லேபிள்கள்

சனி, 9 மே, 2020

வெறும் வயிற்றில் தப்பி தவறி கூட இதை சாப்பிடாதீங்க ! அப்புறம் ஆபத்தில் சிக்கி தவிக்காதீங்க !

காலையில் தூக்கத்தை விட்டு எழுந்தவுடன், தினமும் நான் காபி அல்லது டீ பருகுவோம். அவ்வாறு தினமும் பருகவது உடலுக்கு நல்லதல்ல என்று உணவியல் நிபுணர்கள் கருத்தது தெரிவித்துள்ளனர். காலையில் எழுந்தவுடன் நீராக்கங்கள் சாப்பிடுவது நல்லதாம். குறிப்பாக வெதுவதுப்பான நீரை 2 டம்ளர் அருந்துவது குடல் சுத்தமாக உதவுகிறதாம்.

அதனுடன் தேன் கலந்து குடித்தால் அதைவிட பல மடங்கு பயன் அதிகம் என்கின்றனர். தோல் பளபளப்பு கூடி, இளமை தோற்றம் கிடைக்கும் என்கின்றனர். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரித்து, உடல் முன் எப்போதும் இல்லாத்து போல புத்துணர்ச்சியுடன் காணப்படும்.
வெந்நீரில் தேன் கலந்து பருகுவதால் சளி, இருமல் போன்ற தொல்லைகள் வெகு விரைவில் தீர்ந்து, நுரையீரல் கழிவுகள் வெளியேறி சுவாசம் சீராகிறது. இதனால் ஆக்சிஜன் உட்கொள்ளும் அளவு அதிகரித்து, இரத்தம் சுத்தப்படுகிறது. இதனால் உடல் நல்ல சுறுசுறுப்புடன் இருக்க உதவுகிறது.

மேலும் தூக்கமின்மை நீங்கி, நல்ல தூக்கம் கிடைக்கிறது. இரவு முழுவதும் உடல் ஓய்வெடுத்து தேவையான சக்தியை உருவாக்கி அதி அற்புத உணர்வை நமக்களிக்கிறது.
உடல் குளிர்சியை ஏற்படுத்தி, இரத்த சர்க்கையை கட்டுக்குள் வைத்து, வாயுத்தொல்லை, அஜீரக் கோளாறுகளை தீர்த்து ஒரு அற்புதமான பணியை செய்த தரும் உணவுப்பொருள் வெந்தயம். தலைக்கு அரைத்து தேய்த்துக் குளித்தால் அன்று தலைமுடிக்கு தீபாவளி கொண்டாடியது போல ஒரு புத்துணர்ச்சி கிடைத்து, அதி அற்புத உணர்வை பெறும் வாய்ப்பை கொடுப்பது வெந்தயம். இதய நோயிலிருந்து காத்து நமக்கு ஒரு பாதுகாப்பு வீரன் போல செயல்படும் உணவு வெந்தயம்.

இதை முறையாகப் பயன்படுத்தினால் உடலில் உள்ள பல பிரச்னைகள் தீர்ந்து விடும். அன்றாட உணவில் சிறிது வெந்தயம் கலந்திருந்தால் உடல் பளபளப்பு, தலை முடி பளப்பு உருவாக்கி, ஆளே மாறி விடும் அளவிற்கு உடலில் மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு அரு மருந்து வெந்தயம்.
முளைக்கட்டிய தானிங்கள் எடுத்துக்கொண்டால் உடல் வனப்பு கூடும். எதிர்ப்புச் சக்தி அபிரதமாக பெருகி, நம்மை எந்த நோயும் அண்டாமல் பாதுகாத்திடும். இதய நோய் வராமல் பாதுகாத்திடலாம். இரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து, இதய நாளங்களில் அடைப்பு வராமல் செய்கிறது. உடல் எடையை கட்டுப்படுத்தி, சர்க்கை நோய் வாரமல் செய்கிறது.

குழந்தைகளுக்குத் தேவையான போஷாக்கு கிடைக்கிறது. உடல் வளர்ச்சிக்கு உகந்தது. அலர்ஜி, வாயுத்தொல்லை வராமல் செய்கிறது. ஆக மொத்ததில் ஒரு சிறந்த அருமருந்து, அதி சிறந்த உணவு முளைக்கட்டிய சிறுதானிய உணவுகள்.
காலையில் எழுந்தவுடன் காய்கறிகளை ஜீஸ் போட்டு அருந்துவது குடலுக்கு, உடலுக்கி மிக மிக நல்லது. அல்சர் பிரச்னை தீருகிறது. அற்புதமாக இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்கிறது. இரத்தத் தில் உள்ள அசுத்தங்கள் நீங்கி, இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவைகளை அப்படியே பச்சையாக சாப்பிடலாம்.

வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவு வகைகள்:

வெறும் வயிற்றில் தெரியாமல் கூட சாப்பிடக்கூடாத உணவுகள் என்று சில இருக்கின்றது. அவற்றை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகளை விட தீமைகள்தான் அதிகம். ஆரஞ்சு, வாழைப்பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது. அது குடலுக்கு தீங்கு செய்து விடும். சாப்பிட்டப் பிறகு தேவையான அளவு எடுத்துக்கொள்ளலாம்.

தூங்கி எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இவற்றை எடுத்துக்கொள்வதால் அதில் உள்ள ஆசிட், குடலிலள்ள ஆசிட்டுடன் கலந்து குடல் புண்களை அதிகரிக்கச் செய்து விடும். எனவேதான் இதை மறந்தும் கூட வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளக்கூடாது.

இவை தவிர்த்து, மற்ற பழங்களை சாறாகவும்,வெறும் வயிற்றில் சாப்பிட்டும் வரலாம். இதனால் சரு ம ம் பளபளப்பு அடைந்து, உடல் தேவையான சக்தியைப் பெறும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உங்கள் பைக்கை நீங்களே பராமரிக்க உதவும் சில முக்கிய டிப்ஸ்கள்.

  மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களுக்கு அதை பற்றிய அனைத்து விவரங்கள் மற்றும் எப்படி ரிப்பேர் செய்வது என்பது தெரிந்திருக்க வேண்டும் என்ற அவ...

Popular Posts