லேபிள்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

தொழக்கூடாத பத்து இடங்கள்

1. அடக்கஸ்தலம்
அடக்கம் செய்யப்பட்டது ஒரு ஜனாஸாவாக இருந்தாலும் அதுவும் அடக்கஸ்தலமாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யூதர்களின் மீதும் கிறிஸ்தவர்கள் மீதும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்! அவர்கள் தங்களது நபிமார்களின் கப்ருகளைப் பள்ளிவாசல்களாக எடுத்துக் கொண்டார்கள்". (புஹாரி, முஸ்லிம்)
2. கப்ருகளின் மீது கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறுகின்றார்கள்: "உம்மு ஹபீபா, உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகியோர் ஹபஷாவில் கண்ட உருவப்படங்கள் உள்ள ஓர் ஆலயம் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள்". அது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்: "அவர்களைப் பொறுத்தவரையில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் மரணித்தால் அவரது கப்ரின் மீது அவர்கள் பள்ளிவாசலைக் கட்டுவார்கள். அதிலே அவரின் உருவப்படங்களை அமைப்பார்கள். மறுமை நாளில் அவர்களே அல்லாஹ்விடம் படைப்பினங்களில் மிக மோசமானவர்கள்". என்று கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்)
3. ஒட்டகம் கட்டும் இடங்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "நீங்கள் ஆட்டுத் தொழுவங்களில் தொழுது கொள்ளுங்கள்! ஒட்டகங்கள் கட்டப்படும் இடத்தில் தொழ வேண்டாம்!" (அஹ்மத்)
4. மலசலகூடங்கள்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "பூமி முழுவதும் தொழுமிடமாகும். மலசலகூடத்தையும் அடக்கஸ்தலத்தையும் தவிர". (இப்னு ஹிப்பான்)
5. ஷைத்தான் ஒதுங்கும் இடங்கள்
மோசமான இடங்கள், காபிர்களின் ஆலயங்கள் போன்ற இடங்களைக் குறிப்பிடலாம்.
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: "நாங்கள் இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஓய்வெடுத்தோம். சூரியன் உதயமாகும் வரை நாங்கள் விழிக்கவில்லை. பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்: 'ஒவ்வொருவரும் தனது வாகனத்தின் கால்நடை தலையைப் பிடித்துக் கொண்டு இந்த இடத்தை விட்டும் செல்லட்டும்! ஏனெனில், இந்த இடத்தில் ஷைத்தான் நம்மிடம் வந்துவிட்டான்' என்று கூறினார்கள். நாங்கள் அவ்வாறே (பயணம்) செய்தோம். பிறகு (சிறிது தூரம் சென்றதும்) தண்ணீர் கொண்டுவரச் சொல்லி வுழூச் செய்து கொண்டார்கள். பிறகு இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட பஜ்ர் தொழுவித்தார்கள்". (முஸ்லிம்)
6. அபகரிக்கப்பட்ட பூமி
அபகரிக்கப்பட்ட பூமியில் தொழக்கூடாது என்பது அறிஞர்களின் ஏகோபித்த கருத்து என்பதை இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
7. குபா பள்ளிவாசலுக்கு அருகில் காணப்பட்டு வந்த "ளிரார்" என்ற பள்ளிவாசல் மற்றும், (இப்பள்ளிவாசலைப் போன்று) தீங்கு விளைவிக்கும் நோக்கிலும் முஸ்லிம்களுக்கு மத்தியில் பிரிவினையை உண்டுபண்ணும் நோக்கிலும் கட்டப்பட்ட பள்ளிவாசல்கள்
அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: "எவர்கள் (தங்கள் உள்ளங்களிலுள்ள) நிராகரிப்பின் காரணமாக நம்பிக்கையாளர்களுக்கிடையில் பிரிவினையை உண்டுபண்ணி தீங்கு இழைப்பதற்காக முன்னர் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் புரிந்தவர்களுக்குப் பதுங்குமிடமாக இருப்பதற்கு ஒரு பள்ளியைக் கட்டியிருக்கின்றார்களோ அவர்கள் (தங்கள் குற்றத்தை மறைத்துவிடக் கருதி) 'நிச்சயமாக நாங்கள் நன்மையையன்றி (தீமையைக்) கருதவில்லை' என்று சத்தியம் செய்கின்றனர். ஆனால், அல்லாஹ்வோ நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்று சாட்சி கூறுகின்றான்". (அத்தவ்பா: 107)
8. பூமி அதிர்வு போன்ற அல்லாஹ்வின் வேதனை இறங்கிய இடங்கள்
பொதுவாக இந்த இடங்களில் நுழைய முடியாது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத்தைக் கடந்து சென்ற போது: "அக்கிரமம் புரிந்தவர்களின் வசிப்பிடங்களில் அவர்களுக்குக் கிடைத்த அதே தண்டனை உங்களுக்குக் கிடைத்துவிடுமோ என்றஞ்சி அழுதபடியே தவிர நுழையாதீர்கள்!" என்று கூறினார்கள். பிறகு அவர்கள் சேண இருக்கையின் மீது இருந்தபடியே தம் போர்வையால் (தம்மை) மறைத்துக் கொண்டார்கள். (புஹாரி)
9. மஃமூம்களை விட உயரமாக ஓர் இடத்தில் இமாம் நின்று தொழுதல்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஃமூம்கள் பின்னால் தாழ்வான இடத்தில் இருக்க, இமாம் உயரமான ஒன்றின் மீது நின்று தொழுவதைத் தடை செய்தார்கள். (தாரகுத்னி, ஹாகிம்)
10. தூண்களுக்கு மத்தியில் மஃமூம்கள் வரிசையாக நின்று தொழுதல்
அப்துல் ஹமீத் இப்னு மஹ்மூத் என்பவர் கூறுகிறார்: "நாம் ஒரு தலைவருக்குப் பின்னால் மஃமூம்களாகத் தொழுதோம். மனிதர்கள் எம்மை நெருக்கடிக்கு ஆளாக்கினர். எனவே, நாம் இரு தூண்களுக்கு மத்தியில் தொழுதோம். அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு எம்மை விட்டும் பின்வாங்கி விட்டார். நாம் தொழுது முடித்தபோது அவர்கள்: 'தூண்களுக்கு மத்தியில் தொழும் இச்செயலை நாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது காலத்தில் பயப்படக்கூடியவர்களாக இருந்தோம்' என்று கூறினார்". (நஸாஈ, திர்மிதி, அல்ஹாகிம், அஹ்மத்)
 தொகுத்தளித்தவர்: அஷ்ஷெய்ஹ் முஹம்மத் நாஸிருத்தீன் அல்பானி ரஹிமஹுல்லாஹ்.
நூல்: அஸ்ஸமருல் முஸ்ததாப் (357-409)
தமிழில்: அஸ்கி இப்னு ஷம்சிலாப்தீன்
  www.salaf.co


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

திங்கள், 27 பிப்ரவரி, 2017

பிக்ஹுல் இஸ்லாம் – தொழுகையில் அனுமதிக்கப்பட்ட அம்சங்கள் – 3

விரல்களைக் கோர்த்தல்:
தொழும் போது ஒரு கையின் விரல்களை மறு கையின் விரல்களோடு கோர்ப்பது தடுக்கப்பட்டுள்ளது.

"உங்களில் ஒருவர் தனது வீட்டிலேயே வுழூச் செய்து கொண்டு பள்ளிக்கு வந்தால் அவர் திரும்பிச் செல்லும் வரையில் தொழுகையிலேயே இருக்கிறார்' என நபி(ச) அவர்கள் கூறிவிட்டு, 'இப்படிச் செய்யாதீர்கள்' எனக் கூறி தமது விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: இப்னு குஸைமா- 439, ஹாகிம்-744
(இமாம் அல்பானி, தஹபி ஆகியோர் இதனை ஸஹீஹானது என்று குறிப்பிடுகின்றனர்.)

நபி(ச) அவர்கள் பள்ளியில் விரல்களைக் கோர்த்து அமர்ந்திருக்கின்றார்கள் என்பதை ஹதீஸ்கள் மூலம் அறியலாம்.
அபூ ஹுரைரா(வ) அறிவித்தார். 'நபி(ச) அவர்கள் மாலை நேரத் தொழுகைகளில் ஒன்றை இரண்டு ரக்அத்களாக எங்களுக்குத் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பள்ளியில் நாட்டப்பட்டுள்ள மரத்தினருகே சென்று கோபமுற்றவர்களைப் போல் அதில் சாய்ந்தார்கள். தங்களின் வலது கரத்தை இடது கரத்தின் மேல் வைத்துக் கை விரல்களைக் கோர்த்தார்கள். தம் வலது கன்னத்தை இடக்கையின் மீது வைத்தார்கள். அவசரக்காரர்கள் பள்ளியின் பல வாயில்கள் வழியாக வெளிப்பட்டுத் 'தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது' என்று பேசிக் கொண்டார்கள். அபூ பக்ரு(வ), உம்ர்(வ) ஆகியோரும்; அங்கிருந்தனர். (இது பற்றி) நபி(ச) அவர்களிடம் கேட்க மக்கள் அஞ்சினார்கள். அந்தக் கூட்டத்தில் (இரண்டு கைகளும் நீளமான) துல்யதைன் என்பவர் இருந்தார். அவர் 'இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்து விட்டீர்களா?' என்று கேட்டார். 'குறைக்கப்படவும் இல்லை; நான் மறக்கவுமில்லை' என்று நபி(ச) கூறிவிட்டு (மக்களை நோக்கி) 'துல்யதைன் கூறுவது சரிதானா?' என்று கேட்க 'ஆம்' என்றனர் மக்கள்.
(தொழுமிடத்திற்குச்) சென்று விடுபட்டதைத் தொழுது ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் கூறி (தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்ட ஸஜ்தாவைச் செய்து, பின் தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். பிறகு தக்பீர் கூறி(த் தொழுகையில் செய்யும்) ஸஜ்தாவைப் போல் அல்லது அதை விட நீண்டதாக ஸஜ்தா செய்து ஸலாம் கொடுத்தார்கள். அபூ ஹுரைரா(வ) லுஹர், அஸர் தொழுகை என்று கூறாமல் குறிப்பாக ஒரு தொழுகையைக் கூறினார்கள் என்றும் தாம் அதை மறந்துவிட்டதாகவும் இப்னுஸீரீன் குறிப்பிடுகிறார்.'
(புஹாரி: 482)

எனவே, விரல்களைக் கோர்த்துக் கொள்வதைப் பொதுவான தடையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
நாபிஉ அவர்களிடம் விரல்களைக் கோர்த்துக் கொண்டு தொழும் மனிதர் பற்றி நான் கேட்ட போது 'இப்னு உமர் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களின் (யூதர்களின்) தொழுகை இது' என அவர் பதிலளித்தார் என இப்னு இஸ்மாயீல் இப்னு உமையா கூறுகின்றார்.
பைஹகி-852,
ஆதாரம்: அபூதாவூத்-27
அல்பானி (ரஹ்) இதனை ஸஹீஹானது எனக் குறிப்பிடுகின்றார்.

நெட்டி முறித்தல்:
சிலருக்கு நெட்டி முறிப்பது இயல்பான குணமாக இருக்கலாம். தொழுகையிலும், தொழுது முடிந்ததும் முறித்துக் கொண்டே இருப்பார்கள். தொழும் போது நெட்டி முறிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

சாதாரணமாக ஒருவர் தொழும் போது நெட்டி முறித்தால் அதை 'மக்ரூஹ்' – வெறுக்கத்தக்கது என்பர். ஏனெனில், இது தொழுகையை விட்டும் மனதைப் பராக்காக்கும் காரியமாகும். அதிகமாக ஒருவர் நெட்டி முறிக்கிறார் என்றால் அது ஹராமாகும். ஏனெனில், தொழுகையுடன் விளையாடுவது போலாகும்.
இப்னு அப்பாஸ்(வ) அவர்களது அடிமை ஷுஃபா(வ) அவர்கள் கூறுகின்றார்கள்.'நான் இப்னு அப்பாஸ்(வ) அவர்களுக்குப் பக்கத்தில் தொழும் போது எனது விரல்களில் நெட்டி முறித்தேன். தொழுது முடிந்ததும் இப்னு அப்பாஸ்(வ) அவர்கள் உனக்கு தாய் இல்லாமல் போகட்டும். நீ தொழுது கொண்டிருக்கும் போது நெட்டி முறிக்கின்றாயே! என்று (எச்சரித்துக்) கூறினார்கள். '
ஆதாரம்: அல் ஜாமிஉல் ஸஹீஹ், முஸன்னப் இப்னு அபீiஷபா(7280)
அல்பானி (ரஹ்) இதனை ஹஸனான அறிவிப்பு என்கின்றார்.

ஆடைக்குள் கையைவிட்டுக் கொள்ளல்:
'ஆடைக்குள் கையை வைத்துக் கொண்டு அப்படியே ருகூஃ, சுஜூது செய்வதை 'அஸ்ஸந்ல்' என்று கூறப்படும். இதை நபி(ச) அவர்கள் தடுத்தார்கள்.'
அறிவிப்பவர்: அபூஹுரைரா(வ)
ஆதாரம்: அபூதாவூத் – 644

இந்த அடிப்படையில் ஒருவர் போர்வையைப் போர்த்தித் தொழுதால் அந்தப் போர்வைக்குள் கைகளை வைத்துக் கொண்டு அதற்குள்ளேயே ருகூஃ, சுஜூது செய்து கொள்வது வெறுக்கப்படுகின்றது. கைகளுக்குத் தனியாக கையுறை அணிந்தவர் அப்படியே தொழுவதை இது குறிக்காது என்பதைக் கவனத்திற் கொள்ள வேண்டு;ம்.
கண்களை மூடிக் கொண்டு தொழுதல்:
சிலர் கண்களை மூடிக் கொண்டு தொழுதால் தக்வா அதிகரிக்கும் என நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும். தொழும் போது சுஜூது செய்யும் இடத்தைப் பார்க்க வேண்டும், முன்னால் யாராவது சென்றால் தடுக்க வேண்டும், தேள், பாம்பு போன்றவற்றைக் கண்டால் அடிக்கலாம் என்று வரும் ஹதீஸ்கள் அனைத்தும் கண்களைத் திறந்து கொண்டு தொழுவதுதான் சரியானது என்பதையே எடுத்துக் காட்டுகின்றன.

கண்களை மூடிக் கொண்டு தொழுவதன் மூலம் அல்லாஹ்வை நெருங்கலாம்; அதிக நன்மை கிடைக்கும் என்ற எண்ணத்தில் ஒருவர் கண்களை மூடிக் கொண்டு தொழுதால் அது ஹராமாகும். ஏனெனில், கண்களை மூடிக் கொள்வதை அவர் இபாதத்தாக, நன்மை தரும் அம்சமாக நினைத்துக் செய்வதால் அது பித்அத்தாகிவிடுகின்றது. காரணம் இல்லாமல் மூடித் தொழுதால் அது வெறுக்கத்தக்கதாகவும் சுன்னாவுக்கு மாற்றமாகவும் அமையும்.
இமாம் இப்னுல் கையிம்(ரஹ்) அவர்கள் 'தொழும் போது கண்களை மூடிக் கொள்வது நபி(ச) அவர்களின் வழிகாட்டலில் இல்லாதது' எனக் குறிப்பிட்டு நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று நபி(ச) அவர்கள் கண்களைத் திறந்து கொண்டுதான் தொழுதுள்ளார்கள் என்பதற்கு அநேக ஆதாரங்களை முன்வைக்கின்றார்கள். (ஸாதுல் மஆத் – 1294)
ருகூஉ, சுஜூதுவில் குர்ஆன் ஓதுவது:
தொழுகையில் ருகூஉ, சுஜூத் செய்யும் போது குர்ஆன் ஓதுவது தடுக்கப்பட்டதாகும்.

'ருகூஉ, அல்லது சுஜூத் செய்தவனாக குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப் பட்டுள்ளேன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என நபி(ச) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(வ)
ஆதாரம்: முஸ்லிம் – 207-479

இந்த அடிப்படையில் ருகூஉ, சுஜூதில் குர்ஆன் ஓதுவதைத் தவிர்க்க வேண்டும்.
முழங்கைகள் தரையில் படும்படி சுஜூத் செய்தல்:
சுஜூது செய்யும் போது எமது உள்ளங் கைகள் நிலத்தில் பட வேண்டும். சிலர் தமது முழங்கைகள் முழுமையாக நிலத்தில் படும்படி சுஜூது செய்வார்கள். இது தடுக்கப்பட்டுள்ளது. இது பற்றி நபி(ச) அவர்கள் கூறும் போது,

'இறைத்தூதர்(ச) அவர்கள் அறிவித்தார்கள். 'ஸஜ்தாவில் நடுநிலையைக் கடைபிடியுங்கள். உங்களில் எவரும் நாய் விரிப்பதைப் போல் கைகளை விரிக்கக் கூடாது."
அறிவிப்பவர்: அனஸ்(வ)
ஆதாரம்: புஹாரி- 882

மேற்குறிப்பிட்ட அடிப்படையில் சுஜூத் செய்வதை நபி(ச) அவர்கள் நாயின் நடைமுறைக்கு ஒப்பிட்டுள்ளதால் இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.
நிலத்தைத் தடவுதல்:
சுஜூத் செய்யும் இடத்தில் கல் போன்றவை இருந்தால் அதைத் தடவி சரி செய்ய வேண்டிய தேவை இருந்தால் ஒரு முறை செய்து கொள்ளலாம். அதையும் செய்யாமல் விடுவதே சிறந்ததாகும்.

'ஸஜ்தாச் செய்யும் போது மண்ணைச் சமப்படுத்திய மனிதரை நோக்கி 'நீர் இவ்வாறு செய்வதென்றால் ஒரு முறை மட்டும் செய்வீராக!' என்று இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்.'
அறிவிப்பவர்: முஅய்கீப்(வ)
ஆதாரம்: 1207

எனவே, நிலத்தைத் தேவையில்லாமல் சரி செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்தே ஆக வேண்டும் என்றால் ஒரு முறையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்
http://www.islamkalvi.com/?p=104163

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 25 பிப்ரவரி, 2017

குழந்தைக்கு பெயர் சூட்டுதலும் அகீகா கொடுத்தலும்

மவ்லவி யூனூஸ் தப்ரீஸ் சத்தியக் குரல் ஆசிரியர் இலங்கை
ஒரு குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு என்ன பெயர் வைக்க வேண்டும்? எத்தனையாவது நாளில் பெயர் வைக்க வேண்டும்? அகீகா எப்படி கொடுக்க வேண்டும் என்பதை இக்கட்டுரை மூலம் தொடர்ந்து அவதானிப்போம்.
குழந்தைக்கு பெயர் தெரிவு செய்தல்:
ஒரு குழந்தை பிறந்தால் பொருத்தமான அழகான பெயரைத் தெரிவு செய்து பெயர் வைக்க வேண்டும்.
"உங்கள் பெயர்களின் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர்ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும். (ஆதாரம் முஸ்லிம் 4320)
இப்படியான பெயர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதே போல சஹாபாக்கள், சஹாபி பெண்மணிகளுடைய பெயர்களை தெரிவு செய்து வைக்க வேண்டும். அல்லது பொருத்தமான பெயர்களை தெரிவு செய்து பிள்ளைகளுக்கு வைத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் தவறான அர்த்தங்களை தரக்கூடிய பெயர்களை குழந்தைகளுக்கு வைத்து விட்டால் அதை கட்டாயம் மாற்றுவதோடு வேறு நல்ல பெயரை தெரிவு செய்து வைக்க வேண்டும் என்பதை பின்வரும் நபி மொழிகள் தெளிவுபடுத்துவதை காணலாம்.
"(என் தந்தை) உமர் (ரழி) அவர்களுக்கு ஆசியா (பாவி) எனப்படும் புதல்வி ஒருவர் இருந்தார் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஜமீலா (அழகி) என மாற்றுப் பெயர் சூட்டினார்கள்." அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) (ஆதாரம் முஸ்லிம் 4333)
மேலும் "(மறுமை நாளில்) அல்லாஹ்விடம் மிகவும் கேவலமான பெயர் மன்னாதி மன்னர் (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக்கொண்டதாகும். என்றார்கள் (ஆதாரம் முஸ்லிம் 4338)
எனவே பொருள் வித்தியாசப்படும் பெயர்களை மாற்றி வேறு நல்ல பெயர்களை வைத்துக் கொள்ள வேண்டும். அதே போல் ஏற்கனவே வைத்த பெயர் நல்ல பெயராக இருந்தாலும் அது தவறான கருத்துக்கு இடம்பாடு இருக்குமென்றால் அதையும் மாற்றிக் கொள்ள வேண்டும். என்பதை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் விளங்கலாம்.
"ஸைனப் (ரழி) அவர்களுக்கு முதலில் பர்ரா (நல்லவள்) என்ற பெயர் இருந்தது. அப்போது அவர் தம்மைத் தாமே பரிசுத்தப்படுத்திக் கொள்கிறார். என்று (மக்களால்) சொல்லப்பட்டது. ஆகவே அவருக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸைனப் (அழகிய தோற்றம் உடைய நறுமண செடி) என்று பெயர் சூட்டினார்கள். (ஆதாரம் புகாரி: 6192, முஸ்லிம்: 4345)
அதே போல நபி (ஸல்) அவர்களின் துணைவியான ஜூவைரியா (ரழி) அவர்களுக்கு பர்ரா என்ற பெயர் இருந்தது. அவருக்கு அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஜூவைரியா (இளையவள்) என பெயர் மாற்றினார்கள். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் பர்ராவிடம் (நல்லவளிடம்) இருந்து புறப்பட்டு விட்டார்கள் என்று சொல்லப்படுவதை நபியவர்கள் வெறுத்தார்கள். (ஆதாரம் முஸ்லிம்: 4334)
எனவே நல்ல பெயர்களாக இருந்தாலும் பொருள் வித்தியாசப்படும் என்று சொன்னால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கு பெயர் சூட்டல்:
குழந்தை பிறந்து விட்டால் யாரால் பெயர் சூட்ட வேண்டும்.? என்பதை தொடர்ந்து அவதானிப்போம். குழந்தையை பெற்றவர்களே குழந்தைக்கு பெயர் சூட்டலாம், அல்லது தான் விரும்பும் ஒருவரின் மூலம் பெயரை சூட்டலாம். என்பதை பின் வரும் குர்ஆன் வசனத்திலிருந்தும், ஹதீஸிலிருந்தும் நாம் விளங்கலாம்.
மர்யம் (அலை) அவர்களின் தாய் குழந்தையை பெற்றெடுத்துக் கொண்டு, அவர்களே பெயர் சூட்டினார்கள் என்பதை பின் வரும் குர்ஆன் வசனம் எடுத்துக் காட்டுகிறது. "… நான் இவளுக்கு மர்யம் என்று பெயரிட்டேன்…(3- 36) பெற்றெடுத்த தாயே தாராளமாக குழந்தைக்கு பெயரை சூட்டலாம் என்பதை விளங்கிக் கொண்டீர்கள். அதே போல தான் விரும்பும் ஒருவரின் மூலமும் குழந்தைக்கு பெயரை சூட்டலாம் என்பதை பின் வரும் ஹதீஸ் எடுத்துக்; காட்டுகிறது.
" உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அவரது கணவர் அபூ தல்ஹா (ரலி) மூலம் தான் பெற்றெடுத்த குழந்தையை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துச் சென்ற போது நபி (ஸல்) அவர்கள் பேரீத்தப் பழத்தை தன் வாயில் மென்று குழந்தையின் நாவில் சுவைக்க வைத்து விட்டு "அப்துல்லாஹ் என்று பெயரிட்டார்கள். ஆதாரம் புகாரி 5470 முஸ்லிம் 4341
அதே போல எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது அக் குழந்தையை நான் நபி (ஸல்) அவர்களிடம் எடுத்து சென்றேன் நபி (ஸல்) அவர்கள் அக் குழந்தைக்கு இப்றாகீம் என பெயரிட்டார்கள்.பேரீத்தப் பழத்தை மென்று குழந்தையின் வாயில் தடவினார்கள். புகாரி 5467, முஸ்லிம் 4342
மேலும் அபூ பக்கர் (ரலி) அவர்களுடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் மக்காவிலிருந்து (ஹிஜ்ரத்) மதீனாவிற்கு செல்லும் வழியில் குபாவில் வைத்து தன் குழந்தையை பெற்றெடுக்கிறார்கள். அக்குழந்தையை நபியவர்களிடம் எடுத்தச் சென்ற போது பேரீத்தப் பழத்தை வாயில் மென்று அக்குழந்தையின் வாயில் வைத்தார்கள், பிறகு அக்குழந்தைக்கு அப்துல்லாஹ் என பெயரிட்டு, அக் குழந்தைக்காக பிராத்தனை செய்தார்கள். புகாரி 5469, முஸ்லிம் 4343
இப்படி பல ஹதீஸ்களை காணலாம்.எனவே குழந்தைக்கு பெற்றேடுத்த தாயும் பெயர் வைக்கலாம், அல்லது தான் விரும்பியவரிடம் எடுத்தச் சென்று அல்லது அழைத்து வந்து பெயரை சூட்டலாம் என்பதை விளங்கிக் கொள்வதோடு, பேரித்தம் பழத்தை மென்று குழந்தையின் வாயில் சுவைக்க கொடுத்து அக்குழந்தைக்காக பிராத்தனையும் செய்யலாம் என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
குழந்தையும் அகீகாவும்:
அகீகா என்றால் குழந்தைக்காக ஆட்டை அறுத்து குர்பான் கொடுப்பதாகும்.
"குழந்தையானது அதன் அகீகாவுடன் அடைமானம் வைக்கப் பட்டுள்ளது.குழந்தை பிறந்து ஏழாவது நாளில் ஆடு அறுக்கப்படும், குழந்தைக்கு பெயர் சூட்டப் படும், அதன் தலை முடி களையப்படும்". திர்மிதி 1442.
குழந்தைப் பிறந்து ஏழாவது நாளில் அகீகா கொடுக்க வேண்டும். ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும்,பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் கொடுக்க வேண்டும். ஏழாம் நாள் அகீகா கொடுக்க வசதியில்லா விட்டால், பிறகு கொடுக்க தேவை இல்லை.
புதிநான்காவது நாள் அல்லது இருபத்தி ஏழாம் நாள், அல்லது எப்போது வசதி வருகிறதோ அப்போது கொடுக்கலாம் என்பது இஸ்லாத்தி;ன் அடிப்படையில் இல்லாததாகும். அப்படி கொடுப்பதற்கு எந்த ஸஹீஹான ஹதீஸ்களும் இல்லை என்பதை விளங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
எனவே ஏழாம் நாள் வசதியிருந்தால் அகீகா கொடுப்பது, ஏழாம் நாள் அகீpகா கொடுப்பதற்கு வசதி இல்லை என்றால் அதன் பிறகு கொடுக்க தேவை இல்லை.
அகீகாhவிற்கு ஆடு தான் கொடுக்க வேண்டும். சிலர் மாடும் கொடுக்கலாம் என்று ஹதீஸிற்கு மாற்றமாக சொல்கிறார்கள், அகீகாவிற்காக நபியவர்கள் மாடு கொடுத்ததாக எந்த ஹதீஸீம் கிடையாது. நபியவர்களே அகீகா கொடுக்கும் படி வழி காட்டினார்கள், அதன் படி ஆட்டை அறுத்து அகீகா கொடுப்பதே நபி வழியாகும். மாட்டையோ, ஒட்டகத்தையோ, கோழியையோ, அல்லது வேறு எந்த பிராணியையும் அகீகா கொடுப்பது நபியவர்கள் காட்டித் தந்த வழிமுறை இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இன்னும் சிலர் இரண்டு, மூன்று பிள்ளைகளுக்காக ஒன்றாக சேர்த்து மாட்டை கொடுக்கலாம் என்று கூறி அப்படி செய்கிறார்கள் இதுவும் நபிவழியில் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
தலை முடி இறக்குதல்:
குழந்தை பிறந்து ஏழாம் நாளில் அக் குழந்தையின் தலை முடியை மழிக்க வேண்டும். அதே நேரம் அந்த முடியை நிறுத்து அந்த முடியின் எடைக்கு சரிக்கு சரி தங்கமோ, வெள்ளியோ, கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸ் பலகீpனமானது என்பதை ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
அந்த ஹதீஸை கவனியுங்கள், " அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்பேரர்) ஹஸனுக்காக ஒரு ஆட்டை அறுத்து அகீகா கொடுத்தார்கள். மேலும் (தமபுதல்வி) பாதிமா (ரலி) அவர்களிடம் குழந்தையின் தலை முடியை மழித்து அந்த தலை முடியின் எடையளவுக்;கு வெள்ளியை தர்மம் செய் என்று கூறினார்கள். (திர்மிதி 1439) இந்த ஹதீஸில் அறிவிப்பாளராக வரக் கூடிய அபூ ஜஃபர் முஹம்மது பின் அலி பின் அல்ஹூஸைன் என்பவர் இடம் பெறுகிறார் இவர் அலி (ரலி) அவர்களை சந்திக்கவில்லை, என்பதை உறுதிப் படுத்தி, அந்த ஹதீஸ் முன்கத்திஉ ஏற்றுக் கொள்ளப் பட முடியாது என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் உறுதிப் படுத்தியுள்ளனர்.
எனவே மழிக்கப் பட்ட தலை முடிக்காக தங்கமோ, வெள்ளியோ,கொடுக்க அவசியம் கிடையாது என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
குழந்தை காதில் பாங்கும், இகாமத்தும்:
குழந்தை பிறந்த உடன், அதன் காதில் முதல் சப்தமாக பாங்கு கேட்க வேண்டும் என்ற அடிப்படையில் குழந்தையின் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும், சொல்லப் படுகிறது. இது சம்பந்தமான ஹதீஸை முதலில் அவதானிப்போம்.
"பாதிமா (ரலி) அவர்கள் ஹஸன் பின் அலி (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் குழந்தையின் காதில் பாங்கு சொல்வதை நான் பார்த்தேன். ( திர்மிதி 1436)
இந்த ஹதீஸ் பலகீனமான ஹதீஸாகும்; என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் கூறகிறார்கள். இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் உபைதில்லாஹ் என்பவர் பலகீpனமானவர், எனறுற இவரை இமாம் புகாரி அவர்கள் உள்ளிட்டோர் நிராகரிகின்றனர்.
எனவே குழந்தை பிறந்த உடன் வலது காதில் பாங்கும், இடது காதில் இகாமத்தும் சொல்வது அவசியம் கிடையாது. என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். அதே நேரம் இதற்கு தப்பான ஒரு விளக்கம் சொல்லப் படுகிறது. அதாவது ஒரு மனிதன் மரணித்தப் பின் அவருக்கு தொழுகை நடாத்தும் போது அத் தொழுகையில் பாங்கும் இகாமத்தும் சொல்வது கிடையாது . அதனால் தான் குழந்தை பிறந்த உடன் பாங்கும், இகாமத்தும் சொல்லப்படுகிறது என்று தனது அறியாமையினால் கூறகிறார்கள். இது பிழையான செய்தியாகும்.பெருநாள் தொழுகைக்கும், மழை வேண்டி தொழுகைக்கும்,சந்திர, சூரிய கிரகண தொழுகைக்கும் பாங்கும் இகாமத்தும் கிடையாது? அப்படியானால் இவைகளுக்கு என்ன பதில் சொல்வது? நல்லது தானே என்று கூறி மார்கத்தில் இல்லாத ஒன்றை நாம் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் காட்டித் தராத எந் அமலையும் அல்லாஹ் ஏற்றக் கொள்ள மாட்டான். அது மட்டும் அல்ல நபியவர்கள் காட்டித் தராத செயலை அமலாக செய்தால் மறுமையில் தண்டனை கிடைக்கும் என்பதை குர்ஆனும், ஹதீஸூம் எச்சரித்துக் கொண்டிருக்கின்றன்,
குழந்தையும் நாற்பதும்:
குழந்தைக்கு பெயர் சூட்டுவதற்காக சிலர் நாற்பதாம் நாளை தெரிவு செய்து ஒரு மௌலவியை அழைத்து பாதிஹா ஓதி பிராத்தனை செய்து பெயர் சூட்டும் விழா நடக்கிறது.
குழந்தை பிறந்து ஏழாம் நாளில் குழந்தைக்கு செய்ய வேண்டிய சகல விடயங்களையும் செய்து விட வேண்டும் என்று நபியவர்கள் தெளிவாக கூறியிருக்க, அதற்கு மாற்றமாக இப்படி ஒரு நாற்பதை ஏற்ப்படுத்துகிறார்கள் என்றால் அந்த நாற்பதுடைய உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும்.
குழந்தைக்கும் நாற்பதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, மாறாக தாயுக்கும் நாற்பதுக்கும் சம்பந்தம் இருக்கிறது. குழந்தை பிறந்ததிலிருந்து தொடராக உதிரப் போக்கு இருக்கும் அவரவர் உடலமைப்பை பொருத்து உதிரப் போக்கு நிற்கும் நாள் வித்தியாசப்படும். கூடியது நாற்பது நாளை தீர்மானித்துள்ளார்கள். யார், யாருக்கு எத்தனையாவது நாளில் உதிரப்போக்கு நிற்கிறதோ அன்றிலிருந்து குளித்த விட்டு சகல வணக்கங்களிலும் ஈடுபடலாம்.
இந்த நாற்பதைப் பொருத்த வரை என் மனைவி சுதத்மாகி விட்டாள், எல்லாரும் வாங்க சாப்பிட என்றால் என்னடா? சுத்தமானதிற்கு ஒரு சாப்பாடா? என்று முகம் சுளிப்பார்கள் என்பதற்காக தான், இந்த மௌலவிமார்கள் தந்திரமாக இப்படி ஒரு நாளை ஏற்பாடு செய்துள்ளார்கள். எதுக்கு பாதிஹா ஓத வேண்டும், எதற்கு பாதிஹா ஓதக்கூடாது என்ற அறிவுக்கூட இல்லாமல் இந்த மௌலவி மார்களே இந்த சபையில் கலந்து சாப்பிட்டு விட்டு வருகிறார்கள் என்றால்? மார்க்கம் தெரியாத பொது மக்களின் நிலை எவ்வாறு இருக்கும்.?
நாற்பது நாளாக குழந்தையை பெயர் சொல்லி கூப்பிட்டு விட்டு, நாற்பது அன்று பெயர் வைக்கிறார்களாம்.? குழந்தை பிறந்த உடன் குழந்தைக்கு முதல், முதலாக பாங்கு சப்தம் தான் கேட்க வேண்டும் என்று சொல்கிறார்கள் ஆனால் நாற்பது அன்று குழந்தை காதில் மௌலவி பாங்கு சொல்கிறார்.? மார்க்கத்தில் இல்லாதவற்றை செய்து மறுமையில் நஸ்டவாளியாக ஆகிவிடாதீர்கள்.
எனவே மேற்சொல்லப்பட்ட சகல விடயங்களையும் சரியாக விளங்கி நடைமுறைப் படுத்துவதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 23 பிப்ரவரி, 2017

வலீமாவும் (விருந்து) சில சட்டங்களும்

முஜாஹித் இப்னு ரஸீன் அழைப்பாளர், ராக்கா இஸ்லாமிய கலாச்சார நிலையம் (ராக்கா- சவூதி அரேபியா)
வலீமா என்றால் என்ன?
வலீமா என்றால் விருந்து என்பது பொருள். வலீமதுல் உர்ஸ் என்றால் திருமண விருந்து என்று பொருள். திருமண விருந்தை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். எனவே திரமணத்திற்கென விருந்தளிப்பது வரவேற்கத்தக்கதாகும்.

யார் விருந்தளிக்க வேண்டும்?
பெண்ணிற்குரிய உணவு ஆடை செலவு போன்றவை கணவனது கடமை என்பதால் இதற்கு பொறுப்பானவர் ஆண் தரப்பாரே. நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர் அப்துர்ரஹ்மான் (ரழி) அவர்களிடம் 'ஒர் ஆட்டைக்கொண்டேனும் வலீமாக்கொடுங்கள்' (புகாரி 1943) என்று கூறியுள்ளார்கள்.

கணவனுக்கு பகரமாக பெண் வீட்டார் விருந்தளிக்கலாமா?
கணவனுக்கு பகரமாக யாரும் விருந்தளிக்கலாம் அதற்கு எவ்விதத் தடையும் மார்க்கத்தில் இல்லை
عَنْ سَهْلٍ، قَالَ لَمَّا عَرَّسَ أَبُو أُسَيْدٍ السَّاعِدِيُّ دَعَا النَّبِيَّ صلى الله عليه وسلم وَأَصْحَابَهُ، فَمَا صَنَعَ لَهُمْ طَعَامًا وَلاَ قَرَّبَهُ إِلَيْهِمْ إِلاَّ امْرَأَتُهُ أُمُّ أُسَيْدٍ، بَلَّتْ تَمَرَاتٍ فِي تَوْرٍ مِنْ حِجَارَةٍ مِنَ اللَّيْلِ، فَلَمَّا فَرَغَ النَّبِيُّ صلى الله عليه وسلم مِنَ الطَّعَامِ أَمَاثَتْهُ لَهُ فَسَقَتْهُ، تُتْحِفُهُ بِذَلِكَ
صحيح البخاري5182
ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்-ஸாஇதீ (ரழி) கூறினார், அபூ உசைத் அஸ்-ஸாஇதீ (ரழி) (தம்) மணவிருந்தின்போது நபி(ஸல்) அவர்களையும் நபித்தோழர்களையும் அழைத்தார்கள். இவர்களுக்காக உணவு படைத்ததும் பரிமாறியதும் அபூ உசைத்(ரலி) அவர்களின் துணைவியார் உம்மு உசைத் (ரழி) அவர்களே. உம்மு உசைத் (ரலி) (முந்தைய நாள்) இரவிலேயே கல் பாத்திரம் ஒன்றில் பேரீச்சங்கனிகள் சிலவற்றை ஊறப்போட்டு வைத்திருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சாப்பிட்டு முடிந்தவுடன் அவர்களுக்காக உம்மு உசைத் (ரழி) அந்தப் பேரீச்சங்கனிகளை(த் தம் கரத்தால்) பிழிந்து அன்பளிப்பாக வழங்கினார்கள்
கணவன் ஒரு விருந்தும் பெண் வீட்டார் ஒரு விருந்தும் கொடுக்கலாமா?
நபித்தோழர்கள் வாழ்வில் இவ்வாறு எந்த நிகழ்வும் இல்லாதால் இதனை நாம் தவிர்க்க வேண்டும். வீண் விரயாமாக்கப்படும் இப்பணத்தை எழை எளியவர்களுக்கு உணவழித்து அல்லாஹ்-வின் கூலியை எதிர்பர்ப்பது இதை விடச்சிறந்நது.
கணவன் வீட்டிற்க்கு மனைவியை அழைத்துச் செல்வது தான் இஸ்லாமியத் திருமணமா?
இது இஸ்லாமியத் திருமணம் பற்றிய அறிவில்லாதவர்களின் கண்டுபிடிப்பு. அல்-குர்ஆனிலோ ஸுன்னாவிலோ இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாது. இதற்கு மாற்றமாக நபியவர்களுக்கும் ஸைனப் (ரழி) அவர்களுக்கும் திருமணம் நடந்தபோது நபியவர்களே ஸைனப் (ரழி) வீட்டிற்குச் சென்றுள்ளார்கள் (முஸ்லிம் 1425)
இது விருந்து யார் வீட்டில் வைப்பது என்பதைப்பற்றிய விளக்கமே தவிர சீதன வீடு பற்றியதல்ல. சீதன வீடு ஒரு பகற்கொள்ளை என்பதில் எந்த ஐயமும் இல்லை
திருமண விருந்து எப்போது கொடுக்கப்படவேண்டும்?
கணவன், மனைவி உறவிற்குப் பிறகுதான் வலீமா என ஸுன்னாவில் எந்த நிபந்தனையும் கிடையாது. திருமண உடன்படிக்கை நடந்தது முதல் திருமண விருந்தளிக்கலாம்.
திருமண உடன்படிக்கையின் போது பயான் செய்வது நபிவழியா?
எந்த ஒரு நல்ல காரியமாயினும் (خطبة الحاجة) குத்பதுல் ஹாஜா-வைக் கொண்டு ஆரம்பிப்பதே நபி வழி. ஆகையால் இதை கொண்டு العقد – – அக்-தை நடத்துவதே சிறந்ததாகும். ஆனால் அதன் பின்னால் உரை நிகழ்த்துவது நபி வழியல்ல. நபியவர்கள் நடத்தி வைத்த எந்தத் திருமணத்திலும் எந்த உரையும் நிகழ்த்தியதில்லை.
العقد – – அக்தை பள்ளியில் நடத்துவது சிறந்ததா?
العقد அக்-தை விரும்பிய இடத்தில் நடத்தலாம். பள்ளியில் தான் நடத்த வேண்டும் என்பதாக வரும் திர்மிதீ (1088) ஹதீஸ் பலஹீனமானதாகும்.
திருமணம் முடிந்த பிறகு தம்பதியர்களுக்காக எவ்வாறு பிரார்த்திக்க வேண்டும்?
1. بارك الله لك وبارك عليك وجمع بينكما في الخير) أبوداود 1819)
2.
بارك الله لك) البخاري 4758)
3.
بارك الله فيكم وبارك عليكم) النسائي 3318)


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

மருத்துவக் குணங்கள் நிறைந்த சுரைக்காய்

வெள்ளை நிறப் பூக்களையும், பெரிய குடுவை போன்ற காயையும் கொண்டிருக்கும் சுரைக்காயை பல இடங்களில் வீடுகளின் கூரைமேல் படர விட்டிருப்பார்கள். இந்தியச் சமையலில் பொதுவாக இடம் பெறும் சுரைக்காயின் தாயகம், ஆப்பிரிக்கா என்று கூறப்படுகிறது. ஆதிமனிதன் பயிர் செய்த காய்கறிகளுள் இதுவும் ஒன்று. இது இப்போது எல்லா நாடுகளிலும் பயிர் செய்யப்படுகிறது.
சுரைக்காயில் ஓர் இனம் பாட்டில் வடிவில் இருப்பதால்தான் இதை ஆங்கிலத்தில் பாட்டில்கார்டு (Bottle Gourd) என்று வழங்குகின்றனர். (சுரைக்காயின் தாவர விஞ்ஞானப் பெயர், லாஜனேரியா வல்காரிஸ் என்பதாகும்). முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். சுரைக்காயின் இலை, கொடி, காய், விதை அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
செயல்திறன்மிக்க வேதிப்பொருட்கள்
சுரைக்காயில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ்,இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்றவை சிறிதளவு உள்ளன. மேலும் இதில் 96.1% ஈரப்பதமும், 0.2% புரதமும், 0.1% கொழுப்பும், 0.5% தாது உப்புகளும், 0.6% நார்ச் சத்தும், 2.5% கார்போஹைடிரேடும் காணப்படுகின்றன.
உடல்சூடு தணியும்
இந்தியா, இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளில் உடல் சூடு இயல்பாகவே அதிகமாகக் காணப்படும். இதனால்தான் நம் முன்னோர்கள் உடல் சூட்டைத் தணிக்க சுரைக்காயை உணவில் அதிகம் சேர்த்து வந்துள்ளனர். சுரைக்காயை ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்து வந்தால் உடல் சூடு குறையும், வெப்ப நோய்கள் தாக்காமல் காக்கும். உடல் சூட்டைத் தணித்து உடலுக்குக் குளிர்ச்சியையும், மினுமினுப்பையும் கொடுக்கும் காய் சுரைக்காயை கோடைக் காலத்தில் அதிகமாக சாப்பிட்டால் பிரச்சினையை எளிதில் சமாளிக்கலாம்.
உடலுக்கு புத்துணர்ச்சி
சமைத்த சுரைக்காய் சிறுநீரை நன்கு பிரிக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி தந்து உடல் உறுதியைப் புதுப்பிக்க இக்காய் பயன்படுகிறது. சில சமயங்களில் சிறுநீர் வெளியேறாமல் மீண்டும் இரத்தத்தால் உறிஞ்சப்பட்டு உடலுக்கு பலவகையான இன்னல்களை ஏற்படுத்தும். இந்த நிலையைப் போக்கி சிறுநீர் நன்கு வெளியேற சுரைக்காய் உதவுகிறது. எனவே, சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் பழுத்த சுரைக்காயை ரசமாக்கி, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை இரசத்தையும் சேர்த்து அருந்தினால், படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.
நாவறட்சி நீங்கும்
சுரைக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது தாகத்தை கட்டுப்படுத்தும். கொழுப்புச்சத்துள்ள உணவு வகைகளையும் வறுத்த உணவு வகைகளையும் சாப்பிட்டவர்களுக்கு அதிகமாய் தண்ணீர்த் தாகம் எடுக்கும். வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கும் இதே போன்று பிரச்சினை உண்டு. இவர்கள் அனைவருக்கும் ஏற்படும் நாக்கு வறட்சியை சுரைக்காய் நீக்கிவிடுகிறது.
கோடை காலத்திலும், நாக்கு வறட்சி ஏற்படும் போதும் பச்சையான சுரைக்காய் ரசம் சாப்பிட விரும்பினால் ஒரு கப் ரசத்தில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு அருந்தினால் அதிகத்தாகம் தடுக்கப்படும். உப்பு போடாமல் இந்த ரசத்தை அருந்தக்கூடாது.
பித்தத்தைக் குறைக்க
உணவு மாறுபாட்டாலும், மன அழுத்தத்தாலும் உடலினை இயக்குகின்ற வாத, பித்த, கபத்தில் பித்தத்தின் நிலை அதிகரிக்கும்போது உடல் பலவீனமடைந்து பல நோய்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இந்த பித்தத்தைக் குறைக்க சுரைக்காய் சிறந்தது. சுரைக்காயை மதிய உணவுடன் சேர்த்து அருந்தி வந்தால் பித்தம் சமநிலைப்படும்.
சுரைக்காய் நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுத்து உடலை வலுப்படுத்தும். இது இரத்தத்தைச் சுத்தப்படுத்தி பெண்களுக்கு உண்டாகும் சோகையைப் போக்கும். குடல் புண்ணை ஆற்றும். மூலநோய் உள்ளவர்களுக்கு சுரைக்காய் சிறந்த மருந்து. மலச்சிக்கலைப் போக்கும்
கண்நோய்கள் நீங்கும்
ஒரு துண்டு சுரைக்காய், விதை நீக்கிய ஒரு நெல்லிக்காய் இவற்றை நீர்விட்டு அரைத்து சாறு பிழிந்து வாரம் இருமுறை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் கட்டுப்படும். சுரைக்காயின் சதையை சிதைத்து உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் உடல் எரிச்சல் குறையும். சுரைக்காயைச் சுட்டு சாம்பலாக்கி தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் கண்நோய் நீங்கும்.
சுரையின் இலைகளை நீரிலிட்டு ஊறவைத்து அந்த நீரைப் பருகி வந்தால் வீக்கம், பெருவயிறு, நீர்க்கட்டு நீங்கும். காமாலை நோய்க்கும் கொடுக்கலாம்.
தூக்கம் வரவழைக்கும்
தூக்கமில்லாமல் அவதிப்படுகிறவர்கள் நல்லெண்ணெயுடன் சுரைக்காய்ச் சாற்றையும் சேர்த்து இரவில் படுக்கப் போகும் போது தலைமுடிகளில் அதை விட்டு மசாஜ் செய்வது போல் தலையைப் பிடித்துவிட வேண்டும். முடிக்கற்றைகள், தலைப்பகுதி முதலியவற்றில் சேரும் இந்த எண்ணெய் உடனே தூக்கத்தை வரவழைத்துவிடும். சுரைக்காயின் இலைகளைச் சமைத்து உண்டாலும் தூக்கமின்மை நீங்கும்.
யார் சாப்பிடக்கூடாது
சுரைக்காய் எவரும் பச்சையாக உண்ணக்கூடாது. ஏனெனில் வயிறும், குடற் பகுதியும் பாதிக்கப்படும். சுரைக்காயை விடச் சுரைப்பிஞ்சும், சுரைக்காய்ப் பழமும் உடலுக்கு நல்லவை. இவை இரண்டையும் நன்கு பயன்படுத்தலாம்.
வாத நோயாளிகள், காய்ச்சலில் உள்ளவர்கள், தொந்தி வயிறு உள்ளவர்கள் (தொந்தியை அதிகப்படுத்தும் காய் இது) பாடகர்கள் முதலானோர் சுரைக்காயைப் பயன்படுத்தக் கூடாது. ஆசையெனில் எப்போதாவது ஒரு முறை சாப்பிடலாம். பெண்கள் மாதவிடாய் நாட்களில் கண்டிப்பாக சுரைக்காயைச் சேர்த்துக் கொள்ளக்கூடாது.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts