லேபிள்கள்

புதன், 11 நவம்பர், 2015

டெலி ஷாப்பிங் - ஏடாகூடங்கள்.... ( Tele - Shopping )

அவசரமாய் சுழன்று கொண்டிருக்கும் இன்றைய பூமிப் பந்தில் நிறைய மாறுதல்கள் நடந்து கொண்டிருந்தாலும் "வியாபாரம்" என்ற ஒன்று அசுர வளர்ச்சி கண்டு வருகிறது! அதிலும் குறிப்பாக "டெலி-ஷாப்பிங்". முன்பெல்லாம் ஒரு இலவச எண்ணை கொடுத்து அதில் அழைத்தால் போதும் வீடு தேடி வரும் எங்களின் பொருள் என்று வாய் கிழிய கூவிக்கொண்டிருந்த வெள்ளைக்காரி, வெள்ளைக்காரனையும் சமீப காலமாக காணோம்! மாற்றம் வேண்டுமல்லவா ?

திடீர்னு பார்த்தா நம்ம ஊரு அண்ணாச்சி, அயல்நாட்டுக்காரனுக்காக அடி வயிறு குலுங்க குலுங்க கூவிக் கொண்டிருக்கிறார்! (இங்க தான் நாம வால்மார்ட்டை எதிர்ப்பதை மனசில் வைத்துக்கொள்ளவேண்டும்) ஒரே ஒரு டேபுள் தாம்யா, 18 வகையான பயன்பாட்டினை கொண்டது என்று, படிக்கலாம், எழுதலாம்,  நறுக்கலாம், உண்ணலாம் என்று ஏகப்பட்ட புரூடா விட்டுக் கொண்டிருக்கிறார். 

இவிங்க சொல்ற பயன்பாடுகள்
 அனைத்துமே சாதரணமாக அன்றாடம் நாம் செய்யும் அன்றாட/அவசிய செயல்கள் தான். இதில் சொகுசு என்ன வேண்டி கெடக்கு? சோறு திங்க வலிக்குதுன்னா என்ன #@:+=க்கு சாப்பிடனுங்கறேன்! முதியோர்களால் முடியாது என்று சப்பை கட்டு வேறு! தெரியாமத்தான் கேக்குறேன் முப்பது வயசை எவன்யா முதியோர்கள் லிஸ்டில் சேர்த்தது ?  இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டதே அவனுங்க தான் என்பதை உணர மறுக்கும் சோம்பேறி மக்களை வைத்துக்கொண்டு என்னைக்கு நாம முன்னேறுவது ...?

மிஸ்டு கால் கொடுத்தால் போதும் என்று சொல்வதில் பெரிய நுண்ணரசியலே ஒளிந்திருக்கிறது! ஒத்த ரூவாய்க்கு போன் பக்க வக்கில்லாதவன் எப்படி சில ஆயிரம் மதிப்புள்ள பொருளை வாங்குவான் என்று
 யோசிக்கிறதில்லை என நண்பர் ஒருத்தர் ஏளனமாய் சொன்னார். சில ஆயிரம் மதிப்புள்ள பொருளை வாங்குபவனுக்கு ஒரு ரூபாய்க்கு கால் பண்ண தகுதி இருக்காதா? என்று ஏன் அவன் யோசிக்கவில்லை என்று நான் கேட்டேன்! மொத்தத்தில் எலி பொறிக்குள் இருக்கும் வடை மட்டுமே நம் கண்ணுக்கு பிரதானமாக தெரிகிறது, சுற்றி இருக்கும் கண்ணி கண்ணுக்கு தெரிவதில்லை, தெரியப் போவதுமில்லை! (இங்கு இலவசத்துக்கும், விலையில்லா பொருளுக்கும் முதல்வரை தேர்ந்தெடுத்துக் கொண்டிருப்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்)   
அவனுக்கு நம்மை பற்றியும், நம்மின் கவர்ச்சி மோகம் பற்றியும் துல்லியமாய் தெரிந்து வைத்திருப்பதினால் எப்படி கொள்ளை அடிக்க முடியுமோ ? அப்படி திட்டம் போட்டு கொள்ளை அடிக்கிறான்! அதுக்கு நம்ம ஊரு நடிகனுங்க கூஜா தூக்கி வயிறு கழுவுவது தான் கண்றாவியாக இருக்கிறது. அடிக்கடி வந்து தொலையும் அந்த விளம்பரத்துல வரையலாம்னு சொல்லி உருண்டையா ஒரு பாப்பா படம் வரையுற மாதிரி காட்டுறான், நாமளும் நம்ம புள்ளை வலிக்காம வரையட்டுமே!  என்று வாங்கி கொடுத்து அகமகிழும் நாம் தான் நான்கு கிலோ மீட்டர் நடந்து போய் படித்தோம் என்பதை எளிதில் மறந்து விடுகிறோம். இப்படி எல்லாத்துக்குமே சொகுசாக உடலை பழக்கி விட்டால் முப்பது வயசுல மூட்டு வலி வராம வேற என்ன வரும் ?

ஒன்றை மட்டும் மனதில் கொள்ள வேண்டும் நாம், எளிதில் கிடைக்கிறதே என்று வாங்கி மனசையும், உடலையும் பாழாக்கி கொள்வது ஒருபக்கம் இருந்தாலும், உள்ளூர் பொருளாதாரங்களை, அதை நம்பி தினசரி பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் குடும்பங்களை நசுக்கி கொண்டிருக்கிறோம். இதன் விளைவுகள் எவ்வளவு பெரிய
 தாக்கத்தை உண்டு பண்ண போகிறதோ ? என்று எண்ணி பார்த்தால் மூச்சு திணறுகிறது. மீண்டும் ஒரு அடிமை வாழ்வுக்கு நாம் நம்மை தயார் படுத்திக் கொண்டு இருக்கிறோம் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக தெரிகிறது! 

நான் ஸ்டிக் வந்ததிலிருந்து, மண் சட்டி, நம்மூர் பாத்திரப் பொருட்கள் அனைத்தும் முகவரி இழக்க தொடங்கவிட்டது! அதை சார்ந்த தொழிலாளர்களின் நிலை ? இப்படி நிறைய சொல்லிக்கொண்டு போகலாம்! நடிப்பவன் நடித்துக் கொண்டு தான் இருப்பான், நாம் ஏன் ஏமாற வேண்டும்! உள்ளூர் பொருளாதாரத்தை வலுப்படுத்திக்கொண்டு, பிறகு உலகப் பொருளாதாரம் நோக்கி நகரலாம்!
 ஏமாற்றுவது குற்றமல்ல, ஏமாறுவது தான் குற்றம் என்கிற சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை மனதில் நிறுத்தி செயல்படுவோம்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

2 கருத்துகள்:

Unknown சொன்னது…

தங்கள் பகிர்வுக்கு நன்றி
latha

sahabudeen சொன்னது…

நன்றி

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts