லேபிள்கள்

செவ்வாய், 19 ஏப்ரல், 2016

சிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா?

சிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா?

நம்மில் பல பேர் சிறு தலைவலி, சளி, காய்ச்சல் போன்றவற்றிக்குக் கூட உடனே மருந்து சாப்பிட்டு விடுவார்கள். இதில் என்ன தவறு இருக்கு! தலைவலி காய்ச்சல் என்றால் மருந்து எடுத்துக்கொண்டால் தானே சரி ஆகும்! என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
நான் கூறுவது சிறு தலைவலி மற்றும் தொடக்கக் காய்ச்சலுக்கு மட்டுமே! தீவிரப் பிரச்சனைக்கு அல்ல.
நமக்கு அடிக்கடி தலைவலி, சளி, காய்ச்சல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் நம் உடலில் எதிர்ப்பு சக்தி இல்லாததே. இதன் காரணமாகத் தான் ஒரு சிலருக்கு உடல் நிலை பாதிப்பு அடிக்கடி ஏற்படுகிறது. கொஞ்சம் தண்ணீர் மாறினாலோ, தட்பவெட்ப நிலை மாறினாலோ இதன் தாக்கம் அதிகமாக இருக்கும், இதற்கு முக்கியக் காரணம் நம் உடல் அந்த மாற்றத்தை ஏற்று கொள்ளக்கூடிய அளவிற்கு திராணி இல்லாததே!
கொஞ்சம் (நிறைய) பேருக்கு, இப்படின்னா காய்ச்சல் தலைவலி சளி வந்து விடும் அவர்களை கவனித்தீர்கள் என்றால், அவர்கள் அதிகம் மருந்து மாத்திரைகள் உட்கொள்பவர்களாக இருப்பார்கள். உடனே மருத்துவனைக்குச் சென்று பார்த்து மருத்துவர் "ஒன்றுமில்லை" என்று கூறி அவர் கொடுக்கும் மாத்திரையை சாப்பிட்ட பிறகு தான் நிம்மதியடைவார்கள்.
ஒரு சிலருக்கு இவைகள் அவர்கள் பக்கமே வராது அப்படியே வந்தாலும் விரைவில் சரியாகி விடும் காரணம், இதைப் போல நேர்ந்தால் உடனடியாக மருந்து உட்கொள்ள மாட்டார்கள். ஏதாவது சூடா காஃபி, தூக்கம் அல்லது ரசம் சாதமோடு முடித்துக் கொள்வார்கள்.
நம் உடலுக்கு இடப்பட்டிருக்கும் கட்டளையே ஏதாவது நம் உடலுக்கு நேர்ந்தால், அதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது தான். நமக்கு ஏற்படும் பிரச்னையைத் தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நம் உடல் இருக்கும். எனவே நம் உடல் அதன் பணியை செய்து முடிக்கும் முன்பே நாம் மருந்து எடுத்துக் கொண்டால், நம் உடல் அதற்குப் பழகி விடும். எனவே பின்னர் வரும் தலைவலி காய்ச்சல் போன்றவற்றை தடுக்க முயற்சிகள் எடுக்காது, அப்படி வந்தவற்றையும் எளிதில் குணப்படுத்தாது. எனவே, நீங்கள் மருந்து சாப்பிட்டால் மட்டுமே சரியாகும் என்ற நிலைக்கு உங்கள் உடல்நிலை வந்து (பழகி) விடும்.
முதலில் தலைவலிக்கு ஒரு மாத்திரை சாப்பிட்டவர்கள், போகப் போக இரண்டு மூன்று சாப்பிட்டால் தான் சரி ஆகும் என்ற நிலைமை வந்து விடும் அல்லது அதிக சக்தி மருந்து உட்கொண்டால் மட்டுமே கேட்கும் படி நம் உடல் பழகி விடும். அதோடில்லாமல் நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறைந்து அடிக்கடி தலைவலி சளி காய்ச்சல் போன்றவைகள் ஆக்கிரமித்து கொள்ளும், உடனே குணமும் ஆகாது. இரு வாரத்திற்கு மூக்கை உறிஞ்சுகிட்டு இருக்க வேண்டியது தான். எதிர்ப்பு சக்தி குறைவதே நம் உடலுக்கு வரும் பிரச்சனைகளுக்கு முக்கியக் காரணம். நம்முடைய உடலின் "Firewall" தான் எதிர்ப்பு சக்தி grey சிறு தலைவலிக்குக் கூட மாத்திரை சாப்பிடுபவரா? .
இதைப் போன்ற நிலையை தவிர்க்க மருத்துவரிடம் செல்லாமல் நீங்களே தலைவலிக்கும் சளிக்கும் காய்ச்சலுக்கும் [Saridon, Crosin, Vicks action 500, Metacin, Anacin(temporarily relieves minor aches and pains due to headache)] மருந்து உட்கொள்வீர்கள் தானே, அந்த சமயங்களில் அதற்குப் பதிலாக ஒரு தூக்கமோ, சூடாக ஒரு காஃபியோ அல்லது ரசம் சாதம் மட்டுமோ சாப்பிட்டு நன்கு ஓய்வு எடுத்தாலே போதுமானது. இரவில் படுக்கும் போது வயிற்று வலி வந்தால், உடலின் உஷ்ணமாகக் கூட இருக்கலாம், இதற்கு சிறிது வெந்தயத்தை மோரில் கலந்து சாப்பிட்ட பிறகு தூங்கினால் சரி ஆகி விடும். இதைப் போல செய்ய முடியாத நிலைமையில் இருந்தால் மட்டுமே மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும்.
மருந்து மாத்திரைகளை தவிர்த்தால் மட்டுமே (அவசியமான நேரங்களில் அல்ல) நமது உடல் நலம் சிறப்பாக இருக்கும், இதைப் போல தொந்தரவுகள் நம்மை நெருங்காது.
குறிப்பு
மேற்கூறிய அனைத்தும் தொடக்க நிலைக்கு மட்டுமே. இதற்காக நாமே நம்மை மருத்துவராகக் கருதிக் கொண்டு அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அடிக்கடி நேர்கிறது / குணமாகவில்லை என்றால், மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
http://www.giriblog.com/2014/06/dont-take-tablets-often.html


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

கருத்துகள் இல்லை:

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts