லேபிள்கள்

திங்கள், 19 மார்ச், 2018

ஆள்பாதி ஆடைபாதி

ஆள்பாதி ஆடைபாதி

மௌலவி. MSM.ஹில்மி(ஸலாமி), BA(Reading) SEUSL,
DIP.IN.LIBRARY AND INFORMATION SCIENCE

ஒவ்வொரு சமுதாயமும் தனக்கென பிரத்தியேகமான ஆடை கலாசாரங்களை கொண்டுள்ளன. அவை அனைத்தும் தமது சமயம், கலாசாரம், பாரம்பரியம் என்பவைகள் கூறும் விதமாக அவற்றை பிரதிபலிக்கும் வகையில் அமைதுள்ளன. ஒரு போதும் அதனை விட்டுக்கொடுப்பதோ அல்லது அந்நிய கலாசாத்தினை பிரதிபலிக்கும் வகையில் அமைத்துக் கொள்வதோ கிடையாது. ஆனால் முஸ்லிம்கள் மாத்திரம் தமது சமயம், கலாசாரம் என அனைத்தையும் மறந்து அந்நிய கலாசாரங்களை பிரதிபலிக்க செய்யும் அவல நிலையினை எமது சமுகத்தின் ஆடை கலாசாரங்கள் எமக்கு படம்பிடித்து காட்டுகின்றன.
இன்றை முஸ்லிம்களின் ஆடைகள் கலாசாரம் என்பது பெண்களுக்கு ஒப்பாக ஆண்களும,; ஆண்களுக்கு ஒப்பாக பெண்களும், மறைக்கப்பட வேண்டிய அங்கங்களை இருக்கமான ஆடைகள் அணிந்து வெளிப்படுத்தி காண்பித்தும்;, அணிந்தும் அணியாதவர்களாக மேற்கத்தேய மோகம் கொண்டு இஸ்லாமிய ஆடை விதிமுறைகளை புறக்கனித்து நடக்கும் துர்பாக்கியத்தை நோக்கி பயணிக்கின்றது.
இஸ்லாம் சகல துறைகளுக்கும் வழிகாட்டும் மார்க்கம். அதனால்தான் இன்று வரைக்கும் இஸ்லாமிய மார்க்கம் பாரெங்கும் வேரூண்டிக் கொண்டிருக்கிறது என்றால் யாரும் அதனை மறுப்பதற்கில்லை. மனித வாழ்விற்கு நடைமுறை சாத்தியமான மனித வாழ்வின் சகல துறைகளுக்கும் வழிகாட்டியான இஸ்லாமிய மார்க்கம் ஒரு முஸ்லிம் எப்படியான ஆடைகளை அணிய வேண்டும் எப்படியான ஆடைகளை அணிக்கூடாது என்று அல்குர்ஆனிலும், ஸுன்னாவிலும் வரையரைகளுடன் தெளிவாக கூறப்பட்டுள்ளது.


அல்லாஹ் தனது திருமறையிலே இவ்வாறு கூறுகின்றான்.

يَا بَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاساً يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشاً

'ஆதமுடைய மக்களே! உங்களுடைய வெட்கத்தளங்களை மறைப்பதற்காகவும், உங்கள் உடலுக்கு பாதுகாப்பாகவும் அலங்காரமாகவும் இருக்கக் கூடிய ஆடைகளை நாம் உங்களுக்கு அருளியிருக்கின்றோம்' (07:26)
மேலுள்ள திருமறையிலே அல்லாஹ் மூன்று நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஆடை அணிகலன்களை அருளியுள்ளதனை விளங்கிக் கொள்ளலாம்.
01. வெட்கத்தளங்களை மறைத்தல் :
ஆடையை அல்லாஹ் அருளியதற்கு முதன்மையான நோக்கமாக வெட்கத்தளங்களை மறைப்பதனை அடையாளப்படுத்துகின்றான். ஆக இம்முதல் நிலை நோக்கத்தை நிறைவு செய்வதாக எமது ஆடை அணிகலன்கள் இருக்க வேண்டும்.
ஒரு முஸ்லிமான ஆண்; தொப்புள் முதல் முழங்கால் வரையான பகுதிகளையும் பெண் முகம், இரு கைகள் தவிர்ந்த ஏனை உறுப்புக்கள் அனைத்தையும் மறைக்கும் விதமாக ஆடைகள் இருக்க வேண்டும். (சில அறிஞர்கள் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்)
02 உடலுக்கு பாதுகாப்பு :
ஒரு மனிதனின் நடத்தையினை தீர்மானிப்பதில் ஆடை என்பது பாரிய பங்கு வகிக்கின்றது. அவன் எப்படியான ஆடைகளை அணிகின்றானோ அவ்ஆடைக்கு ஏற்ப தனது செயற்பாடுகளை அமைத்துக் கொள்கின்றான். ஆக மனிதனின் செயற்பாடுகளை தீர்மானிப்பதில் ஆடை என்பது பாரிய பங்கு வகிக்கின்றது என்பது ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட முடிவாகும்..
ஆடை உடலுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பது சூழலில் காணப்படும் அகப்புற சூழல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதனையே குறிக்கின்றது. ஒருவர் ஆடை அணிவதன் மூலம் புறத்தாக்கங்களிலிருந்து தனது உடலை பாதுகாப்பதை அனைனவரும் எதிர்பாhப்பது போன்று அக ரீதியாகவும் ஆடை உடலில் பாதிப்பு செலுத்தவும் துர் நடத்தைகளிலிந்து எம்மை பாதுகாக்கவும் வேண்டும் எதிர்பார்ப்பதும் அவ்வாரான ஆடைகளை அணிவதும் அவசியமாகும்.
04. அலங்காரம் :
ஆடை என்பது அலங்காரம் என்பதை யாரும் மறுப்பதில்லை இறைவனே அதனை தனது திருமறையிலும் தெளிவுபடுத்தியுள்ளான். ஆனால் அவ் அலங்காரம் வரையருக்கப்பட்டதாகும். அவ்வயைரைகளை தழுவியதாய் ஆடை அணிகலன்கள் இருத்தல் வேண்டும். நபிகளார்(ஸல்)அவர்கள் ஒரு முஸ்லிமின் ஆடையின் வரையரைகளை மிகவும் தெளிவாக கூறியுள்ளார்கள்.

05. காபிர்களுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது :
ஒரு முஸ்லிம் செய்கின்ற எந்த காரியமாக இருந்தாலும் அது காபிர்களுக்கு ஒப்பாக இருத்தல் கூடாது. ஆடை அணிவதாக இருந்தாலும் அது காபிர்களுக்கு மாற்றம் செய்;யும் விதமாக அமைய வேண்டும். இதனை நபிகளார் பின்வருமாறு தெளிவு படுத்தியுள்ளார்கள்.

'யார் ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாகிறாரோ அவர் அவர்களை சார்ந்தவராவார்'
(அபூதாவுத்)

06. ஆண்கள் பெருமைக்காக அணிதல், கரண்டைக்கு கீழ் அணிதல் கூடாது :
ஆண்கள் கரண்டைக்கு கீழ் ஆடை அணிவது இஸ்லாத்தின் பார்வையில் தடைசெய்யப்பட்ட (ஹராம்) செயல்களில் ஒன்றாகும். கரண்டைக்கு கீழ் அணிவது பெருமைக்கான அடையாளம் எனவும் அல்லாஹ் மறுமையில் அவ்வாறு செய்பவர்களை பார்க்க மாட்டான் என்பதுவும் நபிகளார் (ஸல்) அவர்களது பொன் மொழிகள் மூலம் எமக்கு தெளிவாகின்றது.
அப்துர்ரஹ்மான் என்ற நபித்தோழரான அபூ ஸஈத் என்பவரிடம் கீழ் ஆடை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் ஏதாவது கூற நீங்கள் கேட்டுருக்கின்றீர்களா?' என வினவினார்கள். அதற்கவர் 'ஆம் நபி (ஸல்) அவர்கள் 'விசுவாசிகளில் கீழ்ஆடை முழங்காலுக்கும் கரண்டைக்காலுக்கும் இடையில் நடுவில் இருக்க வேண்டும். எனினும் நடுவிலிருந்தும் கரண்டைக்கால் வரை இறங்கியிருந்தாலும் குற்றமில்லை. ஆனால் கரண்டைக்காலுக்குக் கீழ் ஆடை இறங்கியிருந்தால் அது நரகத்திற்கு இட்டுச்செல்ல வேண்டும் எனக்கூறிய பின்இ 'யார் பெருமைக்காக தரையில் கீழ் ஆடையை நிலத்தில் இழுபடச் செய்கிறாரோ அவரை அழ்ழாஹ் மறுமையில் பார்க்கமாட்டான் என மூன்று முறை கூறுவததைக் கேட்டேன் என்றார்கள்.'
அறிவிப்பாளர் அபூ ஸஈத் (ரழி)
(இப்னுமாஜாஹ் 3563)

07. ஆண்கள் பட்டாடை அணிதல் கூடாது :
ஆண்கள் பட்டாடை அணிவது இஸ்லாத்தின் பார்வையில் தடை செய்யபட்ட ஒன்று. இதனை பின்வரும் நபி மொழி தெளிவு படுத்துகின்றது.
'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பட்டை எடுத்து தனது வலது கையிலும் தங்கத்தை எடுத்து தமது இடது கையிலும் வைத்துக் கொண்டு இவ்விரண்டும் எனது உம்மத்தினரில் ஆண்களுக்கு ஹராமாகும்' என்று கூறினார்கள்.
(அபூதாவூத்)
அறிவிப்பவர் அலி(ரழி)

08. ஆண்கள் பெண்களுக்கு ஒப்பாகவும் பெண்கள் ஆண்களுக்கு ஒப்பாகவும் ஆடை அணிதல் கூடாது:
அல்லாஹ் மனிதனை ஆண், பெண் என இரு பிரிவினராக படைத்து ஆண்களையும் பெண்களையும் வேறுபடுத்தும் பல சிறப்பியல்புகள் மூலம் தனித்தனியே அடையாளப்படுத்தி காட்டுகின்றான். இதனால்தான் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆண்கள் பெண்களுக்கு ஒப்பாகுவதும், பெண்கள் ஆண்களுக்கு ஒப்பாகுவதும் அல்லாஹ்வின் சபாத்தை சம்பாதிப்பதற்கான வழி என எச்சரிக்கை விடுத்தார்கள்.

'பெண்களுக்கு ஒப்பாகும் ஆண்களையும் ஆண்களுக்கு ஒப்பாகும் பெண்களையும் அல்லாஹ் சபிக்கிறான்' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் இப்னு அப்பாஸ்(ரழி)
புஹாரி, திர்மிதி, அஹ்மத்

ஆகவேதான் புத்தாடைகளை கொள்வனவு செய்கின்ற போது 'நான் ஒரு இஸ்லாமியன் எனது ஆடை இஸ்லாமிய வரையரைகளுக்கு உட்பட்டு அமைய வேண்டும்' என்ற எண்ணத்துடன் எமது ஆடைகளை அமைத்து கொள்ள வேண்டும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts