லேபிள்கள்

வியாழன், 30 ஜனவரி, 2014

கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!

கால் விரல் நகங்கள் பராமரிக்க வழிகள்!

எப்படி முகத்தை அழகாக்குவதற்கு அத்தனை பராமரிப்புக்களை கொடுக்கிறோமோ, அதேப் போல் நகங்களுக்கும் சரியான பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.
- வெளியே போய்விட்டு வீட்டிற்கு வந்ததும், பாதங்களை வெதுவெதுப்பான நீரால், ன்கு சுத்தமாக கழுவ வேண்டும். அவ்வாறு கழுவும் போது, நகங்களையும் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் கால்களில் உள்ள அழுக்குகள் நீங்கிவிடும்.
- நகங்களை அழகாக்குவதற்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் இருக்கும். அவ்வாறு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் உள்ளவர்கள், வாரத்திற்கு 1-2 முறையாவது, நல்ல நெயில் பாலிஷ் ரிமூவர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் தான், நகங்கள் நன்கு வலிமையோடு, ஆரோக்கியமாக இருக்கும்.
- பாதங்களை வெதுவெதுப்பான சோப்பு நீரில் ஊற வைக்க வேண்டும். வேண்டுமெனில் அத்துடன் சிறிது நறுமண எண்ணெய்கள் அல்லது கல் உப்புக்களை சேர்த்துக் கொள்ளலாம். குறிப்பாக பாதங்களை 15 நிமிடமாவது ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களில் உள்ள கிருமிகள் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.
- பாதங்கள் மற்றும் கால் விரல் நகங்களைச் சுற்றியுள்ள இடங்களை ஸ்கரப்பர் பயன்படுத்தி தேய்த்து, அங்கு தங்கியுள்ள இறந்த செல்கள் மற்றும் கிருமிகளை வெளியேற்றவும். முக்கியமாக இவ்வாறு தேய்க்கும் போது, அளவுக்கு அதிகமாக தேய்க்கக் கூடாது.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

புதன், 29 ஜனவரி, 2014

நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?



--
*more articles click*
www.sahabudeen.com


நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?

நெய் உடலுக்கு ஆரோக்கியமற்றது என்று தான் அனைவரும் நினைக்கின்றோம். ஆனால் அது அளவுக்கு அதிகமானால் தானே தவிர, குறைவான அளவில் எடுத்தால் அல்ல.
ஏனெனில் சுத்தமான நெய்யில் ஃபேட்டி ஆசிட் அல்லது சுத்திகரிக்கப்பட்ட கொழுப்புகள் 89 சதவிகிதம் குறைவாக உள்ளது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீட்டிலேயே வெண்ணெயை உருக்கி நெய்யாக மாற்றுவது தான், சுத்தமான நெய். இதய நோய் மற்றும் அதிக எடை இல்லாமல் இருப்பவர்கள், சுத்தமான நெய்யை சாப்பிடலாம்.
அதுவே உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், முற்றிலும் நெய்யை தவிர்க்க வேண்டும். மேலும் ஒரு நாளைக்கு ஒருவர் 10-15 கிராம் நெய் தான், உடலில் சேர்க்க வேண்டும்.
நெய் உடலுக்கு ஆரோக்கியமானது தானா?
தொடர்ச்சியாக நெய்யை உடலில் சேர்த்து வந்தால், உடல் மற்றும் மனம் உறுதியடையும், மற்றும் உடலும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் இதை சாப்பிட்டால் உடலில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறிவிடும். அதிலும் பார்வை, தசைகள் போன்றவை ஆரோக்கியமாக இருக்கும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு, நெய் ஒரு சிறந்த வழி. ஏனெனில் அவர்கள் வெண்ணெய்க்கு பதிலாக நெய்யை பயமின்றி சாப்பிடலாம். வெண்ணெயுடன் ஒப்பிடும் போது நெய்யில் மிகவும் குறைவான அளவில் கொழுப்பு உள்ளது. இதனால் உண்ணும் உணவுகள் எளிதில் செரிமானமடைந்துவிடும்.
சுத்தமான நெய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து சேகரிக்க வேண்டும் என்பதில்லை. நெய்யானது உடல் செரிமான மண்டலத்தை சீராக இயக்குவதோடு, தினமும் உடற்பயிற்சி செய்தால் உடல் எடையை குறைப்பதற்கும் உதவும்.
நெய்யில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துக்கள் உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும், கரையக்கூடிய கொழுப்புகள். ஆகவே தான் இது உடல் எடையை அதிகரிக்காது என்று சொல்கின்றனர் நிபுணர்கள். சொல்லப்போனால் நெய்யில் செறிவூட்டப்பெற்ற கொழுப்புகள் அதிகம் உள்ளதால், இது உடலில் வைட்டமின்களை உறிஞ்சிக் கொள்கிறது.
சமையலில் பயன்படுத்தும் சமையல் எண்ணெயை விட நெய் மிகவும் சிறந்தது. ஏனெனில் அந்த எண்ணெய்கள் அதிக வெப்பத்தில் கருகிவிடும்.  ஆனால் நெய்யானது அவ்வாறு இல்லை, அது எவ்வளவு வெப்பத்திலும் வாசனையுடன் இருக்குமே தவிர, கருகாமல் இருக்கும்.
உடலுக்கு ஒரு சில கொழுப்புகளானது மிகவும் அவசியமானது. ஏனெனில் அந்த கொழுப்புகள் தான் செரிமான மண்டலத்தில் இருந்து வெளிவரும் ஆசிட், குடல் வாலை பாதிக்காமல் தடுக்கிறது. மேலும் இது நரம்பு, சருமம் மற்றும் மூளையை வலுவாக்குகிறது.
http://www.tamilhotpage.com/?p=138

செவ்வாய், 28 ஜனவரி, 2014

இறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்கள்)

இறந்தோரின் பெயரால் செய்யபடும் புதுமைகள் (பித் அத்கள்)

மார்க்க காரியங்களில் ஒரு அமலை செய்தால் அது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுடைய சொல்,செயல்,அங்கீகாரம் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும்.அப்படி எதுவுமே இல்லமால் நாமாக ஒன்றை மார்க்கம் என்று செய்தால் அதனுடைய விளைவு நம்மை நரகத்தில் சேர்த்து விடும் என்பது தெளிவான நபிகளாரின் எச்சரிக்கை..
கீழே நாம் தொகுதிருப்பவை அனைத்தும் இஸ்லாத்தாலும்,நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாலும் கற்று தர படாதவை இவைகள் அனைத்தும் இறந்தோரின் பெயரால் செய்ய படும் புதுமைகள்…….
* மய்யித்துக்கு நகம் வெட்டுதல்; பல் துலக்குதல்; அக்குள் மற்றும் மர்மஸ்தான முடிகளை நீக்குதல்
*மய்யித்தின் பின் துவாரத்திலும் மூக்கிலும் பஞ்சு வைத்து அடைத்தல்
*ஜனாஸாவைக் குளிப்பாட்டும் போது சில திக்ருகளை ஓதுதல்
* குளிப்பாட்டும் போது மய்யித்தின் நெற்றியில் சந்தனத்தாலோ, அல்லது வேறு நறுமணப் பொருட்களாலோ எதையும் எழுதுதல்
* ஜனாஸா எடுத்துச் செல்லும் போது சில திக்ருகளைக் கூறுதல்
* ஜனாஸா தொழுகையில் ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை அவிழ்த்து உயர்த்துதல்
* இறந்தவருக்காக யாஸீன் ஓதுதல்
* இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா, ஏழாம் ஃபாத்திஹா, நாற்பதாம் ஃபாத்திஹா, கத்தம், வருட ஃபாத்திஹாக்கள் ஓதுதல்
* இறந்தவருக்காக ஹல்கா, திக்ருகள், ராத்திபுகள் நடத்துதல்
* இறந்தவர் வீட்டில் விருந்து அளித்தல்
* கப்ரின் மேல் எழுதுதல்; கல்வெட்டு வைத்தல்
* கப்ருகளைக் கட்டுதல்; கப்ருகளைப் பூசுதல்
* கப்ருக்கு அருகே நின்று தல்கீன் ஓதுதல்
* ஆண்டு முழுவதும் சோகம் அனுஷ்டித்தல்
* உடலுக்கு அருகில் விளக்கேற்றி வைத்தல்
* உடலுக்கு அருகில் ரொட்டி போன்ற உணவுகளை வைத்தல்
* இறந்தவர் வருவார் என்ற நம்பிக்கையில் வீட்டின் வாசலில் விடிய விடிய விளக்கு போடுதல்
* அடக்கம் செய்து முடிக்கும் வரை இறந்தவரின் குடும்பத்தார் சாப்பிடாமல் இருத்தல்
*இறந்தவரின் வீட்டிலிருந்து மாதவிடாய் மற்றும் குளிப்புக் கடமையானவரை வெளியேற்றுதல்
*பூக்களை தூவி ஜனாஸாவை எடுத்து செல்லுதல்
* உடலுடன் உணவுப் பொருள் கொண்டு சென்று கப்ரில் வினியோகம் செய்தல்
* கப்ரில் பன்னீர் தெளித்தல்,பூ மாலைகளை போடுதல்
* அடக்கம் செய்து விட்டு, இறந்தவரின் வீடு வரை வந்து விட்டுச் செல்லுதல்; அங்கு முஸாஃபஹா செய்தல்,வரிசையில் நின்று ஸலாம் கொடுத்தல்
* இறந்தவர் விரும்பிச் சாப்பிட்டதை தர்மம் செய்தல்
* இறந்தவருக்காகக் குர்ஆன் ஓதுதல்
* அடக்கம் செய்த மறுநாள் காலையில் கப்ரைப் போய் பார்த்தல்
* வெள்ளிக்கிழமை தோறும் பெற்றோர் கப்ரை ஸியாரத் செய்தல்
* ஷஃபான் 15 அன்று கப்ருக்குச் செல்லுதல்
* ஷஃபான் 15 அன்று இறந்தவர் பெயரால் உணவு சமைத்தல் பாத்திஹாக்கள் ஓதுதல்
* ஷஃபான் 15ல் அடக்கத்தலத்தை அலங்காரம் செய்தல்,இனிப்பு பதார்த்தங்களை வழங்குதல்
* இரண்டு பெருநாட்களிலும் கப்ருகளுக்குச் செல்லுதல்
* திரும்பும் போது கப்ருக்கு முதுகைக் காட்டாமல் திரும்புதல்
இது போன்ற செயல்கள் அனைத்தும் பித்அத்களாகும். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் சொல்லித் தராததைச் செய்தால் அது நன்மையின் வடிவத்தில் இருந்தாலும் அதன் விளைவு நரகமாகும்.
பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட போலிச் சடங்குகளை விட்டொழித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்தவற்றை மட்டும் செய்து நன்மைகளை அடைவோம்.
நேர் வழி காட்ட அல்லாஹ் போதுமானவன்..
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

திங்கள், 27 ஜனவரி, 2014

எப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்!

எப்போதும் உற்சாகமாக திகழ்வதற்கு சில எளிய வழிகள்!

வாரம் இரு முறை நன்றாக உடம்பு மற்றும் தலையில் எண்ணெயை ஊற்றி மசாஜ் செய்து நன்றாக ஊறிய பின்னர் சீயக்காய் போட்டுக் குளிப்பதன் மூலம் உடலில் வலி, சோர்வு நீங்கி, உற்சாகம் பிறக்கும். குளியல் அறையில் கொதிக்க கொதிக்க வெந்நீரை ஊற்றி கதவை இரண்டு நிமிடம் மூடிவிடுங்கள், பின்னர் குளிக்க செல்லுங்கள். நன்றாக வியர்த்து, உடலில் உள்ள கழிவுகள் தோல் வழியாக வெளியேறும். தினமும் சூரிய வெளிச்சம் படும்படியாக 15 நிமிடங்கள் நில்லுங்கள். இது மனதை ஒரு நிலைப்படுத்தும். சருமத்தில் வைட்டமின் டி சத்தும் ஊடுருவும்.
வறண்டுபோன பாதத்தில் பெப்பர்மின்ட் ஆயிலைத் தடவி வந்தால் பஞ்சு போன்று மென்மையாக இருக்கும். கைக்குட்டையில் ரோஜா எண்ணெய் 3 சொட்டுகள் விட்டு அடிக்கடி நுகர்ந்து பாருங்கள். மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். கடலை மாவுடன், நன்றாகப் பொடித்த காய்ந்த ரோஜா மொட்டு, ஆவாரம்பூ, சம்பங்கி, மல்லி இவற்றை சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். இந்த பொடியை உடம்பில் தடவி, மென்மையாக மசாஜ் கொடுங்கள். சென்ட் அடித்தது போன்று அன்று முழுவதும் உடல் வாசமாக இருக்கும். உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது தெரப்பி. அதேபோல், நாம் உட்கொள்ளும் உணவிலும் அக்கறை காட்டினால் ஆரோக்கியம் அரவணைக்கும்.
அன்றாட உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டிய சில ஊட்டச்சத்துக்கள்

* காலை 5 .30 மணிக்கு தேன் கலந்து ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு பருகுங்கள். இதனால், அன்று முழுவதும், வயிறு லேசாக இருக்கும். எந்தப் பிரச்னையும் சீக்கிரத்தில் அண்டாது.

* காலை 7.30 மணிக்கு வெரைட்டியான மூன்று வகை பழத்துண்டுகள், ஒரு டம்ளர் பால் அருந்துங்கள். மூளை புத்துணர்ச்சி பெறும்.

* காலை 9.30 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் சாறு கண்ணை பிரகாசமாக வைத்திருக்கும்.

* காலை 11.30 மணிக்கு ஒரு கிண்ணம் வேகவைத்த காய்கறிகள், முளைவிட்ட பயிறு கலந்து தயிர் சாலட். இது சருமத்தை பளபளவென வைத்திருக்கும்.

* மதியம் 2.30 மணிக்கு ஒரு டம்ளர் மோர். மாலை 4.30 மணிக்கு ஜூஸ், பழங்கள். 6 மணிக்கு ஒரு டம்ளர் கேரட் ஜூஸ். இப்படி நீர்சத்து நிறைந்த மோர், ஜூஸ், வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளும்போது உடலுக்கு குளிர்ச்சியும், மனதுக்கு மகிழ்ச்சியும் கிடைக்கும்.

* இரவு 7.40 மணிக்கு இரண்டு எண்ணெய் சேர்க்காத சப்பாத்தி, பழங்கள், தயிர்சாலட். சிறிது பருப்பு. வயிறை மிதமாக வைத்திருக்கும்.
இப்படி, ஒரு மாத உணவை பட்டியலிட்டு சாப்பிடும்போது, உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறிவிடும். உடலில் எடை கூடாது. சருமத்தில் நிறமும் பொலிவும் கூடும். உடலும் உள்ளமும் உற்சாகத்தில் மிதக்கும்.
http://www.onlytamil.in/2013/03/blog-post_25.html

--
*more articles click*
www.sahabudeen.com


ஞாயிறு, 26 ஜனவரி, 2014

கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்…

கேஸ் விபத்துக்களும், நாம் அறிய வேண்டியவைகளும்

LPG சிலின்டர் நாம் வீடுகளில் தற்போது பயம் அற்று பயன் படுத்துகிறோம். ஆனால் முந்தைய காலங்களில் LPG சிலின்டர் என்றாலே பயந்து பயன்படுத்தாமல் இருப்பார்கள் பலர் .காலப்போக்கில் அது பழகிப்போய் இப்போதெல்லாம் எங்கும் காஸ் ஸ்டவ் தான் . அதாவது LPG என்று சொல்லப்படுகிற நீர்ம பெட்ரோலிய வாயு ( Liquefied Petroleum Gasas) தான் நமது வீட்டின் சமையல் அறைகளில் பயன்படுத்தபடுகிறது . ஆனால அவ்வப்போது பல தீ விபத்துக்கள் நடைபெற்று கொன்று தான் இருக்கிறது . குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு கூடசென்னையில் உள்ள வண்ணாரபேட்டையில் கியாஸ் கசிந்து நான்கு பேர் பலியானார்கள் மேலும் இரண்டு நபர்கள் படுகாயம் அடைந்தார்கள் .இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க நாம் கவனிக்க வேண்டிய விடையங்கள் இருக்கிறது அதனை நாம் இங்கு பார்க்கலாம்
LPG நாம் பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டிய சில காரியங்களை
நாம் பார்க்கலாம் .!!
LPG சிலின்டர் நமது வீட்டிற்கு வரும்பொழுதே , அந்த சிலிண்டரின் ஆயுள் காலத்தை கவனித்த பின்பு தான் வாங்க வேண்டும். சிலிண்டருக்கு ஆயுள் காலம் உண்டா என்றால் உண்டு . கீழ் உள்ள படத்தை பாருங்கள் .
இதுலே D13 இருக்கு, கவனிச்சீங்களா? இதுக்கு என்ன அர்த்தம்?
இது வருஷத்தை நான்காகப் பிரிச்சு நான்காம் கால் பகுதியைக் குறிக்குது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை
இது இந்த சிலிண்டரின் காலாவதியைக் குறிப்பிடும் சொல். அதாவது 2013 டிசம்பர் வரைக்கும்தான் இந்த சிலிண்டருக்கு ஃபிட்னெஸ்(Fitness) இருக்கு. இதுக்கப்புறம் அதுலே உள்ள பாகங்கள் ஏதாவது பழுதடையும் வாய்ப்பு இருக்கு. பயன்படுத்தக்கூடாது என்ற எச்சரிக்கை.
காலாவதியானவைகளை இன்னொருமுறை அதுக்குண்டான பரிசோதனைகளைச் செய்து சரியாக்கி மறுபடி புது அட்டையுடன் பயனுக்கு விடலாம்
சிலிண்டர் வெடித்து மரணம் என்றெல்லாம் பத்திரிக்கைச் செய்தி வர்றதை நாமும் எத்தனை முறை வாசிச்சு இருக்கோம்.
இதுவரை இப்படி சிலிண்டருக்கு ஒரு காலாவதி இருக்குன்னு எனக்குத் தெரியவே தெரியாது. உங்களில் சிலருக்குத் தெரியாம இருந்திருக்கலாம்.
சரி, எப்போ இது காலாவதின்னு தெரிந்துகொள்ளுவது ?
இங்கே பாருங்க எப்படின்னு ஒரு சுலப வழி.
The alphabets stand for quarters -
A
என்பது மார்ச் (முதல் காலாண்டு)
B
என்பது ஜூன் (இரண்டாம் காலாண்டு)
C
என்பது செப்டம்பர் (மூன்றாம் காலாண்டு)
D
என்பது டிசம்பர் (நான்காம் காலாண்டு)
சிலிண்டரின் ஆயுள் காலம் அந்த சிலிண்டருக்கு மேல் குறிப்பிடபடி எழுதப்பட்டிருக்கும் .
உதாரணமாக D-13 என்று இருந்தால் டிசம்பர் 2013 என்று அர்த்தம்
இதில் 4 ஆங்கில எழுத்துகள் (A, B, C, D) என்று வரும் . இந்த நான்கு எழுத்துகளும் முதல் காலாண்டு (மார்ச் வரை) , இரண்டாம் காலாண்டு ( ஜூன் வரை) , மூன்றாம் காலாண்டு (செப்டம்பர் வரை), நான்காம் காலாண்டு (டிசம்பர் வரை) என்று பொருள்படும் . தொடர்ந்து எழுதபட்டிருக்கும் இரண்டு எண்களும் வருடத்தை குறிக்கும் .
பொதுவாக LPG வாயுவுக்கு மணம் கிடையாது. ஆனால் ஏதும் கசிவு ஏற்பட்டுளதா என்பதை கண்டுகொள்ள தான் அதனுடன் மணம் உண்டு பண்ணும் காரணிகள் சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் ஏதேனும் LPG மணம் ஏற்பட்டால் உடனடியாக எந்த மின்சார இணைப்புகளும் கொடுக்க கூடாது. ஏன் எனில் அதன் மூலம் எளிதில் தீ பிடிக்க வாய்ப்புண்டு .
பொதுவாக LPG, சாதாரண காற்றை விட அடர்த்தியாக உள்ள காரணத்தினால் , ஏதேனும் கசிவு ஏற்பட்டால் தரையை ஒட்டி தான் பரவி காணப்படும் . அதனால் தரை பகுதியில் நல்ல காற்றோட்டம் உருவாகும் படி எல்லா கதவுகளையும் (கசிவு ஏற்பட்டால்) திறந்து வைப்பது நல்லது .
சிலிண்டர்கள் எப்பொழுதும் நேராக (vertically) தான் வைக்க வேண்டும். படுக்க (Horizontally) வைக்க கூடாது . அதிக அழுத்தத்தில் LPG உள் நிரப்பப்பட்டிருப்பதால் சிலிண்டரின் வால்வில் ஏதாவது பாதிப்பு ஏற்ப்பட்டால் சிலிண்டர் வெகு வேகமாக பின் நோக்கி (Like Rocket) தள்ளப்படும் . அதனால் ஏற்ப்படும் விளைவு மிக மோசமானது .
வீடுகளுக்கு சிலிண்டர் மாற்றும் போது, நமக்கு வர்ற சிலிண்டரில் இந்த விவரத்தைக் கவனிச்சுப் பாருங்க. காலாவதியானதை 'வேணாம்'ன்னு கண்டிப்பாச் சொல்லுங்க. இந்த விவரத்தை நமக்குத் தெரிஞ்சவுங்க, தெரியாதவங்கன்னு இல்லாம கூடியவரை அனைவருக்கும் சொல்லுங்க.
விபத்து, மரணம் இவைகளைத் தடுக்க, ஏதோ நம்மால் ஆன ஒரு காரியம். எதுக்கும் எல்லாரும் அதிகம் கவனமா இருங்க
http://kulasaisulthan.wordpress.com


--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சனி, 25 ஜனவரி, 2014

பருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்

பருக்களால் ஏற்படும் தழும்புகள் மறைய எளிய வழிகள்
பருக்கள் வருவதை விட, அவை விட்டுச் செல்லும் வடுக்கள்தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பருக்கள் வந்ததால் முகத்தில் இருக்கும் ஓரிரு வடுக்களை நிச்சயமாக போக்க முடியும். முதலில் வடுக்கள் ஏன் ஏற்படுகின்றன என்றால், முகப்பரு வந்ததும் அதனை நகத்தால் கீறுகிறார்கள். நகம் பட்டாலே வடு விழுந்துவிடும்.
 அதனை உடனடியாக போக்க முடியாது. சிறிது காலம் பிடிக்கும். சிலருக்கு பருக்கள் வந்து முகத்தில் சிறிய பள்ளங்களே ஏற்பட்டிருக்கும். முக‌ப்பரு வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்குவத‌ற்கு மு‌ன்பு, ஐ‌ஸ் க‌ட்டிகளா‌ல் ஒ‌த்தட‌ம் கொடு‌த்த ‌பிறகு அ‌தி‌ல் கை வை‌ப்பது ந‌ல்லது. இதனா‌ல் பரு‌க்க‌ளி‌ன் வ‌ழியாக ர‌த்த‌ம் வெ‌ளியாவது த‌வி‌ர்‌க்க‌ப்படு‌கிறது. 

பொதுவாக பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அது மு‌ற்‌றிய ‌நிலை‌யி‌ல் அ‌தி‌ல் இரு‌க்கு‌ம் வெ‌ள்ளையான ‌திரவ‌த்தை எடு‌த்து ‌விடுவது ‌மிகவு‌ம் மு‌க்‌கிய‌ம். அ‌திலு‌ம் ம‌ற்ற இட‌ங்க‌ளி‌ல் அவை படாம‌ல் எடு‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சியமா‌கிறது. மேலு‌ம், பருவை ‌நீ‌க்குவது ‌எ‌ன்பதை கவனமாக செ‌ய்ய வே‌ண்டு‌ம். பருவை கைகளா‌ல் ‌கி‌ள்‌ளி எடு‌த்து‌விடு‌கிறோ‌ம். 

அ‌தி‌ல் இரு‌ந்து வெ‌ள்ளையான ‌திரவ‌ம் வெ‌ளியான ‌பிறகு ர‌த்த‌ம் வரு‌ம். அதனை துடை‌த்து‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு அ‌ப்படியே ‌வி‌ட்டு‌விட‌க் கூடாது. அ‌ப்படி ‌வி‌ட்டு‌வி‌ட்டா‌ல்தா‌ன் பரு‌க்க‌ள் பரவு‌கிறது. பரு‌க்க‌ள் வ‌ந்தா‌ல் அதனை ‌நீ‌க்‌கியது‌ம் உடனடியாக அதனை சு‌த்த‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டு அ‌தி‌ல் ஏதாவது ஒரு பே‌ஸ் பே‌க்கை (‌க்‌ரீ‌ம்) போட வே‌ண்டு‌ம். 

அ‌ப்படி போடா‌வி‌ட்டா‌ல், பரு‌வி‌ல் ஏ‌ற்ப‌ட்ட துளை‌‌க்கு‌ள் தூசு, துக‌ள்க‌ள் போ‌ய் பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம். முகப்பரு வந்தவர்கள் அதிலும், அதிகமாக முகப்பருவினால் பாதிக்கப்படுபவர்கள் தங்களது முகத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். பருக்கள் வருபவர்கள் எந்த விதமான க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. 

சிலரது முகத்தில் விரலைக் கூட வைக்க முடியாது. அந்த அளவிற்கு வலி எடுக்கும். அவர்கள் அழகுக் கலை நிபுணரிடம் செல்வதை விட, ஒரு தோல் மருத்துவரிடம் செல்வதுதான் நல்லது. பருவை ம‌‌ட்டு‌ம் ‌நீ‌க்‌கி‌வி‌ட்டா‌லு‌ம், உ‌ள்ளு‌க்கு‌ள் இரு‌ந்து ‌சீ‌‌ழ் போ‌ன்ற ஒ‌ன்று வ‌ந்து கொ‌ண்டே இரு‌க்கு‌ம். 

அதனை எ‌வ்வளவுதா‌ன் எடு‌க்க முடியு‌ம். ஒரு வேளை அது சரும‌த்‌தி‌ற்கு அடி‌யிலேயே த‌ங்‌கி‌வி‌ட்டாலு‌ம் ‌பிர‌ச்‌சினையா‌கி‌விடு‌ம். அ‌திகமாக எடு‌த்தாலு‌ம் பரு இரு‌ந்த இட‌த்‌தி‌ல் வடு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம். எனவே பருவை அழகு‌க் கலை ‌நிபுண‌ரிட‌ம் செ‌ன்று ‌நீ‌க்‌கி‌க் கொ‌ள்வதை ‌விட, அ‌திகமாக பரு இரு‌ப்பவ‌ர்க‌ள் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் செ‌ல்வதுதா‌ன் ந‌ல்லது. 

பரு‌க்க‌ளி‌னா‌ல் ஏ‌ற்ப‌ட்ட வடு ‌நி‌ச்சயமாக போகு‌ம். அத‌ற்கு ஒரு ‌நீ‌ண்ட ‌சி‌கி‌ச்சை உ‌ள்ளது. முத‌லி‌ல் பரு உ‌ள்ளவ‌ர்க‌ள் பேஷிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளவே‌க் கூடாது. ஒருவரது சரும‌த்‌தி‌ல் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசை இருந்தால் பரு வரும்.  

மேலு‌ம், பே‌‌ஷ‌ிய‌லி‌ன் போது பய‌ன்படு‌த்து‌ம் ‌க்‌ரீ‌ம்க‌ள் அனை‌த்‌திலு‌ம் அ‌திக‌ப்படியான எ‌ண்ணெ‌ய் பசைதா‌ன் இரு‌க்கு‌ம். எனவே அவரகளது சரும‌த்தை பேஷிய‌ல் மேலு‌ம் ‌சி‌க்கலா‌க்கு‌ம். முக‌த்‌தி‌ல் அ‌திகமான பரு‌க்க‌ள் இரு‌ப்பவ‌ர்க‌ள் அவ‌சியமாக பேஷிய‌ல் செ‌ய்தே ஆக வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌நினை‌த்தா‌ல் முத‌லி‌ல் ஒரு மரு‌த்துவ‌ரிட‌ம் ஆலோசனை பெ‌ற்று‌வி‌ட்டு ‌பிறகு பேஷிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். ‌ப்‌ளீ‌ச் செ‌ய்யலா‌ம். ஏனெ‌னி‌ல் ‌ப்‌ளீ‌ச் செ‌ய்வதா‌ல் முக‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் எ‌ண்ணெ‌ய் த‌ன்மை ‌நீ‌க்க‌ப்ப‌ட்டு‌விடு‌ம். எனவே ‌ப்‌ளீ‌ச்‌சி‌ங் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம்.
http://www.muruganandam.in/2013/03/do-you-want-to-hide-scars.html?

--
*more articles click*
www.sahabudeen.com


வெள்ளி, 24 ஜனவரி, 2014

சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்

சாப்பிடுவதற்கு மட்டுமா காய், பழங்கள்


அழகுக்கும், ஆரோக்கியத்திற்கும் அடிப்படையே நம் சமைலறை தானே. வெறும் ருசியாக சமையல் செய்து சாப்பிட்டால் மட்டும் போதாது. சமைக்க உபயோகப்படுத்தும் காய்கறிகளைக் கொண்டும், சாப்பிடும் பழங்களைக் கொண்டுமே நம்மை அழகுபடுத்திக் கொள்ளலாம்.
''
ப்யூட்டி பார்லர் செல்ல எனக்கு நேரமில்லை, பணம் செலவழக்க என்னால் முடியாது, செயற்கைப் பொருட்களை உபயோகித்தால் என் முக அழகு கெட்டு விடும்'' என்று எண்ணுபவர்களுக்காக இந்த அத்தியாயம்.


இயற்கையான பல பொருட்களை நாங்களும் அழகு நிலையங்களில் உபயோகப்படுத்துகிறோம். அதே பொருட்களை நீங்களும் உபயோகித்து சருமத்தைப் பொலிவுடன் வைத்திருக்கலாம்.
அதற்கான டிப்ஸ் இதோ முட்டை கோசை வேக வைத்து, அந்த நீரில் முகம் கழுவினால், பளிச்சென்று இருக்கும். (ஒரு சிலருக்கு பச்சையாக உபயோகப்படுத்துவது சருமத்தில் அரிப்பை ஏற்படுத்தும்)
கேரட் சாற்றுடன் பால் 2 டீ ஸ்பூன் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. இது குறிப்பாக உலர் சருமத்திற்கு மிகவும் சிறந்ததாகும்.
உருளைக் கிழங்கை பச்சையாகத் துருவி, அதன் சாற்றை சருமத்தில் பூசும்பொழுது, சருமத்திற்கு குளிர்ச்சியும் பளபளப்பும் கிடைக்கும்.


அகத்திக் கீரையை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசவும், 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவினால், முகம் பிரகாசமாக இருக்கும். இதை வாரத்தில் ஒரு முறை செய்யலாம்.
பர பிரச்சினைக்கும், கண் அடியில் உள்ள கருவளையத்தைப் போக்கவும், உருளைக் கிழங்கு சாற்றில் பஞ்சை நனைத்துத் தேய்த்து வரலாம்.
வெள்ளரிக்காய் நிற மேம்பாட்டிற்காகவும், தேன் உங்களது நிறம் கருமையடையாமலும், இளநீர் உஷ்ணத்திலிருந்தும், உங்கள் சருமத்தைப் பாதுகாக்கும்.
முகத்தில் அதிகமாக வேர்க்குரு இருந்தால் உருளைக் கிழங்கு சாறு, தர்பூசணி சாறு, நுங்கு, இளநீர் ஆகியவற்றை அடிக்கடி தடவி வந்தால் வேர்க்குரு மறையும்.
அதி மதுரத்தை வெந்நீரில் சிறிது நேரம் போட்டு அதை அரைத்து, அதன் சாறை முகத்தில் பூசலாம். அல்லது பாலுடன் சேர்த்து முகத்தில் பூசலாம்.
நமது சருமத்திற்கு பி.காம்ப்ளக்ஸ் அவசியமானது. பருவினால் கூடிய தழும்பைத் தடுக்க ஈஸ்ட்டும், அதிமதுரப் பவுடரும் கலந்து பஞ்சில் நனைத்து முகத்தில் தேய்த்துக் கழுவி வந்தால் தழும்பு மறையும்.
தக்காளி உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக் கூடியது. அதிலுள்ள சிலிகான் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்கும். தக்காளி ஜூஸ் இரத்த விருத்திக்கு உகந்தது.  இதில் வைட்டமின் 'சி' உள்ளதால் தோலில் தடவி பத்து நிமிடங்கள் கழித்துக் கழுவினால் பளபளப்பு கிடைக்கும்.
(
தக்காளி சேர்த்தால் சருமத்தில் அரிப்பு ஏற்படுவதாக உணர்பவர்கள், அலர்ஜி உள்ளவர்கள் தக்காளி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்)

வெயில் காலத்தில் அதிகமாகக் கிடைக்கக்கூடிய தர்பூசணியில் 90 நீர்ச்சத்து இருக்கிறது. இதை சாப்பிடுவதும் உடலுக்க நல்லது.
தர்பூசணி சாற்றுடன் (2 ஸ்பூன்) முல்தானி மெட்டி ஒரு ஸ்பூன் கலந்து முகத்தில் பூசிக் கழுவினால் குளிர்ச்சியாக இருக்கும்.
எண்ணெய் சருமத்தைக் கொண்டர்வகள் ஆரஞ்சு, எலுமிச்சைச் சாறை அப்படியே முகத்தில் தடவக் கூடாது. அதனுடன் நீர் கலந்து தேய்க்கலாம்.
எலுமிச்சம் பழச்சாற்றுடன், பால் சிறிது கலந்து 5லிருந்து 20 நிமிடங்கள் ஊற வைத்து முகத்தில் கழுவலாம்.


வெள்ளரிக்காய், தர்பூசணிச் சாறை சம அளவில் (1 ஸ்பூன்) எடுத்துக் கொண்டு, அதனுடன் ஒரு டீ ஸ்பூன் கடலை மாவு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்துக் கழுவலாம்.
எலுமிச்சம் பழச் சாறுடன் கஸ்தூரி மஞ்சளை அரைத்துச் சேர்த்துப் பூசினால் முகம் பளபளப்பாகும். (சாதாரண விரலி மஞ்சள் சிலருக்கு அலர்ஜியாகி தோலில் அரிப்பை ஏற்படுத்தும். இதேபோல் முகத்தில் பருக்கள் இருப்பவர்கள் சிட்ரஸ் கலந்த பழ வகைகளைப் பூசுவதைத் தவிர்க்கவும். அவர்கள் எந்த விதமான அழகு சம்பந்தப்பட்ட பலமான சிகிச்சையையும்  எடுக்கக் கூடாது.
கேவோலின் பவுடர் ஒரு டீ ஸ்பூன், ஆரஞ்சுச் சாறு ஒரு டீஸ்பூன், சிறிது நிர் கலந்து பூசினால், எண்ணெய் வழியும் முகம் ஃப்ரெஷ்ஷான தோற்றத்துடன் இருக்கும்.
பழ வகைகளை முகத்தில் பூசிக் கழுவலாம். ஆனால் எல்லாப் பழங்களையும் உபயோகப்படுத்த முடியாது.


மஞ்சள் வாழைப்பழம் உலர் சருமத்திற்கு நல்லது. வாழைப்பழத்தை மசித்து அதனுடன் சிறிது பால் அல்லது பால் பவுடர் முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.
ஆப்பிளை வேக வைத்து தோலை நீங்கி, உள்ளிருக்கும் கூழை முகத்தில் தடவலாம். இதனால் முகம் பளபளவென்றாகும்.
எண்ணெய்ப் பசை சருமத்திற்கு அன்னாசிப் பழம் சாறுடன் பால் அல்லது பால் பவுடர் கலந்து முகத்தில் போடவும். 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்து, பின் மகம் கழுவினால் பளிச் சென்றிருக்கும்.
பேரீச்சம் பழத்தைப் பால் அல்லது வெந்நீரில் ஊற வைக்கவும். அதை விழுதாக்கி அத்துடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தேய்க்கவும். (முடி இருக்கும் இடத்தைத் தவிர்த்து விடவும்.) 15லிருந்து 20 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கழுவவும். இது சிறந்த ப்ளீச்சாகவும் செயல்படுகிறது.


பட்டர் ஃப்ரூட் எனப்படும் அவகோடா பழத்தினுள் இருக்கும் கூழை முகத்தில் தடவினால், முகம் பிரகாசமாக இருக்கும்.
பப்பாளி நல்ல நிறத்தைக் கொடுக்கக் கூடியது. ஆனால் உடலில் உஷ்ணம் அதிகமாக இருப்பவர்கள் அடிக்கடி இதை உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.
சரியான வேளையில், சரியான முறையில் சாப்பிடுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவில் 25 சதவீதம் அரிசி வகை இருக்க வேண்டும். மீதமுள்ள 75 சதவீதம் புரோட்டீன், கால்சியம், வைட்டமின் மற்றும் இதர சத்துக்கள் இருக்க வேண்டும். இவை அனைத்தும் காய்கறி, பழங்கள், கீரை வகைகளில் கிடைக்கின்றன.


நார்ச் சாத்துள்ள உணவு வகைகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். கிழங்கு வகைகள், எண்ணெயில் பொரித்த பண்டங்கள், கொழுப்பு, இனிப்பு நிறைந்த பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதைத் தவிருங்கள். பிறகென்ன எப்பொழுதுமே நீங்கள் அழகு ராணிகளாகவும், அழகு ராஜாக்களுமாகத் திகழ்வீர்கள்.
http://kulasaisulthan.wordpress.com

--

இது என் இறைவனின் அருட்கொடையிளிருந்து அருளப்பட்டது www.sahabudeen.com

சில எளிய சமையலறைக் குறிப்புகள்

ஐடியா - 1 : சமைக்கும்போது கனம் குறைவான கரண்டியை பயன்படுத்துவது நல்லது. கனமான கரண்டியை பயன்பட...

Popular Posts