லேபிள்கள்

சனி, 17 மார்ச், 2012

ஆஹா 50! வீட்டுக்குறிப்புக்கள் சில



மழை நாளாக இருப்பதால், மிளகாயைக் குறைத்து மிளகை அதிகம் பயன்படுத்தலாம். மழையினால் வரும் வியாதிகளைத் தடுக்க தேவையான எதிர்ப்புச் சக்தி மிளகில் உள்ளது.

* தோசைக்கு மாவு அரைக்கும்போது அதில் இரண்டு உருளைக் கிழங்குகளைத் தோல் நீக்கி சேர்த்தரைக்கவும். மறுநாள் தோசை வார்த்தால், பொன்னிறமாக மிருதுவாக இருக்கும்.

* தரையைத் துடைக்கும்போது வாரத்தில் ஒருநாள், தண்ணீரில் உப்பு போட்டுத் துடைக்கவும். மற்றொரு நாள் மண்ணெண்ணெய் சில துளிகள் சேர்த்துத் துடைத்தால், தரை பளபளவென்று கிருமிகள் இல்லாமல் இருக்கும்.

* குழந்தைகளுக்குப் புதிய ஆடைகள் வாங்கியவுடன், டெட்டால் கலந்த நீரில் அலசிய பிறகே, அணிவிக்க வேண்டும். ரேஷஸ், அரிப்பு போன்ற தொல்லைகள் வர வாய்ப்பிருப்பதால், அதை முன்கூட்டியே தவிர்க்கலாமே!

* முடி கொட்டுகிறதா? வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து நல்லெண்ணெயுடன் காய்ச்சவும். இதைத் தலையில் தேய்த்துக் குளித்து வர செழித்து வளரும்.

* விருந்தின்போது வெற்றிலைப் பாக்குத் தட்டில் இருக்கும் பாக்குப் பொட்டலங்களை, கையால் பிரிக்க முடியாமல் சிலர் திணறுவார்கள். ஒரு சிறிய கத்திரிக்கோலை, அந்தத் தட்டில் வைத்தால் சௌகரியமாக இருக்கும்.

* மூலநோயால் அவதிப்படுகிறீர்களா? துத்தி இலையை அரைத்து, நெல்லிக்காய் அளவு உருட்டி காய்ச்சிய பசும்பாலில் கலந்து குடியுங்கள். நாற்பது நாள் தொடர்ந்து, காலையில் குடித்து வந் தால் மூலநோய் குண மாகும்.

* ஜாதகம், நியூமராலஜி எல்லாம் பார்த்து குழந்தைகளுக்குப் பெயர் வைப்போம். அந்தப் பெயரை சிதைக்காமல் முழுமையாக அழைத்தால் தான், அதற்குரிய பலன் கிடைக்கும்.

* உலர்ந்த பச்சைப் பட்டாணியை பவுடராக்கவும். ஒரு டீஸ்பூன் மாவில் பன்னீர் கலந்து பேஸ்ட் போலச் செய்து முகத்தில் பூசவும். காய்ந்ததும் கழுவ, முகம் பளிச்சிடும்.

* சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி, ஒரு டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெயில் நன்றாக வதக்கி அரை கப் சாதத்தில் பிசைந்து சூட்டோடு சாப் பிடுங்கள். மலச்சிக்கல், மூலம் போன்றவைக் கட்டுப்படும்.

* ஏ.சி.வைத்திருப்பவர்கள் அவ்வப்போது தூசி படிதல், கேஸ் லீக் பிரச்னைகளைக் கவனித்து சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் ஏசி பழுதாவ தோடு விபத்து ஏற்படவும் வாப்புண்டு.

* இரவு படுக்கப் போகும் முன்பு கொட்டைகள் நீக்கிய பேரீச்சம் பழங்களை, பசும்பாலுடன் கலந்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி, குடிக்கவும். நல்ல சக்தி கிடைக்கும். சத்து அதிகமுள்ள பானம் இது.

* ஓமத்தை இலேசாக வறுத்து, அத்துடன் அரைப் பங்கு உப்பும், கால் பங்கு வெல்லமும் சேர்த்து, கொட்டைப் பாக்களவு காலையிலும், மாலையிலும் சாப்பிட்டு வந்தால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

* காலை எழுந்தவுடன் இருக்கும் சுறுசுறுப்பு மதியம் இருக்காது. எனவே, காலை எழுந்தவுடன் கடினமான வேலைகளை முடித்து விட்டால், இலகுவான வேலைகளை மதியத்துக்கு மேல் செயலாம்.

* சுண்டை வற்றல், மணத்தக்காளி வற்றலை வெயிலில் காயவைத்து எடுத்து வையுங்கள். இதில் உள்ள அதிகப்படியான உப்பு, மண் உதிர்ந்துவிடும். எண் ணெயில் வறுக்கும்போது அதிக கசடும் வராது.

* ஃபேக்ஸ் மூலம் டாகுமெண்ட் வந்தால் அதனை உடனே நகல் எடுத்து வைக்க வேண்டும். ஃபேக்ஸ் எழுத்துக்கள் நாளடைவில் மங்கிவிடும்

கருத்துகள் இல்லை:

Hiccups: விக்கல் என்னும் சிக்கலைத் தீர்க்க டிப்ஸ்

Hiccups: விக்கல் வருவதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. பொதுவாக யாராவது உங்களை நினைத்தால் ...

Popular Posts