலாம். ஆம்.. உங்கள் நகங்கள் காட்டும் அறிகுறிகளை அடையாளம் கண்டு எச்சரிக்கையாக இருக்க முடியும்

நகங்கள் உடைந்தால் : உங்கள் நகங்கள் நாளுக்கு நாள் வலுவிழந்து கொண்டிருந்தாலோ அல்லது தானாக உடைந்தாலோ, உங்கள் உடலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லை என்பதையும், சத்துக்கள் குறைவினால் வரும் காலங்களில் உங்களுக்கு நோய்கள் வரக்கூடும் என்பதையும் குறிக்கிறது. உங்களுக்கும் அத்தகைய நகங்கள் இருந்தால், உங்கள் உணவு பழக்கங்களையும் மற்றும் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும்.

நகங்கள் மெலிதல் : உங்கள் விரல்களில் உள்ள நகங்கள் நாளுக்கு நாள் மெலிந்து, இலகுவாகி, அவற்றின் நிறமும் மங்கிக் கொண்டே இருந்தால், உங்கள் உடலில் ரத்தப் பற்றாக்குறை இருக்கலாம் அல்லது கல்லீரல் தொடர்பான நோய்கள் இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். இது வயதுக்கு ஏற்ப நடந்தாலும், சிறு வயதிலேயே நடந்தால், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

வெள்ளை புள்ளிகள் : உங்கள் நகங்கள் படிப்படியாக வெள்ளை நிறத்தை நோக்கி நகர்ந்தால் அல்லது அவற்றில் வெள்ளை புள்ளிகள் தோன்ற ஆரம்பித்தால், உங்கள் உடலில் கால்சியம் பற்றாக்குறை உள்ளது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் விரைவில் இதய பலவீனம் அல்லது கல்லீரல் தொடர்பான நோய்களால் ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்..

மஞ்சள் நிற நகங்கள் : நகங்கள் மஞ்சள் நிறமாகி அவற்றின் தடிமன் அதிகரிப்பதால் உங்களுக்கு பூஞ்சை தொற்று இருக்கலாம் என்று அர்த்தம். இத்தகைய நகங்கள் தடிப்புத் தோல் அழற்சி, தைராய்டு மற்றும் நீரிழிவு போன்ற நோய்களின் சாத்தியத்தை பரிந்துரைக்கின்றன. நகங்களின் மஞ்சள் நிறம் உங்கள் உடலில் இரத்தம் இல்லாததைக் குறிக்கிறது. இந்த நிலை உங்களுக்கு இரத்த சோகையை உண்டாக்கும். எனவே நீங்கள் உங்கள் ஆரோக்கியமான உணவை மேம்படுத்த வேண்டும்.

நீண்ட கோடுகள் : உங்கள் நகங்களில் நீண்ட, செங்குத்து கோடுகள் இருந்தால், சிறுநீரக நோய்கள் ஏற்படுவதற்கான சாத்தியத்தை சுட்டிக்காட்டுகின்றன. அத்தகைய நகங்கள் இருந்தால், சிறுநீரக கல் அல்லது யுடிஐ போன்ற நோய்கள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.. மேலும் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும்.


--

ஞாயிறு, 26 அக்டோபர், 2025

ஸ்கூல் பேக்கை சுமப்பதன்மூலம் சிறுவர்களுக்கு ஏற்படும் முதுகு வலியைப் போக்கும் வழிகள்

முதுகில் ஏற்படும் பிரச்சினைகளில் முக்கியமானது கீழ் முதுகு வலி.

மனித வாழ்க்கையில் ஏதேனும் ஒரு நேரத்திலாவது கீழ் முதுகு வலியால் அவதிப்படாமல் இருக்க முடியாது. 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வலிகளுக்காக சிகிச்சை பெறும் பிரச்சினைகளில், கீழ் முதுகு வலி 2-ம் இடத்தில் உள்ளது. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறி என்பது போலவே, கீழ் முதுகு வலியும் ஏதோ ஒரு நோயின் அறிகுறியே தவிர, இதுவே ஒரு தனிப்பட்ட நோயல்ல! இந்த வலிக்கு பல காரணங்கள் உண்டு. முதுகு பகுதியைச் சார்ந்த எலும்புகள், தசைகள், தசைநாண்கள் ஆகியவற்றில் ஏற்படுகிற பிரச்சினைகளை இதற்கு முதன்மை காரணங்களாக சொல்லலாம்.

சில நேரம் வயிற்றில் ஏற்படும் பிரச்சினைகளாலும் கீழ் முதுகில் வலி உண்டாகலாம். உதாரணத்துக்கு, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பையில் கல் உள்ளவர்களுக்கு கீழ் முதுகில் வலி ஆரம்பித்து, முன் வயிற்றுக்குச் செல்லும். வெள்ளைப்படுதல் பிரச்சினை உள்ள பெண்களுக்கு கீழ் முதுகில்தான் முதலில் வலி ஆரம்பிக்கும். பொதுவாக, கீழ் முதுகு வலிக்கு 90 சதவீதம் முதுகெலும்பில் பிரச்சினை இருக்கும். மீதி 10 சதவீதம் வயிற்றுப் பகுதி தொடர்பாக இருக்கலாம்

சிறுவர்கள் புத்தகங்கள் மற்றும் இதரப் பொருட்கள் திணித்து வைக்கப்பட்ட மிகவும் கனமான புத்தகப்பை / முதுகுப்பையைச் சுமந்து செல்வதை அனைவரும் பார்த்திருக்கிறோம். பையிலுள்ள சுமை மிகுந்த கனமானவுடன், முதுகுப் பைகள் சிறுவர்களை கீழே இழுக்கத் தொடங்குகின்றன. வழக்கமாக முதுகுப் பைகள் உங்கள் மேல்முகுகில் ஆரம்பித்து நடுமுதுகு வரை மட்டுமே இருக்க வேண்டும்.

ஆனால் அதிக எடையினால் முதுகுப்பை, நடுமுதுகிலுருந்து இடுப்பு வரை தொங்க நேர்கிறது. இதனால் நடுமுதுகு, கீழ்முதுகு மற்றும் தோள்பட்டையில் அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது. நாளடைவில் இவ்வழுத்தம் தசைகளை வலிமையிழக்கச் செய்து மூட்டுகள் மற்றும் தண்டுவடத்தை பாதிக்கிறது.

முதுகுப்பை அதிக எடையினால் சிறுவர்களை பின்புறம் இழுக்கிறது, ஆனால் சிறுவர்கள் முன்னே நோக்கி நடக்கின்றனர். இதனால் நாளடைவில் கீழ்முதுகுப் பகுதியில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகிறது. சில நேரங்களில் இதுவே கீழ் முதுகுப் பகுதியில் தொடர்ந்து அழுத்த, எலும்பு முறிவுகள் ஏற்படுகிறது

இதனை அடுத்து சிறுவர்கள் முதுகு வலி ஏற்பட மிக முக்கிய காரணமாய் இருப்பது அலைபேசி, தொலைக்காட்சி மற்றும் கணினியுமே ஆகும்.

முதுகு வலி தீர்க்க வழிகள்:

சிறார்களுடைய முதுகுப் பைகள் சரியான / குறைந்த எடையுடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

முதுகுப்பையில் உள்ள வார்களால் (Strap) பையை சரிவர, அதாவது மேல் முதுகிற்கும், நடுமுதுகிற்குமாய் இருக்குமாறு பிணைக்க வேண்டும்.

எல்லா நேரங்களிலும் நேராய் / நிமிர் நேர்வாய் உட்கார அறிவுறுத்த வேண்டும்.

அமர்ந்து கொண்டு படிக்கும் போதும், எழுதும் போதும் முதுகிற்குத் தேவையான ஆதாரத்துடன்(Support) அமர வேண்டும்.

எந்த ஒரு விளையாட்டையும் விளையாடும் முன்னர் முறையான ஆடல் உறுதி பரிசோதனைக்கு அவர்களை உட்படுத்த வேண்டும்.

விளையாடிய பின்னர் அதிக களைப்படைந்தால் அவ்விளையாட்டு அவர்களின் உடல் வலிமைக்கு அப்பாற்பட்டதாகும்.

தொடர்ச்சியான / இடைவிடாத வலி இருப்பின் அதனை பெற்றோரிடம் அல்லது மருத்துவரிடம் தெரிவிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

வைட்டமின் டி, எலும்புகள் வலுவாகவும், தசைகள் வலிவடையவும் உதுவுகிறது. குழந்தைகளில் வைட்டமின் டி பற்றாக்குறை உள்ளதா என அறிவது நல்லது.

முறையான மற்றும் பொருத்தமான உடற்பயிற்சித் திட்டம். உங்களுடைய குழந்தைகள் சரியான தோற்ற அமைவு (Posture) நிலையைப் பெறவும், முதுகு வலியை குறைக்கவும் உதவும்.

உங்கள் குழந்தை உடல் வலிமை தேவைகளுக்கேற்ப உடற்பயிற்சி மற்றும் இயன்முறை மருத்துவரிடம், உடற்பயிற்சிகள் வடிவமைத்துக் கொள்ளுதல் மிக அவசியம்.



--

மலச்சிக்கல்பிரச்சினை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டிய விஷயங்கள்.

மலம் கழிப்பதில் சிரமம் ஒருவரின் தினசரி அட்டவணையில் தலையிடுவது மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ...

Popular Posts