லேபிள்கள்

திங்கள், 23 செப்டம்பர், 2019

பி.எஃப், கிராஜுவிட்டி பணத்தை எப்படி முதலீடு செய்வது?


ஓய்வுபெற்ற எனக்கு, பி.எஃப்மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்துக்கு நான் வரி கட்ட வேண்டுமா? ரூ.40,000 வரிவிலக்கு எனக்குப் பொருந்துமா?
சிஏ.ஜி.என்.ஜெயராம், ஆடிட்டர் 

''
இ.பி.எஃப்.ஓ மூலம் கிடைக்கும் ஓய்வூதியத்துக்கு வரி கட்ட வேண்டும். ஏனெனில், இது சம்பளம் என்னும் வருமானத் தலைப்பிற்குள் அடங்கும். மேலும், இதற்கு வருமான வரிப் பிரிவு 16-ன்கீழ், நிலைக் கழிவாக ஆண்டுக்கு ரூ.40,000 வரை சலுகை அளிக்கப் படுகிறது. அன்கம்யூட்டட் (Uncommuted) முறையில் ஒவ்வொரு மாதமும் பெறும் ஓய்வூதியத்துக்கு வரி உண்டு.
கம்யூட்டட்(Commuted) முறையில் ஒரே தவணை யாகப் பெறும் ஓய்வூதியத்துக்கு அரசு ஊழியர்களுக்கு முழு வருமான வரி விலக் கும், தனியார் ஊழியர் களுக்குப் பகுதி வரி விலக்கும் (Partial Exemption) அளிக்கப்பட்டுள்ளது.''

என் வயது 79. எனது நீண்ட கால, குறுகிய கால ஆதாயங்கள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களும் வரி செலுத்துவதற்கான வரம்பிற்கு உட்பட்டே இருக்கிறது. என்றாலும், இந்த ஆதாயங்களுக்காக நான் வரி செலுத்த வேண்டுமா?

என்.பி. இசை அழகன், ஆடிட்டர்
''
உங்கள் வயது 60-க்கு மேல் இருப்பதால், ரூ.3 லட்சம் வரை வருமான வரிவிலக்கு உள்ளது. உங்கள் வருமானம் வரி வரம்புக்குக் கீழே இருப்பதால், நீங்கள் வருமான வரி எதுவும் செலுத்தத் தேவையில்லை.''

என் வயது 65. மகனுடன் வசித்துவருவதால், எனது வீட்டை விற்க முடிவெடுத்துள்ளேன். அதை விற்றால் கிடைக்கக்கூடிய 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்து, மாதமொன்றுக்குக் குறைந்தது ரூ.35,000 வரை வருமானம் ஈட்ட விரும்புகிறேன். அதற்கேற்ற முதலீட்டு ஆலோசனை கூறவும்.

த.முத்துக்கிருஷ்ணன், நிதி ஆலோசகர்
''
உங்களுக்குத் தேவைப்படும் வருமானம், மாதம் 35,000 ரூபாய் எனில், ஆண்டுக்கு 4,20,000 ரூபாய். 50 லட்சம் ரூபாய் முதலீட்டிலிருந்து ஆண்டுக்கு சுமார் 4.5 லட்சம் ரூபாய் பெற 8.4% வருமானம் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால், ஓராண்டு முடிந்தவுடன் ஒவ்வொரு மாதமும் ரூ.35,000 பெறலாம். ஆண்டுக்கு 12% வரை வருமானம் வர வாய்ப்புள்ள இரண்டு பேலன்ஸ்டு ஃபண்டுகளில் 50 லட்சம் ரூபாயை இரண்டாகப் பிரித்து முதலீடு செய்யலாம். ஐ.சி.ஐ.சி.ஐ புரூடென்ஷியல் ஈக்விட்டி & டெட் ஃபண்ட் மற்றும் எல் அண்டு டி ஹைபிரிட் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்.''

2017-18-
ம் நிதியாண்டில் சொத்தை விற்றது மூலம் 80 லட்சம் ரூபாயை மூலதன ஆதாயமாகப் பெற்றுள்ளேன். அதே ஆண்டில், மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்குப் பெற ரூ.50 லட்சத்தை இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டில் முதலீடு செய்துள்ளேன். மீதி்முள்ள 30 லட்சம் ரூபாயை, இப்போது இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பாண்டில் முதலீடு செய்தால் வரிச் சலுகை கிடைக்குமா?

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்
''
வரி விலக்குக்காக இரண்டு முறை க்ளெய்ம் செய்ய முடியாது. எனவே, 50 லட்சம் ரூபாய் மட்டுமே வரி விலக்குக்கு ஏற்கப்படும். மீதமுள்ள 30 லட்சம் ரூபாய்க்கு மூலதன ஆதாய வரி விதிக்கப்படும்.''

நான் வீடு வாங்கவுள்ள லே-அவுட்டுக்கு அருகிலுள்ள சாலையின் ஓரத்தில் 'AF' என்று எழுதிய அளவைக் கற்கள் ஆங்காங்கே நடப் பட்டுள்ளன. அது விமானப்படைக்குச் சொந்தமாக அகலப்படுத்தப்படவுள்ள சாலை என்று கூறுகிறார்கள். இதுகுறித்த விவரத்தை எப்படி உறுதிப்படுத்திக்கொள்வது?
த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

''
நீங்கள் வீடு வாங்கவுள்ள பகுதியின் கிராம நிர்வாக அலுவலரை அணுகி விசாரிக்கலாம். அவரிடம் இதுகுறித்த தகவல்கள் இருக்கும். ஒருவேளை, இதுகுறித்த சரியான விவரம் அவரிடம் இல்லையென்றால், நகர் திட்டமிடல் அலுவலர் (Town planning officer) அல்லது நில அளவையாளர்மூலம் அதுகுறித்த விவரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.''

வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கமுடியுமா? ஏதேனும் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வரும்போது க்ளெய்ம் செய்யலாமா?

பி.மனோகரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்
''
வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்தியாவில் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்கலாம். இந்தியாவில் சிகிச்சை எடுத்தால் மட்டுமே இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளெய்ம் செய்ய முடியும். அதேபோல், இந்தியர் அல்லாதவராக இருந்தாலும், முறையான பணி அனுமதியுடன், இந்திய ரூபாயில் சம்பளம் பெறுபவராக இருந்தால், ஹெல்த் இன்ஷூரன்ஸ் எடுக்க அனுமதியுண்டு.''

எஸ்.பி.ஐ ஸ்மால்கேப் ஃபண்ட் மற்றும் ரிலையன்ஸ் லார்ஜ்கேப் ஃபண்ட், மிர்ரே அஸெட் எமர்ஜிங் புளூசிப் ஃபண்ட் மற்றும் எஸ்.பி.ஐ மேக்னம் மல்டிகேப் ஃபண்டுகள் ஒவ்வொன்றிலும் மாதம் ரூ.5,000 முதலீடு செய்கிறேன். இது சரியா?

அபுபக்கர் சித்திக், நிதி ஆலோசகர்
''
உங்களின் போர்ட்ஃபோலி யோவைப் பார்க்கும்போது, நீங்கள் அதிக ரிஸ்க் எடுக்கக்கூடிய முதலீட்டாள ராகத் தெரிகிறீர்கள். குறுகிய காலத்தில் இந்த முதலீட்டில் பெரிய பலனை எதிர்பார்க்க இயலாது. 7-10 ஆண்டுகள் முதலீட்டை எஸ்.ஐ.பி முறையில் தொடர்வதாக இருந்தால் மட்டுமே நல்ல பலன் கிடைக்க வாய்ப்புள்ளது.''

இந்துக் குடும்பத்தில் இரண்டாவது மனைவியின் வாரிசுகளுக்குச் சொத்தில் சட்டப்படி பங்கு உண்டா?

என்.ரமேஷ், வழக்கறிஞர்
''
இந்து சட்டப்படி, இரண்டாம் திருமணம் என்பது சட்டத்திற்கு முரணானதாக இருக்கலாம். ஆனால், அந்தத் திருமணத்தின் காரணமாகப் பிறக்கும் குழந்தைகள் சட்டப் படியான வாரிசுகள்தான். எனவே, இரண்டாவது மனைவியின் வாரிசுகளுக்குச் சொத்தில் சட்டப்படி பங்கு உண்டு.''
Courtesy: vikatan.con/nanayamvikatan
http://pettagum.blogspot.com/2019/04/blog-post_25.html   

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts