லேபிள்கள்

திங்கள், 6 அக்டோபர், 2025

துணிகளில் படிந்தகறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது.

அதை நீக்காமல் விட்டால் துணியின் அழகையே கெடுத்துவிடும் இந்த கரையை நீக்குவது எப்படி என்று இல்லத்தரசிகள் தெரிந்துகொள்ளவேண்டும். உங்களுக்கு அருமையான குறிப்புகள் இதோ.

கரை படிந்த உடனே இதை செய்யுங்கள்:

ஆடையில் எண்ணெய் கறை படிந்தால் உடனடியாக சுத்தமான துணி அல்லது டிஷ்யூ பேப்பரை எடுத்து கறை பட்ட இடத்தை சுத்தமாக துடைத்து விடுங்கள். எண்ணெய் இருபுறமும் அழுந்தாமல் துடைத்து எடுக்கவும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடாவை பயன்படுத்தி கறைகளை எடுக்கலாம். இதை துணிகளை மிஷின் உள்ளே போடுவதற்கு முன்பு உபயோகிக்கவேண்டும். பேக்கிங் சோடாவை கரை படிந்த துணிகளில் தடவி 24 மணி நேரம் அப்படியே வைத்துவிடவேண்டும். ஒரு நாள் முழுக்க கரை மீது வினிகரை தெளித்து தெளித்து விடவும். பின்பு மென்மையான சோப்பு கொண்டு துடைத்து எடுக்கவும். கறை நீங்கி துணி பளபளக்கும்.

சாக் பீஸ்:

துணிகளில் முதலில் எண்ணெய் கறையை துணியால் துடைத்து எடுத்துவிட்டு குழந்தைகள் பயன்படுத்தும் வெள்ளை சாக்பீஸ் எடுத்துக்கொண்டு கறையில் சில வினாடிகள் தேய்த்தால் கறைகள் மறையும். இதற்கு பதிலாக பதிலாக சுண்ணாம்பு இருந்தால் பயன்படுத்தலாம். பின்னர் சோப்பு போட்டு துணியை துவைக்கவும்.

பேபி பவுடர்:

கறை இருந்த இடத்தை துடைத்து விட்டு விட்டு அதில், பேபி பவுடர் எடுத்து கறையின் மீது சில நிமிடங்கள் போட்டால் அதன்மீது ஒட்டிக்கொள்ளும். பின்னர் சிறிது நேரம் கழித்து கைகளால் உருட்டி அழுக்குகளோடு பவுடர் வெளியே வரும். இதுவரை இல்லாத அளவுக்கு துணி பளிச்சிடும்.

டூத் பேஸ்ட்:

டூத் பேஸ்ட் ஆடையில் உள்ள கறைகளை நீக்க உதவும். முதலில் துணியில் கறை படிந்த இடத்தில் தடவி விடவும். பிறகு வெந்நீரை மெதுவாக துணி மீதுள்ள டூத் பேஸ்ட் மீது ஊற்றவும். உயரமாக கரை மீது படும்படி சிறிது சிறிதாக ஊற்றி வந்தால் கறை கரைந்து வெளிவரும்.

வினிகர்:

வினிகரை வைத்து கறையை வெளியேற்றிவிடலாம். சம அளவு தண்ணீர் எடுத்து அதனுடன் வினிகரை கலந்து தடவினால் துணியில் கறை நீங்கி விடும்.



--

வெள்ளி, 3 அக்டோபர், 2025

ஏசி போட்டாலும்உங்க ரூம் சீக்கிரமா கூல் ஆகலயா..? இந்த டிப்ஸை ஃபாலோபண்ணுங்க…

நாடு முழுவதும் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது..

அக்னி நட்சத்திரம் தொடங்கிவிட்டதால் மக்கள் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.. இந்த கடுமையான வெப்பத்தில் குளிர்ச்சியாக இருக்க, கண்டிப்பாக ஏசி என்பது அன்றாட தேவையாகிவிட்டது.. வெப்பநிலை கடுமையாக அதிகரித்துள்ளதால், ஏசியின் தேவை பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் அதிகமாக ஏசியை பயன்படுத்துவதால், மின்சாரக் கட்டணங்கள் மாதந்தோறும் அதிகரித்து வருகின்றன, இது நிச்சயமாக பெரும்பாலான மக்களுக்கு ஒரு கவலைக்குரிய காரணியாகும்.

பெரும்பாலான ஏசிகள் சிறந்த வெப்பநிலை அமைப்பு மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்துவதற்கான மிகவும் மேம்பட்ட அம்சங்களுடன் வருகின்றன, இதன் விளைவாக மின் கட்டணங்கள் உயரும்.

உங்கள் ஏசி வேகமாக வேலை செய்ய உங்கள் அறையை மூடி வைக்க வேண்டும். எனவே, ஏசியை ஆன் செய்யும் போது கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும். ஏதேனும் கதவு திறந்திருந்தால், உங்கள் ஏசி, குளிரூட்டலுக்கு கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகள் உள்ளன, இது அதிக மின்சார நுகர்வுக்கு வழிவகுக்கும்..

ஏசி வேகமாக குளிர்விக்க, நீங்கள் வழக்கமான இடைவெளியில் பில்டர்களை சுத்தம் செய்ய வேண்டும். எனவே, உங்கள் ஏசி குளிர்ச்சியடையவில்லை என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் உடனடியாக ஏசி பில்டரை சுத்தம் செய்ய வேண்டும், இல்லையெனில் உங்கள் ஏசி அதிக மின்சாரத்தை உட்கொள்ளும்.

ஏசி மற்றும் சீலிங் ஃபேன் ஒன்றாகப் பயன்படுத்தினால் அறையை மிக வேகமாக குளிர்விக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் மின்விசிறியை இயக்குவது, அறை முழுவதும் அனல் காற்றை வீசுவதை இது ஏசியின் குளிர்ந்த காற்றை எதிர்க்கும். எனவே, சிறிது நேரம் ஏசியைப் பயன்படுத்திய பின் அறை குளிர்ச்சியாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் மின்விசிறியை இயக்கலாம், ஆனால் குறைந்த வேகத்தில். இது அறை முழுவதும் குளிர்ந்த காற்றைப் பரப்ப உதவும்.

உங்கள் ஏசி வேகமாக குளிர்ச்சியடைய, குளியலறை அல்லது சமையலறையில் ஏதேனும் எக்ஸாஸ்ட் ஃபேன் இருந்தால், அவற்றை அணைக்க பரிந்துரைக்கப்படுகிறது. அவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்வது அறையின் வெப்ப அளவைக் குறைத்து ஏசியை சிறப்பாகச் செயல்படச் செய்யும்.



--

துணிகளில் படிந்தகறையை எப்படி நீக்கலாம் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

துணிகளில் எண்ணெய் கறை கறை படிந்து விட்டால் அதை நீக்குவது மிகவும் கடினமானது. அதை நீக்காமல்...

Popular Posts