லேபிள்கள்

வியாழன், 29 மே, 2014

நல்ல கல்லூரி எது? எவ்வாறு தேர்வு செய்வது?

நல்ல கல்லூரி எது? எவ்வாறு தேர்வு செய்வது?

மாணவர்கள் எந்த கல்லூரியை தேர்ந்தெடுப்பது, அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரியில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இருக்குமா என்று குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நேரமிது. மாணவர்கள் பதறாமல் நிதானமாக யோசித்து நல்ல கல்லூரி எது என்று தேர்வு செய்து, அதன் பிறகு சேரலாம்.
கல்லூரியை தேர்ந்தெடுக்கும் போது முக்கியமாக கவனிக்க வேண்டிய சில……….
நிர்வாகம்
கல்லூரி எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது, அங்குள்ள கலாசாரம், வளாகத்தில் கல்விக்கு ஏற்ற சூழல் நிலவுகிறதா உள்ளிட்ட விஷயங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆசிரியர்கள்
சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே தரமான கல்வியை வழங்க முடியும். அதற்கு ஆசிரியர்கள் போதுமான கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம். அதாவது M.Phil, M.Tech, Phd, போன்ற கல்வித்தகுதியை ஆசிரியர்கள் பெற்றிருக்க வேண்டும்.
அங்கீகாரம்
தேர்ந்தெடுக்கும் கல்லூரி, மத்திய, மாநில அரசுகளாலும், தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி அங்கீகாரம் வழங்கப்பட்ட நிறுவனங்களாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்று பார்த்தல் அவசியம்.
உள்கட்டமைப்பு வசதிகள்
தற்போதைய சூழ்நிலைக்கேற்ப கணினி ஆய்வக வசதி, இணையதள வசதி, நூலக வசதி, கான்பரன்ஸ் ஹால், செமினார் ஹால், விளையாட்டு மைதானங்கள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதி செய்து கொள்ளவும்.
கல்லூரியின் பிரபலம்
புகழ் பெற்ற கல்லூரியில் படிப்பது, சிறப்பான எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும். கடந்த ஆண்டு கல்லூரியின் மொத்த தேர்ச்சி விகிதத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும்.
வேலைவாய்ப்பு
தேர்ந்தெடுக்கும் கல்லூரிகளில் வளாகத்தேர்வு நடத்தப்படுகிறதா? என்று கல்லூரியின் முன்னாள் மாணவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளவும். முந்தைய ஆண்டுகளில் எத்தனை மாணவர்கள் வளாகத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்றனர் என்பதையும் பார்க்கவும். அதிலும் குறிப்பாக படித்த துறைக்கேற்ற வேலை பெற்றிருக்கின்றனரா? என்பதனையும் பார்க்க வேண்டும்.
பாடத்திட்டங்கள்
ஒவ்வொரு கல்வியாண்டிலும், பாடத்திட்டங்களை தற்போதைய நவீன தொழில் நுட்பத்துக்கேற்ப மாற்றி அமைக்கிறதா, வேலைவாய்ப்பு பெறுவதற்குரிய கூடுதல் திறன்களை கற்றுத்தருகிறதா என்பதையும் தெரிந்து கொள்ளுதல் அவசியம். இந்த அம்சங்கள்தான், ஒரு கல்லூரியை தேர்ந்தெடுப்பதற்குரிய அளவுகோல்.
இதற்கு கல்லூரியின் இணையதளம், முன்னாள் மாணவர்கள், நண்பர்கள், கல்லூரியை பற்றி அறிந்தவர்கள், கல்வி ஆலோசகர்கள், கல்லூரிகளுக்கு சென்று விசாரிப்பது போன்ற வழிகளை பின்பற்றி சிறந்த கல்லூரிகளை தேர்வு செய்து, பிள்ளைகளின் எதிர்காலத்தை வசந்தமாக்கவும்.
கட்டணம்
கட்டணங்களை பொறுத்தவரை சிலர் அட்மிஷனின் போதே முழு செமஸ்டருக்கான பணம் மற்றும் ஹாஸ்டல் கட்டணம் போன்ற மற்றக்கட்டணங்களையும் சில்ர் செலுத்தி விடுகின்றனர். ஆனால் கல்லூரி எதிர் பார்த்த அளவில் இல்லாவிட்டாலோ, அல்லது அதைவிட நல்ல கல்லூரியில் இடம் கிடைத்துவிட்டாலோ நீங்கள் எவ்வளவு பணம் செலுத்தியிருந்தாலும் அதனை திரும்ப பெற முடியாது ஆகவே பகுதி பணம் மட்டும் ஆரம்பத்தில் செலுத்தினால் வீண்விரயத்தை தவிர்க்கலாம்.
பிற வசதிகள்
விடுதி வசதிகள், மொத்தக் கட்டணம், ஆராய்ச்சி மற்றும் விளையாட்டுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் போன்றவற்றைப் பார்க்க வேண்டும். அவற்றை அடிப்படையாக வைத்து கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்


--
*more articles click*
www.sahabudeen.com


செவ்வாய், 27 மே, 2014

பழகத் தெரிந்தாலே பலே வெற்றி

பழகத் தெரிந்தாலே பலே வெற்றி

பழக்க வழக்கங்கள்தான் உறவு வட்டத்தை வலப்படுத்தும். தொடர்புகளை பலப்படுத்த,  நம் மீதான நல்ல அபிப்பிராயங்களே கைகொடுக்கும். தனிப்பட்ட முறையில், பிறர் அலுவலகங்களில், விசேஷ வைபவங்களில், பொது இடங்களில் பழகும் முறைகளைப் பண்படுத்தும் போது நம்மீதான நேசம் வளர்கிறது. அதற்கான ஆக்கபூர்வமான டிப்ஸ், இந்த பதிவில் இடம்பெற்றுள்ளது.  இதுவும் ஒருவகை புதையல் வேட்டைதான்பலே வெற்றிக்கான பளீர் டிப்ஸ்கள் கீழே  உங்களுக்காக..
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 1
நடைப்பழக்கம் மேற்கொள்கிறீர்கள். நன்கு தெரிந்தவர் எதிரே வருகிறார். உற்சாக மிகுதியால் ஓரங்கட்டி அரட்டையை ஆரம்பித்து விடாதீர்கள். தொடர்நடை கலோரிகளை எரிப்பதற்காக. சைகையில் வணக்கம் சொல்லி, புன்சிரித்து நகர்ந்து விடுங்கள். அது, உங்கள் ஆரோக்கியத்தை உறுதி செய்யும். அவருடைய ஆரோக்கியத்திற்கும் நல்லது.
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 2
உங்கள் வசம் உங்கள் அறிமுக அட்டைகள் நிச்சயம் இருக்கும். அதற்காக அறிமுகமாகும் அனைவருக்குமே அதைத் தர வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அந்தச் சந்திப்பின் மூலம் அவர் மனதில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால் அவராகவே கேட்டுப் பெறுவார். பலரும், சந்தித்த அடுத்த நிமிடமே அந்த அட்டையை எடுத்து நீட்டுவார்கள். அலுவலகரீதியான சந்திப்பு களில் மட்டும் உடனே அறிமுக அட்டையைத் தரலாம். சம்பிரதாய மற்ற அறிமுகங்களிலோ, சந்திப்புகளிலோ விடை பெறும்போது தேவைப்பட்டால் மட்டுமே அறிமுக அட்டையைக் கொடுங்கள்.
பழகத் தெரிந்தாலே பலே வெற்றி உங்களுக்குத்தான்.. டிப்ஸ் – 3
நண்பர் ஒருவருடன் பொது இடத்திலோ அல்லது அவருடைய அலுவலகத்திலோ பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவருக்குத் தொலைபேசி அழைப்பு வருகிறது. அவர் பேசுவதை வைத்தே என்ன விஷயமென யூகித்து விடுகிறீர்கள். அவர் போனை வைத்ததும் முந்திரிக்கொட்டை போல் முந்திக்கொண்டு அந்த உரையாடல் பற்றிய கருத்து முத்துக்களை உதிர்க்க வேண்டாம். இது நம்மைப் பற்றி மிகவும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.
நன்றி: நமது நம்பிக்கை


--
*more articles click*
www.sahabudeen.com


ஞாயிறு, 25 மே, 2014

காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!

காலை உணவு நினைவாற்றலையும், சுறுசுறுப்பையும் அதிகரிக்கும்!

அண்மையில் நமது தமிழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவு காலை உணவின் முக்கியத்துவத்தை எடுத்தியம்பியது.
காலையில் இட்லி-சாம்பார், பொங்கல், ப்ரட் உணவுகளை சாப்பிடுபவர்களை தனித்தனியாக ஆய்வுக்கு உட்படுத்தியதில் இட்லி-சாம்பார் சாப்பிடும் குழந்தைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக திகழ்கின்றார்கள் என்பது தெரியவந்தது.
'காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?' என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(ப்ரேக் ஃபாஸ்ட்) தவிர்ப்பதும் அடங்கும்.
பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது.
வெளிநாடுகளில் பணியாற்றுவோர் குறித்து கேட்க தேவையில்லை. பெயரளவில் ஏதேனும் ப்ரெட் வகைகளையோ, சாண்ட்விச்சுகளையோ சாப்பிட்டால் போதுமானது என்ற மனோநிலையே அவர்களிடம் காணப்படுகிறது.
காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர்.
இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் க்ளுகோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.
காலை சிற்றுண்டி உங்கள் ஒரு நாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்று journal of american nutrition சமீபத்தில் 12,000 நபர்களில் ஆய்வுக்கட்டுரை வெளியிட்டுள்ளது.
நம்மிடையே மதிய உணவுக்கும்(லஞ்ச்), இரவு உணவுக்கும்(டின்னர்) இருக்கும் முக்கியத்துவம் காலை உணவுக்கு இல்லை. விருந்தினருக்கும் மதிய உணவு அல்லது இரவு உணவைத்தான் நாம் ஏற்பாடுச் செய்கிறோம்.ஆனால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை காலை உணவுதான் என்பது ஆய்வில் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் விஷயத்தில் காலை உணவு ரொம்ப முக்கியம்.
'பசித்தால் பத்தும் பறந்து போகும்' என்பார்கள். பசி வந்தால் நமக்கே எதுவும் புரியாது. அவ்வாறெனில் குழந்தைகளை கேட்கவேண்டுமா? மூளையின் செயல்பாடுகளுக்கு பசி பாதிப்பை ஏற்படுத்தும். ஊட்டச்சத்து மிகுந்த உணவுக்கு பதிலாக பிஸ்கெட்டும், பிரெட்டும் சாப்பிட்டுவிட்டு பள்ளி செல்லும் குழந்தைகளோ வகுப்பில் தூங்கி வழிகின்றனர். குழந்தைகள் படிப்பில் பின்தங்கியுள்ளார்கள் என்றால் அதற்கு காலை உணவை சாப்பிடவில்லை என்பதும் முக்கிய காரணமாகும்.
குழந்தைகளுக்கு காலை உணவு சரியில்லை என்றால்
வகுப்பில் தூங்கி வழிவார்கள்
படிப்பில் கவனம் செலுத்தமாட்டார்கள்
உற்சாகம் இல்லாமல் இருப்பார்கள்
படிப்பது எதுவும் உள்ளத்தில் பதியாது
படிப்பு ஒரு சுமையாக மாறும்
படித்தவற்றை நினைவூட்டுவது கடினமாகும்.
ஆனால், குழந்தைகளுக்கு காலை உணவை அளிக்கும் விஷயத்தில் பெற்றோர்கள் மிகுந்த குழப்பமான மனோநிலையில் உள்ளனர். ஏன் குழந்தைகள் காலை உணவை சாப்பிடமால் பள்ளிக்கூடம் செல்கின்றார்கள்? பல காரணங்கள் உள்ளன.
பசியில்லை, பள்ளிக்கூடம் செல்லும் அவசரத்தில் காலை உணவில் அக்கறை இல்லை, ஸ்கூல் வேன் வந்துவிடுமே என்ற பதட்டம், எப்பொழுதும் ஒரே காலை உணவு என்பதால் அதில் ஏற்படும் வெறுப்பு, ருசியின்மை, இரவில் தாமதமாகும் உணவு பழக்கம், பெற்றோரிடம் நேர மேலாண்மை இல்லாமை, சரியான திட்டமிடல் இன்மை, போதிய உறக்கம் இல்லாமை, அளவுக்கதிகமான பாட சுமை, பெற்றோரின் அவசரமான வாழ்க்கை முறை, அசிரத்தை என கூறலாம்.
மேலேக் கூறப்பட்ட ஏதேனும் ஒரு காரணமே உங்கள் குழந்தைகளின் காலை உணவு இழப்பதன் பின்னணியில் அடங்கியிருக்கும். காலையில் பசி அவ்வளவாக இருக்காது. இந்நிலையில் பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகளுக்கு காலை முதல் பெல் அடித்தவுடன் பசி வயிற்றை கிள்ளத் துவங்கும். ஆனால் என்ன செய்ய? மதியம் வரை அடக்கிக் கொண்டுதான் இருக்கவேண்டிய நிலை. இத்தகையதொரு சூழலில் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்த முடியுமா?
ஆகவே குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிகுந்த காலை உணவை அளிப்பதன் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் உணரவேண்டும்.
யூனிஃபார்ம் உடுத்தி, ஷூவும், ஷாக்சும் அணிந்து, டை கட்டினால் எந்த குழந்தையும் டிப்-டாப்பாக மாறிவிடும். ஆனால், வெளி அலங்காரத்தில் காரியமில்லை. நல்ல ஆடை அணிவதில் இருக்கும் கவனத்தையும், ஆர்வத்தையும் சத்தான உணவை குழந்தைக்கு அளிப்பதிலும் கவனம் செலுத்தவேண்டும். அப்பொழுதே அக்குழந்தை சமர்த்தாக படிப்பில் கவனம் செலுத்தும்.
இவ்விஷயத்தில் உங்களுக்கு சில ஆலோசனைகள்:
1.குழந்தைக்கு 7 மணிக்கே இரவு உணவை தயார் செய்து கொடுங்கள். எளிதில் ஜீரணமாகும் உணவாக இருக்கவேண்டும்.
2.இரவு 9 மணிக்கு குழந்தையை தூங்க அனுமதியுங்கள்.
3.காலை ஃபஜ்ர் வேளையில்(5 to 6) குழந்தையை எழச் செய்யுங்கள்.
4.காலையில் சற்று நேரம் ஏதேனும் விளையாட்டு, உடற்பயிற்சியில் ஈடுபட வையுங்கள்.
5.குழந்தை குளித்து முடித்து காலை உணவை முடிக்கும் வரை ஜோக்குகள், கதைகள், பாடல்கள் சொல்லலாம். இதனால் அவர்கள் உற்சாகமடைவார்கள்.
6.காலை உணவு ஊட்டச்சத்து மிகுந்ததா? என்பதை கவனியுங்கள்.
7.காலை உணவு குறித்து முந்தைய இரவே திட்டமிடுங்கள்.
8.வாரத்தில் 7 தினங்களும் 7 வகையான காலை உணவை தயாரியுங்கள்.
9.நேர மேலாண்மையை குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுங்கள்.
10.காலை எழுந்தவுடன் காலைக் கடன்கள், மார்க்க கடமைகள்(தொழுகை, திருக்குர்ஆன் ஓதுதல்), ஆடை அணிவது, சாப்பிடுவது ஆகியவற்றிற்கு எவ்வளவு நேரத்தை ஒதுக்கவேண்டும் என்பதை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தால் அவர்கள் பிற்காலத்தில் சிறந்த பிள்ளைகளாக மாறுவார்கள். அதேவேளையில் நீங்கள் அவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கவேண்டும். சொல்வதை விட நாம் செய்து காட்டும் பொழுதுதான் குழந்தைகள் அதில் இருந்து பாடம் படிப்பார்கள்.
காலை உணவு என்ன ஜோக்கா?
காலை உணவை தமாஷாக எடுத்துக் கொள்ளாதீர்கள். நமது ஊர்களில் பொதுவாக காலை உணவு இட்லி, தோசை, இடியாப்பம், உப்புமா, பொங்கல், அப்பம் போன்ற உணவுகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தவிடில்லாத அரசி மூலம் உருவாகும் இந்த உணவுகள் எவ்வாறு ஊட்டச்சத்தாக மாறும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும்.
உளுந்தை சேர்த்தால்தான் இட்லி ஊட்டச்சத்தாக மாறும். இதற்கு காம்பினேசனாக நார்சத்தும், வைட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு தூள் கிளப்பும். 'சாம்பார் ஈஸ் எ வெஜிடபிள் சூப்' என்று கூறுவதுண்டு.
தமிழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பச்சைக் காய்கறிகளின் சத்துக்கள் இணைந்த இட்லி-சாம்பார் காம்பினேசன்  காலை உணவு தான் குழந்தைகளுக்கு சிறந்த காலை உணவு என்பது நிரூபணமாகியுள்ளது.
எல்லாம் அடங்கிய பால் 'மில்க் ஈஸ் எ கம்ப்ளீட் ஃபுட்' என பள்ளிக்கூடத்தில் பயிலும் குழந்தை பால் குடிப்பதற்கு தயங்கும். ஆகையால் முற்றிலும் பால் குடிக்காவிட்டால் வைட்டமின்களின் குறைபாடுகள் ஏற்படும். நோய்களை உருவாக்கும். இதில் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
ஐஸ்க்ரீம் பிடிக்காத குழந்தைகள் இல்லை எனலாம். ஆகவே பாலில் ஐஸ்க்ரீம் தயாரிக்க தேவையான பவுடரை சேர்த்து புட்டிங் தயாரித்து கொடுக்கலாம். சில நாட்கள் பால் பாயசம் தயாரித்து கொடுங்கள். பாலுடன் ஆப்பிள் அல்லது இதர பழவகைகளை சேர்த்து ஜூஸ் தயாரித்துக் கொடுங்கள்.
பழ வகைகள்
பழங்கள் காலை சிற்றுண்டியின் வரப்பிரசாதம். உடலைக் குளிர்ப்பித்து, உரமாக்கும் நல்ல பல தாவர கூறுகளை, மங்கனீசு, செலினியம் போன்ற நுண்ணிய கனிமங்களை, பொட்டாசியம் கால்சியம் முதலான உப்புக்களை தன்னுள் கொண்டிருப்பதுடன் நோய் எதிர்ப்பாற்றலை வளர்க்கவும், உடல் எடை அதிகரிக்காமல் பேணவும் பழங்களுக்கு இணை ஏதுமில்லை. கொய்யா, பப்பாளித் துண்டுகள், வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை காலை நேரத்திற்கேற்ற பழங்கள். ஆரஞ்சு, திராட்சை இளங்காலையில் தவிர்க்கலாம். 11 மணி அளவில் சாப்பிடலாம்.
காலை உணவாக பழங்கள் சாப்பிடுவதில் மலச்சிக்கல் வராது; அதிலுள்ள கனிம உப்புச் சத்துக்களாலும், இனிப்புச் சத்தினாலும்(low glycemic smart carbohydrates) உடல் உறுதியும் கிடைக்கும். தேவையற்ற கொழுப்பு சேராமல், உடல் எடை கூடாமல் சர்க்கரை நோய் வராது தடுக்கவும் பழ உணவுப்பழக்கம் உதவும்
மதிய உணவு
காலை உணவைப் போலவே மதிய உணவிலும் அதிக கவனம் செலுத்தவேண்டும். உங்களுக்கு தயாரிப்பதற்கு எளிதான உணவுகளை குழந்தைகளுக்கு அளிப்பதில் கவனம் செலுத்தாதீர்கள். நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகளை தயாரியுங்கள். மதிய உணவில் குழந்தையின் உடல் நலனுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மதிய உணவில் அடங்கியிருக்கிறதா? என்பதை கவனிக்கவேண்டும். மதிய உணவுடன் பழ வகை ஏதேனும் கொடுத்து அனுப்புங்கள்.
எளிதான வேலை என கருதி பலரும் குழந்தைகளுக்கு நூடில்ஸ் தயாரித்து பள்ளிக்கு கொடுத்து விடுவார்கள். இதனால் அக்குழந்தை நூடில்ஸ் குழந்தையாக மாறிவிடும். இது குழந்தையின் ஆரோக்கியத்திற்கு கேடாகும். சோறு அதிகமாக கொடுப்பதை விட மதிய உணவில் பச்சைக் காய்கறிகளை அதிகமாக சேருங்கள்.
ஆகவே குழந்தைகள் ஆரோக்கியமாக வளர அவர்களது காலை உணவில் அதிக கவனம் செலுத்துவோம். சோம்பலை கைவிட்டு, திட்டமிட்டு. ரசித்து சமைத்து அதனை அன்புடன் உங்கள் குழந்தைகளுக்கு ஊட்டுங்கள். அவர்கள் சிறந்த பிள்ளைகளாக வளர கைக்கொடுங்கள்!
நன்றி: தூதுஓன்லைன்.காம்


--
*more articles click*
www.sahabudeen.com


வெள்ளி, 23 மே, 2014

நீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes

நீரழிவு பற்றிய உண்மைகள் – myths about diabetes

இனிப்பைத் தவிர்த்தாலும் நீரிழிவு வருமாம்!!!
உலகில் நீரிழிவு என்னும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோர் அதிகம் உள்ளனர். குறிப்பாக இந்தியாவில் சொல்ல முடியாத அளவில், உலகிலேயே அதிகமானோர் இந்நோய்க்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவை அனைத்திற்கும் வாழ்க்கை முறையும், பழக்கவழக்கங்களும் தான் பெரும் காரணம். ஆனால் பெரும்பாலான மக்கள் மனதில், இந்த சர்க்கரை நோயைப் பற்றிய தவறான கருத்துக்கள் நிலவுகின்றன.
Diabetes is a disease that has attacked more than 1/3rd of the world's population. Our modern lifestyles are to be blamed for the rapid pace at which the number of diabetics is growing in the world. But along with the number of diabetics, the myths about diabetes are also growing at an alarming pace.
மேலும் அந்த தவறான கருத்துக்களால், அவர்கள் சர்க்கரை நோய் வருவதற்கான காரணத்தை சரியாக புரிந்து கொள்ளாமல், மூடநம்பிக்கையுடன் நம்பிக் கொண்டிருக்கின்றனர். இதனால் சர்க்கரை நோய் வராது என்று நினைத்தாலும், வந்துவிடுகிறது. எனவே அவ்வாறு சர்க்கரை நோயை பற்றி தவறாக நினைத்து, நீரிழிவு வந்தவர்களிடம், இந்த நோய் வருவதற்கான உண்மையான காரணத்தை கேட்டு தெரிந்து கொண்டு, அதனை உங்களுக்காக கொடுத்துள்ளோம்.
There is a lost misinformation about diabetes that leads to myths and speculations. Most of us do not know the facts about diabetes. Almost everyone these days has a close friend or family member who is a diabetic. We collect diabetes facts from these personal sources and construct the myths around this disease.
சரி, இப்போது சர்க்கரை நோயைப் பற்றி மக்கள் மத்தியில் இருக்கும் தவறான கருத்துக்கள் என்னவென்று பார்த்து, மனதில் இருந்து அதனை மாற்றிக் கொள்ளலாமா!!!
There is lot to know about diabetes and these myths only cloud our judgement. Whether or not you have high blood sugar, you have to know certain facts about diabetes. It is impossible to control diabetes without busting some basic myths. That is why, FriendsTamil is busting the worst myths about diabetes today.
These are some of the most dangerous myths about diabetes that needs to be busted.
  • உண்மை – 1 : "சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், சர்க்கரை நோய் வராது" என்று நினைப்பது. உண்மையில் நீரிழிவானது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் ஏற்படும் ஒன்று. அதற்கு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால் மட்டும் சர்க்கரை நோய் வராது என்பதில்லை. மேலும் அவ்வாறு சர்க்கரை சாப்பிடாமல் இருந்தால், கார்போஹைட்ரேட்டானது, உடலில் உள்ள குளுக்கோஸை உடையச் செய்துவிடும்.
  • I don't eat sweets so I won't get diabetes:Diabetes is a lifestyle disorder; it has nothing to do with your sugar consumption. And even if you don't eat sweets, the carbohydrates that you eat will be broken down into glucose in your body.
  • உண்மை – 2: "இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் சர்க்கரை நோயானது முற்றிவிட்டது. ஆகவே நாம் வாழ்வின் இறுதி நிலைக்கு வந்துவிட்டோம்" என்று எண்ணுவது. நீரிழிவு நோய்க்கு புற்றுநோயைப் போன்று எந்த ஒரு நிலையும் இல்லை. உண்மையில் இன்சுலின் எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள சர்க்கரையின் அளவானது கட்டுப்படுவதோடு, நீண்ட நாட்கள் நன்கு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்பதால் தான்.
  • If the doctor puts me on insulin, my diabetes is in the last stage: Diabetes does not have any stages like cancer. Your blood sugar can be high, low or normal. If you take insulin and control your diabetes, you can live a healthy life for decades.
  • உண்மை – 3 "நீரிழிவு இருப்பதால், கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை தொடவே கூடாது" என்று இருப்பது. கார்ப்போஹைட்ரேட் தான் உடலின் எரிபொருள். அத்தகைய எரிபொருளானது நீரிழிவு நோயாளிகளுக்கும் மிகவும் முக்கியம். எனவே கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முற்றிலும் தவிர்க்காமல், அதனை உட்கொண்டு, தினமும் உடற்பயிற்சி மற்றும் வேண்டிய மருந்துகளை சரியான உட்கொள்ள வேண்டும். எனவே சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பதை தவிர்த்து, நார்ச்சத்துள்ள கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உட்கொள்வது நல்லது.
  • I am diabetic so I don't eat any carbs at all: Carbs are the fuel of the body and even diabetics cannot cut out carbs completely. You have to exercise and take medications for diabetes. Try to eat fibrous carbohydrates instead of refined ones.
  • உண்மை – 4 "நீரிழிவு இருக்கும் போது இனிப்புள்ள காய்கறிகளை சாப்பிட்டால், நீரிழிவு அதிகரிக்கும்" என்று நினைப்பது. நீரிழிவு உள்ளவர்கள் அதிகமாக கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை உண்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரிக்கும். அதற்காக இனிப்பாக இருக்கும் காய்கறிகளான பூசணிக்காயில், கிளைசீமிக் இன்டெக்ஸானது இல்லை. சொல்லப்போனால், இது உடலில் இன்சுலின் சுரப்பைத் தடுக்கும் பொருட்களை எதிர்த்துப் போராடுவதில் சிறந்தது.
  • Pumpkin and all other 'sweet' vegetables are taboo for diabetics: Diabetics should not eat foods that have a high glycemic index as they raise your blood sugar levels quickly. Pumpkin may taste sweet but does not have a high glycemic index. In fact it is beneficial for treating insulin resistance.
  • உண்மை – 5 "நீரிழிவு நோயாளிகள் எந்த ஒரு இனிப்புகளையும் உணவில் சேர்க்க கூடாது" என்று எண்ணுவது. உண்மையில் இந்நோய் உள்ளவர்கள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்கக் கூடாது. எனவே இயற்கை இனிப்புகளான தேன் மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். ஆனால் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியான அளவில் சாப்பிட்டால், அவை புற்றுநோயை உண்டாக்கும்,
  • Diabetics must always have sugar substitutes: It is better to have natural sugars like honey and fruits instead of saccharine. This is because many sugar substitutes are carcinogenic; regular intake of these artificial sugars can cause cancer.
  • உண்மை – 6 "என் குடும்பத்தில் யாரக்கும் நீரிழிவு இல்லை. எனவே எனக்கும் நீரிழிவு வராது "என்று நினைப்பது. நீரிழிவு பெரும்பாலும் ஒரு பரம்பரை நோயாக இருக்கலாம். ஆனால், இவை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை. அதாவது போதிய உடற்பயிற்சி, டென்சனான வாழ்க்கை போன்றவையும் நீரிழிவை உண்டாக்கும்.
  • No one in my family has diabetes so I am safe Diabetes is hereditary to a large extent. However, it is mainly a lifestyle disorder. So if you don't get time to exercise and have a very stressful life, you are in the high risk zone for getting diabetes.
  • உண்மை – 7 "குண்டாக இல்லாவிட்டால், நீரிழிவு நோய் வராது" என்று இருப்பது. உண்மையில் அதிகப்படியான உடல் எடை நீரிழிவு வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும் தான். அதே சமயம், நீரிழிவு உடலுக்கு வேண்டிய எடை இல்லாவிட்டாலும், ஏற்படும். எனவே உடல் எடை குறையும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
  • I am not obese so I can't be diabetic: Obesity definitely increases the chances of getting diabetes. However, diabetes can also make you lose weight. So be careful if you drop pounds abruptly and effortlessly.
  • உண்மை – 8 "குழந்தைகளுக்கு டைப்-2 நீரிழிவு வராது" என்பது. பொதுவாக அனைவரும் குழந்தைகளுக்கு டைப்-1 நீரிழிவு தான் ஏற்படும் என்று நினைக்கிறோம். ஆனால் குழந்தைகள் அதிகப்படியான ஜங்க் உணவுகளை சாப்பிட்டாலும் டைப்-2 நீரிழிவானது ஏற்படும்.
  • Kids don't have type 2 diabetes : We usually think that kids only have type 1 diabetes which is a birth defect. Considering the amount of junk food that kids eat today, it is not unheard of for kids to develop type 2 diabetes as well.
  • உண்மை – 9 "கர்ப்பகால நீரிழிவானது தற்காலிகமானது" என்று நினைப்பது. உண்மை தான், கர்ப்பகால நீரிழிவு பிரசவத்திற்கு பின் போய்விடும். ஆனால் அந்த நீரிழிவு முற்றிய நிலையில், பிற்காலத்தில் அது டைப்-2 நீரிழிவாக வந்துவிடும்
  • Gestational diabetes is temporary thus not a threat: It is true that gestational diabetes goes away after the pregnancy is over. However, women who suffer from gestational diabetes are at high risk to develop type 2 diabetes later in life.
  • உண்மை – 10: "நான் இன்சுலின் எடுக்கிறேன். ஆகவே நான் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்" என்பது. நீரிழிவைக் கட்டுப்படுத்துவதற்கு, டயட் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றம் நிச்சயம் வேண்டும். எனவே இன்சுலின் எடுத்தால், எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று இருந்தால், பின் நீரிழிவானது முற்றி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
  • I take insulin/medications for diabetes so I can eat whatever I want: To control diabetes, you need to alter your diet and lifestyle. Taking insulin or medications does not give you the license to eat or do whatever you want.
நன்றி: நண்பன் தமிழ்


--
*more articles click*
www.sahabudeen.com


கேஸ் சிலிண்டரை சேமிக்க சிறந்த வழி முறைகள்.

' மாதம் பிறந்தா இதுக்கு அழுதே ஆகணும்னு... ' ஒரு பட்டியல் இருக்கும். அதில் ஒன்ற காஸ் ...

Popular Posts