லேபிள்கள்

செவ்வாய், 7 மார்ச், 2017

மாதவிலக்கை தள்ளிப் போட ஆரோக்கியமான வழி!


சி ல பெண்களுக்கு நேரம் காலம் தப்பி மாதவிலக்கு வர்றதுண்டு. மறுநாள் வீட்டுல விசேஷம் இருக்க, திடீர்னு விலக்காகிட்ட பொண்ணுங்க ரொம்பவும் டென்ஷன் ஆகிடுவாங்க. அந்தப் பிரச்னையை சரி பண்ணக்கூடிய அருமருந்து 'சப்ஜா விதை'!
இந்த சப்ஜா விதை நாட்டு மருந்துக் கடைகள்ல கிடைக்கும். இதை வாங்கிட்டு வந்து, ராத்திரி கால் டம்ளர் தயிர்ல ஒரு டீஸ்பூன் சப்ஜா விதையை ஊறப் போட்டு, மறுநாள் காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா உடனடியா பலன் கிடைக்கும். ரத்தப்போக்கு நிக்கும்.

வ ந்தது நிக்கறதுக்கு மருந்து சொன்னேன். வரப் போறதைத் தள்ளி வைக்கறதுக்கும் மருந்து இருக்கு. எங்க காலத்துல நாள் கிழமை, பண்டிகை சமயத்துல எங்களுக்கு 'தூரத்துக்கு நாள்' வந்துட்டா என்ன செய்வோம் தெரியுமா?! இப்போல்லாம் தூரம் தள்ளிப் போக கண்ட கண்ட மாத்திரைகளை சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்கறாங்களே... அந்த ஜோலியே கிடையாது! இந்த சப்ஜா விதை - தயிர் கலவையை சாப்பிட்டு, ரெண்டு மலை வாழைப்பழத்தை சாப்பிட்டு, ஒரு டம்ளர் தண்ணியைக் குடிச்சுட்டு, அடுத்த வேலையைப் பார்க்கப் போயிடுவோம். கேரண்ட்டியா அன்னிக்கு மாதவிலக்கு ஆகாது!
தூரத்தைத் தள்ளிப் போட, இன்னொரு சூப்பரான - ஆரோக்கியமான வழி இருக்கு! காலையில வெறும் வயித்துல கைப்பிடி பொட்டுக்கடலையை (பொரி கடலை) மென்னு தின்னு, ஒரு டம்ளர் பச்சைத் தண்ணி குடிங்க. அதுக்கப்புறம் ஒரு மணி நேரம் கழிச்சுத்தான் காப்பியோ, டீயோ எதுவானாலும் குடிக்கணும். அப்படிச் செஞ்சா கட்டாயம் அன்னிக்கு மாதவிலக்கு வராது. இப்படியே அஞ்சாறு நாள் கூட மாதவிலக்கைத் தள்ளிப் போடலாம். உடம்பை பாதிக்காத எளிய வழி! கூடவே, உடம்புல புரோட்டீன் சத்தும் சேரும்!

சி ல சமயம் 'சீக்கிரமே மாதவிலக்கு வந்துட்டா தேவலை'னு நினைச்சா, அதுக்கும் ஒரு கை வைத்தியம் இருக்கு!
கொஞ்சம் எள்ளையும் வெல்லத்தையும் சேர்த்துத் தின்னுங்க. பலன் நிச்சயம்! எள், வெல்லம் ரெண்டுமே சூட்டைக் கிளப்பிவிட்டு, மாதவிலக்கையும் வர வச்சிடும். அதே மாதிரி, கொஞ்சம்போல (ஒரு இணுக்கு) கற்பூரத்தை வெத்திலையில வச்சுத் தின்னாலும், சீக்கிரம் தூரமாகிடலாம். அதுவும் இல்லைன்னா, இஞ்சிச் சாறுல நிறைய வெல்லம் கலந்து வெறும் வயித்துல குடிச்சாலும் பலன் கிடைக்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts