லேபிள்கள்

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

இந்த Tips பாலோ பண்ணுங்க..உங்களோட கம்ப்யூட்டர் Repair ஆகாது..!

உங்களுடைய கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேர் ஆகி உங்களுக்கு டென்சன் ஏற்படுத்துகிறதா?

இனி உங்களுக்கு அந்த கவலை வேண்டாம். ஒரு சில வழிமுறைகளை செயல்படுத்துவதன் மூலம் உங்கள் கம்ப்யூட்டர் அடிக்கடி ரிப்பேராகாமல் தடுக்கலாம்.
 

உங்களுக்கு கம்ப்யூட்டர் பற்றி ஒன்றுமே தெரியாதென்றாலும் ஒரு சில அடிப்படை விஷயங்களை மட்டும் தவறாமல் பின்பற்ற வேண்டும். 
CPU சுத்தம்: 
1. கம்ப்யூட்டருக்கு முக்கியமானது CPU. இந்த சிபியூவை மட்டும் நல்லா பராமரிச்சாப் போதுங்க... கண்டிப்பா கம்ப்யூட்டர் ரிப்பேர் ஆகிறதிலிருந்து தடுத்திடலாம். 

2. இதை சுத்தமா வைச்சிருக்கிறது நம்மளோட கடமை. தூசி துப்பு அண்டாம வச்சிருக்கணும். தூசிகளை அண்ட விட்டா அது சிபியூக்குள்ள இருக்கிற நுணுக்கமான பகுதிகள்ல புகுந்து ரிப்பேர் செய்திடும்.

3. குறிப்பா கம்ப்யூட்டர் ஹீட் ஆகாமல் இருக்கிறதுக்காக உள்ளே வச்சிருக்கிற சின்ன சின்ன பேன்களில் தூசிகள் ஒட்டுச்சுன்னா....அதோட வேகம்  குறைஞ்சிடும். அதனால் அந்த பேன் நல்லாவே சுத்தாதுங்க...அப்படி சுத்தலேன்னா.... சிபியுவோட ஹீட் வெளியில வராம உள்ளேயே இருக்கும். அதனால் சிபியு அதிகம் ஹீட் ஆகிடும். 

4. எந்த பொருளுக்கும் ஹீட்னாலே ஆபத்துதாங்க..அதுவும் எலக்ட்ரானிக் ஐட்டங்கள்னா சொல்லவே தேவையிலை...

தீர்வு: நல்ல சுத்தமான கம்ப்யூட்டர் சுத்தம் பன்ற பிரஸ் (Computer Cleaning brush) வச்சு சுத்தம் செய்யலாம். இல்லேன்னா சைக்கிளுக்கு காத்தடிக்கிற பம்ப் வச்சு சிபியு மூடிய கழட்டிட்டு காத்தடிக்கலாம். தூசி துப்பு அதிகம் இருக்கிற பகுதிகள்ல இந்த மாதிரி செஞ்சா எல்லா தூசுகளும் வெளியில பறந்திடும். 
KeyBoard சுத்தம்: 
அடுத்து முக்கியமானதா பார்க்கப்போனால் நாம் எப்பவுமே பயன்படுத்துற கீபோர்ட்தாங்க.. இந்த கீபோர்ட் எப்படி செயல்படுத்துன்னு நம்ம "தங்கம்பழனி" சார் "தொழில்நுட்பம்" தளத்துல எழுதியிருக்காருங்க..அதையும் படிச்சுப்பாருங்க...


1. இந்த கீபோர்டை நாம் அடிக்கடி பயன்படுத்தறோமே தவிர, அதை சுத்தம் செய்றது கிடையாது... கீபோர்ட் பட்டன்கள்ல இருக்கிற தூசிகளை துடைக்கிறதே இல்லை.

2. எப்பவாது எதையாவது சாப்பிட்டுகிட்டே கம்ப்யூட்டர யூஸ் பண்ணினால், அந்த உணவு துணுக்கள் கீபோர்ட்ல ஒட்டிக்கும்... குறிப்பா டீ, காபி குடிச்சோம்னா ப்பித் தவறி கீபோர்ட்ல பட்டுடுச்சு கவனிக்காம விட்டால் அவ்வளவுதான். அந்த கீ அப்படியே ஒட்டிக்கும்...அல்லது அதுல நிறைய பசைத் தன்மை ஏற்பட்டுடும்... 

3. அதனால ஒரு தடவை அந்த கீயை அழுத்தினால் அது ஒட்டிக்கும்.. தொடர்ந்து அந்த எழுத்து ஸ்கீரீன் வந்துட்டே இருக்கும்.. என்னவோ ஏதோன்னு பயந்திடுவோம்...அப்புறம் பார்த்தால் அந்த கீ அழுத்தின பொசிசன்லேயே இருக்கும்... 

4. கீபோர்ட் இடுக்குல அழுக்குகளைப் போக்க கீபோர்டை அப்படியே தலைகீழா கவிழ்த்து இலேசா நாலு தட்டு தட்டுங்க... நீங்க எதிர்ப்பார்க்க குப்பைகளும், தூசிகளும அதலிருந்து கொட்டும்.. 

தீர்வு: இதேலேயும் காத்தடிக்கிற பம்ப் யூஸ் பண்ணி தூசிகளைப் போக்கலாம். மெல்லிசா இருக்கிற துணியை இலேசா தண்ணில ஒத்தி கீபோர்ட் முழுசும் துடைச்சி எடுக்கலாம்.. இப்போ பாருங்க... உங்களோட கீபோர்ட் அழுக்கில்லாம "பளிச்"ன்னு மின்னும்.

Mouse சுத்தம்:
நாம அடிக்கடி பயன்படுத்துற மற்றொரு கம்ப்யூட்டர் துணை சாதனம் மௌஸ். இந்த மௌசை அங்கிட்டும் இங்கிட்டும் ஆட்டி வைக்கிறதுலயும், கிளிக் பன்றதுலயும் செலுத்துற கவனம்.. அதுக்கு அடியில ஏற்படுகிற அழுக்குப் படிவு, பட்டன்களுக்கிடையே உள்ள தூசி, துப்புகள் மீது நமக்குப் போகவே போகாதுங்க.. மௌஸ் ஒர்க் ஆனால் போதும்..மற்றதெல்லாம் நமக்கு எதுக்குங்கிற அஜாக்கிரதைதான் அதுக்கு காரணம்.

இப்போ இருக்கிற மௌஸ்...புது மௌஸ் மாதிரியே மாத்த முடியும். புது மௌஸ் யூஸ் பன்னபோது இருக்கிற அந்த அனுபவம் மறுபடியும் உங்களுக்கு கிடைக்கனும்னா மௌசையும் அதே மாதிரி சுத்தம் பண்ணுங்க...மௌசோட மேல்பகுதி, கீழ்பகுதின்னு மெல்லிசான துணியை ஈரப்படுத்தி துடைச்செடுங்க.. "Air Bump" வச்சும் சுத்தப்படுத்தலாம்.
 

Screen சுத்தம்: 
அதே மாதிரி நமக்கு காட்சியைக் கொடுக்கிற Computer Screen. இதை பெரும்பாலானவர்கள் துடைச்சிதான் வச்சிருப்பாங்க... அவசர அவசரமா துடைப்பாங்க.. நடுப் பகுதி மட்டும் சுத்தமா இருக்கும், மற்ற பகுதிகள் அழுக்காகவும் சுத்தமில்லாமலும் இருக்கும்.  ஸ்கிரீனோட ஓரப்பகுதிகளை நல்லா சுத்தமா துடைச்சி வைக்கலாம்.. மெல்லிசா இருக்கிற "வெல்வெட்"துணிகள் மாதிரி இருக்கிறதை வச்சு துடைச்சா ஸ்கிரீன்ல கீரல் விழாம இருக்கும்...

இதையெல்லோம் தொடர்ந்து, அட்லீஸ்ட் வாரம் ஒரு தடவையாவதுத செய்தால் கண்டிப்பா உங்களோட கம்ப்யூட்டர் ரீப்பேரே ஆகாதுங்க. இந்த டிப்ஸ் எல்லாமே பிசிகலா வர்ற ரிப்பேரை மட்டும் தடுக்குங்க.....

நன்றி. 

- சுப்புடு
http://www.softwareshops.in/2013/10/tips-for-computer-maintenance-with-cpu-cleaning.html

--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 25 டிசம்பர், 2015

கம்ப்யூட்டர் வேகம் அதிகரிக்க என்ன செய்யலாம்?

கம்ப்யூட்டர்  வேகம் குறைவாக இருந்தால் அதிக டென்சன் ஏற்படும்.

"நேற்று வரைக்கும் நல்லாதான் இருந்தது.. இன்னைக்கு என்னாச்சுன்னே தெரியல.. கம்ப்யூட்டர் திடீன்னு ஸ்லோ ஆகிடுச்சு.. "

இப்படி நண்பர்கள் அடிக்கடி புலம்புவதைக் கேட்டிருக்கிறேன்.

ஒரே நாளில் கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகாது என்பதே உண்மை. சிறுக சேமிக்கும் தேவையற்ற கோப்புகள், மென்பொருட்கள், மற்றும் வைரஸ் போன்ற காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக கம்ப்யூட்டர் ஸ்லோ ஆகிவிடும் என்பதே உண்மை.

ஒரு நாளில் திடீஎன  கம்ப்யூட்டர் ஸ்லோவானால் ஏதாவது அதிக கொள்ளளவு உள்ள மென்பொருளை டவுன்லோட் செய்து பாவித்திருப்பீர்கள். அதுதான் காரணமாக இருக்கும்.

பொதுவாக கம்ப்யூட்டர் வேகம் குறைய, என்ன காரணம் என்று ஆராய்ந்தால், உண்மையிலேயே தேவையில்லாத கோப்புகளும், டெம்ப்ரரி பைல்கள் என்று சொல்லப்படும் கணினியில் தேங்கும் தற்காலிக கோப்புகள்தான்.

கம்ப்யூட்டர் ஸ்பீடாக டிப்ஸ்

ஒரு சில வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் கம்ப்யூட்டரை வேகமாக்கலாம்.

  • கம்ப்யூட்டர் Boot ஆகி முடியும் வரை எந்த ஒரு அப்ளிகேஷனை இயக்காமல் இருக்க வேண்டும். 
  • Recycle bin - ல் இருக்கும் கோப்புகளையும் அதிலிருந்து நீக்கிவிட வேண்டும். 
  • டெஸ்டாப்பில் தேவையில்லாத, அதிகம் பயன்படுத்தாத ஷார்கட்கள், பைல்களை வைக்க வேண்டாம். 
  • இன்டர்நெட் பயன்படுத்தி முடித்த பிறகு, Run விண்டோவில் %temp%  என கொடுத்து டெம்ப்ரரி பைல்களை தேர்ந்தெடுத்து நீக்கிவிடுங்கள். 
  • சிஸ்டம் பைல்கள் இருக்கும் Drive -ல் வேறெந்த கோப்புகளையும் சேமித்து வைக்காதீர்கள். பொதுவாக சிஸ்டம் பைல்கள் C டிரைவில்தான் இருக்கும். 
  • ஒரு அப்ளிகேஷனை பயன்படுத்திவிட்டு மூடியவுடன் ஒரு முறை கம்ப்யூட்டரை ரெப்ரஸ் செய்ய மறக்காதீர்கள். அவ்வாறு செய்யும்பொழுது RAM - மெமரியிலிருக்கும் தேவையில்லாத கோப்புகள் நீக்கப்படும். 
  • Refresh செய்ய டெஸ்க்டாப் சென்று f5 அழுத்துங்கள். (உடனே டெஸ்க்டாப் செல்ல Start பட்டனை அழுத்திக்கொண்டு  D எழுத்து விசையை அழுத்துங்கள். டெஸ்டாப் தோன்றிவிடும். )இப்பொழுது F5 கொடுத்துப் பாருங்கள்.. கம்ப்யூட்டர் ரெப்ரஸ் ஆகிவிடும். 
  • டெஸ்க்டாப்பில் அதிக அளவுடைய வால்பேப்பர்களை வைத்தாலும் சிறிது வேகம் குறையும். 
  • தேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்கள், புரோகிராம்கள் எதுவும் இன்ஸ்டால் செய்து வைத்திருந்தால், அதை UNINSTALL செய்திடுங்கள். 
  • மாதம் ஒரு முறை உங்களுடைய Hard disk - Defragment செய்யுங்கள். இதனால் அதில் உள்ள கோப்புகள் ஒழுங்கமைப்படுவதோடு, தேவையற்ற இடைவெளிகளும் சரிசெய்யப்படும். 
நன்றி.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 23 டிசம்பர், 2015

நல்லவற்றைப் பாராட்டுங்கள்!

கோவையைச் சார்ந்த ஒரு புகழ்பெற்ற நிறுவனம். அகில இந்தியாவிலும், எல்லா முக்கிய நகரங்களிலும் கிளைகள் உண்டு. வெளிநாடுகளிலும் அலுவலகங்கள், உற்பத்தி செய்யும் ஆலைகள் உண்டு. பல நாடுகளுடன் கூட்டுத்தொழில் உண்டு. அப்படிப் பட்ட நிறுவனம் ஒரு குடும்பத்தாரால் நிறுவப்பட்டு, பல தலைமுறைகளாக வளர்க்கப்பட்டு, ஓர் ஆல மரமாக வளர்ந்துள்ளது. எல்லா நிறுவனங்களிலும் குடும்பத்தைச் சார்ந்தவர்களே நிர்வாக இயக்குநர்களாகப் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு முக்கியமான நிறுவனத்தில் அவர்களது குடும்பம் சம்பந்தப்படாத ஒரு நபர் செயல் இயக்குநராகப் பணிபுரிந்து வந்தார்.
பல ஆண்டுகளாக அந்தக் குடும்பம் சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து, பதவி உயர்வு பெற்று இந்தப் பதவியை அவர் அடைந்திருந்தார். அவரது ஆளுமையின் காரணமாக . அவரது தலைமையில் அந்த நிறுவனம் பல மடங்கு வளர்ச்சி பெற்று முன்னேறியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ள அந்த நிறுவனத்தில், மிகச்சிறந்த உறவுக ளோடும், நட்போடும் நிர்வாகம் நடந்ததற்கு அந்தச் செயல் இயக்குநர் தான் காரணம்.
நிர்வாகம் அவருக்குக் கொடுத்திருந்த சுதந்திரம், அதிகாரம் அனைத்தையுமே மனித நேயத்தோடும், சாதுர்யத்தோடும் தொழில் வளர்ச்சிக்காகவே ஒருமுனைப்படுத்தி, தொழிலாளர் களிடம் மிகுந்த மதிப்பைப் பெற்றிருந்தார். ஒருமுறை நடந்த விழாவின் போது அந்தச் செயல் இயக்குநரைக் =கடவுள்+ என்று ஒரு தொழிலாளி புகழ்ந்து சென்றார். ஒருவரைப் பிடித்துப் போய் விட்டால் நமது தமிழகத்தில் எல்லோரையுமே, =இந்திரன், சந்திரன், கடவுள், வழிகாட்டி+ என்று புகழ்வது வெகு இயல்பு. தகுதி வாய்ந்த ஒருவரைப் பாராட்டும்போது உணர்ச்சி வேகத்திலும், உற்சாகத்திலும் உயர்வு நவிற்சியில் =கடவுள்+ என்று சொன்னதில் தவறில்லை.
விழா முடிந்தபின் நிர்வாக இயக்குநர்களின் உறவினர் ஒருவர், =என்னங்க, உங்களை வைத்துக்கொண்டே மேடையில் உங்கள் செயல் இயக்குநரைக் கடவுள் என்று இப்படிப் புகழ்கிறார்களே! இது சரிதானா?+ என்று கொஞ்சம் வித்தியாசமான தொனியில் கேட்டிருக்கின்றார்.
அதற்கு மூத்த இயக்குநர், =அந்தப் பெருமை எங்களுக்குச் சேர்ந்ததல்லவா?+ என்றபடியே புன்னகைத்தபடி சென்றுவிட்டார்.
எவ்வளவு பெரிய மனது? எப்படிப்பட்ட உயர்ந்த குணம்?
ஒரு நிறுவனம் வெற்றிகரமாக நடந்து விட்டால், ஏதோ தன்னால்தான் இந்த வெற்றியெல்லாம் என்று ஆகாயத்தில் உட்கார்ந்து கொண்டு, மற்றவர்களை மிகவும் அலட்சியமாகப் பார்ப்பவர்கள் இருக்கக்கூடிய இந்த நாட்டில், நல்லவர்களைப் பாராட்டும்போது பெருமைப் பட்டு அதை ஆமோதிக்கின்ற அற்புத மனிதர்கள் தான் உண்மையான வெற்றியாளர்கள். அவர்கள் நடத்தும் எந்தத் தொழிலுமே நிச்சயம் வெற்றி மேல் வெற்றி பெறும்.
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பாராட்டுக்கு ஏங்கும் ஒரு பகுதி உண்டு. தான் சமைப்பதைக் குடும்பத்தில், உள்ளவர்கள் உண்டுதான் ஆக வேண்டும். அது அவர்கள் தலையெழுத்து என்று ஒரு குடும்பத் தலைவிக்குத் தெரிந்தாலும் =இன்னிக்கு கோழிக்குழம்பு சூப்பர்+ என்று கணவன் சொல்லும்போது ஏற்படும் உற்சாகம் எத்தனையோ மனவருத்தங்களை அழிக்கின்ற மாமருந்து அல்லவா?
ஆலையில் பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியாக இருந்தாலும் சரி, ஓர் அதிகாரியாக இருந்தாலும் சரி, தொடர்ந்து செய்யும் வேலைகளில் தவறு செய்தால் உடனே கண்டிக்கத் தெரிந்த மேலாளர்கள், நல்ல பணி ஒன்றைச் செய்யும்போது நான்குபேர் முன்னிலையில், பாராட்டும்போது ஏற்படுகின்ற மனநிறைவும், மகிழ்வும் சொன்னால் விளங்காது. அனுபவித்தால்தான் தெரியும். ஒருவரை உளமாரப் பாராட்டும்போது, பாராட்டுப் பெறுபவரும், பாராட்டுபவரும் அடைகின்ற மகிழ்ச்சி உற்சாகம், வெற்றி வெளிச்சத்தின் உச்சம் அல்லவா?
சில சமயங்களில் பாராட்டுக்குரியவரை, பாராட்டப்படவேண்டிய செயல்களை, பாராட்ட வேண்டிய பொருட்களைப் பாராட்டாமல் தவறில்லை.
ஆனால், எந்தக் காரணத்தைக் கொண்டும் மற்றவர்களைப் பற்றி குறை சொல்லித் தூற்றும் பழக்கத்தை விட்டுவிட வேண்டும்.
வடநாட்டின் ஒரு பகுதியில் பிரசித்தி பெற்ற முகவர் எனது நண்பர். அவர் இறக்குமதியாகும் ஒரு புகழ்வாய்ந்த நிறுவனத்தின் இயந்திரங்களை நூற்பாலைகளுக்கு விற்றுவந்தார். இவர் இறக்குமதி செய்து விற்கும் இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனம் பெயர் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் குறிப்பிட்ட உற்பத்திக்கான தயாரிப்பில் அப்போது தான் ஈடுபட்டார்கள்.
ஏற்கனவே, இந்த நிறுவனத்தின் அளவு பெயர் பெற்ற, புகழ்வாய்ந்த நிறுவனம் ஒன்று அந்த இயந்திர உற்பத்தியில் முன்னோடியாக உள்ளது. சந்தையில் புதிதாக நுழைவதால், சில புதிய உபகரணங்களோடு சில முன்னேற்றங்களோடு நமது முகவர் பெருமை யோடும் உற்சாகத்தோடும் அறிமுக வேலையை ஆரம்பித்தார்.
அறிமுகத்திற்காக எழுதிய கடிதத்தில், தான் விற்கும் இயந்திரங்களை உபயோகித்தால் வருடத்திற்கு சில லட்ச ரூபாய்கள் சேமிக்கமுடியும் என்று கூறியிருந்தார். அத்தோடு நிறுத்தியிருந்தால் பரவாயில்லை. இதற்குமுன் உபயோகித்து வந்த இயந்திரங்களால் அளவிடமுடியாத நட்டம் ஏற்படும் என்றும் அப்படியாகும் நட்டம், =கிரிமினல் வேஸ்ட்+ என்று குறிப்பிட்டுவிட்டார். =கிரிமினல் வேஸ்ட்+ என்று ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தைப் பற்றிக் குறிப்பிட்டால், அது மிகப்பெரிய இழப்பாகவும், ஆலைக்கு மிகவும் ஆபத்தான பொருளாதாரத்தை ஏற்படுத்தும் என்பதோடு, மறைமுகமாக அந்த இயந்திரங்களைத் தேர்வு செய்து ஆலையை நடத்திவரும் நிர்வாகிகளைக் குறை சொல்வது மாதிரியும் அமைந்து விட்டது. இதனால் இவருக்கு மிகவும் நெருக்கமான நண்பராயிருந்த ஓர் ஆலையின் நிர்வாக இயக்குநருக்குப் பயங்கரமாகக் கோபம் வந்து விட்டது.
==என்னைக் =கிரிமினல்+ என்று எப்படி நீ அழைக்கலாம். உன்னுடைய இயந்திரங்களை வாங்காமல், பல காலமாக நான் உபயோகித்துப் பலன் அடைந்து வரும் இயந்திரங்களை உபயோகிப்பது கிரிமினல் குற்றமா? நாளை உன்னுடைய இயந்திரங்களை விடவும் சிறப்பான இயந்திரங்கள் சந்தைக்கு வந்தால், இன்று விற்பனையாகும் உனது இயந்திரங்களை வாங்குபவர்கள் =கிரிமினல்+களாகி விடுவார்கள் அல்லவா?
உனது இயந்திரங்களின் சிறப்பைக் கூறுவதை விட்டுவிட்டு, மற்றவற்றை இகழ்ந்து பேச நீ யார்? இனிமேல் எனது ஆலைக்குள் காலடி எடுத்து வைக்காதே. உன்னுடைய வேறு எந்தப் பொருளையும் வாங்கக்கூடாதென்று ஸ்டோர்ஸுக்கு உத்தரவு அளித்துள்ளேன்+ என்று காய்ந்து விட்டார்.
அவ்வளவுதான். இன்று வரை அந்த ஆலைக்குள் அவரால் நுழைய முடியவில்லை. அது மட்டுமல்ல. அந்த ஆலையின் நிர்வாக இயக்குனர். அவரது உறவினர் மற்றும் நண்பர்களையும் அழைத்து, இவரது கடிதத்தில் உள்ள வரிகளைப் படித்துக்காட்டி, இப்படிப்பட்ட ஆணவத்தோடு விற்பனை செய்யும் இவரை ஊக்குவிக்க வேண்டாம் என்று சிபாரிசும் செய்து விட்டார்.
நண்பர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை மட்டுமல்ல. ஆண்டாண்டு காலமாகப் பழகிவந்த சில நல்ல நண்பர்களை, தனது வாடிக்கையாளர் களை இழந்துவிட்டார். ஒரே காரணம், மற்றவர்களை, அவர்களது தயாரிப்பை, சிறப்பை மதியாமல் போனதுதான்.
ஆயிரம் பொருட்கள் சந்தையில் உள்ளன. அத்தனை பொருட்களையும் யார் யாரோ வாங்கிச் செல்கிறார்கள். உபயோகத்தைப் பொறுத்தும், வாங்கும் சக்தியைப் பொறுத்தும் தரத்தை வாடிக்கையாளர்களே நிர்ணயித்து, அதற்குத் தகுந்த மாதிரி விலை கொடுத்து வாங்குகிறார்கள். இதில் எதையும் இகழ்ந்து பேசவோ, மதிப்பின்றிப் பேசவோ யாருக்கும் உரிமை கிடையாது. ஆனால், புகழ்ந்து பேசவும், பாராட்டவும் அனைவருக்குமே உரிமை உண்டு.
எதிர்மறையான எண்ணங்களும், வெளிப்பாடுகளும் நம்மை பாதிப்பது மட்டுமல்லாமல், நம்மைச் சார்ந்தவர்களையும் பாதிக்கும் என்பதால் மனதைக்குறுகிய வட்டத்திற்குள் பிணைத்துவிடாமல், விசாலமாக்குவது மிக மிக அவசியம்.
ஜப்பான் நாட்டில் ஒரு பழக்கம் உண்டு. =டொயோட்டா+ நிறுவனம் தயாரிக்கும் கார்களில் மட்டும்தான் அங்கு பணிபுரிபவர்கள் வருவார்கள். அந்த நிறுவனத்துக்கும் உதிரிபாகங்கள், மூலப் பொருட்கள் வழங்குபவர்கள்கூட அந்த, =டொயோட்டா+ வாகனத்தை உபயோகப்படுத்த வேண்டுமென்றுகூட எதிர்பார்ப்பார்கள்.
இது நிறுவனத்தின் மீது உள்ள பக்தி, நம்பிக்கையின் வெளிப்பாடு, போட்டி நிறுவனமான ஹோண்டா, சுசூகி போன்றவற்றின் தயாரிப்புகளைப் பற்றிக் கேட்டால், குறை சொல்லமாட்டார்கள். =தெரியாது+ என்று புன்னகைத்தபடியே சென்று விடுவார்கள்.
ஏனோ, நமது தேசத்தில் மட்டும் நம்முடைய எல்லாமே, =ஒசத்தி+, மற்ற எல்லாமே தாழ்வு என்ற ஒரு அடிப்படை மனோபாவம் எல்லாச் செயல்களிலுமே பிரதிபலிக்கின்றது. நல்லதைப் பாராட்டும் குணநலன்களைப் பள்ளிப் பருவத்திலிருந்து குழந்தைகளுக்கு வீட்டிலும், பள்ளியிலும் கற்பித்து வந்தால் போதும், நமது எண்ணம் கூட மாறிவிட வாய்ப்புண்டு.
'ஷாங்காய் நகரில் பஞ்சாலை இயந்திரப் பொருட்காட்சி. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் அதில் எங்கள் தாய் நிறுவனமான, =ஹெபாஸிட்+ பங்கு பெற்றது. அதில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது, சைனாவில், =ஸ்பிண்டில் டேப்+ மற்றும் பெல்ட்கள் தயாரிக்கும், =நைபெல்ட்+ என்ற நிறுவனத்தின் அரங்கிற்குச் சென்றிருந்தேன். இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன் என்று மட்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு அவர்களது, =ஸ்பிண்டில் டேப்+புகளைப் பற்றி விசாரித்து, அங்கிருந்து சாம்பிள்களைக் கையால் எடுத்துப் பார்த்தேன். உடனே அங்கிருந்தவர், =இது எங்களது புதிய தயாரிப்பு. இயகோகா டேப்புகளுக்கு இணையானது+ என்று கூறினார்.
நான் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிவிட்டு, எனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தேன். நான்தான் இயகோகா நிறுனத்தின் நிர்வாக இயக்குநர் என்று தெரிந்ததுமே, என்னை அமர வைத்து உபசரித்து, அங்குள்ள அவர்களது அதிகாரிகளை வரவழைத்து என்னை அறிமுகப்படுத்தி, இயகோகா டேப்புகள் சிறப்பானவை என்று கூறினார். ஒரு போட்டியாளர் என்று தெரிந்தும் அந்த நிறுவனத் தலைவர் அன்று என்னை நடத்திய விதம் எவ்வளவு பாராட்டுக் குரியது. போற்றத்தக்கது.
இன்று =நைபெல்ட்+ சைனாவில் நல்ல முன்னேற்றமடைந்து ஒரு சிறந்த நிறுவனமாக விளங்குகிறது. இயகோகா டேப்புகள் இந்தியாவி லிருந்து இன்றும் சைனாவிற்கு அதிகமாக ஏற்றுமதியாகின்றன.
வெற்றி வெளிச்சம் நல்லவற்றை பாராட்டு முனைபவர்களது முன்னேற்றத்தின் மீது என்றும் படிந்திருக்கும் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
 இயகோகா சுப்பிரமணியன் - நமது நம்பிக்கை


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 21 டிசம்பர், 2015

தொண்டையை காப்பாற்றுங்கள்

தொண்டைக்கு வரும் பாதிப்புகளையும், அதற்கான சிகிச்சை முறைகளையும் சொல்கிறார் டாக்டர் எம்.என்.சங்கர்.
பொதுவாக தொண்டையில் என்னென்ன பாதிப்புகள் வரும்?
பொதுவாக தொண்டை நோய்களைப் பற்றி ஆராயும் போது அநேகம் பேரை பாதிப்பவை இவை என்பதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. குழந்தைகளுக்கு தொண்டையில் சதை வளருதல், பெரியவர்களுக்கு தொண்டை வலி, சரியாக உணவு உண்ண இயலாமை, குரல் மாற்றம், தொண்டையில் புற்றுநோய், வாய்ப்புண், பான்பராக்கினால் வரும் வியாதிகள், இவை தான் முதலில் எனது ஞாபகத்திற்கு வருகின்றன.
குழந்தைகளுக்கு தொண்டையில் வரும் முக்கியமான பாதிப்பு எது? ஏன்?
குழந்தைகளுக்கு தொண்டை வியாதிகளைப் பற்றி கூறும் போது, பொறுப்பான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பேணிக்காக்கிறார்கள் என்பதை கண்டு வியந்திருக்கிறேன். குழந்தை சரியாக சாப்பிடவில்லை என்றால் நாம் உடனே இரத்த சோகை என்று நினைப்போம். ஆனால் சில தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை வாயைத் திறக்கச் செய்து, தொண்டையில் சதை பெரியதாக இருக்கிறதா என்று ஆராய்வர். தொண்டையில் சதை மிகச் சாதாரணமாக குழந்தைகளுக்கு காணப்படுகிறது. இதற்கு டான்சில்ஸ் என்று பெயர்.
குழந்தைகளின் 12-வது வயது வரை இந்த சதை காணப்படுகிறது. அதற்கு பிறகு சில சமயங்களில் தொல்லை கொடுக்கிறது. ஆனால் 12 வயதிற்கு உட்பட்டிருப்பவர்களுக்கு இந்த சதை எப்பொழுதும் தொல்லை கொடுக்கிறது. குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் உட்கொண்ட பிறகு தொண்டை கட்டுகிறது. இதனால் உணவு உட்கொள்ள தடை ஏற்படுகிறது. ஜுரம், கை, கால்வலி வருகிறது. தக்க மருந்துகளை உட்கொண்டால் உடனே சரியாகி விடுகிறது
சில சமயங்களில் இந்த வியாதி குழந்தைகளுக்கு அடிக்கடி வருகிறது. இதற்கு நாள்பட்ட தொண்டை சதை அழற்சி என்று பெயர். இதனால் குழந்தைகளுக்கு உணவு உட்கொள்ள சிரமம், உணவு உட்கொள்ள விருப்பம் இல்லாமை மற்றும் உணவு உட்கொள்ளும் பொழுது வலி ஆகியவை ஏற்படுகின்றன. இவ்வாறு அடிக்கடி தொந்தரவு செய்யும் பொழுதே நாம் இந்த சதையை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொள்ள வேண்டும்.
டான்ஸிலைட்டிஸ்க்கு ஏன் அறுவை சிகிச்சை அவசியமாகிறது?
அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதலின் முக்கியத்துவம் என்னவென்றால் பிற்காலத்தில் அக்குழந்தைக்கு வாதக் காய்ச்சல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளை தவிர்க்கலாம். இந்தியாவில் குழந்தைகளுக்கு காணப்படும் இதய நோய்களில் மிக முக்கியமானவை தொண்டையில் வாழும் கிருமிகளினால் வருபவையே. ஆதலால், தொண்டை நோயை உடனுக்குடன் சரி செய்து கொள்வது அவசியம். இதற்கு காது, மூக்கு, தொண்டை மருத்துவரின் உதவியை நாடவேண்டும். வேறு மருத்துவர்களால் தக்க சிகிச்சை அளிப்பது சாத்தியமல்ல.
டான்ஸில் ஆபரேஷன் செய்து கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து போய்விடும் என்கிறார்களே? உண்மையா?
தொண்டையில் ஏற்படும் அழற்சியை மாத்திரைகளால் சரிவர தீர்வு காணமுடியாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்வதே நல்லது. அறுவை சிகிச்சை செய்து கொண்டால் குழந்தையின் எதிர்ப்பு சக்தி குறைந்து விடுகிறது என்று சில மருத்துவர்கள் தவறான கருத்துக்களை வெளிப்படுத்துகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவை விட மேற்கத்திய நாடுகளில் இந்த கேள்வி எழும். 5 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனைச் செய்யலாம். நான் மூன்று வயது குழந்தைக்கும் செய்திருக்கிறேன். அக்குழந்தையின் பெற்றோர் அந்த குழந்தையின் பிரச்சினையை எப்படியாவது அறுவை சிகிச்சை செய்து தீர்க்கும்படி வற்புறுத்தினர். இப்பொழுது அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. அடிக்கடி வரும் ஜுரம், தொண்டை வலி தீர்ந்து விட்டது. இதனை எதற்கு சொல்கிறேன் என்றால் குழந்தையின் ஆரோக்கியத்தை கெடுக்கும் வகையில் சதை வளர்ச்சி இருந்தால் அதனை எடுத்து விடுவது நல்லதாகும்.
சில குழந்தைகளுக்கு உச்சரிப்பில் குழப்பம் இருப்பது எதனால்?
குழந்தைகள் மழலையாக பேசும். சில குழந்தைகளுக்கு டா, தா முதலிய வார்த்தைகள் உச்சரிப்பது கடினமாக இருக்கும். இதற்கு காரணம் நாக்கிற்கு அடியில் சுருக்கு இருப்பதால் தான். இதனை ஐந்து வயதிற்குள் சரி செய்து விடுவது நல்லது. இல்லாவிடில், அவர்களுக்கு பின்னாளில் உச்சரிப்பு பிரச்சினை எழ வாய்ப்பு உண்டு.
உணவு விழுங்குவதில் சிரமம் இருந்தால் அவசியம் கவனிக்க வேண்டுமா?
சில பெரியவர்களுக்கு உணவு உட்கொள்ள தடை படுதல் உண்டாகும். இவை 1-2 நாட்களுக்கு இருந்தால் அதனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால் இரண்டு வாரங்களுக்கு மேல் இந்த பிரச்சினை இருந்தால் உடனே காது, மூக்கு, தொண்டை மருத்து வரை அணுகுதல் நல்லது. ஏனெனில் புற்று நோயின் ஆரம்பமாக இருக்கலாம். ஆரம்பத்திலேயே அதனை கண்டறிந்து அதற்கு தகுந்த மருத்துவம் செய்தால் நல்ல தீர்வு காணப்படும். புற்றுநோய் தொண்டை தொடர் புடையதாக உள்ளது. இந்ததொண்டை பாதிப்பு ஆண்களுக்கு சாதாரணமாக காணப்படுகின்றன. பெண்களுக்கு கர்ப்பப்பை புற்றுநோய் சாதாரணமாக காணப்படுவதைப்போல. ஆண்களுக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் அதனை எளிதில் குணப் படுத்தலாம் இதற்கு அதன் குணங்களைப் பற்றி அறிந்து கொள்ளுதல் அவசியம். உணவு உட்கொள்ள தடை, எடை குறைதல், வாந்தி, கழுத்தில் கட்டி கிளம்புதல், குரல் மாற்றம், மூச்சுத் திணறல் முதலிய அறிகுறிகள் இருக்கலாம். இவையாவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஒன்று, இரண்டு அறிகுறிகள் இருக்கலாம். ஆனால், இவற்றுடன் எடை குறைதல் இருந்தால் அவசியம் தொண்டை மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும். இதனை கண்டறி வதற்கு என்டோஸ் கோபி என்ற உள்நோக்கி கருவி இப்போது உள்ளது.
பான்பராக் போன்ற போதை பாக்கு பழக்கம் தொண்டையை பாதிக்கும் தானே?
இப்பொழுது இளைஞர்களுக்கு பான்பராக் போடும் பழக்கம் மிக சரளமாகி விட்டது. இதனால் வாய் புண்ணாகி, பின்னர் புண் காய்ந்தவுடன் தோல் சுருங்கி புற்றுநோயாக மாறுகிறது. இதற்கு குசெடிளளை என்று பெயர். பான்பராக்கை நிறுத்திவிட்டு தக்க ஊசி மருந்தை செலுத்தினால் இதனை நிரந்தரமாக நிவர்த்தி செய்ய லாம்.
குரலையே பிரதானமாக கொண்டவர்களுக்கு தொண்டையில் என்னன்ன பாதிப்பு வரலாம்?
மேடை பேச்சாளர்கள், ஆசிரியர்கள், பாடகர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சில சமயங்களில் குரல் சரிவர பேசமுடியாமல் போகலாம். இதற்கு காரணம், அவர்கள் குரலை சீராக வைக்காமல் இருப்பது தான். மிக அழுத்தமாக நாம் பேசும்பொழுது குரல் கணீர் கணீர் என்று எடுத்து விடப்படுகிறது. இப்படி செய்யும் பொழுது குரல்வளையில் தேய்தல் உண்டாகி பின்னர் சதை உண்டாகிறது. இரண்டு வாரங்கள் மௌனமாக இருந்தால் இந்த பாதிப்பு குணமாகி விடும். இல்லா விடில் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுக வேண்டும்.
அடிக்கடி வரும் வாய்ப் புண், ஆணிற்கு பெண் குரல் போன்ற பாதிப்புகள் ஏன்?
வாய்ப்புண் எல்லோருக்கும் வருகிறது. ஆனால் இளைஞர்களை இது வெகுவாக பாதிக்கிறது. நம் உடலின் எதிர்ப்பு சக்தி குறைவாகும் தருணத்தில் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தக்க மருத்துவம் செய்தால் இதற்கு நிவர்த்தி காணலாம். இளைஞர்களுக்கு பெண்களைப் போன்ற கீச் குரல் பருவ வயதில் வருவதுண்டு. இதற்கு காரணம் ஹார்மோன் குறைபாடு தான். இதனையும் தக்க மருத்துவம் மூலம் நிரந்தரமாக தீர்வு காணலாம்.
நன்றி: தமிழ் கூடல்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 19 டிசம்பர், 2015

இனிமேல் உங்களுக்கு இரட்டைச் சம்பளம்

நிறுவனம் நடத்துகிறவர்கள் இந்த தலைப்பை பார்த்தவுடனே நிச்சயம் எனக்கு சாபம் விடுவார்கள்.
ஏனென்றால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையெல்லாம் இப்போது யாருக்கும் இல்லை. எல்லோரும் பணம் சம்பாதிக்க வேண்டும் வெறியில் இருக்கிறார்கள். 60 வயதில் தன் அப்பா சம்பாதித்ததை 20 வயதில் சம்பாதித்துவிட வேண்டும் என்ற வேகம் எல்லோரிடமும் இருக்கிறது. 40 வயதிற்குள் லைஃப்பில் செட்டிலாகி 50 வயதிற்குள் ரிட்டையர்டாகும் அவசரம் தெரிகிறது.
அதனால் நேர்முகத்தேர்விற்கு வரும் யாரும், 'என்ன சம்பளம்?' என்றுதான் முதல் கேள்வி கேட்கி றார்கள். என்ன வேலை? என்று கேட்பதில்லை..
ஒரு நிறுவனத்தில் இருந்து சிறப்பாக உழைத்து படிப்படியாக முன்னேறவேண்டும் என்றெல்லாம் யாரும் நினைப்பதில்லை. கூடுதலாக கிடைக்கும் ஆயிரங்களுக்காக எத்தனை முறை வேண்டு மானாலும் கம்பெனி மாறத்தயாராக இருக்கிறார்கள்.
இரண்டு வருடத்திற்கு முன்னால், '30000 ரூபாய் சம்பளம் கேட்கும் தகுதியுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்' என்று ஒரு எஃப். எம் ரேடியோ நிறுவனம் ரேடியோ ஜாக்கிக்காக விளம்பரம் கொடுத்திருந்தது. அப்போது ஆர்.ஜேக்களின் அதிக பட்ச சம்பளமே இருபதாயிரம்தான். இன்று அவர்களேகூட அப்படி விளம்பரம் கொடுக்க மாட்டார்கள். எனெனில் இன்று தகுதியில்லாத வர்கள்கூட அதை கேட்கத்தயாராக இருக்கிறார்கள்.
யாரும் சம்பாதிக்க ஆசைப்படக்கூடாது என்று சொல்வதாக அவசரப்பட்டு விடாதீர்கள். இலக்குகளில் தவறில்லை. அதை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்பதற்கு பதிலாக முறையாக அடைவது எப்படி என்பதைத்தான் இதில் பார்க்கப்போகிறோம். நாம் அடைய விரும்பும் பொருளாதார இலக்கிற்கு நம்மை தகுதிப்படுத்திக் கொள்வது எப்படி? என்பதற்கான வழி காட்டுதல்தான் இத்தொடர்.
இண்டர்வியூவில் எந்தக்கேள்வி கேட்டாலும் சில பேர் விழிப்பார்கள். சரி நாம் பயிற்சி கொடுத்துக் கொள்ளலாம் என்று சம்பளத்தை நிர்ணயித்தால், 'என்ன சார். எம்.பி.ஏ படிச்சிட்டு டென் தவுசண்ட்தானான்னு வீட்டுல கேட்பாங்க.' என்பார்கள் சற்றும் வெட்கம் இல்லாமல்.
படிப்பு ஒரு தகுதியல்ல. அதை படித்திருந் தால்தான் தகுதி. காலேஜ் கொடுத்த சர்டிபிகேட், நீ அங்கே படித்தாய் என்பதற்குத் தானே தவிர நீ நன்றாகப் படித்தாய் என்பதற்கான தல்லஇல்லையென்றால் இண்டர்வியூ என்ற ஒன்றே தேவையில்லையே என்று விளக்க வேண்டி வரும்.
உங்களின் தகுதிதான் உண்மையில் உங்களுக்கு சர்டிபிகேட். கட்சிதாவிக்கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள் போல கம்பெனி மாறிக் கொண்டே இருப்பவர்களை இன்று யாரும் ரசிப்பதில்லை. ரெசெஷன் போன்ற நேரங்களில் முதல் கத்தி இவர்கள் தலையில்தான் விழும். எனவே நம் தகுதிகளை வளர்த்துக்கொண்டு சிறப்பாக முன்னேறும் வழிகளை இதில் விவாதிப்போம்.
நேர்முகத்தேர்வில், தேர்வாளர் நீங்கள் 'கேட்கும் சம்பளம் குறைவு' என்று நினைக்க வேண்டும் இல்லையா? அதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்? உங்கள் சம்பளம் சின்னதாக தெரிய வேண்டும் என்றால் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை இருகோடுகள் தத்துவம்தான். உங்கள் திறமைகள் பெரிதாக தெரிய வேண்டும்.
நம் தகுதிக்கோட்டை உயர்த்திக்கொள்ளும் வழிமுறைகளை கற்போம்.
நன்றி: சாதனா நமதுநம்பிக்கை


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வியாழன், 17 டிசம்பர், 2015

கருத்துரிமை – சட்டம் – கைதுகள்

இதற்கெல்லாமா கைது செய்வார்கள்? சமீபத்தில் செய்தித்தாள்கள் படித்தவர்களுக்கு நிச்சயம் இந்தக் கேள்வி எழுந்திருக்கும். அதே போல், சோஷியல் நெட்வொர்க் எனப்படும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் வயிற்றில் புளியைக் கரைத்திருக்கிறது இந்தச் செய்திகள்.
எனில், ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றைப் பயன்படுத்தி தங்கள் கருத்தைச் சொல்பவர்கள் இனி கவனமாக இருக்கவேண்டுமா? கமெண்ட் போடுபவர்கள், லைக் போடுபவர்கள் இனி எச்சரிக்கையாக இருக்கவேண்டுமா?

சிவசேனா தலைவர் பால் தாக்கரே இறந்ததை முன்னிட்டு மும்பை நகரத்தில் முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டது. இது குறித்து ஷஹின் தாதா என்ற பெண் ஃபேஸ்புக்கில் வெளியிட்ட கருத்து இது. 'இந்த முழு அடைப்பு தன்னிச்சையாக நடைபெறவில்லை. வலுக்கட்டாயமாக நடந்தேறியிருக்கிறது. இது போன்று முன் எப்போதாவது நடந்திருக்கிறதா? பகத் சிங், சுகதேவ் போன்ற சுதந்தரப் போராட்டத் தியாகிகளுக்கு நாம் இதுவரை இரண்டு நிமிடமாவது மௌன அஞ்சலி செலுத்தியிருப்போமா? ஒருவர் மீதுள்ள மதிப்பு என்பது, தானாக வருவது. அது பெறப்படுவதில்லை. மும்பை ஸ்தம்பித்திருப்பதற்கு காரணம் மரியாதையால் இல்லை, பயத்தால் மட்டுமே.'
இந்த கருத்தை வெளியிட்டதற்காக ஷஹின் காவல் துறையால் கைது செய்யப்பட்டார். இந்தச் செய்திக்கு ஃபேஸ்புக்கில் லைக் போட்ட ரேணு சீனிவாஸ் என்ற அவர் தோழியும் கைது செய்யப்பட்டார். இவ்வாறு நடக்கும் என்று இந்த இருவரும் கனவிலும் நினைத்துப் பார்த்திருக்கமாட்டார்கள்.
மேற்படி இருவரும் தகவல் தொழில் நுட்பச் சட்டம் (Information Technology Act, 2000) 66 A பிரிவின் கீழும், இந்திய தண்டனைச் சட்டம் 295 A பிரிவின் கீழும் கைது செய்யப்பட்டனர்.
இந்திய தண்டனைச் சட்டம் 295 A என்ன சொல்கிறது?
யாரேனும் ஒருவர் தீய நோக்கத்துடன் தன்னுடைய வார்த்தைகளாலோ அல்லது எழுத்துகள் மூலமாகவோ அல்லது வேறு எந்த வகையிலோ மற்றவர்களின் மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் நடந்து கொண்டால் அல்லது அதற்கான முயற்சியில் ஈடுபட்டால் அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதே போல் மூன்று வாரங்களுக்கு முன்னர் புதுச்சேரியை சேர்ந்த ரவி என்ற தொழிலதிபரைக் காவல்துறை கைது செய்தது. ரவி செய்த குற்றம் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் குறித்து ஒரு ட்வீட் போட்டது. சோனியா காந்தியின் மருமகனான ராபட் வதேராவைவிட கார்த்தி சிதம்பரம் அதிகமாக சொத்து குவித்திருக்கிறார் என்பதுதான் அந்த செய்தி. உடனடியாக ரவிமீது காவல் துறை வழக்கு பதிவு செய்தது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் குற்றம் அவர் இழைத்துவிட்டார் என்று சொல்லப்பட்டது.
அதே போல் சற்று முன்னதாக, பின்னணிப் பாடகி மற்றும் தொலைக்காட்சி பிரபலமான சின்மயி கொடுத்த புகாரின்படி, காவல்துறை ஒரு கல்லூரிப் பேராசிரியரை கைது செய்தது. சம்பந்தப்பட்ட கல்லூரிப் பேராசிரியர் சின்மயியை பற்றி அவதூறான, இழிவான செய்திகளை ட்விட்டரிலும் ஃபேஸ்புக்கிலும் வெளியிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவின் கீழ் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66A பிரிவு அதிகம் பயன்படுத்தப்படாத, அதிகப் பரிச்சயம் இல்லாத ஒரு சட்டப்பிரிவு. ஆனால் இப்பொழுது மிகவும் பிரபலமாகி விட்டது.
சட்டப்பிரிவு 66 A என்ன சொல்கிறது?
யாரேனும் ஒருவர் கணிணி சாதனத்தைப் பயன்படுத்தியோ அல்லது தொலைத்தொடர்பு சாதனத்தை பயன்படுத்தியோ :
  1. விகல்பமான முறையிலோ (ஒருவருடைய மனதுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய முறையில்) அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் முறையிலோ தகவல்களை அனுப்பினாலோ; அல்லது
  2. தவறு என்று தெரிந்தும் ஒரு தகவலை தொல்லை செய்யும் விதமாகவோ; அசவுகரியத்தை ஏற்படுத்தும் விதமாகவோ; அபாயம் ஏற்படுத்தும் விதமாகவோ; தடங்கல் ஏற்படுத்தும் விதமாகவோ; அவதூறு செய்யும் விதமாகவோ; ஊறு விளைவிக்கும் விதமாகவோ; பயமுறுத்தும் விதமாகவோ; பகைமை விளைவிக்கும் விதமாகவோ; வெறுப்பை தோற்றுவிக்கும் விதமாகவோ; அல்லது கெட்ட நோக்கத்துடனோ மற்றவருக்கு அனுப்பினாலோ; அல்லது
  3. யாரேனும் ஒருவருக்கு தொந்தரவு தரும் விதத்தில் அல்லது அசவுகரியத்தை விளைவிக்கும் விதத்தில் அல்லது தகவல் எங்கிருந்து அனுப்பப்பட்டது என்று தெரியாத விதத்தில் (ஏமாற்றும் நோக்கில்) அல்லது திசை திருப்பும் விதத்தில் தகவல்களை அனுப்பினாலோ
அவருக்கு (தகவலை அனுப்பியவருக்கு)மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்று அபராதம் விதிக்கப்படும்.
இங்கு தகவல் எனப்படுவது எழுத்து மூலமாக வார்த்தையாகவோ, அல்லது ஒலியாகவோ, அல்லது படமாகவோ, அல்லது வேறு வகையிலோ இருக்கலாம்.
மேலும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தில் எது விகல்பமான அல்லது பயமுறுத்தலை விளைவிக்கும் தகவல்கள் என்று விவரிக்கப்படவில்லை.
அது போக 66 A பிரிவின்படி ஒருவர் மற்றவருக்கு மேற்குறிப்பிட்ட தகவல்களை அனுப்பியிருந்தால்தான் (Send) குற்றம். தகவல்களை வெளியிட்டால் (Publish) அது குற்றம் என்று சட்டப்பிரிவு சொல்லவில்லை.

ஃபேஸ்புக்கிலும் டிவிட்டரிலும் பொதுவாக ஒருவர் தங்களுடைய நண்பர்களிடமும் தன்னைப் பின்தொடருபவர்களிடமும் தகவல்களை வெளியிட்டு பரிமாறிக்கொள்கிறார்கள். கமெண்ட் செய்கிறார்கள். லைக் செய்கிறார்கள். மற்றபடி தனிப்பட்ட ஒருவருக்கு தகவல்களை ஈமெயில் அனுப்புவதில்லை. அதனால் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சோஷியல் நெட்வொர்க்குக்குப் பொருந்துமா என்பது கேள்விக்குறிதான்.
அப்படியானால் சோஷியல் நெட்வொக்கைப் பயன்படுத்தி மற்றவர்களைப் பற்றி அவதூறாக செய்திகளை அனுப்பினால் அது தப்பில்லையா? குற்றமாகாதா?
தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவுவின்படி குற்றமாகாது. ஆனால் இந்திய தண்டனைச் சட்டம் 499ம் பிரிவின்படி குற்றமாகும். அந்தக் குற்றத்துக்கு இரண்டாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். இது தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவு சட்டப் பிரிவின்படி வழங்கப்படும் தண்டனையைவிடக் குறைவு.

கணிணியையோ அல்லது செல்ஃபோனையோ பயன்படுத்தி தனிப்பட்ட ஒரு நபருக்கு அவதூறு செய்தியை அனுப்பி வைத்தால்தான் தகவல் தொழில் நுட்பச் சட்டத்தின் 66 A பிரிவை பிரயோகிக்கமுடியும்.
மேலும் இந்த விவகாரத்தில் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் கவனிக்கவேண்டும். ஒருவர் மற்றவரைப் பற்றி சுமத்தும் பழிச்சாட்டு (Imputation) எல்லாமே அவதூறு ஆகாது. எதுவெல்லாம் அவதூறு ஆகாது (விதிவிலக்கு) என்று இந்திய தண்டனை சட்டம் 499ம் பிரிவில் பத்து விளக்கங்கள் கொடுக்கிறது.
அனைத்துக்கும் மேலாக ஓர் இந்திய குடிமகனுக்கு கருத்து சுதந்தரம் என்பது அடிப்படை உரிமையாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் 19 (1)(A) பிரிவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகள் ஏனையச் சட்டங்களைவிடப் பெரியது. மற்ற சட்டங்கள் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டே இருக்க வேண்டும், எதிராக செயல்படக் கூடாது.
அதற்காக கருத்து சுதந்தரம் என்ற போர்வையில் ஒருவர் மற்றவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும் சொல்லமுடியாது, கருத்து தெரிவிக்கமுடியாது. கருத்து சுதந்தரத்துக்கும் ஒரு வரையறை உண்டு. தெரிவிக்கப்பட்ட கருத்து உண்மையானது என்றால் அதில் அவதூறு எதுவுமில்லை.
மேற்குறிப்பிட்ட அனைத்து சட்டவிதிகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் சமீபத்திய நிகழ்வுகளை பரிசீலனை செய்யவேண்டும். சட்ட விதிகளை பார்த்து விட்டோம். தார்மிக ரீதியாக இனி நீங்கள்தான் சின்மயி வழக்கிலும், கார்த்திக் சிதம்பரம் வழக்கிலும் தாக்கரே தொடர்பான வழக்கிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றம் புரிந்திருக்கிறார்களா என்பதை முடிவு செய்யவேண்டும். சட்ட ரீதியில் யார் செய்தது சரி என்பதை அறிய, இந்த வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கும் வரை காத்திருக்கவேண்டும்
நன்றி: தமிழ் பேப்பர்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

செவ்வாய், 15 டிசம்பர், 2015

வாடகைபடிக்கு வரிச் சலுகை கணக்கிடும் சூட்சுமம்!

வீட்டு வாடகைபடிக்கு (ஹெச்.ஆர்.ஏ) வரிச் சலுகையைப் பெறுவதில்தான் எத்தனை குழப்பங்கள். இந்தக் கணக்கீடு எப்படி செய்யப்படுகிறது என்பதே பலருக்கும் புரிந்துகொள்ள முடிவதில்லை. தவிர, அந்தக் கணக்கீடுகளும் ஒரேமாதிரியாகவும் இருப்பதில்லை. ஊருக்கு ஊர் மாறுதல்களைக்கொண்டதாக இருக்கிறது. எந்த ஊருக்கு எப்படி கணக்கிடப்படுகிறது என்கிற குழப்பத்தில் தப்பும் தவறுமாக, ஏதோ ஒன்று கிடைத்தால் போதும் என்று பலரும் க்ளைம் செய்கின்றனர்.

வீட்டு வாடகைபடி வரிச் சலுகை க்ளைம் செய்வதில் புதிய விதிமுறையைக் கொண்டுவந்துள்ளது மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு ஆணையம். அதாவது, ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்குமேல் வீட்டு வாடகைபடி க்ளைம் செய்தால், வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண் அவசியம் தர வேண்டும் என்று அறிவித்துள்ளது. வீட்டு வாடகைபடிக்கு எவ்வாறு லாபகரமாக வரி விலக்கு பெறலாம் என்று ஆடிட்டர் சத்தியநாராயணனுடன் பேசினோம்.

''வருமான வரிச் சட்டம் 10(13ஏ) பிரிவின்படி ஹெச்.ஆர்.ஏ.-க்கு வரிச் சலுகை தரப்படுகிறது. வீட்டு வாடகைபடிக்கு வரிச் சலுகை பெற முதலில் வாடகை வீட்டில் குடியிருக்கவேண்டும். அதற்கு முறையான ரசீது தரவேண்டும். வாடகை வருமானம் பெறுபவர்களில் பலர் தாங்கள் வாங்கும் உண்மையான வாடகையைத் தங்கள் வருமானத்தில் சேர்த்துக்காட்டுவதில்லை. இதைக் கண்காணிப்பதற்கும் அரசுக்கு ஏற்படும் வரி இழப்பை சரிசெய்வதற்கும் கொண்டுவரப்பட்ட நடைமுறைதான் இது. வீட்டு வாடகையைச் செலுத்தி முறையாக ரசீது வாங்குபவர்களுக்கு எந்தச் சிக்கலும் இல்லை. அதுபோல, வாடகை வருமானம் ஈட்டும் வீட்டு உரிமையாளர் தனது வாடகை வருமானத்தை வரிக் கணக்கின் கீழ் கொண்டுவந்துவிட்டால் சிக்கல் இல்லை.

சிலர் ஒருமாதத்துக்கு ரூ.25 ஆயிரம் வரை ஹெச்.ஆர்.ஏ. க்ளைம் செய்கின்றனர். அந்த நிலையில் அந்த வாடகை வருமானத்தை வீட்டு உரிமையாளர் வரிக் கணக்கில் கொண்டு வருவதை உறுதி செய்வதற்காகவே இந்த நடைமுறை. வருடத்துக்கு ஒரு லட்சத்துக்கு மேல் வாடகை தருபவர், வரிவிலக்கு பெறும்போது வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணை தரவேண்டும்.

ஹெச்.ஆர்.ஏ வரிவிலக்கு கணக்கிடும் முறையையும் அவர் விளக்கினார். வீட்டு வாடகைபடி வரிவிலக்குக்கு கீழ்க்கண்டுள்ள 3 முறைகளில் எது குறைவோ, அதற்கு வரிவிலக்கு கிடைக்கும்.

1) சம்பளத்தில் பெறும் அசலான வீட்டு வாடகைபடி.

2) கட்டும் வாடகை யில் சம்பளத்தின் 10%-த்தைக் கழிப்பது (இங்கு சம்பளம் என்பது அடிப்படை சம்பளம், டி.ஏ. மற்றும் விற்பனை கமிஷன் ஆகியவை சேர்ந்ததாகும்).

3) சம்பளத்தில் 40% (மெட்ரோபாலிடன் நகரங்களுக்கு 50%).

மேற்கூறியபடி வரிவிலக்கை கணக்கிட்டு அதனை வீட்டு வாடகைபடியில் கழித்ததுபோக உள்ள தொகை, வரிக்கான வருமானத்தில் சேர்க்கப்படும். (பார்க்க, பெட்டிச் செய்தி)

ஹெச்.ஆர்.ஏ வரிச் சலுகை பெற சொந்த வீட்டில் வசிப்பவராக இருக்கக்கூடாது. சொந்த வீட்டில் வசிப்பவர்கள்

ஹெச்.ஆர்.ஏ.க்கு முழு வரி கட்டவேண்டும். ஆனால், சொந்த வீடு வைத்திருந்து அதற்கு வீட்டுக் கடனை செலுத்திவந்தால், அசல், வட்டி இரண்டுக்கும் வருமான வரிச் சலுகை உண்டு. தவிர, கணவன் மனைவி இருவருக்குமே வீட்டு வாடகைபடி வரிச் சலுகை பெறலாம் எனில், அனுமதிக்கப்பட்ட அளவுக்குள் யாராவது ஒருவர்தான் பெற முடியும். வெளிமாநிலத்தில் வாடகை வீட்டில் வசிக்கும் குடும்பத்துக்காகவும் வீட்டு வாடகைபடியை ஒருவர் க்ளைம் செய்யலாம். பெற்றோருக்கு வாடகை தந்தாலும் முறையான ரசீது இருந்தால்தான் வரிச் சலுகை பெறமுடியும்'' என்றார்.

நன்றி விகடன்


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

பழங்களை உண்ணும் முறை

பழங்களை சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் எப்போது எப்படி உண்பது என்பது பற்றி சிந்திப்பதில்லை. பழங்களை வாங்கி அவற்றை வெட்டி வாய்க்குள் போட்டுவிட்டால் பழங்களை சாப்பிட்டோம் தானே என ஆறுதல் அடைகின்றோம்.

பழங்களை எப்போது எப்படி எப்போது உண்ணவேண்டும் என அறிந்துகொள்வது முக்கியமானது. பழங்களை சாப்பிடுவதற்கான சரியான வழிமுறை என்ன? இது தொடர்பான மின்னஞ்சல் ஊடாக பரிமாறப்பட்ட தகவலை அடிப்படையாக வைத்து விளக்கம் அளிக்கலாமென எண்ணுகின்றேன்.

நாங்கள் எப்போதும் மத்தியான உணவை முடித்தவுடன் வாழைப்பழம், தோடம்பழம், பப்பாசி பழம் அல்லது அப்பிள் பழம் என சாப்பிடுகின்றோம். அவ்வாறு உணவு வேளைக்குப்பின்னர் உடனடியாக பழங்களை சாப்பிடுவது கூடாது. பழங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடவேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடும்போது அவை உள்ளுறுப்புகளை சுத்தப்படுத்துகிறது. அத்துடன் உடலுக்கு வலுவூட்டலை வழங்கி உடல் எடையை குறைப்பதிலும் பங்காற்றுவதுடன் உடலின் பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவுகிறது.

நீ்ங்கள் இரண்டு பாண் துண்டுகளையும் அதன் பின்னர் ஒரு துண்டு பழமும் சாப்பிடுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டு நேரடியாக குடலுக்குள் செல்லக்கூடும். ஆனால் அப்பழத்துண்டு அவ்வாறு செல்லமுடியாதவாறு தடுக்கப்படும். ஏனெனில் பழத்துண்டோடு இணைந்திருக்கும் பாண் துண்டு, சமிபாடு அடைவதற்கான இரசாயன மாற்றங்கள் செய்யப்படவேண்டியிருக்கும்.

அதாவது பாண் துண்டு சமிபாடு அடைவதை தூண்டும் அமிலங்கள் உருவாகி பாண் துண்டு சமிபாடு அடைவதற்கான மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும். ஆனால் அவ்வாறான இரசாயன அமிலங்கள், நீங்கள் சாப்பிட்ட பழத்துண்டை அமிலப்படுத்துவதால் அவை தேவையான சக்தியை உடலுக்கு வழங்காமலே கழிவாக மாற்றப்படுகிறது.

இதனால்தான் வெறும்வயிற்றில் பழங்களை உண்ணவேண்டும் என கூறப்படுகிறது. சிலர் சாப்பாட்டுக்கு பின்னர் பழங்களை சாப்பிட்டவுடன் வயிறு முட்டாக இருக்கிறது என்றும் சிலர் மலங்கழிக்கவேண்டும் என்பது போன்றும் உணர்வார்கள். ஆனால் வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிட்டால் அவ்வாறான உபாதைகளும் கூட ஏற்படாது.

தலைமயிர் பரட்டையாதல், மொட்டையாதல், பதட்டமடையும் தன்மை, கண்களின் கீழ்ப்புறத்தில் தோன்றும் கருவளையங்கள் போன்றன ஏற்படாமல் தடுக்கவேண்டும் என்றால் தவறாது பழங்களை உண்ணுங்கள்.

நீங்கள் படிமுறையான வழிகளில் பழங்களை சாப்பிடுவீர்களாக இருந்தால் அழகையும் மகிழ்ச்சியையும் கொண்ட சுகவாழ்வு உங்களுக்கு சொந்தமாகிவிடும்.

பழச்சாறு குடிப்பதைவிட பழங்களை முழுமையாக உண்பது மிகவும் நல்லது. நீங்கள் பழச்சாறு குடிக்கவேண்டும் என எண்ணினால், அவசரப்பட்டு குடிப்பதை தவிர்த்து ஆறுதலாக குடியுங்கள். அதுவும் நீங்கள் குடிக்கும் பழச்சாறுடன் உங்கள் உமிழ்நீரும் நன்றாக கலக்கும்வண்ணம் வாயில் வைத்திருந்துகுடியுங்கள்.
தகவல் மூலம் http://www.globalhealthandfitness.com/h ... 0fruit.htm


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!

* மாவு அரைக்கும்போது இரண்டு மூன்று வெண்டைகாய்களை நறுக்கி போட்டு, ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணையும் சேர்த்தால் இட்லி மல்லிப்பூ போல மிருதுவாக இருக்கும்.

* சமையல் செய்யும்போது கையில் சூடு பட்டுவிட்டால் முட்டையின் வெள்ளைக்கருவை போடுங்கள் அல்லது பீட்ரூட்டை பிழிந்து அதன் சாறை எடுத்து தடவுங்கள்.

* பாகற்காய் கசப்பு நீங்க, அரிசி களைந்த நீரில் ஐந்து நிமிடம் பாகற்காயை ஊற வையுங்கள்.

* மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடிகட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

* நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

* சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

* சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய்விடும்.

* புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.

விருந்தாளிகளுக்கு டீ, காபியை மொத்தமாக ட்ரேயில் வைத்துப் பரிமாறும்போது, கப்புகளுக்குள் ஒரு ஸ்பூனைப் போட்டு எடுத்துச் செல்லுங்கள். டீ, காபி தளும்பி சிந்தாது.

மெழுகுவர்த்தியை ஒரு அகல் விளக்கிலோ, குழிவான தட்டிலோ ஏற்றி வைத்துவிட்டு, உடனே அதில் ஒரு திரியையும் போட்டு வையுங்கள். மெழுகுவர்த்தி எரியும்போது, உருகி வழியும் மெழுகு அனைத்தும் அகலில் நிறைந்துவிடும். மெழுகுவர்த்தி முழுவதும் கரைந்த பிறகு அகலில் உள்ள திரியை ஏற்றினால் அகல் விளக்கைப் போல பிரகாசமாக எரியும். மெழுகும் வீணாகாது.

இட்லி, தோசைக்கு மாவு அரைத்தவுடன் ஒரு கப் மாவைத் தனியே எடுத்து வையுங்கள். ஒரு கப் பொட்டுக்கடலையை மிக்ஸியில் அரைத்து, இந்த மாவில் சேர்த்துப் பிசைந்தால், இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு ரெடி! இதில் வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கி சேர்த்துப் பிசைந்து, பக்கோடாக்களாகவும் பொரிக்கலாம்.

தேங்காய் மூடிகள் அதிகம் சேர்ந்துவிட்டதா? ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி, தேங்காய் மூடிகளை அதில் மூழ்கும்படி வைத்துவிடுங்கள். தினமும் இரண்டுவேளை தண்ணீரை மாற்றினாலே 4 நாட்களானாலும் தேங்காய் கெடாமல் அப்படியே இருக்கும்.

பட்டு, காட்டன் புடவைகளை அழுத்தமாக அயர்ன் செய்து மடித்து வைப்பதால்தான், அவை சிக்கிரத்தில் நைந்து விடுகின்றன. அவற்றைத் துவைத்ததும் சிராக மடித்து உள்ளே வைத்து விட்டு, உடுத்தும்போது அயர்ன் செய்தால் வருடக்கணக்கில் உழைக்கும்!

அப்ளிகேஷன் ஃபார்ம், முக்கியமான டாக்குமென்ட் போன்றவற்றைப் பூர்த்தி செய்வதற்கு முன், இரு நகல்கள் எடுத்து, ஒன்றில் பூர்த்தி செய்து, அதைப் பார்த்து ஒரிஜினலில் பூர்த்தி செய்யுங்கள். இதனால், அடித்தல் திருத்தல், பிழை ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், இன்னொரு ஃபார்முக்காகக் காத்திருப்பதையும் தவிர்க்கலாம்.

கிரைண்டரில் மசால் வடைக்கு அரைக்கும்போது, அதில் இஞ்சி, மிளகாய் சரியாக அரைபடவில்லையா? அரைக்க வைத்திருக்கும் பருப்பில் ஒரு கைப்பிடி எடுத்து அதில் இஞ்சி, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால், நைஸாக அரைபட்டு விடும். இதை மாவோடு சேர்க்கலாம்.

வாழைக்காயை ஈரமில்லாத பாலித்தீன் கவரில் போட்டு இறுக்கமாகக் கட்டி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் ஒரு வாரம் ஆனாலும் பழுக்காது.

வளையல்கள் குவிந்து கிடக்கின்றனஅவற்றை அடுக்கி வைக்க "ஸ்டாண்ட்" இல்லையே என்ற கவலையா? வீட்டில் இருக்கும் பழைய வாரப் பத்திரிகைகளை ஒன்றன் பின் ஒன்றாக சுருட்டி வைத்தால், செலவே இல்லாமல் நிமிடங்களில் ஸ்டாண்ட் ரெடி!

கட்டிலின் கீழே எப்போதும் ஒரு மிதியடியை போட்டு வைத்திருங்கள். படுக்கப் போகும் முன், கால்களை அதில் நன்றாக தேய்த்து சுத்தப்படுத்திக் கொண்டால் மெத்தையும் படுக்கை விரிப்புகளும் அழுக்காகாது. அடிக்கடி படுக்கை விரிப்புகளை துவைப்பதை விட மிதியடியை உதறி விடுவது சுலபம்தானே!

இட்லி மாவில் ஆரம்பித்து பஜ்ஜி மாவு, வடை மாவு என அனைத்துமே கடைசி ஸ்பூன் வரை வீணாகக் கூடாது என்று நினைப்பவரா நீங்கள்? அவற்றை குழிவான அல்லது அடி வளைவான பாத்திரத்தில் வைத்து விட்டால் போதும். கடைசி கரண்டி வரை எளிதாக எடுத்து உபயோகிக்கலாம்.

பால் காய்ச்சிய பாத்திரத்தில் சப்பாத்தி மாவு பிசைந்தால் சப்பாத்தி மிருதுவாகவும் சுவையாகவும் இருக்கும். எண்ணெய் சேர்க்க வேண்டிய அவசியமும் இல்லை! அதேபோல நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ரசம் செய்யலாம். அப்பளம் பொரித்த கடாயில் வற்றல் குழம்பையும் மோர் பாத்திரத்தில் தோசை மாவையும் வைக்கலாம்.

உங்கள் வீட்டில் வெள்ளை அடித்தாலோ அல்லது பெயிண்ட் அடித்தாலோ ஒரு வாரத்துக்கு அந்த வாசம் போகாது. அந்த அறைகளில் நறுக்கிய வெங்காய துண்டுகளை போட்டு வையுங்கள். பெரும்பாலும் அறைகளின் கதவை மூடி வைத்திருந்தால் ஒரே நாளில் பெயிண்ட் வாடை ஓடியே போய்விடும்!

காலையில் அரக்கப் பறக்க வேலைக்கு செல்பவர்கள், இரவு எவ்வளவு சோர்வாக இருந்தாலும் பாத்திரங்கள் முழுவதையும் தேய்த்து சுத்தப்படுத்தி விடவும். இல்லாவிட்டால் காலையில் பாத்திரம் தேய்ப்பது ஒரு இமாலய வேலையாகத் தெரியும்.

முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டால்அதன் மேல் உப்பு போடவும். சிறிது நேரத்துக்குப் பின்னர் துடைத்துவிட்டால் சுத்தம் செய்வது எளிது. வாடையும் இருக்காது.

அசைவ உணவுகளை மைக்ரோவேவ் ஓவனில் வைத்து எடுத்த பிறகும், வாசனை போகாது. வாஷிங் லோஷன் இல்லாவிட்டால் பவுடர் போன்றவற்றை ஓவனில் கொஞ்சநேரம் வைத்து எடுங்கள். உணவின் வாசனை போயே போச்…!

விளக்கெண்ணை, கடலை எண்ணை, இலுப்பை எண்ணை ஆகிய மூன்றையும் கலந்து விளக்கு ஏற்றினால், நீண்ட நேரம் விளக்கு எரியும். எண்ணையும் குறையாது. ஆடைகளில் எண்ணைக் கறை பட்டு விட்டால் கவலை வேண்டாம். அதன் மீது சிறிது ஆல்கஹாலை தேய்த்துவிட்டு அப்புறம் துவைத்தால் கறை போய்விடும்.

வாஷிங் மெஷினில் துணியை போடும்போதோ அல்லது அழுக்கு துணிகளை வாளியில் உள்ள சோப்பு நீரில் ஊற வைக்கும்போதோ அதனுடன் சிறிதளவு ஷாம்பு சேர்த்தால் துவைக்கும் துணிகள் காய்ந்த பிறகும் கமகம வாசனையாக இருக்கும்.

சமையலறை மேடை மீதும், கப்போர்டுகள் மீதும் அடிக்கடி அழுக்கு ஒட்டிக் கொள்ளும். வாரம் ஒருமுறையாவது நன்றாக துடைத்தால் தான் சுத்தமாக இருக்கும். இதற்கு எளிய வழி உண்டு. சமையலறை மேடை மற்றும் கப்போர்டுகள் மீது பாலிதீன் பேப்பர்களை ஒட்டி வைத்து வாரத்திற்கு ஒருமுறை மாற்றினால் போதும்.

பனிக்காலத்தில் தேங்காய் எண்ணெய் உறைந்து காணப்படும். இதை தவிர்க்க அதனுடன் எட்டு முதல் 10 துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து வைத்தால் உறையாமல் இருக்கும்.

தினமும் வெந்நீரில் குளிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அப்படி என்றால் வெந்நீர் வைக்க மற்ற பாத்திரங்களை பயன்படுத்த வேண்டாம். குக்கரையே காஸ்கட் போடாமல் தண்ணீர் ஊற்றி வைத்தால் சிக்கிரமே சூடாகி விடும். அதேபோல், இளஞ்சூடான நீரில் துணிகளை துவைத்தால் எளிதில் அழுக்கு போய்விடும்.

உங்கள் வீட்டில் இருக்கும் செல்ல நாய் எப்போதும் குரைத்துக் கொண்டே இருக்கிறதா? அப்படி என்றால் ஒரு சின்ன ஐடியாஉங்களுடைய செல்லத்தை டிவி அறையில் உட்கார வையுங்கள். அல்லது அதன் அருகில் ரேடியோவை பாட விடுங்கள். யாரோ பேசுவதாக நினைத்து கொஞ்ச நேரம் குரைத்து விட்டு அமைதியாகி விடும்.

ஒரு பெரிய பக்கெட் தண்ணீரில் "பிளீச்சிங் பவுடரை" கரைத்து, அதில், கரை படிந்த பாத்திரத்தைப் போட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும். பிறகு சோப்பு பவுடரால் பாத்திரத்தைத் தேய்த்தால் பாத்திரம் சுத்தமாகி விடும்.
அதிக எண்ணெய் பிசுக்குள்ள பாத்திரத்தில் நான்கு சொட்டு வினிகரை ஊற்றித் தேய்த்தால் பிசுக்கு போய் விடும்.

பிளாஸ்டிக் பாத்திரத்தில், சூடு இல்லாத சாம்பார், ரசம், பொரியலைப் போட்டு வைத்தால் கூட, பிளாஸ்டிக்கில் கரை ஏறும். இதைத் தவிர்க்க, பிளாஸ்டிக் பாத்திரத்தின் உள் பக்கம் முழுவதும் எண்ணெய் தடவிவிட்டு, உணவு வகைகளைப் போட்டால் கரை ஏறாது.

எலுமிச்சை தோலை வெயிலில் காய வைத்து, பொடித்து வைத்துக் கொண்டால், சோப்பு பவுடருடனோ, சபீனாவுடனோ கலந்து பாத்திரங்களைத் தேய்க்கப் பயன்படுத்திக் கொள்ளலாம். கடலை மாவுடன் கலந்து வைத்து, உடலுக்குத் தேய்த்துக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.

டீ, காபி கரை உள்ள பாத்திரங்களில், சிறிதளவு உப்புத் தூளைத் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்துப் பின் கழுவினால் கரை நீங்கும்.

முட்டை, வெங்காயம், பூண்டு சமைத்த பாத்திரங்களில் ஏற்படும் வாடை நீங்க, பாத்திரத்தில் உப்பு போட்டு தேய்த்து பிறகு குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

எண்ணெய் வைக்கும் பாத்திரங்களில் பிசுக்கு வாடை நீங்காமல் தொல்லை கொடுக்கும். சிகைக்காய்ப் பொடியால் தேய்த்துக் கழுவி, பிறகு எலுமிச்சைத் தோல் பொடியைத் தேய்த்தால், வாடை நீங்கி, பாத்திரம் பளபளக்கும்.

பிசுக்கு நிறைந்த பாத்திரத்தைச் சுத்தம் செய்ய, கடலை மாவு கூட பயன்படும். கடலை மாவை பாத்திரத்தில் தூவி, வழித்து எடுத்தால் ஓரளவு பிசுக்கு நீங்கும். அதன் பின், சிகைக்காய் பொடி போட்டு தேய்க்கலாம்.

சப்பாத்திக்கு மாவு பிசைவதற்கு முன்னால் கையில் சிறிதளவு உப்பைத் தடவிக் கொண்டால் கையில் சப்பாத்தி மாவு ஒட்டாது.

உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.

அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழிப்பாக இருக்கும்.

வெயில் காலத்தில் பெருங்காயம் கட்டியாகி விடும். அப்படி ஆகாமலிருக்க பச்சை மிளகாயை காம்பு எடுக்காமல் பெருங்காய டப்பாவில் போட்டால் பஞ்சு போல் மிருதுவாக இருக்கும்.

ரவா,மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள் வராது.

தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.

காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.

பச்சை மிளகாயை காம்புடன் வைக்காமல் காம்பை எடுத்து விட்டு நிழலான இடத்தில் வைத்தால் நீண்ட நாட்கள் இருக்கும்.

நெய் ப்ரெஷ்ஷாக இருப்பதற்கு அதோடு ஒரு வெல்லத்துண்டை போட்டு வைத்தால் ப்ரெஷ்ஷாக இருக்கும்.

காபி டிகாஷன் போடுவதற்கு முன் சுடு தண்ணீரில் டிகாஷன் பாத்திரத்தை வைத்துவிட்டு டிகாஷன் போட்டால் சீக்கிரம் காப்பித்தூள் இறங்கிவிடும்.

சீடை செய்யும்போது அது வெடிக்காமல் இருப்பதற்காக சீடையை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது.

சப்பாத்தி போடும்போது சப்பாத்தி போடும் கட்டையில் முதலில் உருண்டையாக போட்டுவிட்டு பின்பு
அதனை நாலாக மடித்து உருட்டி போட்டால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

இது இப்படி இருந்தால் புரிவது சுலபம் எனவே திருத்துகிறேன் - க்ருஷ்ணாம்மா !

சப்பாத்தி இடும்போது
 சப்பாத்தியை முதலில் வட்டமாக இட்டுவிட்டு

பின்பு அதனை நாலாக மடித்து மிண்டும் முக்கோணமாக தேய்த்து போட்டால்

சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

முட்டைகோசில் உள்ள தண்டை வீணாக்காமல் சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

கொழுக்கட்டை மாவு பிசையும் போது ஒரு கரண்டி பால் சேர்த்து பிசைந்து கொழுக்கட்டை சுட்டால் விரிந்து போகாமல் இருக்கும்.

எண்ணெய் பலகாரங்கள் டப்பாவில் வைக்கும்போது உப்பைத் துணியில் முடிந்து வைத்தால் காரல் வாடை வராது.

இட்லி சாம்பாரில் கடைசியாக மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், கொத்தமல்லி போன்றவற்றை ஒரு பாத்திரத்தில் போட்டு வறுத்து விட்டு மிக்ஸியில் அரைத்து சாம்பாரில் போட்டால் கூடுதல் சுவையாக இருக்கும்.

சமையலில் உப்பு அதிகமாக போய்விட்டால் உருளைகிழங்கை அதில் அறிந்து போட்டால் உப்பை எடுத்துவிடும்.

தோசை சுடும்போது தோசைக்கல்லில் மாவு ஒட்டிக்கொண்டு தோசை வராமல் இருந்தால் அதற்கு கொஞ்சம் புளியை ஒரு வெள்ளைத்துணியில் கட்டி, அதை எண்ணெய்யில் தொட்டு கல்லில் தேய்த்துவிட்டு தோசை சுட்டால் நன்றாக வரும்.


--
இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts