லேபிள்கள்

திங்கள், 25 ஜூன், 2018

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் வைத்துக் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா!
நம்மிள் பெரும்பாலானோரும் தண்ணீர் குடிக்க பிளாஸ்டிக் பாட்டில்களையே பயன்படுத்திவரும் சூழலில்....செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைத்துக் குடிப்போர்களின் எண்ணிக்கையும் பரவலாக அதிகரித்துக்கொண்டே வருகிறது. பொதுவாக மற்ற பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதே சிறந்தது என பலராலும் சொல்லப்படும் நிலையில், செம்பு பாத்திரங்கள் பயன்படுத்துவதைக் குறித்து விளக்கம் அளிக்கிறார், சித்த மருத்துவர் காசி பிச்சை.

செம்பு தாது, நம் உடலுக்கு ஆரோக்கியத்தைக் கொடுப்பவை. செம்பு பாத்திரம் அல்லது செம்பு ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றிவைப்பதால், செம்பு தாதுவானது தண்ணீரில் மெல்ல மெல்ல கலக்கும். பின்னர் அந்நீரைக் குடிப்பதால் அல்லது சமையல் செய்து சாப்பிடுவதால் உடலுக்கு மிகுந்த ஆற்றல் கிடைக்கும்.


குறிப்பாக இரவே செம்பு பாத்திரத்தில் அல்லது ஃப்ளாஸ்கில் தண்ணீர் ஊற்றி வைத்து, அதனை காலையில் குடிக்கும்போது உடலுக்கு அதிக ஆற்றல், விரைவாக கிடைத்து, அந்த நாளுக்கான தொடக்கமே நல்ல உடல் வலிமையுடன் அமையும்.

'செம்பு பாத்திரத்தை விளக்கி செடிக்கு அடியிலே ஊற்று' என்பது பழமொழி. இதன் பொருள் செம்பு பாத்திரம் கழுவிய நீரை செடிக்கு ஊற்றும்போது, அந்நீரை உறிஞ்சி வளரும் செடியின் வாயிலாக கிடைக்கும் காய்கறிகள் மிகுந்த சத்து நிறைந்தவையாக இருக்கும். அக்காய்கறிகளை நாம் சாப்பிடும்போது, நம் உடலுக்கு மிகுந்த பயன்கிடைக்கும் என்பதுதான் பொருள். செப்பு பாத்திரத்தின் அருமை தெரிந்த நம் முன்னோர்கள் சொல்லிவைத்துச் சென்ற இப்பழமொழி...விஞ்ஞானக் காலத்திலும் நிலைத்து நிற்கும் உண்மை கூற்று.
செம்பு எனப்படும் காப்பர் சத்துதான் இரத்த விருத்திக்கு தேவையான அடிப்படை தாது உப்பு. செம்பு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி வைத்து சில மணிநேரங்கள் கழித்து குடிக்கும்போது, தண்ணீருடன் சேர்த்து செம்பு தாதுவும் நம் உடலுக்குள் சென்று, உடல் உறுப்புகளை சீராக வேலை செய்ய வைக்கிறது. மேலும் செம்பு தாது, நல்ல இரத்த அணுக்களை தொடர்ந்து அதிகமாக உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்பதால், செம்பு கலந்த நீரைக் குடிக்கும்போது இரத்தம் இயல்பாகவே சுத்திகரிக்கப்படும். இதனால் இரத்தப் புற்றுநோய் உள்ளிட்ட இரத்தம் சார்ந்த உடல்நலப் பிரச்னைகளின் வரவும் தடைபடும்.

செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் இரத்தசோகை பிரச்னையின் வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல் ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.

நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும், உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும். குறிப்பாக முந்தையக் காலங்களில் பெண்களை திருமணம் செய்து அனுப்பும்போது, செம்பு பாத்திரங்களை சீராக கொடுத்து அனுப்புவார்கள். புதுமணத்தம்பதிகள் செம்பு பாத்திரத்தைப் பயன்படுத்தி விரைவில் குழந்தைப் பேறு, நோய் நொடியில்லா நீடித்த ஆயுள் பெற வேண்டும் என்பதற்காகத்தான்.

நீரைக் குடிக்கும் முறை:
குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி, புதினா, ரோஜா இதழ் போன்ற மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு:
முந்தைய காலங்களில் செம்பு கெண்டியில்தான் குழந்தைகளுக்கு தண்ணீர் கொடுப்பார்கள். அதனால் அந்நீரைக் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள். காலப்போக்கில் அப்பழக்கம் மறைந்துபோய்விட்டதால், இன்றைய இளம் குழந்தைகளும் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை அதிக அளவில் சந்திக்க நேரிடுகிறது. எனவே செம்புப் பாத்திரங்களில் நிரப்பிய நீரை, குழந்தைகளுக்கு பருகக் கொடுப்பதால் குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

செம்பு பாத்திரத்தை சுத்தம் செய்வது எப்படி?
செம்பு பாத்திரத்தை, பாத்திரம் துலக்கும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யக்கூடாது. வெறும் அடுப்புச் சாம்பல் மற்றும் புளியைக் கொண்டு, தினமும் அல்லது ஒருநாள் விட்டு ஒருநாளைக்கு ஒருமுறை சுத்தம் செய்வதே சிறந்தது. சாம்பல் கிடைக்காதவர்கள், புளியை மட்டுமே பயன்படுத்தலாம். புளியில் இருக்கும் அமிலத்தன்மை, செம்பு தாதுவுடன் வினைபுரிந்து பளபளப்பைக் கொடுக்கும். பாத்திரத்தைக் கழுவியப் பின்னர், ஒன்றிரண்டு முறை நல்ல தண்ணீரைக் கொண்டு அலசி ஊற்றியப் பின்னர், குடிதண்ணீரை ஊற்றி வைத்து குடிக்கப் பயன்படுத்தலாம்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

சனி, 23 ஜூன், 2018

முஸல்லாவும், மவ்லவிமார்களும்

முஸல்லாவும், மவ்லவிமார்களும்

ஒவ்வொரு பெருநாள் தொழுகைகளின் போதும் மவ்லவிமார்களுக்கு மத்தியிலு்ம். பொதுமக்களுக்கு மத்தியிலும் திடலில் தொழக் கூடிய விசயத்தில் பிரச்சனைகள் வருவது சகஜமாகி விட்டது.
குர்ஆன், மற்றும் சுன்னா அடிப்படைகளில் உள்ளவர்கள் இந்த இரண்டு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும். நபியவர்கள் திடலில் தான் தொழுதுள்ளார்கள். ஆண்களையும், பெண்களையும், மாதவிடாய் பெண்களையும் திடலிற்கு தான் போக சொன்னார்கள். தொழும் போது மட்டும் மாதவிடாய் பெண்கள் ஒதுங்கி இருந்து கொள்வார்கள் என்று ஹதீஸ்களை ஆதாரம் காட்டி பேசும் போது, நபியவர்கள் இ்ப்படி திடலுக்கு போனது கிடையாது பெருநாள் தொழுகையை பள்ளியில் தான் தொழ வேண்டும். பள்ளி இடம் போதாவிட்டால் தான் மைதானத்திற்கு போக வேண்டும். என்று ஒரு சாராரும்,


நபியவர்கள் பெருநாள் தொழுகை தொழுதது திடலில் கிடையாது, முஸல்லாவில் தான், முஸல்லாஹ் என்றால் மதீனா பள்ளியோடு உள்ள பெருநாள் தொழுகைக்கு என்று ஒதுக்கப்பட்ட தனியான இடம் என்று கூறி நாம் பள்ளியில் தான் பெருநாள் தொழுகை தொழ வெண்டும் என்று வாதப்பிரதி வாதங்கள் போய் கொண்டிருப்பதை நாம் காணலாம்.
இன்னும் சிலர்கள் ஹனபி மத்ஹபினர் தான் இந்த தொழுகைகளை திடலில் தொழ வேண்டும். ஷாபி மத்ஹபினர் பள்ளியில் தான் தொழ வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
பொதுவாக இந்த பெருநாள் தொழுகைகளை நபியவர்கள் முஸல்லாவில் தான் தொழுதார்கள் என்பதை எந்த கருத்து முரண்பாடும் இல்லாமல் அனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் முஸல்லா என்பது நீங்கள் சொல்லும் திடல் கிடையாது என்று மறுத்து பள்ளியிலேயே இந்த தொழுகையை தொழக் கூடிய நிலையை காணலாம்.
அதிகமான மவ்லவிமார்களுக்கு இந்த முஸல்லாவிற்கு சரியான பொருள் தெரியாததினால் தான் இப்படியான குழப்பங்கள்.?
முஸல்லா என்பது தொழும் இடத்திற்கு சொல்லப்படும். நபியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பல அருட்கொடைகளில் ஒன்று தான் இந்த பூமியில் சுத்தமான எந்த இடத்திலும் தொழுது கொள்ள முடியும்.
தொழுகை நேரம் வந்தவுடன் பக்கத்தில் பள்ளி இல்லாவிட்டால் உடனே அந்த இடத்தில் தொழுது கொள்ள வேண்டும். அப்படி தொழும் இடத்திற்கு முஸல்லா என்று சொல்லப்படும்.
உதாரணத்திற்கு ஒருவர் பாலைவனத்தில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறார் இப்போது தொழுகை நேரம் வந்து விட்டது உடனே தன் வாகனத்திலிருந்து இறங்கி சுத்தமான அந்த இடத்தில் தொழுது கொள்ள வேண்டும். அந்த இடத்தில் தொழும் வரை அந்த இடத்திற்கு முஸல்லா (தொழும் இடம்) என்று சொல்லப்படும்.
பாலைவனத்திற்கு ஸஹாரா என்று தான் சொல்லப்படும். இந்த ஸஹராவிற்குள் பயணம் செய்யும் போது, தொழுதால் அந்த இடத்திற்கு மட்டும் குறிப்பிட்ட நேரம் வரை முஸல்லா என்று அழைக்கப்படும். இங்கு ஸஹாராவிற்குள் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது
அல்லது விளையாட்டு திடலிற்கு மல்கப் என்று சொல்லப்படும். ஒருவர் தொழுகை நேரம் வந்த உடன் அந்த விளையாட்டு திடலில் சுத்தமான பகுதியில் தொழுகிறார் என்றால் அது விளையாட்டு திடலாக இருந்தாலும் தொழும் நேரம் வரை அந்த இடத்திற்கு மட்டும் முஸல்லா என்று சொல்லப்படும்.
எனவே இங்கு விளையாட்டு திடலுக்குள் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது்
ஒருவர் தன் வீட்டிலோ, தான் பணிபுரியும் இடத்திலோ தொழுகையை தொழுகிறார் என்றால் தொழுது முடிக்கும் வரை அந்த இடத்திற்கு முஸல்லா (தொழும் இடம்) என்ற சொல்லப்படும்.
எனவே இங்கு வீட்டில் அல்ல்து தான் பணிபுரியும் இடத்தில் முஸல்லா (தொழும் இடம்) வருகிறது்
அதே போல நாம் தொழுவதற்காக கட்டப்பட்ட இடத்தை மஸ்ஜித் என்று கூறுவோம். அந்த மஸ்ஜிதுக்குள் எந்த இடத்தில் தொழுகிறோமோ அந்த இடத்திற்கு முஸல்லா என்று சொல்லப்படும்.
உதாரணத்திற்கு பின் வரும் ஹதீஸை கவனியுங்கள்.
"சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆம்; அதிகமாகவே (அமர்ந்திருக்கிறேன்). அவர்கள் சுப்ஹுத் தொழுகையை முடித்தபின் சூரியன் உதயமாவதற்குமுன் தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். சூரியன் உதயமான பின்பே (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலத்தில் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிச் சிரித்துக்கொண்டிருப்பார்கள். (அதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக்கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள். (முஸ்லிம் 4641)

இந்த ஹதீஸில் "தாம் தொழுத இடத்திலிருந்து எழுந்திருக்கமாட்டார்கள். என்பதற்கு அரபு வாசகம் முஸல்லாஹூ் " இடம் பெற்றுள்ளது. நபியவர்கள் பள்ளியில் சுபுஹை தொழுவித்து விட்டு சூரியன் உதயமாகும் வரை தான் தொழுத இடத்திலே இருப்பார்கள். இங்கு மஸ்ஜிதுக்குள் முஸல்லா (தொழும் இடம்) வந்துள்ளது.
எனவே தொழும் இடத்திற்கு தான் முஸல்லா என்று சொல்லப்படும் என்பதை நீங்கள் தெளிவாக புரிந்தீருப்பீர்கள்.
முஸல்லா என்பது தனியான ஓர் இடத்திற்கு மட்டும் சொல்வது கிடையாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
மழை வேண்டி தொழுகையும் முஸல்லாவும்
வறட்சியான காலத்தில் மழை வேண்டி தொழுகையை எப்படி தொழ வேண்டும் என்பதை நபி (ஸல்) அவர்கள் நமக்கு தொழுது வழிகாட்டியுள்ளார்கள்.

மழை வேண்டி தொழுகையும் முஸல்லாவில் தான் தொழ வேண்டும், என்பதை ஹதீஸ்களில் காணலாம். இந்த ஹதீஸின் படி பரம்பரை, பரம்பரையாக வறட்சியான காலங்களில் சகல ஜமாத் மவ்லவிமார்களும் பொது மைதானங்களுக்கு மக்களை அழைத்துச் சென்று மழை வேண்டி தொழுகையை தொழுவித்து வருகிறார்கள்.
அதற்கு எந்த மாற்று கருத்தும் கொடுப்பது கிடையாது. பள்ளியில் இடம் போதாவிட்டால் தான் மைதானத்தில் மழை வேண்டி தொழ வேண்டும் என்றும் சொல்வது கிடையாது.?
ஆனால் பெருநாள் தொழுகைக்கு மட்டும் முஸல்லாவிற்கு ஒரு விளக்கம். பள்ளி இடம் போதாவிட்டால் தான் திடலுக்கு செல்ல வேண்டும் என்கிறார்கள் என்றால் இந்த மவ்லவிமார்கள் ஹதீஸை புரிந்து கொள்ளும் விதத்தை பார்த்தீர்களா?
பெருநாள் தொழுகை சம்பந்தப்பட்ட ஹதீஸை ஏற்றுக் கொண்டிருக்கும் இப்படியான மவ்லவிமார்கள் பள்ளியிலும் கூட நபியவர்கள் காட்டி தந்த அடிப்படையில் தொழுவது கிடையாது. பெண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம்? ஆண்களுக்கு தொழுவிக்க ஒரு நேரம்? அதிலும் ஆண்களுக்கு ஒரே மௌலவி பல தடவைகள் தொழுவிக்கும் அவல நிலை?
நபியவர்கள் இந்த பெருநாள் தொழுகையை ஆண்களுக்கும், பெண்களுக்கும் ஒரே நேரத்தில் தான் தொழுவித்துள்ளார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்டே நபிவழிக்கு இவர்கள் மாறு செய்கிறார்கள் என்றால் சற்று நிதானமாக சிந்தித்து பாருங்கள்.? இந்த மவ்லவிமார்கள் அல்லாஹ்விற்காக அமல்களை செய்கிறார்களா? அல்லது மக்களுக்காக செய்கிறார்களா?
எனவே பொதுமக்களே ! நீங்கள் நிதானமாக சிந்தியுங்கள், சரியான மார்க்கத்தை தேடுங்கள், அதை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த முயற்சி செய்யுங்கள்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வியாழன், 21 ஜூன், 2018

நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!

நம்மை நாமாக இருக்க விடாதவர்கள்!
நம்மை, நாமாக இருக்க விட மாட்டேன் என்கின்றனர் சிலர்.

நமக்கென்று, சில இயல்பான சுபாவங்கள் இருக்கின்றன. இவற்றை, நாம் சிலருக்காக மட்டும் ஏனோ முற்றிலும் எதிர்மறையாகவோ, சாதகமாகவோ மாற்றிக் கொள்கிறோம்; இது அவசியமில்லை.
ஏனெனில், நாம், நாமாக இருக்க வேண்டும்; இப்படி சிலர் விஷயத்தில், நாம், நாமாக இல்லாவிட்டால், அவர்களிடத்தில் நாம் தோல்வி அடைந்து விட்டோம் அல்லது அவர்களிடம் சரணடைந்து விட்டோம் என்றே பொருள்.
இதற்கு பின்னணி காரணம் என்ன வேண்டுமானாலும் இருக்கலாம்; ஆனால், அது நியாயமாகி விட முடியாது.



ஒவ்வொருவரையும், அவர்களை பற்றிய மதிப்பீடுகள், குணங்கள், தன்மைகளின் அடிப்படையில் நடத்துவது தவறாகாது. இதையும், நம் சுபாவத்தை மாற்றிக் கொள்வதையும் போட்டு, குழப்பிக் கொள்ள வேண்டாம்.
அளவு கடந்து நேசிக்கும் ஒருவரிடம், நாம் எல்லை மீறி சலுகை காட்டுகிறோம். இங்கே, நம் நேர்மை கெட்டுப் போகிறது; சார்பு மனிதர்களாகி போகிறோம். இதன் மூலம், நம் பலவீனங்கள், வெட்ட வெளிச்சமாகின்றன.
நாமாக ஒருவர் மீது ஏற்படுத்தி கொள்ளும் வெறுப்பு, மித மிஞ்சிய அன்பு, நம்மை நடுநிலை மீறி நடக்கச் செய்கிறது; இதுவும், மிக ஆபத்தானது.
இயல்பாக இருந்து விட்டு போகும் போது, நமக்கு பாதிப்பு என்று ஏதும் பெரிதாக வந்து விடுவதில்லை.

ஆங்கிலத்தில், 'புட் அப்' செய்வது என்று, ஒரு சொல்லாட்சி உண்டு. தமிழில், இதை, தன்னை பற்றி, பிறர், உயர்வாக எண்ண வேண்டும் என்பதற்காக, தேவையற்ற முறையில், நாடகமாடுவது என்று சொல்லலாம்.
வாடகை வீட்டை, சொந்த வீடாக காட்டிக் கொள்வது; சொற்ப சம்பளத்தை, பெருஞ் சம்பளமாக கூறுவது; சில ஆயிரங்களுக்கு கிடைக்கும் போலி ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை, அசல் என்பது; பங்களாவில், எடுபிடி வேலை பார்த்துக்கொண்டு, 'சாருக்கு நான் தான் எல்லாம்...' என்று புளுகுவது போன்றவற்றை மேற்கூறிய ரகத்தில் தாராளமாக சேர்க்கலாம்.
இந்த நடிப்பும், அரிதார பூச்சும், வெகு நாட்கள் நிலைக்காது. உள்ளதை உள்ளபடி சொல்லி விடலாம்; நற்பெயராவது மிஞ்சும்.

ஊர், உலகத்தை அசத்த வேண்டும்; வியக்க வைக்க வேண்டும்; நம்மை எல்லாரும் பாராட்ட வேண்டும்; உயர்வாக எண்ண வேண்டும் என்றெல்லாம், ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், பல எண்ணங்கள், அவ்வப்போது, தோன்றிக் கொண்டே இருக்கும்.
இந்த உணர்விற்கு, உரமிட்டு வளர்த்தால், 'அந்த ஆளா... சரியான ஷோக்கு பேர் வழியாச்சே...' என்கிற பெயர் தான், கடைசியில் மிஞ்சும்.

தேவையற்ற, இந்த செயற்கைத்தனங்கள், ஒரு கட்டத்தை தாண்டும் போது, அது பெருஞ்செலவிலும், மீள முடியாத சிக்கலிலும் கொண்டு போய் மாட்டி விடும்.
பிறர் நம்மை பற்றி உயர்வாகவும், நல்லபடியும் எண்ண வேண்டும் என்கிற எண்ணம் தவறு என்று, ஒருபோதும் சொல்ல மாட்டேன். ஆனால், இந்த மணிமகுடங்களைச் சூடிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியில் போலித்தனங்கள் தேவையில்லை.

நம் பலவீனங்களை, பிறர் அறிய நேரும் போது, அவை தவறு என்று சுட்டிக்காட்டப்படும் போது, 'உண்மை தான் மாற்றிக் கொள்கிறேன்... எல்லாம் வசதிக் குறைவால் தான்... என்ன செய்வது...' என்று ஏற்றுக் கொண்டால், அதுதான் பாராட்டிற்குரியது.

பிறருக்காக, நாம் மாற்றிக் கொள்ளும் பொய் முகங்களும், பூசிக்கொள்ளும் அரிதாரங்களும் அல்ல. இவை, நற்பெயரை ஒருபோதும், ஈட்டித் தராது.
செயற்கை பூச்சுகள் பூச, வெகுநேரம் ஆகும்; ஆனால், களைவதோ ஒரு நொடியில்! இதை உணர்ந்தவர்கள், இத்தவறின் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்!

லேனா தமிழ்வாணன்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

செவ்வாய், 19 ஜூன், 2018

உங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்!

உங்க வைஃபை வேகத்தை அதிகரிக்க குட்டி குட்டி டிப்ஸ்!
வருடத்தில் 350 நாட்கள் பி.எஸ்.என்.எல் பிராடுபேண்டு சொதப்பும்.மற்ற நாட்களில் ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அந்த ஐந்து நச் நாட்கள் வர்தா புயல் சமயத்தில் வந்ததுதான் அதிசயம். மற்ற "ஸ்பீடு" பிராண்ட்பேண்டுகள் இன்னும் 'ஐ எம் பேக்' முழுமையாக சொல்ல முடியாமல் தவிக்கின்றன. எந்த சூழல் என்றாலும் வைஃபை சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசுகளின் எவர்க்ரீன் பிரச்னை. இந்த ட்ரிக்ஸை எல்லாம் ஃபாலோ பண்ணா, உங்க வைஃபை ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும்.



* அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயிலை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனாவிற்கு பின்னால் நிறுத்தி வையுங்கள். சூப்பர் சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் இரண்டு ஆன்டெனாக்களையும் செங்குத்தாக வையுங்கள்.

* ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்டராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இடமாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தாலும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இருந்தால் இன்னும் விசேஷம்.

* ரெளட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கும். பக்கத்து வீட்டு ரெளட்டரிடம் இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.

* சில இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் நீங்கள் உபயோகிக்காத சமயங்களிலும் இணையத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும். அதையெல்லாம் முறையாக மூட வேண்டியது அவசியம். இல்லையேல், கணிசமான பேண்ட்விட்த்தை அவை எடுத்துக்கொண்டு வேகத்தை குறைத்துவிடும்
* அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும் அதிக பயன் தரக்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்னைகள் தன்னாலேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.

* உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டிங்கிற்கு மாற்றுங்கள். காரணம் WEP நெட்வொர்க்கை எளிதாக ஹேக் செய்ய இயலும். யாருக்குத் தெரியும்? பார்க்க பால்வாடி பையன் போல இருக்கும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரரே பெரிய ஹேக்கராக இருக்கலாம்
* இது ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான். அவ்வப்போது உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மாற்றிக்கொண்டே இருங்கள். மொக்கையாக உங்கள் பெயரையே பாஸ்வேர்டாக வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர் பொங்கல் கொண்டாடிவிடுவார்.

* இது எதுவுமே வேலைக்கு ஆகாவிட்டால் பேசாமல் ஒரு ரிப்பீட்டர் வாங்கி மாட்டிவிடுங்கள். ரெளட்டரின் ரேஞ்ச் 150 மீட்டர்கள். ரிப்பீட்டர் அந்த ரேஞ்சை அதிகரித்து சிக்னலை பல மடங்கு பூஸ்ட் செய்யும். நம்பி வாங்குங்க. கொடுத்த காசுக்கு நல்ல எஃபெக்ட் இருக்கும்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

ஞாயிறு, 17 ஜூன், 2018

அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!

அருமையான சமையல் டிப்ஸ்! இதோ உங்களுக்காக!
நான்கு பிரெட் துண்டுகளை நீரில் நனைத்து மாவுடன் சேர்த்துப்பிசைந்தால் மிருதுவான சப்பாத்தி தயார்.
தோசை திருப்பியை தண்ணீரில் நனைத்து பயன்படுத்தினால் கல்லில் தோசை ஒட்டாமல் எளிதாக வரும்.

இஞ்சியை தோல் சீவி, பொடியாக நறுக்கி, வறுத்த மிளகாய் வற்றலுடன் சேர்த்து வதக்கி புளி, உப்பு சேர்த்து அரைப்பதோடு, கொஞ்சம் வெல்லமும் சேர்த்தால் சுவையான இஞ்சித் துவையல் தயார். இது ஜீரணத்துக்கு நல்லது.
பெருங்காயம் போட்டு வைத்திருக்கும் டப்பாவில் பச்சை மிளகாயைப்போட்டு வைத்திருந்தால், பெருங்காயம் காய்ந்து கட்டி பிடிக்காமல் இளகிய பதத்திலேயே இருக்கும்.

மோர்க்குழம்புக்கு கடுகு தாளிக்கும்போது கொஞ்சம் ஓமம் சேர்த்துக்கொண்டால், மணமாக இருப்பதோடு, சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

மாதுளம்பழத்தை வேக வைத்து சாறு எடுத்து தேனுடன் கலந்து உட்கொண்டால், எல்லா வகையான வயிற்றுப்போக்கும் குணமாகிவிடும்.


உருளைக்கிழங்கு, பாதாம் பருப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து கண்களுக்கு கீழே பூசி வந்தால் கருவளையங்கள் காணாமல் போகும்.
தோசைக்கல் பிசுபிசுப்பாக இருந்தால், சூடான தோசைக்கல்லில் சிறிது புளித்த மோரும், உப்பும் தடவித் தேய்த்தால் தோசைக்கல் `பளிச்'சென்று இருக்கும்.

இட்லிக்கு அரிசி ஊறவைக்கும் போது ஒரு பிடி அவல் சேர்த்து அரைத்தால் இட்லி சாஃப்ட்டாக இருக்கும்.
ரவை உப்புமா சிலருக்கு பிடிக்காது. ஆகவே, மீதமான ரவை உப்புமாவுடன் சிறிது அரிசி மாவைக் கலந்து வடை போல தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் உப்புமா நொடியில் காலி.

அடைக்கு அரிசி, பருப்பு அரைப்பதற்குமுன், இரண்டு உருளைக் கிழங்கை வேகவைத்து சேர்த்து அரைத்தால் ருசியாக இருப்பதோடு, மிருதுவாகவும் இருக்கும்.
*பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக பேரிச்சம் பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

*வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் போது வறுத்த நிலக்கடலையை பொடி
செய்து மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் பக்கோடா மொறு மொறுவென்று
ருசியாக இருக்கும்.

*சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

*சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

*தேங்காய்த் துருவல் மீதியானால், அதை லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

*பவுடர் மற்றும் ரசம் பவுடர் எப்போதும் புதியதாக மணம் மாறாமல்
இருக்கவேண்டுமா? சாம்பார் பவுடர் மற்றும் ரசம் பவுடர் பாக்கெட்டுகளை
பிரிஜ்ஜின் பிரீஸரில் வைத்து உபயோகிங்கள். மணம் மாறாமல் இருக்கும்.

*வெங்காய சட்னி கசக்காமல் இருக்க வேண்டுமா? வெங்காயத்தை சிறிது எண்ணெய் விட்டு வதக்கியபின் அரையுங்கள். சட்னி கசக்காமல் ருசிக்கும்.

*கேரட்டின் தலைபகுதியை சிறிது நறுக்கி விட்டு காற்று புகாத பாலிதின்
பைகளில் போட்டுவைங்கள். நீண்ட நாட்களுக்கு கேரட் பசுமையாக உலராமல்
இருக்கும்.

*பச்சை மிளகாயின் காம்பினைக் கிள்ளிவிட்டு காற்று புகாத பாலிதின்
பைகளில் போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு பசுமை மாறாமல் இருக்கும்.

*பசலைக்கீரை மற்றும் பச்சை காய்கறி, கீரைவகைகளைச் சமைக்கும் போது சிறிது
சர்க்கரை சேர்த்து சமையுங்கள். சமைத்த பின்னும் அவற்றின் பச்சை நிறம்
மாறாமல் இருக்கும்.

*மாவு டப்பாக்களில் பிரியாணி இலையை போட்டு வையுங்கள். மாவு ஈரமாகாமலும் கட்டி விழாமலும் இருக்கும்.

*கேக் முட்டை வாடையடிக்கிறதா? கவலையை விடுங்கள். கேக்கிற்கு மாவு
பிசையும் போது ஒரு மேஜைக்கரடி தேன் சேர்த்து பிசைந்து பாருங்கள் கேக்
முட்டை வாடை போயே போச்!

*முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.

*தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால்
குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.

*மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்…… ஊச்……… என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

*வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொரிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.

*வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது.
வேப்பம்பூ கடைகளில் கிடைக்கிறது.

*அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் கலந்து ரொட்டி செய்து
சாப்பிடுவது நல்லது. தாது உப்புக்களும், வைட்டமீன்களும் அருகம்புல்லில்
அதிகம்.

*ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு
பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள்
அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும்.

*கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.
*மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.

*ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட
துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால்
பூசனம் பிடிக்காமல் இருக்கும்.

*உளுந்துவடை செய்யும் போது மாவுடன் வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து
கலந்து வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் மொறு மொறுவென்று ருசியாக
இருக்கும்.

*கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

*ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

*தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

*பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், எலுமிச்சை சாறு ஆகியவை
சேர்த்து, கலந்து அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு காணாமல்
போய்விடும்.

*இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

*தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு
இரண்டையும் ஊற வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி செய்தால் பர்பி
நன்றாக இருப்பதோடு, வில்லை போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.

*பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு பதிலாக ஒரு கப் பாலைச்
சேர்த்து பிசைந்தால் பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் இருக்கும்.

*வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை நறுக்கும் போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க கைகளில் உப்பை தடவிக்கொண்டு நறுக்கவேண்டும்.

*தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் தோசை நன்றாக வருவதோடு மொரு மொருவென இருக்கும்.

*எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத வகைகள் செய்யும் முன் சாதத்தை
ஒரு பெரிய தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் விட்டுக் கிளறி ஆற வைத்து
பின்னர் செய்தால் உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

*உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது அவை வெந்ததும் வெடிக்காமல் இருக்க
சிறிது உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். இதனால் உருளைக்கிழங்கு
வெடிக்காமல் நல்ல பதத்துடன் இருக்கும்.

*தக்காளி குருமா செய்யும் போது சிறிது வெங்காயத்தை பச்சையாக அறைத்து ஊற்றவும், குருமா வாசனையுடன் சுவையாகவும் இருக்கும்.

*துவரம் பருப்புக்கு பதிலாக பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு
கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி செய்தால், பொடி மிகவும்
ருசியாகவும் வாசனையாகவும் இருக்கும்.

*நெய்யை காய்ச்சி இறக்கும் போது 1/2 தேக்கரண்டி வெந்தயத்தை போட்டால்
நல்ல வாசனையுடன் இருக்கும். கீரையின் பச்சை நிறம் மாறாமல்
 இருக்க 1தேக்கரண்டி சர்க்கரையைச் சேர்த்துச் சமைக்க வேண்டும்.

*குழம்பிலோ, ரசத்திலோ உப்பு அதிகமாக இருந்தால் இரண்டு பிடி சோற்றை
உருட்டி அதில் போட்டு விட்டால், அதிக உப்பை அந்த சோற்று உருண்டை உறிஞ்சிக்
கொள்ளும்

*வாழைக்காய் நறுக்கும்போது கையில் ஏற்படும் பிசுக்கு நீங்க சிறிது தயிரால் கையைக் கழுவலாம்.

*காலிபிளவர், கீரை இவற்றை சமைப்பதற்கு முன்பு வெந்நீரில் சிறிது உப்பு
சேர்த்து அதில் சிறிது நேரம் போட்டு வைத்தால் அவற்றில் உள்ள புழு, மண்
அடியில் தங்கிவிடும்.

*குருமா, தேங்காய் சட்னி இவற்றிற்கு அரைக்கும்போது முந்திரி பருப்பு சில சேர்த்து அரைத்தால் சுவையாக இருக்கும்.

*அடைக்கு அரைத்த மாவில் சிறிது மஞ்சள் பொடி சேர்த்து இட்லி தட்டில் ஊற்றி வேகவைத்துச் சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாகும்.

*ஜவ்வரிசியை வறுத்து பொடி செய்து வைத்துக்கொண்டு அடை, வடை, தோசை
செய்யும்போது சிறிது ஜவ்வரிசி மாவு சேர்த்து செய்தால்
மொறுமொறுவென்றிருக்கும்.

*அடை, பக்கோடா செய்யும்போது புதினா இலை சேர்த்து செய்தால் வாசனையாக இருக்கும். உடலுக்கும் நல்லது.

*தக்காளியின் தோல் நீக்க தக்காளியின் மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும்
கத்தியால் சிறிது கீறிவிட்டு 10 நொடிகள் சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல்
சுலபமாகக் கழன்று விடும்.

*சப்பாத்தி மாவுடன் சோயா மாவும் சேர்த்து சப்பாத்தி செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். புரோட்டின் சத்தும் கிடைக்கும்.

*சேமியா பாயசம் செய்யும்போது குழைந்து போய்விட்டால் இரண்டு சொட்டு எலுமிச்சை சாறு அதில் சேர்த்தால் சேமியா தனித்தனியாகிவிடும்.

*குலோப்ஜாமூன் செய்யும்போது உருண்டை கல் போலாகிவிட்டால் ஜீராவுடன் சேர்த்து சிறிது நேரம் அடுப்பில் வைத்துவிட்டால் மென்மையாகிவிடும்.

*கட்லெட் செய்ய 'பிரெட் கிரம்ப்ஸ்' கிடைக்கவில்லையெனில் ரவையை மிக்சியில் அரைத்து பயன்படுத்தலாம்.

*கூடையில் வைத்திருக்கும் உருளைக்கிழங்கு முளை விடாமல் இருக்க, கூடவே, கூடையில் ஒரு ஆப்பிள் பழத்தையும் போட்டு வையுங்கள்

* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து ஊற்றவும். சுவையும் சத்தும் கூடும்.

* வாழைப்பூ அடைக்கு பூவை அப்படியே நறுக்கிப் போடக்கூடாது. வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மாவில் கலந்து அடை செய்யவும். சுவையாக இருக்கும்.

* நுங்கை வாங்கி வந்ததும் சிறிது நேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து தோலை உரித்தால், எளிதாக வரும். ஜில்லென்று இருக்கும்.

* கூட்டு செய்யும்போது, உளுத்டஹ்ம் பருப்பு டஹ்னியா இவைகளை அரைத்து விட நேரம்

* முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி, வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான ' கோஸ் துவையல்' தயார்.

* எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன், நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கவும். பிறகு முழு பழங்களைப் போட்டு மூடி வைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு அடியோடு இருக்காது.

* கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.

* இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும். உளுந்துக்கும் இதற்கும் மணம், சுவையில் வேறுபாடு தெரியாது. செலவும் குறைவு.

* இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை சற்றுக் குறைத்துவிட்டு, இளம் வெண்டைக்காயை நறுக்கிப் போட்டு ஊற வைத்து அரைக்கவும். இட்லி மிருதுவாக வரும்.

* எள்ளூக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அத்துடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அள்ளும்.

* அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேகுழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேஅக் வைத்து ,மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.

* அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.

* பனீர் பொறிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டு, பொறித்தால், சீராகப் பொறியும். சாதாரணமாகப் பொறிக்கும்போது சில இடங்களில் கருகுவது போல கருகவும் செய்யாது.

* காலிஃப்ளவரை ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது, ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கக் கூடாது. அடியில் உள்ள கிடிஸ்டரில் வைக்கலாம். அதிலும் தண்டுப் பகுதி மேற்புறமாக இருக்கும்படி வைத்தால் ஈரம் பூவின் மேல் தாக்காது.

* ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.

* வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தைக் கரையவிட்டு, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

வெள்ளி, 15 ஜூன், 2018

நுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்!

நுரையீரலை உறுதியாக்க 8 வழிகள்!
 "அந்த மலைகள் என் பற்கள், மேகங்கள் என் மேனி, மழைத்துளிகள் என் இதயத்துடிப்பு, அழகாகப் பரந்து, விரிந்துகிடக்கும் வானம்தான் என் மென்மையான நுரையீரல்..." - ஓர் அமெரிக்க எழுத்தாளரின் இந்த வர்ணனையைவிட நுரையீரலின் முக்கியத்துவத்தை அழகாகச் சொல்லிட முடியாது. நுரையீரல் நம் உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைப் பெற்றுத் தரும் சுவாசக் கருவி. அது ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதன் மூலம் ஆயுளை அதிகரிக்க முடியும்.

சில எளிமையான விஷயங்களைப் பின் பற்றுவதன் மூலம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் பலப்படுத்தவும் முடியும்.



ஆழமான மூச்சு, ஆயுள் கூடிப்போச்சு!
நாம் ஓய்வில் இருக்கும்போது சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 12 - 15 முறை மூச்சுவிடுகிறோம். நுரையீரலின் முழுக் கொள்ளளவுக்கு மூச்சை நன்றாக இழுத்து, பொறுமையாகவிட வேண்டும். இதனால், நம் நெஞ்சுக்கூடு நன்றாக விரிவடைவதோடு, நுரையீரல்
  ஆக்சிஜனை மற்ற பாகங்களுக்கு முழுமையாகக் கடத்த முடியும். அதேபோல், தேவையற்ற கார்பன் டை ஆக்ஸைடையும் முழுமையாக வெளியேற்ற இது உதவுகிறது. பொதுவாகவே, மூச்சை ஆழமாக இழுத்து, விடப் பழகிக்கொள்வது நல்லது. தினமும் காலை எழுந்ததும், இரவு படுப்பதற்கு முன்னரும்... சில நிமிடங்கள் நேராக நிமிர்ந்து உட்கார்ந்த நிலையில் மூச்சை நன்றாக இழுத்து விடும் பயற்சிசெய்வது நுரையீரலையும் உங்கள் மனதையும் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும்.

நுரைதள்ளும் நீச்சல்,நுரையீரலுக்குப் புதுப் பாய்ச்சல்!
நுரைபொங்கப் பாய்ந்துவரும் கடலானாலும் சரி, நீச்சல்குளமானாலும் சரி... நீச்சல் பயிற்சி எப்போதுமே நுரையீரலுக்கு நல்லது. மூக்கின் வழி மூச்சை நன்றாக இழுத்து, வாய் வழியாக விடும்போது ஒளிந்து கிடக்கும் கார்பன் டை ஆக்ஸைடு முழுவதும் வெளியேறும். கார்பன் டை ஆக்ஸைடு உடலிலிருந்து முழுமையாக வெளியேறாமல் தங்கிவிட்டால், அதிகப்படியான சோர்வு ஏற்படும். நீச்சல் தெரியாதவர்களும்கூட நீரில் சில பயிற்சிகளைச் செய்வதன் மூலம் நுரையீரலைப் பலப்படுத்த முடியும்.

கழுத்து மூழ்கும் வரையிலான நீரில் நின்றுகொண்டு சில ஸ்ட்ரெச்சிங் பயிற்சிகளையும் வெயிட் லிஃப்ட்டிங் பயிற்சிகளையும் செய்யலாம். டம்பிள்ஸ் அல்லது மெடிசின் பால் போன்ற கனமான ஒரு பொருளை நீரிலிருந்து மேலும், கீழுமாகத் தூக்கி பயிற்சி செய்யும்போது, நெஞ்சுக்கூட்டில் ரத்தம் நிரம்பி, காற்று குறையும். அந்த அழுத்தத்தில் நுரையீரல் தன் முழுத்திறனோடு செயல்படும். நீரில் செய்வதற்கென சில ஹைட்ரோ தெரப்பிகளும் (Hydro Therapy) இருக்கின்றன. இது போன்ற பயிற்சிகளைத் தொடர்ந்து செய்வதால், நம்முடைய சுவாச மண்டலம் சிறப்பாகச் செயல்படும்.

உயரம் அதிகம், பலனும் அதிகம்!
உயரம் அதிகமாக ஆக, ஆக்சிஜன் அளவு குறையும். அது போன்ற இடங்களில் உடற்பயிற்சிகள் செய்வது நுரையீரலுக்கு அதிக வலு சேர்க்கும். சமதளத்தில் இருக்கும் அளவிலிருந்து, 8,000 அடி உயரத்தில் 74 சதவிகிதம் அளவுக்குத்தான் ஆக்சிஜன் இருக்கும். இந்த உயரங்களில் உடற்பயிற்சி செய்யும்போது பொறுமையாக ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியை அதிகப்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சிகளை முடித்துவிட்டு சமதளத்துக்கு வந்தாலும்கூட, உங்கள் உடலில் அதிகமான சிவப்பணுக்கள், இரண்டு வாரங்களுக்கு அப்படியே இருக்கும். மொத்தத்தில் நுரையீரல் பலமடங்கு வலுப்படும்.

நடை, தடைகளை உடை!
போரில் வெற்றிபெற தளபதி மட்டும் வலுவாக இருந்தால் போதாது. அவனைச் சுற்றி இருக்கும் வீரர்களும் வலிமையானவர்களாக இருத்தல் அவசியம். அதுபோலத்தான், நுரையீரலின் வலிமை, அதைச் சுற்றியுள்ள தசைகளின் வலிமையைப் பொறுத்தே இருக்கிறது. ஒரு நாளைக்கு 20 நிமிட நடை என்பது, இதற்கான எளிமையான தீர்வாக இருக்க முடியும்.

நல்ல ஓட்டம், நுரையீரலுக்கான உயிரோட்டம்!
"கொஞ்ச தூரம்கூட ஓடவே முடியலை, மூச்சு இப்படி வாங்குது... என்னோட லங்ஸ்ல ஏதோ பெரிய பிரச்னை இருக்கு..." என்று சமயங்களில் நமக்கு நாமே டாக்டர்கள் ஆகிவிடுவோம். ஆனால், இப்படி ஆவதற்கான காரணம் கை, கால்களின் தசைகள் உறுதியாக இல்லாததே. வீண் பழியோ நுரையீரல் மீது! திடீரென ஒருநாள் உடற்பயிற்சி செய்கிறேன் பேர்வழி எனச் செய்யும் போது தசைகள் அதிகப்படியான சுமையைத் தாங்குகின்றன. உடலில் குளூக்கோஸை எனர்ஜியாக மாற்றத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காததால், அந்தத் தசைகள் லாக்டிக் அமிலத்தைச் சுரக்கின்றன. இந்த லாக்டிக் அமிலம், `உடலுக்குக் காற்று போதவில்லை' என்ற அபாய மணியை ஒலிக்கச்செய்கிறது. அதன் காரணமாகவே `தஸ்...புஸ்...' என்று மூச்சு வாங்குகிறது. தொடர் பயிற்சிகளின் மூலம் தசைகளை வலிமைப்படுத்தி, எதிர்ப்பாற்றலை அதிகப்படுத்தினால், நுரையீரலுக்கு மட்டுமல்ல... உடலின் அனைத்து பாகங்களுக்குமே அது வரமாக இருக்கும்.
 

வயிற்றுப் பகுதியும், மூச்சுப் பயிற்சியும்!
நம் வயிற்றுப் பகுதியை வலிமைப்படுத்துவதன் மூலம் நுரையீரலை வலுப்படுத்த முடியும். ஏனெனில், வயிற்றுக்கு சற்று மேல் பகுதியில்தான் `உதரவிதானம்' எனப்படும் டையஃப்ரம் (Diaphragm) இருக்கிறது. இது மூச்சை இழுத்துவிட உதவிசெய்யும் முக்கியத் தசை.
தரையில் மல்லாந்து படுக்க வேண்டும். ஒரு கையை வயிற்றிலும், ஒரு கையை நெஞ்சின் மீதும் வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை ஆழமாக இழுத்து, வாய் வழியாக விட வேண்டும். இப்படி செய்யும்போது வயிற்றின் மீதிருக்கும் உங்கள் கை, மார்பின் மீதிருக்கும் கையைவிடவும் உயரமாகச் செல்ல வேண்டும். மூச்சை இழுத்து, சில விநாடிகள் மூச்சைப் பிடித்து நிறுத்துவதும் நல்ல பயிற்சியாக இருக்கும்.

உட்காரும்விதத்தைக் கவனியுங்கள்...

நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்யும்போது, சிறிது நேரத்திலேயே ஆற்றல் இழந்தவர்களைப்போல உணர்வோம். இதற்கு, நாம் எப்படி உட்கார்ந்திருக்கிறோம் என்பதைக் கவனிக்க வேண்டும். உடலை வளைத்து உட்காரும்போது, அது நுரையீரலையும் அழுத்தி, காற்றை இழுக்கும் திறனைக் குறைக்கிறது. இதனால், உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் இல்லாததால், சோர்வுநிலை ஏற்படுகிறது. கால்களைத் தரையில் ஊன்றி, 90 டிகிரியில் முதுகை வைத்தபடி, நிமிர்ந்து சரியான பொசிஷனில் உட்கார்ந்து பாருங்கள்... உடலுக்குப் போதுமான ஆக்சிஜன் அளவு கிடைப்பதால், புத்துணர்வாக உணர்வீர்கள்.

நல்ல இசை வாசிப்பு, நுரையீரலுக்கான சுவாசிப்பு!
ட்ரம்பெட், புல்லாங்குழல், சாக்ஸபோன் போன்ற காற்றை அடிப்படையாகக்கொண்ட கருவிகளை வாசிப்பது நுரையீரலை வலுப்படுத்துவதற்கான நல்ல பயிற்சி. பாடல்கள் பாடுவதும் நுரையீரலை வலுப்படுத்தும் ஒரு பயிற்சியே.

மென்மையாக இருக்கும் நுரையீரலை தூய்மையாக வைத்திருப்பது நம் கடமை. ஆரோக்கியமான நுரையீரலைக்கொண்டிருந்தால், காதலியைக்கூட இதயத்திலிருந்து நுரையீரலுக்கு நீங்கள் இடம் மாற்றிவிடலாம்!
- இரா.கலைச் செல்வன்

நுரையீரலை உறுதிப்படுத்தும் வழிகள்!
முகத்தில் தண்ணீரைத் தெளிக்க வேண்டும். கவனம், குளிர்ந்த (ஐஸ் வாட்டர்) நீர் அல்ல. மூச்சைப் பிடித்துக் கொண்டு, முகத்தில் நீரை வாரி இறைக்கும்போது அது இதயத் துடிப்பைக் குறைத்து, ஆழ்கடலில் டைவ் செய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

தினசரி போதுமான அளவு தண்ணீர் அருந்த வேண்டும். இது, உடலில் நீரிழப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

`வாய்விட்டுச் சிரித்தால், நோய்விட்டுப் போகும்.' வாய்விட்டுச் சிரிக்கும்போது வயிற்றுப் பகுதி நன்கு விரிவடையும், நுரையீரலும் தெம்பு பெறும்.

சிகரெட் புகைத்தல் நுரையீரலைப் பாதிக்கும். சிகரெட் மட்டுமல்ல... எந்த ஒரு புகையையும் தவிர்ப்பது நுரையீரலுக்கு நல்லது.

பயிற்சிக்கு முன் பரிசோதனை!
நுரையீரலைப் பலப்படுத்தும் பயிற்சிகளைத் தொடங்குவதற்கு முன்னர், எல்.சி.டி (LCT - Lung Capacity Test), பி.எஃப்.டி (PFT - Pulmonary Function Test) போன்ற சில அடிப்படையான பரிசோதனைகளைச் செய்யவேண்டியது அவசியம். அதே போல், நுரையீரலுக்கும் நம் இதயத்துக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எனவே, சில இதயப் பரிசோதனைகளை செய்துகொள்வது நல்லது. இந்தப் பரிசோதனைகளைச் செய்துவிட்டு, மேற்கூறிய பயிற்சிகளைத் தொடங்கினால் மிகச் சிறந்த ரிசல்ட் கிடைக்கும். விளையாட்டு வீரர்கள் இந்தப் பயிற்சிகளை சரிவரச் செய்யும்போது, அவர்களின் உடற்தகுதி சர்வதேசத் தரத்துக்கு உயரும்."

நுரையீரல் உணவுகள்...
பூண்டு, வெங்காயம் நுரையீரல் வீக்கம் அடைவதைத் தடுக்கின்றன. கொழுப்பு அளவைக் குறைக்கின்றன. நோய்க்கிருமிகள் நேரடியாகத் தாக்கும் உறுப்புகளில் முக்கியமானது, நுரையீரல். பூண்டும் வெங்காயமும் நோய்க்கிருமிகளுக்கு எதிராகச் செயல்படும் தன்மையை அதிகரிக்கின்றன. அதேபோல், இஞ்சியும் வீக்கம் அடைவதைத் தடுக்கும் பொருளாகச் செயல்பட்டு, சுற்றுச்சூழல் மாசால் நுரையீரல் பாதிக்கப்படுவதைத் தடுக்கிறது. முட்டைக்கோஸ், காலிஃபிளவர், புரோகோலி போன்ற உணவுகள் நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைத் தடுக்கின்றன. ஆரஞ்சுப் பழத்தில் வைட்டமின் சி, பி6 நிறைவாக உள்ளன. இவை, நுரையீரல் ஆக்சிஜனை கிரகிக்கும் தன்மையை அதிகரிக்கச் செய்கின்றன


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

புதன், 13 ஜூன், 2018

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!

சீரகத்தின் மருத்துவ பயன்கள்!
தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும். இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர்.
 * சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.


 * மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்ல நீங்கும்.
 * சீரகத்தை இஞ்சி, எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் ஊறவைத்துக் கொள்ளவும். இதை, தினம் இருவேளை வீதம் மூன்று நாட்கள் சாப்பிட்டு வர, பித்தம் மொத்தமாகக் குணமாகும்.
 * சுக்கு, சீரகம், மிளகு, திப்பிலி ஆகியவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உள்உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதோடு, கோளாறு ஏற்படாது தடுக்கும். எனவே, வாரம் ஒருமுற தடுப்பு முறையாகக் கூட (Prophylactive) இதைச் சாப்பிடலாம்.
 * உடலுக்கு குளிர்ச்சியும், தேகத்தைப் பளபளப்பாக வைக்கும் ஆற்றலும் சீரகத்திற்கு உண்டு. எனவே, தினம் உணவில் சீரகத்தை ஏதாவது ஒரு வழியில் சேர்த்துக் கொள்வோம்.
 * திராட்சைப் பழச்சாறுடன், சிறிது சீரகத்தைப் பொடித்திட்டு, பருகினால், ஆரம்பநிலை இரத்த அழுத்த நோய் குணமாகும். மத்தியதர இரத்த அழுத்த நோய் இருப்பவர்களுக்கு, மேலும் இரத்த அழுத்தம் அதிகரிக்காது தடுக்கும்.
 * சிறிது சீரகம், நல்லமிளகு பொடித்து எண்ணெயிலிட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயத் தலையில் தேய்த்துக் குளித்தால், கண் எரிச்சல், கண்ணிலிருந்து நீர் வடிதல் நீங்கும்.
 * அகத்திக்கீரையுடன், சீரகம், சின்னவெங்காயம் சேர்த்து கஷாயம் செய்து அத்துடன் கருப்பட்டி பொடித்திட்டு சாப்பிட்டால், மன அழுத்தம் மாறும். ஆரம்பநில மனநோய் குணமாகும்.
 * சீரகம், சுக்கு, மிளகு, தனியா, சித்தரத்தை இவ்வைந்தையும் சேர்த்துத் தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் இரண்டு சிட்டிகை வீதம், தினம் இரண்டுவேளையாக சாப்பிட்டால், உடல் அசதி நீங்கி, புத்துணர்ச்சி ஏற்படும்.
 * சீரகத்தை லேசாக வறுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வர, நரம்புகள் வலுப்பெறும். நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 * சிறிது சீரகத்துடன், இரண்டு வெற்றிலை, நான்கு நல்ல மிளகு சேர்த்து மென்று தின்று, ஒரு டம்ளர் குளிர்ந்த நீர் பருகினால், வயிற்றுப் பொருமல் வற்றி, நலம் பயக்கும்.
 * சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு வைத்து மைய்ய அரைத்து, எலுமிச்சை சாறில் கலந்து குடித்தால், குடல் கோளாறுகள் குணமாகும்.
 * ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து, சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
 * பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு, சிறிது சீரகத்துடன் சின்ன வெங்காயம் வைத்து மைய்ய அரைத்து, பசும்பாலில் கலந்து குடித்து வர, நல்ல பலன் கிடக்கும்.
 * சிறிது சீரகத்துடன், கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர, கல்லீரல் கோளாறு குணமாகும்.
 * சீரகத்தை தேயிலைத் தூளுடன் சேர்தது கஷாயம் செய்து குடித்தால் சீதபேதி குணமாகும்.
 * கொஞ்சம் சீரகமும், திப்பிலியும் சேர்த்துப் பொடித் தேனில் குழைத்து சாப்பிட்டால், தொடர் விக்கல் விலகும்.
 * மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிது சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
 நாம் சமையலறையில் ஒரு மருத்துவமனையை வைத்துக்கொண்டு நாம் ஏன் வீட்டை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு செல்கிறோம் என்றுதான் தெரியவில்லை.
சீரகம் நமக்கு எளிதாக கிடைக்கக்கூடிய பொருள். வாழைப்பழம், எந்த பருவகாலத்திலும் கிடைக்கக் கூடிய எளிய பழம்.

இந்த இரண்டையும் கலந்து சாப்பிட்டால், என்னமாதிரியான நோய் குணமாகும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
மஞ்சள் வாழைப்பழத்தின் மேல்தோலை உரித்து அப் பழத்துடன் கொஞ்சம் சீரகத்தை சேர்த்து நன்றாக பிசைந்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் முற்றிலும் குணமாகும்.
மேலும் உடலில் இருக் கும் தேவையற்றகெட்டகொழுப்புக்கள் கரைந்து உடல் எடை குறைந்து ஆரோக்கியம் மேலோங்கும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டதுwww.sahabudeen.com

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts