லேபிள்கள்

வியாழன், 16 ஜூலை, 2020

முக்காடு போடும் முஸ்லிம் பெண்ணின் மகத்துவம் காண்பீரோ!

    Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd) Phd     
2019 ம் ஆண்டு நவம்பர் -டிசம்பர் மாதம் முஸ்லிம் பெண்களின் மாதம் என்று உலகெங்கும் கொண்டாடப் படுகின்றது. பொதுவாக முஸ்லிம் பெண்கள் மென்மையானவர்கள், புகுந்த வீட்டில் அடிமை போலவும், அடுக்களையே கதியென்று அடைந்து கிடப்பவர்கள் என்று உலகில் வேற்று மதத்தவர் அல்ல. மாறாக முஸ்லிமாக பிறந்து கற்றுக் குட்டிபோல சில கதைகள், கவிதைகள் எழுதி புகழ் வரவேண்டுமென்று இஸ்லாமிய மார்க்கத்தினையே குறைகூறும் சிலரை நம்மிடையே கண்டிருப்பீர்கள்.
அவர்கெளுக்கெல்லாம் சவுக்கடி கொடுப்பதுபோல அமெரிக்க பெண் எழுத்தாளர் ஜோனா பிரான்சிஸ், 'முஸ்லிம் பெண்கள் கிரீடத்தில் ஜொலிக்கும் வைரக் கற்கள் போன்றவர்கள், ஆனால் அமெரிக்க பெண்கள் விலை மாதுகளைப் போன்றவர்கள்' என்று சொல்லி அதிர்ச்சி உண்டாக்கின்றார்.
அதற்கான காரணத்தினை அவர் சொல்லும்போது, 'நான் முஸ்லிம் பெண்கள் பால் உள்ள ஒழுக்கம், அழகு, மனக் கட்டுப் பாடு, நளினமாக செயல் படுதல் ஆகியவற்றினைப் பார்த்து ஆச்சரியப்பட்டுள்ளேன்.   அமெரிக்க பெண்கள் ஹாலிவுட் படங்களில் வருகின்ற பொய் மூட்டைகளையும், மாய ஜாலங்களையும் நம்பி வாழ்கின்றனர். பாலுணர்வு என்பது இயற்கையாகவே வருகின்ற ஒன்று அதனைக் கட்டுப்படுத்துதலோ, மண வாழ்க்கைக்கு முன்பு உடலுறவு கொள்வதையோ வெறுக்கவேண்டியதில்லை என்று சினிமாவில் வரும் வசனம் போல பேசுகின்றனர். ஆனால் அவ்வாறு சொல்வது கட்டுக் கோப்பான குடும்ப-சமூக வாழ்வு அடித்தளத்தினையே தகர்க்கக் கூடிய ஒன்றாகும் என்பதினை அறியாதவர்களாக இருக்கின்றனர்.
அவர் முஸ்லிம் எழுத்தாளர்களைப் பார்த்து, 'நீங்கள் மேலை நாட்டினவரைப் பார்த்து உங்கள் எழுத்துக்களை பதிவு செய்யாதீர்கள், அவர்களுக்கென்று தனியான குடும்ப அமைப்புக் கிடையாது, விலைமாது போல உடை அணிவதுதான் நாகரீகம் என்று எண்ணக் கூடியவர்கள். ஆனால் அவர்களின் உண்மையான வாழ்க்கை மகிழ்ச்சி அடையக் கூடியதில்லை.
பல லட்சக் கணக்கான மேலை நாட்டவர் போதைக்கு அடிமையாகி இரவில் கூட மன உலைச்சலால் சரியாக தூங்குவது இல்லை. அவர்கள் திருமணம் என்பது அடிமையாகும், பெண்கள் குழந்தை பெற்றுக் கொள்வது உடல் அழகினை கெடுக்கும் அநாகரீயமான செயல் என்று சபிக்கின்றனர். அவர்கள் சொல்லுவதிலெல்லாம் எப்படி  ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களை இப்லிஸ் ஆசை வார்த்தை சொல்லி ஆப்பிள் பழத்தினை சாப்பிட வைத்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி பூமியில் ஆதம் அலைவஹி ஸல்லம் உடன் பூமிக்கு அனுப்பப் பட்டார்களோ அதேபோன்று சாத்தான் வேதம் ஓதுவது போல உங்களை உடை, நடை, பாவனை, வார்த்தை, செயல் மூலம் தீய வழிக்கு ஆளாக்கி விடுவர்.'
'அதே நேரத்தில் இஸ்லாமிய பெண்கள் மிகவும் அடக்கமான அங்க அடையாளங்கள் வெளியே தெரிந்து அதன் மூலம் அந்நியர் கழுகுப் பார்வையிலிருந்து மற்றும் தீய எண்ணங்களிருந்தும் உணர்வுகளை தூண்டாத அளவிற்கு உடை அணிவதிலும், போற்றக் கூடியவர்கள்.'
ஜோனா பிரான்சிஸ் முஸ்லிம் பெண்களைப் பார்த்து, 'நீங்கள் எல்லாம் வைரம் போன்று ஜொலிக்கக் கூடியவர்கள், ஆகவே மேலை நாட்டு மோகத்தில் நீங்கள் பலிக்கடாவாகி விடாதீர்கள், உங்கள் மார்க்கம் சொல்லும் கற்பொழுக்கம், பண்பு, பரிவு, நாணம் மற்றும் மடமையினை பின்பற்றுங்கள்' என்று அறிவுரை கூறுகின்றார்.

இஸ்லாமிய மார்க்கத்தில் முதன் முதலில் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்தவர், 'நுசாமி பின்த் காப் அல்' எனற பெண் தான். அவர் ஒரு தடவை ரஸூலல்லாவிஹ்னை பார்த்து, 'ரஸூலல்லாஹ்வே ஏன் அல்லாஹ் ஆண்களைப் குறிப்பிட்டே வஹிக்கள் இறக்குகின்றான், பெண்களைப் பார்த்து வஹி வருவதில்லையே என்று கேட்டார்'.
அப்போது அல்லாஹ் ரஸூலல்லாவிற்கு அத்தியாயம் 33 வசனம் 35னை இறக்கினான்.
"நிச்சயமாக முஸ்லிம்களான பெண்களும், விசுவாசிகளான ஆண்களும், அல்லாஹ் வழியில் வழிபடும் பெண்களும், அல்லாஹ்வினை தொழும் ஆண்களும், உண்மையே கூறும் பெண்களும், உண்மையே கூறும் ஆண்களும், பொறுமையான பெண்களும், பொறுமையான ஆண்களும், உள்ளச்சத்தோடு அல்லாஹ்வினை பயந்து நடக்கும் பெண்களும், உள்ளச்சத்தோடு அல்லாஹ்வினை பயந்து நடக்கும் ஆண்களும், தானம் செய்யும் பெண்களும், தானம் செய்யும் ஆண்களும், நோன்பு நோற்கும் பெண்களும், நோன்பு நோற்கும் ஆண்களும், தங்கள் மர்மஸ்தானத்தினை மறைக்கும் பெண்களும், அதேபோல் உள்ள ஆண்களும், அலாஹ்வினை அதிகமாக நினைவு கூறும் பெண்களும், அதேபோல் நினைவு கூறும் ஆண்களும், அல்லாஹ்வின் மன்னிப்பையும், நற்கூலியையும் சமமாக வாரி வழங்குவான்' என்று.

அந்த வஹியினை உண்மையாக்குவது போல பெண்கள் பல துறைகளில் சிறப்பு பெற்று விளங்கினர். அவர்கள் சிலரை உங்கள் முன்பு நிறுத்தலாம் என்று நினைக்கின்றேன்.
1) மார்க்க அறிஞர்:
ராபியா அல் அதாவியா என்பவர் 800 வது நூற்றாண்டில் வாழ்ந்த சூபி பெண் ஞானியாவார். அவர் அங்குள்ள ஒரு சீமாட்டி வீட்டில் அடிமையாக இருந்தார். ஒரு நடு இரவு அவர் ஸஜ்தா செய்து இறைவனை வணங்கிக் கொண்டு இருக்கும் போது தற்செயலாக சீமாட்டி அதனை பார்த்து விட்டார். ராபியா ஸஜ்தா செய்த தலைக்கு மேல் ஒரு விளக்கு எந்த பிடிமானமுமில்லாமல் ஒளி விட்டு மேலே தொங்கிக் கொண்டிருந்தது. அதனைப் பார்த்து பயந்த சீமாட்டி ராபியாவிடம் ஏதோ ஒரு சக்தி உள்ளது என்று எண்ணி அவரை விடுதலை செய்தார். அதன் பிறகு அவர் ஒரு ஞானியாக வலம் வந்தார்.
ஒரு தடவை அவர் தெருவில் ஒரு கையில் வாளியில் தண்ணீரும், மற்றொரு கையில் எரியும் விளக்கினையும் ஏந்திச் சென்றார். அதனைப் பார்த்து வியந்த ஒருவர் கேட்டார், இது ஒரு வினோதமான செயலாக உள்ளதே அதற்குக் காரணம் என்ன என்று கேட்டார்.
மனிதன் நரக நெருப்பிலிருந்து தப்பித்து சுவர்க்கத்தின் சுகத்தினை அனுபவிக்கவே தொழுகின்றான், அதனைப் போக்கி அவன் இறைவனுக்கு மனிதனாக படைத்த நன்றிக்காக தொழ வைக்க வேண்டுமென்றால், ஒரு கையில் உள்ள நெருப்பினைக் கொண்டு சுவனத்தினை எரித்து விட்டு, மறு கையிலுள்ள தண்ணீர் கொண்டு நரக நெருப்பினை அணைத்து விட வேண்டுமென்றார். இன்றும் கூட பல பயான்களில் சுவர்க்கம், நரகம் என்று பயமுறுத்தும் கூற்று நடந்து கொண்டு தான் இருக்கின்றது.மாறாக இறைவன் மனிதனை புனிதனாக படைத்து பரிபாளம் செய்ததிற்கே நன்றி சொல்லவேண்டும் என்று கூறினால் அறிவு பொருத்தமாகுமல்லவா?
2) கல்விக்கு வித்திட்டவர்:
பாத்திமா அல் பஹ்ரி மொரோக்கோ நாட்டின் செல்வ சீமாட்டி. அவர் தனக்கு கிடைத்த செல்வத்தினை இறை வழியில் பல பள்ளிவாசல்களும் காட்டியதோடு, அல் காரா என்ற பெரிய பள்ளியினை கட்டி அங்கே கல்விக் கண்ணை திறக்கும் சிறந்த பல்கலைகழகத்தினை அபூர்வ புத்தகங்களைக் கொண்டு நிலைநாட்டியது மூலம் உலகிலேயே மிக பழமையான பல்கலைக் கழகமாக கின்னஸ் ரெக்கார்டில் பதியப் பட்டும், யுனெஸ்கோ நிறுவனத்தால் அங்கீகரிக்கப் பட்டதாகவும் உள்ளது.
3) ஆளுமை:
டெல்லியில் பதிமூன்றாம் ஆண்டு சுல்த்தான் ரசியா ஆட்சி செய்தார். அவர் ஒரு ஆணுக்கு இணையாக காட்சி அளிக்க வேண்டுமென்று தன்னை யாரும் 'சுல்தானா ரசியா' என்று அழைக்கக் கூடாது, மாறாக சுல்தான் ரசியா என்று தான் அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஒரு ஆண் அரசர் எப்படி உடை அணிந்தாரோ அதேபோன்று உடை அணிந்து காட்சி தந்தார். ஆனால் அவர், 'ஒருவர் இறை பக்தியினை உடையில் பகட்டாகக் காட்டக் கூடாது, மாறாக உள்ளத்தில் இறை அச்சத்துடன் இறைஞ்சி வழிபட வேண்டும் என்று நினைப்பவர். இவர் காலத்தில் பதிப்பகங்களும், நூலகங்களும், ஆராய்ச்சி நிலையங்களும் நிறுவினார்.
4) மேலை நாட்டு அறிஞர்:
லாலே பக்தியார் என்ற அமெரிக்க பெண்மணி 2007 ல் அல் குரானை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த முதல் பெண்மணியாவார் இவருடைய மொழிபெயர்ப்பு தான் இன்று உலகமெங்கும் இருக்கின்ற நூல் நிலையங்களிலும், பள்ளி வாசல்களிலும், பல்கலைக் கழகங்களிலும் மாதிரியாக உள்ளது.
5) பெண் இயக்கம்:
நானா அஸ்மா என்பவர் 19 ம் நூற்றாண்டினைச் சார்ந்த நைஜீரியா இளவரசியாவார். இவர் அராபிக், லத்தீன் மற்றும் கிரேக்க மொழிகளில் கை தேர்ந்தவராவார். இவர் ஆப்ரிக்க கண்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பெண்களின் கல்வியினை வழியுறுத்தியுள்ளார். இன்று கூட நைஜீரியாவில் இவர் பெயர் தாங்கிய பெண்கள் இயக்கம், கல்வி நிலையங்கள் உள்ளன.
6) நீதியரசர்:
ஈரானில் தலைமை நீதிபதி 'சிரின் அல் அபாடி' என்ற பெண் மிகவும் சிறந்த நீதிமான். அவருடைய சிறந்த நீதி பரிபாலனுக்காக நோபல் பரிசையும் பெற்றுள்ளார். இவர்தான் முதன் முதலில் ஆண், பெண் இணக்கமாக, ஜனநாயகப் படி வாழும் உரிமைக்காக குரல் கொடுத்தவர்.

மேலே சுட்டிக் காட்டிய பெண்களின் போராளிகளால் இந்த நவீன உலகில், பங்களா தேசில் சேக்ஹ் ஹஸீனா, ஹாலிதா ஷியா, மாலித் தீவில் கிளாஸே மரியம், கொசாவோ நாட்டில் ஆட்டி ஜாஜாக, இந்தோனேசிய மெகாவாதி, பாகிஸ்தான் பெனாசிர் பூட்டோ, செனிகல் மடியோர் போயி, துருக்கி டன்சி சில்வர், சிங்கப்பூர் ஆமினா கரீம், இந்திய நாட்டின் பாத்திமா பீவி ஆகியோர் ஜனாதிபதி, பிரதமர், நீதிபதிகளாக முடிந்தது. ஆகவே தான் பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டு முன்னோடிகளாக இருந்தோர் நினைவாக முஸ்லிம் பெண்கள் மாதம் கொண்டாடப் படுகின்றது. நமது பெண் பிள்ளைகளையும் சிறந்த கல்விமான்களாக, நீதிபதிகளாக, சமூக சேவகர்களாக, அரசில் முக்கிய பங்கு வகிக்கும் பிரமுகர்களாக ஆக்குவதோடு அவர்களை மார்க்கத்தின் வழிமுறைகளை விட்டு பிறழாமல் பார்த்துக் கொள்வோமா?

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts