லேபிள்கள்

சனி, 28 ஜனவரி, 2012

பள்ளிவாசல் மினாரா பேசுகிறேன்!


 (ஆக்கம்: மௌலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி)

என் இனிய இஸ்லாமிய சொந்தங்களே! என்னைப் பற்றிய அறிமுகம் அவசியமில்லையென்றாலும் சிலவற்றை கூறாமல் இருக்க முடியாது. என்னைத் தெரியாதவர்கள் உலகில் யாருமே இருக்க வாய்ப்பில்லை. அந்தளவுக்கு நான் மிகவும் பிரபலமானவன். எனது கம்பீரத்திற்கு இணையாக உலகில் வேறு எதையும் நீங்கள் கண்டிருக்கமாட்டீர்கள் எனபதை தைரியமாக சொல்வேன்!
என்னடா இது, மினாரா ஆணவப் போதையில் உளறுகிறது என நீங்கள் நினைத்தாலும் எனக்கு கவலையில்லை. நீங்கள் தரையில் நின்று கொண்டு எனது உச்சந்தலையை பார்த்தால் நான் வானத்தை உரசிக்கொண்டு நிற்பது போன்றதொரு மனப்பிரம்மை உங்களுக்குத் தோன்றும். நான் வானத்தை உரசி நிற்கவில்லையென்றாலும், வானத்தின் எல்லாப் பகுதிகளிலும் எனது அசைவுகள் எதிரொலித்துக் கொண்டேயிருக்கும்.
இவ்வளவு சிறப்புகளும் எனக்கு எங்கிருந்து வந்த்தென ஆச்சர்யப்பட வேண்டாம். உங்களையும், என்னையும் படைத்த இறைவனை வணங்குவதற்கு வாருங்கள் என அதான்என்னும் பாங்கின் மூலம் எல்லோரையும் அழைக்கக்கூடிய பணியை நான் தான் செய்து வருகிறேன். அதனால் தான் இறைவன் எனக்கு இவ்வளவு பெரிய அந்தஸ்தை தந்துள்ளான்.
சுவனத்தின் தோழர்களில் ஒருவரான ஹழ்ரத் பிலால் ( ரலி ) அவர்களே, என் முதுகில் ஏறி நின்று பாங்கு சொன்னதால் இன்னும் எனக்கு பெருமை கூடிவிட்ட்து. நான் கொடுக்கும் சப்தம் வான் மண்டலம் முழுவதும் எதிரொலிப்பது உங்களுக்குத் தெரியுமா?. தெரியாவிட்டால் அறிவியல் ஆய்வாளர் ஆம்ஸ்ட்ராங்கை கேட்டுப் பாருங்கள். அவர் ஒரு முறை சந்திரமண்டலத்தில் கால் வைத்த போது எனது சப்தத்தை கேட்டு திடுக்கிட்டவராக பூமியில் சொல்லப்படும் பாங்கின் ஓசை சந்திர மண்டலம் வரைக்கும் எதிரொலிக்கிறதே என வியப்படைந்தவராக பூமிக்கு திரும்பியதும் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டார்.
இஸ்லாத்தின் தீர்க்க தரிசியாம் நமதருமை நாயகம் ( ஸல் ) அவர்களுக்கு அடுத்தபடியா முதன் முதலில் சந்திர மண்டலத்தில் கால்பதித்த சிறப்பையும் பெற்றவர்தான் ஆம்ஸ்ட்ராங். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்கு நான் கொடுத்த சப்தமும் ஒரு காரணம் எனபதை நினைக்கும் போதெல்லாம் எனக்குள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும். உலகம் எப்போது அழியுமோ? அப்போது தான் எனக்கும் மரணம்  நிகழும். இடையிடையே நான் நோய்வாய்ப்பட்டுவிட்டால் (பழைய மினாராகிவிட்டால்) என்னை குணப்படுத்தும் வகையிலேயே இடித்துவிட்டு மீண்டும் அதே இட்த்திலேயே உயிருடன் எழுப்பி விடுவார்கள். அப்போது சில அடிகள் நான் வளர்ந்துமிருப்பேன்.
இப்படி என் சிறப்பைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம். என்னை ஒரு கல்லாக பார்ப்பவர்களுக்கு எனது வரலாறு தெரியாது!. இன்னொரு கோணத்தில் பார்த்தால் நானும் ஒரு வகையில் தியாகி தான். உங்களை இறையாடியார்களாக மாற்றும் மிகப்பெரிய பொறுப்பை நான் செய்து வந்தாலும் உலக முடிவிற்குப் பிறகு நீங்களெல்லாம் மீண்டும் உயிர் கொடுக்கப்படுவீர்கள். ஆனால் நான் உயிர் கொடுக்கப்படாமலேயே போய் விடுவேன்.
எனது அழைப்பை செவிமடுத்து ஐந்து வேளை தொழுகையையும் இமாம் ஜமாஅத்துடன் தொழுதுவரும் நீங்கள் நல்லோர்களாகும் பட்சத்தில் சுவர்க்கம் சென்று விடுவீர்கள். ஆனால் நான் எதுவுமே இல்லாமல் நிராதரவற்றவனாகிவிடுவேன்.
ஒருவகையில் உலகம்  அழியும் வரைக்கும் நான் மட்டுமே நீண்ட ஆயுளுடன் வாழ்வேன் எனபதை நினைக்கும் போது மனதிற்கு மனதிற்கு கொஞ்சம் ஆறுதலாகவே உள்ளது. என் இனிய சொந்தங்களே, எவ்வளவு தான் கஷடப்பட்டாலும் நல்ல விஷயங்களுக்கு துணை நின்றாலும் மண்ணில் உருவான எனது இறுதி முடிவு சல்லிக்காசுக்கு கூட தேறாது!. மறுமையில் மண்ணிற்கு மதிப்பில்லை என்பதை நன்கறிவேன். எனக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட அறிவுள்ள உங்களுக்குத் தெரியாமல் போனதேன்?. அதனால் தானே ஒரு சாண் அளவானாலும் அடுத்தவரின் இடத்தை (நிலத்தை) அபகரித்துக் கொள்ளத் துடிக்கிறீர்கள்.
எனதருமை நண்பா!. ஓ ……………காதர் பாய் உங்களைத்தான் கூப்பிடுகிறேன் என்ன சௌக்யமா இருக்கீங்களா!. அடேங்கப்பா போன வருஷம் ரமலானில் பார்த்தது. அந்த வருட பெருநாள் தொழுகைக்குப்பின் இப்போதுதான் உங்களை பார்க்க முடிகிறது. அதுவும் நான் பாங்கு சொல்வதற்கு முன்பே பள்ளிக்கு வந்து விட்டீர்களே, எதுவும் விசேஷமா? என நான் கேட்டு முடிப்பதற்குள் காதர் பாய்க்கு கோபத்தில் மூக்கு வியர்த்து விட்டது.
அறிவு கெட்ட மினாராவே, நான் போன வருஷ ரம்ஜான் பெருநாள் தொழுகைக்குப் பின் நீ இருக்கும் திசை பக்கமே வரவில்லை என்றாயே?. எவ்வளவு பெரிய பொய்யை சொல்கிறாய்!. அதற்கடுத்து வந்த பக்ரீத் பெருநாள் தொழுகைக்கு நான் வந்ததை நீ மறந்து விட்டாயா?.
நான் எப்போதும் வளமையாக வருடத்தின் இரண்டு பெருநாள் தொழுகைக்கும் ரமலானின் முழுமாத இரவு தொழுகைக்கும் விசேஷமாக பள்ளிக்கு வந்திடுவேன் என்பதை கூடவா மறந்து விட்டாய்?. நோன்பு மாத்த்தில் உன் குரல் கேட்பதற்கு முன்பே நான் பள்ளிக்குள் நுழைந்தால் தானே, முதல் வரிசையில் நின்று தொழ வாய்ப்பு கிடைக்கும் என ( NON STOP ) இடை நிறுத்தமில்லாமல் தொடர்ந்து கொட்டி தீர்த்து விட்டார் காதர் பாய்!.
ஆனாலும் நான் விடவில்லை ஏன் காதர்பாய் வருஷம் முழுவதும் ஒரு வக்து தொழுகையை கூட விடாமல் தொடர்ந்து இமாம் ஜமாஅத்தின் முதல் வரிசையில் நின்று தொழுதுவரும் நல்லோர்களுக்கு சங்கை மிகும் ரமலானில் மட்டும் முதல் வரிசையில் நின்று தொழ முடியாமல் போகும் வகையில் சீசன் தொழுகையாளியான நீங்கள் இடையூறு செய்வது எந்த வகையில் நியாயம்? என நானும் விடாமல் துரத்தினேன்.
உங்களுடன் போன வருஷம் நோன்புக்கு மட்டும் தொழ வந்த உங்கள் கூட்டாளி கனிபாய் எங்கே? வெளிநாடு போய்விட்டாரா? இந்தக் கேள்வியை நான் கேட்ட்தும் காதர் பாயின் முகம் வாடிவிட்டது. என் நண்பர் கடந்த ஷஃபான் மாதம் மௌத்தாகிவிட்டார் எனக் கூறி கண் கலங்கினார். பரவாயில்லை காதர்பாய் உங்கள் நண்பரின் மறைவு உங்களுக்கு பேரிழப்புதான் என்றாலும் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு மய்யித்து வீதம் நான் பார்த்து வருவதால் எனக்கு அதில் வருத்தம் எதுவும் கிடையாது!.
ஆனாலும் சீசன் தொழுகையாளி என்ற குற்றப் பின்னணியுடன் மௌத்தாகிவிட்டாரே என்ற அனுதாபம் மட்டுமே எனக்குள் வந்து போகிறது. கடந்த வருட ரமலானில் நான் பார்த்த எத்தனையோ நபர்களை இவ்வருட ரமலானில் பார்க்க முடியவில்லை காதர்பாய்!.
ஏதோ உங்களைப் போன்ற ஒரு சில சீசன் நேர தொழுகையாளிகளை மட்டுமே இவ்வருட ரமலானில் காண முடிகிறது!
கல்லாக நிற்கும் நானே எனது இறைவனுக்கும் கடமையை பேணுதலோடு செய்து வரும் போது மனிதனாய் இருக்கும் நீங்கள் சீசன் காலத்து தொழுகையாளியாய் (வேடந்தாங்கல் பறவை போல் ) இருப்பது வெட்கம் இல்லையா? என்னை வணங்குவதற்கேயன்றி உம்மை படைக்கவில்லையென ஓராயிரம் முறைக்கு மேல் கூறியுள்ள இறைவனின் கூற்றுகள் உமது செவிகளுக்கு உறைக்கவில்லையா?
ஆட்சியாளர்களின் பார்வையில் நிரந்தர ஊழியர்களும், தற்கால பணியாளர்களும் எப்படி சம அந்தஸ்தை பெற முடியாதோ? அதே போலத்தான் இறைவனின் பார்வையிலும் நிரந்தர தொழுகையாளிகளும், சீசன் காலத்து தொழுகையாளிகளும் சமநிலையை அடைய மாட்டார்கள்.
கல்லும், மண்ணுமாகவுமிருக்கிற நானே இவ்வளவு கேவலமாக பேசியதற்குப் பிறகும் ரோசமுள்ள மனிதர்களான நீங்கள் இவ்வருட நோன்பிலிருந்தாவது நிரந்தரமான தொழுகையாளிகளாய் வாழும் காலம் வரை தொழக்கூடிய நிலைக்கு உங்களை மாற்றிக் கொள்வீர்கள் என எதிர்பார்க்கிறேன். அடிக்க, அடிக்க அம்மிக் கல்லும் நகரும் என்பது போல நானும் தொடர்ந்து ஐந்து நேரமும் உங்களை தொழுகைக்கு வாருங்கள் என அழைத்துக் கொண்டேயிருப்பேன்! நீங்கள் தொழ வர வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, உங்களுக்கு தொழ வைக்க வேண்டும் என்பதற்காக அல்ல!.
( மௌலவி ஜஹாங்கீர் அரூஸி ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையைச் சேர்ந்தவர். தற்பொழுது துபையில் பணியாற்றி வருகிறார். தொடர்பு எண் : 050 795 9960. மின்னஞ்சல்: sjaroosi@yahoo.com)

வெள்ளி, 27 ஜனவரி, 2012

இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்


 (டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி.பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)
      உலக மக்களினை நல் வழிப்படுத்தி ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்ப அனுப்பப்பட்ட நபிமார்கள் ழூசா, ஈசா, முகம்மது ஸல்லல்லாஹ்   அலைஹி வஸல்லம் அவர்களால் அடித்தளம் அமைக்கப்பட்ட மதங்கள் தான் ஜூடேயிஸமும், கிறித்துவமும், இஸ்லாமும் என நாம் அறிவோம். ஆனால் இஸ்ரேயிலர்கள் ழூசாவை கடவுளாகவும், கிறித்துவர்கள் ஈசாவை கடவுளின் மகனாகவும் நெறி தவறி அழைக்கின்றனர். ஆனால் இஸ்லாமியர் மட்டும் முகம்மது ஸல்லல்லாஹ்   அலைஹி வஸல்லம் அவர்களை  எந்த நேரத்திலும் கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ நினைக்கவில்லை. பெருமானாருக்கு வஹி மூலம் இறக்கப்பட்ட குர்ஆனில் ழூசாவையும், ஈசாவையும் இறைத்தூதர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்-இன்ஜில் வேதத்தையும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.. இறைவனால் படைக்கப்பட்ட ழூசாவையும், ஈசாவையும் கடவுளாக அழைக்காது இஸ்லாமியர் நபிகளாக ஏன் அழைக்க வேண்டும் என்ற கோபத்தினாலோ என்னவோ முஸ்லிம்களை இஸ்ரவேலர்களும், கிறித்துவர்களும் எதிரிகளாக நினைக்கின்றனர்..
      
மக்கா நகரில் ரஸுலல்லாஹ் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் பாலகனாக இருந்தபோது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று அழைத்தபோதும் தனது 40 வயதில் தனக்கு அல்லாஹ்வால் வஹி இறக்கப்பட்டது என்று சொன்ன மாத்திரத்தில் யாரும் அதனை நம்பவில்லை. ஆனால் அவரது அன்புத் துணைவியார் கதிஜா பிராட்டியார் மட்டும் அவர்களை அரவணைத்து முதலில் ஏக இறை தத்துவத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாறு. அன்னை கதிஜா ஒருவரே முதலில் இஸ்லாமை ஏற்றதிலிருந்து கல்லடியும், சொல்லடியும், மேலை நாடுகளின் நவீன பாஸ்பரஸ் குண்டடியும் பொருப்படுத்தாது அரேபியாவிலிருந்து-ஜிம்பாவே வரை 130 நாடுகளில் 130 கோடி மக்கள் ஏக இறை தத்துவத்தினை ஏற்று முஸ்லிம்களாக மாறி  இமய மலைபோல உயர்ந்து நிற்கவில்லையா இஸ்லாம்?
      
இன்று உலகில் அதிகமாக 210 கோடி கிறித்துவர் கொண்ட கிறிஸ்துவ மதமிருந்தாலும், அதனுடைய வளர்ச்சி 1900 ஆண்டிலிருந்து 2000 வரை 26.9சதவீதத்திலிருந்து 29.9 சதவீதம் தான்;. அதாவது வெறும் மூன்று சதவீதம் தான். ஆனால் இஸ்லாமியர் வளர்ச்சி 12.4 சதவீதத்திலிருந்து 19.2 சதவிதத்தினை எட்டி, ஏழு சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா? இத்தனைக்கும் இஸ்லாமிய நாடுகள் வளர்ச்சியடைந்த வல்லரசாக இல்லையே! ஆனால் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் வல்லரசுகள் வல்லூராக மாறி ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் வேட்டையாடுவது ஏன்? அவர்களுக்குத் தெரியாது விளையாடும் பந்தினை சுவற்றிலோ-தரையிலோ எவ்வளவு வேகம் ஓங்கி அடிக்கிறோமோ அவ்வளவு தூரம் எழும்பும் என்பதினை பார்க்கிறோம். அதேபோல் இஸ்லாமியர் எவ்வளவு நசுக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாக எரியும் சாம்பலிருந்து சீறிப் பாய்வார்கள் என ஆதிக்க சக்திகள் அறிய மாட்டார்கள். 
       
வரலாற்று இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களால் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் இன்று உலகத்தினையே தனது ஆயுத பலத்தால் மிரட்டும் அமெரிக்காவினாலேயோ அல்லது நேட்டோ கிறித்துவ நாடுகளினாலேயோ வலுக்கட்டாயமாக மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய முடியுமா? கிறித்துவ சேவை மையங்கள் கூட ஏழை மக்களை கவர கல்வி, உணவு, வீடு, சுகாதாரம் போன்ற அன்பின் அடையாங்களை மக்களிடையே அள்ளி வீசித்தானே அவர்களை கிறித்துவ மதத்திற்கு இழுக்கிறார்கள். பின் எப்படி இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் வரலாற்று இடைக்காலத்தில(;மெடீவல்) மக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைத்திருப்பார்கள் என்று ஏன் அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்?
      
வரலாற்று இடைப்பட்ட(மெடீவல்) காலத்தில் நடந்தது என்ன? ய+தர்கள், கிறித்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புண்ணிய தலமாக கருதப்படும் ஜெரூசலம்  முஸ்லிம்கள் ஆட்சி செய்த பாலஸ்தீன நாட்டில் இருந்தது. முஸ்லிம்களிடமிருந்த ஜெரூசலத்தினை கைப்பற்ற நீண்ட (குருசேட்)புனிதப்போர’; என்று பெயரிட்ட பெரியதோர் போரினை ஐரோப்பிய துணைக் கண்டத்தில் நடத்தினர். ஆனால் முஸ்லிம்கள் ஈமானை கேடயமாகவும், ஏக இறைத்தத்துவத்தினை வாளாகவும் கையிலெடுத்து பல உயிர்களை பறிகொடுத்ததால் ஜெரூசலத்தினை தங்களுடன் தக்க வைத்தனர் எனறால் எப்படி அவர்களால் அன்று மட்டும் முடிந்தது? இறைவனால் இறைக்கட்டளைகளை இஸ்ரவேலர்கள் மீறியதால் பழிக்கப்பட்டது மட்டுமல்ல, முதலாவது-இரண்டாவது உலகப்போர்களில் பந்தாடப்பட்டனர். கிறித்துவ-இஸ்ரேயிலக் கூட்டுப்படை இரண்டாம் உலகப் போரில் வெற்றியடைந்த களிப்பில் பாலஸ்தீனர்களுக்கிடையே இஸ்ரேயில் என்ற நாட்டினை உருவாக்கி பாலஸ்தீனர்களுக்கு நாடு என்ற அமைப்பே இல்லாமல் அகதிகளாக ஆக்கப்பட்டனர். 
      
1945
ஆம் ஆண்டு சர்வதேச சபையான ஐ.நா அமையப்பட்டாலும், 1948 ஆம் ஆண்டு சரவதேச மனித உரிமை சாசனம் எழுதப்பட்டாலும் பாலஸ்தீனர்களுக்கு இன்று வரை தனிநாடு என்று பிரகடனம் செய்ய உரிமை இல்லை. இன்றைய முஸ்லிம் உலகின் கொந்தளிப்பிற்கு காரணமே பாலஸ்தீனத்தின் பரிதாப நிலையே என்று  உலக ஊடகங்கள் சொல்கின்றன. ஆகவே முஸ்லிம் நாடுகளான ஈரானோ, ஈராக்கோ, பாகிஸ்தானோ இஸ்ரேயிலுக்கு எதிராக பலம் வாய்ந்ததாக மாறக்கூடாது என்பதால் தான் கிறித்துவ கூட்டமைப்பு ஈராக்கை சின்னாபின்னமாக்கி, பாக்கிஸ்தானின் அணு ஆயிதத்தினை கண்காணித்து அந்த நாட்டில் ரகசியமாக ஊடுருவி ஆளில்லா விமானங்கள் மூலம் நிர்மூலமாக்குகின்றனர். பாலஸ்தீன குழந்தைகளோ அல்லது ஈராக் அல்லது ஆப்பானிஸ்தான் குழந்தைகளோ பள்ளிக்கூடங்களுக்குக்கூட  செல்ல முடியாது பரிதவிக்கின்றனர். இவ்வளவிற்கும் 1989 ஆம் ஆண்டு ஐ.நா வின் சர்வதேச குழந்தைகள் ஆண்டு என்று அறிவித்து அவர்களுக்கான உரிமை 20 ஆண்டுகளாகியும் பறிக்கப்டுகிறதே வேதனையாக இல்லையா?
      
அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 2001 ஆம் ஆண்டு தாக்கப்பட்டதிற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் தான் காரணம் என்று அந்த நாட்டில் படையெடுத்து தாலிபான்களை விரட்டிய பின்பு அந்த நாட்டை விட்டு வெளியேராமால் ஊழல் நிறைந்த அமெரிக்காவில் வசித்த டாக்டர் கரசாய் ஆட்சியினை நிறுவி அதற்கு ஆதரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக் ஜனாதிபதி வைத்திருக்கிறார் என்று 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் படையெடுத்த கூட்டுப்படை உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்ற உண்மையினை ஒப்புக் கொண்டு வெளியேராமால் இன்னும் அட்டைபோல் ஒட்டி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தினை உறிஞ்சிக் கொண்டுள்ளது என்ற செய்திகள் நாள்தோறும் நாம் படிக்க வில்லையா? ஈரான் சிவில் உபயோகத்திற்காக அதாவது மின்சாரம் போன்றவைகளை தயாரிப்பதிற்காக அணுவினை பயன்படுத்துகிறோம் என்றாலும் அதற்கு பொருளாதார தடையேற்படுத்துவதா?
      
இதே போன்றுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. அது என்னவானது? வுpவசாய நாடான சீன நாட்டினை தொழிற்சாலை மிகுந்த நாடாக ஆக்கி இன்று ஏற்றுமதியினை 17.7 சதவீதம் அதிகரித்து ஜெர்மனி நாட்டினை பின்தள்ளி உலக ஏற்றுமதியின் முன்னணி நாடாக சீனாவினை மாசேதுங் உருவாக்கவில்லையா? ஏன் இஸ்லாமியர்களால் முடியாதா? ஏகாபத்திய நாடுகள் இஸ்லாமியர்களை நடத்தும் விதம் கோபமூட்டும் செயலானது தான் அதற்காக தீவிரவாதம் ஒரு வடிகாலாகுமா? இன்றைய இஸ்லாமியர் வாழ்வு கொந்தளிக்கும் கடலில் கப்பல் ஓட்டும் மாலுமியைப் போன்றது தான். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதனை சமாளித்து திறம்பட வழி நடத்துபவனே சிறந்த மாலுமியாகக் கருதப்படும். தோல்வி-அவமானங்களை வெற்றியின் ழூலதனமாக எடுத்துக் கொண்டு உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க சில யோசனைகளை சொல்லலாம் என நினைக்கிறேன்:

கிராம பொருளாதாரத்தினை மேன் படுத்தி-உற்பத்திற்கு உதவும் தொழில்களை தொடங்க வேண்டும். சீனர்  உலகில் எப்படி இவ்வளவு தூரத்திற்கு வளர்ச்சியடைந்த வல்லரசாக மாறியது என்று ஆராயும் போது வருடத்திற்கு 20 லட்சம் சீனர் ஆங்கிலக் கல்வி கற்கின்றனர் என்பது தெரிய வந்தது. அதன் ழூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் முன்னேற்றத்தின் ரகசியங்களை அறிந்து-அவர்களுக்கு மேலாக ஒரு படி உயர்துள்ளனர். அதே போன்று இஸ்லாமியரும் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 
இன கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். அதாவது ஷியா-சன்னி என்ற வேறுபாடு களைந்து பிரிந்து நிற்கும் ஐக்கிய அரபு நாடுகள்-எகிப்து-சிரியா-ஜோர்டன்-அரேபியா-ஈரான்-பாகிஸ்தான ஆகியவை ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டும். அந்த அமைப்புகள் நாட்டோ போன்ற பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். 
பொருளாதார ஏற்றுமதி-இறக்குமதியில் வரியில்லா வர்த்தகத்தினை எற்படுத்த வேண்டும். தங்களுக்கென்ற ஈரோ போன்ற நாணயம் உருவாக்க வேண்டும். 
அதே போன்று விஞ்ஞான-ஆராய்ச்சிகளை தங்களுடன் பரிமாற்றம செய்து கொள்ள வேண்டும். 

வறுமையில் தவழும் இஸ்லாமிய நாடுகளுக்கு பொருளுதவி கொடுக்க வேண்டும். எப்படி பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் துபாய் நாட்டிற்கு அபுதாபி நாடு கடன் கொடுத்து கை தூக்கியதோ அதேபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். இஸ்லாமிய ஏழை நாடுகளில் பசியாலும்-நோயாலும் உழலும் மக்களுக்கு கல்வி-மருத்துவம்-வீடு-வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும். 

உலக இஸ்லாமியர் நினைத்தால் வானத்தையும் வில்லாக முறித்து-கடலிலும் எதிர் நீச்சலடித்து, பூமியிலும் வல்லரசாக மாறி எதிர்கால சவால்களை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாமா?

வியாழன், 26 ஜனவரி, 2012

குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு வந்தால்?


கைக் குழந்தைகளுக்கு ஏதாவது வியாதி என்றால், மிக கவனமுடன் கையாளுங்கள். வாய் திறந்து அவர்கள் பேசும் பருவம் வரும்வரை , மிக மிக கவனத்துடன் பராமரிப்பது அவசியம் .

அறிகுறிகளும், பாதிப்புகளும்
* உடலில் இருந்து அதிக அளவில் நீர் உப்புகள், வைட்டமின்கள் வெளியேறுகின்றன.
* சத்துக் குறைபாடு ஏற்படும்.
* உணவில் இருந்து மைக்ரோ மற்றும் மேக்ரோ நுணூட்டச் சத்துகளை திசுக்கள் உறிஞ்ச முடியாமல் போகும்.
* புரோட்டின் சத்தும் வீணாகும்.
* பசி எடுக்காது.
* ரத்த அளவு குறையும்.
* நாடித் துடிப்பும் குறையும்.
* ரத்த அழுத்தம் குறையும்.
* கை, கால்கள் சில்லிட்டுப் போகும்.
* வெளியேறும் சிறுநீரின் அளவு குறையும்.
* சிறுநீரகம் பாதிக்கப்படும்.
*ரத்ததில் பொட்டாசியம் அளவு குறைவதால் வயிறு வீக்கம், குடல் வேலை செய்யாத நிலை ஏற்படும்.
* பைகார்பனேட் வெளியேறுவதால், அசிடிமியா (Acidemia) பிரச்னை ஏற்பட்டு மூச்சுவிடுவதல் வேகமாகவும், ஆழமாகவும் இருக்கும்.

பரிசோதிக்கும் முறைகள்
பேதியால் பாதிக்கப்ட்ட குழந்தைகளைப் பரிசோதித்து, உடலில் இருந்து நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளதா, மிதமாகக்
 
குறைந்துள்ளதா, குறையவில்லையா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
குழந்தை சோர்வாக இருத்தல் அல்லது மயக்கம் அடைதல், குழி விழுந்த கண்கள், வயிற்றுப் பகுதி தோலை இழத்துவிட்டால், மிக மெதுவாகப் பழைய
நிலையை அடைதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் மிகவும் அதிகமாகக் குறைந்துள்ளது என்று அர்த்தம்.
குழந்தை நன்றாக விளையாடிக் கொண்டிருத்தல், கண்கள் குழி விழாமல் இருத்தல், வயிற்றுப் பகுதி தோலை இழுத்துவிட்டால், உடனே பழைய
நிலைக்குத் திரும்புதல் போன்ற அறிகுறிகள் இருந்தால், நீர் மற்றும் உப்புச் சத்துகள் குறையவில்லை என்று அர்த்தம்.

சிகிச்சைகள்

பேதியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை மூன்று வகைகளாகப் பிரித்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்க வேண்டும்.
சிகிச்சை முறை (நீர் குறையாத குழந்தைகளுக்கானது)
திரவ உணவை அதிகமாகக் கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
தாய்ப்பால் குடிக்காத குழந்தைகளுக்கு அரிசிக் கஞ்சி, மோர், எலுமிச்சைச் சாறு, இளநீர், பருப்பு நீர்,பால், காய்கறி சூப் ஆகியவற்றைக் கொடுக்கலாம்.
வழக்கமாக கொடுக்கும் திரவ உணவுடன், ஒவ்வொருதடவை பேதி ஆகும்போதும் கீழ்க்கண்ட அளவு நீகீகு எனப்படும் உப்பு & சர்க்கரைக் கரைசல்
கொடுக்கவேண்டும்.

இரண்டு வயதுக்கு உள்பட்ட குழந்தைக்கு 50 மில்லி & 100 மில்லி
இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைக்கு 100 மில்லி & 200 மில்லி.

தாய்மார்களுக்கான அறிவுரை
1. ORS திரவத்தை கரண்டி அல்லது பாலாடையில் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுக்க வேண்டும்.
2. குழந்தை வாந்தி எடுத்தால் பத்து நிமிடங்களுக்குப் பிறகு ளிஸிஷி திரவத்தை மீண்டும் கொடுக்க வேண்டும்.
3. பேதி நிற்கும் வரை ளிஸிஷி திரவத்தையும், பிற திர உணவுகளையும் கொடுக்க வேண்டும்.
சிகிச்சை முறை (மிதமான நீர் குறைந்த குழந்தைகளுக்கானது)
ORS திரவத்தை வயதுக்கும் எடைக்கும் ஏற்ப கொடுக்க வேண்டும். முதல் நான்கு மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும்.

கொடுக்க வேண்டிய அளவு
* பிறந்து 4 மாதங்களும், 6 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 200 மில்லி & 400 மில்லி.
* 4 முதல் 12 மாதமும், 6 முதல் 10 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 400 மில்லி & 700 மில்லி
* ஒன்று முதல் இரண்டு வயது வரையும் 10 முதல் 12 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 700 மில்லி & 900 மில்லி.
* இரண்டு முதல் ஐந்து வயது வரையும் 12 முதல் 19 கிலோ எடையும் உள்ள குழந்தைக்கு 900 மில்லி & 1400 மில்லி.
நான்கு மணி நேரத்துக்குப் பிறகு குழந்தையின் நிலையை மீண்டும் பரிசோதித்து அப்போதைய நிலைக்கு ஏற்பட சிகிச்சை அளிக்க வேண்டும்.
குழந்தைக்குத் தாய்ப்பால் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

சிகிச்சை முறை
(மிகவும் அதிக அளவு நீர் குறைந்த குழந்தைகளுக்கானது)
குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்குக் கொடு சென்று, ரிங்கர் லாக்டேட் என்ற மருந்து நீரை உடலில் ஏற்ற வேண்டும்.
மிகவும் அதிக அளவு சத்துகள் குறையாமல் தடுக்க கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
* எப்போதும் சாப்பிடுவதற்கு முன் கை, கால்களைக் கழுவ வேண்டும்.
* கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரைத் தான் குடிக்க வேண்டும்.
* திறந்த வெளியில் கொசுக்களோ, ஈக்களோ மொய்த்த உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது.
* சூடு ஆறிய உணவைச் சாப்பிடக்கூடாது.
* பழைய, கெட்டுப்போன உணவைச் சாப்பிடக்கூடாது.
* டின்னில் அடைக்கப்பட்டுக் கிடைக்கும் உணவுப் பொருள்களைச் சாப்பிடக்கூடாது.

புதன், 25 ஜனவரி, 2012

சர்தார்ஜி டூ வீலரில்


சர்தார்ஜி டூ வீலரில் ஒரு லாரியை பின்தொடர்ந்து கொண்டிருந்தார். திருப்பங்களில் எல்லாம் அவர் மிகவும் அபாயகரமான முறையில் கைகள் இரண்டையும் தூக்கி, ஒரு கையில் இரண்டு விரல்களையும், இன்னொரு கையில் ஒரு விரலையும் காட்டி, ஏதோ சைகை செய்துகொண்டே போனார்.

அவரின் வினோதமான ஆக்சனைப் பார்த்த டிராபிக் போலீஸார் அவரை நிறுத்தி, “ஏன்... இப்படி செய்கிறீர்கள்?” என்று கேட்க, லாரியின் பின்புறம் எழுதப் பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார் சர்தார்ஜி. அதில், “பெண்ணின் திருமண வயது 21 திரும்புமுன் சைகை செய்யவும்” என்று எழுதியிருந்தது!

ஒரு கல்லூரியில் புரொபஸர், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்ட இவ்வாறு பேசினார்."மாணவர்களே... இந்த கல்லுரியில் படித்து... பாஸ் செய்து... இந்த கல்லுரியிலேயே ஆசிரியராகச் சேர்ந்திருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்"
ஒரு மாணவன் கேட்டான்."இங்கே படிச்சா வேற எங்கேயும் வேலை கிடைக்காதா சார்?"

ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.
ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 200 ரூபாய் குறைவாக இருந்தது.
எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்துவிட்டார்கள். அடுத்தநாள் 200 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை எடுத்துக் கொண்டு போனான். 
ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப் போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.
அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!
"இது யாருடைய படம்?" என்று இவன் கேட்டான்.
"என் தாத்தா...அந்த காலத்துலே பெரிய ஜமீன்தாராய் இருந்தவர்" என்றான் நண்பன்.
" ம்...அன்னைக்கு என் கையில் மட்டும் 200 ரூபாய் கூடுதலா இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்" என்றான் இவன்
ஒரு பிளாட்டில் ஒருவர் பையனைப் போட்டு அடித்துக் கொண்டிருந்தார். வேறு ஒருவர் வந்து தடுத்தார். "ஏன் சார் அடிக்கீறிங்க?"
" நான் எத்தனை செலவு செய்து படிக்க வைக்கிறேன்...கேள்வி கேட்டால் இவனுக்கு 'சந்திரனுக்கும். சூரியனுக்கும்' வித்தியாசம் தெரியலை " என்றார்.
" யோவ்.. அவனுக்காவது சூரியனுக்கும். சந்திரனுக்கும் வித்தியாசம் தெரியலை. உனக்கு உன் பையனுக்கும். என் பையனுக்குமே வித்தியாசம் தெரியலையே?" என்றாராம் டென்ஷனாக

செவ்வாய், 24 ஜனவரி, 2012

என்னா மீட்டிங்கு.......


இந்த மீட்டிங்கு இருக்கு பாருங்க மீட்டிங்கு..........அதாங்க நம்ம ஆப்பீசுகள்ல போடுவாய்ங்களே மீட்டிங்கு அதைத்தான் சொல்றேன்......ஆபீஸ்ல சில நாதாரிங்க சும்மாவே கலக்டர் மாதிரி பில்டப் கொடுத்திட்டிருப்பானுங்க, மீட்டிங் வேற வந்துட்டாபோதும் அவ்ளோதான் கெவர்னர் ரேஞ்சுக்கு ஆகிடுவானுங்க......  சம்பந்தமே இல்லாம கைய கால ஆட்டி பேசுறது, வானத்த வளைக்கிறேன், பூமிய சுத்த வெக்கிறேன்னு சலம்புறது. அவனுக மட்டும் இல்லேன்னா கம்பேனிய இன்னேரம் காக்கா தூக்கிட்டு போயிருக்கும்னு அலப்பறை பண்றதுன்னு நல்லா எண்டர்டெயின் பண்ணுவானுங்க. பாசும் எதையுமே கண்டுக்காம காப்பிய சப்பி சப்பி குடிச்சிக்கிட்டு ஜாலியா ஐபேடை நோண்டிக்கிட்டு இருப்பாரு. 

சில நேரங்கள்ல பேச ஒரு எழவுமே இருக்காது ஆனா மீட்டிங் போட்ருவானுங்க.... எப்படியோ மீட்டிங்கு நடந்து முடியும். மினிட்ஸ் ஆஃப் மீட்டிங்குன்னு 15 பக்கத்துக்கு என்னத்தையோ அடிச்சிக்கிட்டும் வருவானுங்க. நாம இடைல போனா போவுதுன்னு ரெண்டே ரெண்டு வார்த்த பேசி இருப்போம், கரெக்ட்டா அதை மட்டும் விட்டுட்டு மினிட்ஸ் ரெடி பண்ணி இருப்பானுங்க. அப்புறம் அதை கரெக்ட் பண்றதுக்குள்ள அடுத்த மீட்டிங்கே வந்துடும்....

அப்புறம் பாருங்க, மீட்டிங்ல பார்த்து திடீர்னு சில பேருக்கு கொம்பு மொளச்சிக்கும். அதுக்கு முன்னாடி வரைக்கும் நம்ம கூட உக்காந்து ஓசி டீ அடிச்சிட்டு அண்ணே ஆபீஸ்லயே நீங்கதாண்ணே ரொம்ப நல்லவரு வல்லவருன்னு பிட்ட போட்டுக்கிட்டு இருப்பானுங்க. நாமலும் ஆஹா நமக்கும் ஒரு அல்லக்கை சிக்கிட்டான்டான்னு குளுந்து போய் மீட்டிங்குக்கு வருவோம். ங்கொக்காமக்கா மீட்டிங் தொடங்குனதும் அவனுக ஃபர்ஸ்ட் குறியே நாமளாத்தான் இருக்கும், இவருனாலதாங்க அந்த பஸ் ஓடலை, இந்த ரயில் ஓடலைன்னு பக்காவா மனப்பாடம் பண்ணி வெச்சி பிரிச்சி மேஞ்சி நம்மளை கப்பலேத்திருவாய்ங்க. அதுக்கு பதில் சொல்றதுக்குள்ள காலைல குடிச்ச கஞ்சியெல்லாம் காலியாகிடும்.......

சரி அத விடுங்க, ஆபீஸ்ல பாவம் போல இருப்பானுங்க சில பேரு, அவனுங்களும் மீட்டிங்குன்னு வந்துட்டா மட்டும் சலங்க கட்டி ஆடுவானுங்க...  எங்கேருந்துதான் கெளம்புவானுங்களோ? ஒரு ஆட்டம் ஆடித்தான் நிப்பானுங்க. எல்லாம் முடிஞ்சதும் வழக்கம் போல மாட்டை தொழுவத்துல கட்டுன மாதிரி போய் உக்காந்துடுவானுங்க, இனி அடுத்த மீட்டிங் வரைக்கும் நம்மாளு கெணத்துல விழுந்த கல்லுதான்.......

இன்னும் சில பேரு இருப்பானுங்க, யாருன்னே யாருக்கும் தெரியாது. சும்மா வந்து உக்கார்ந்து எதையோ முறைச்சி பார்த்துட்டே இருப்பானுங்க, மேலேயும் கீழேயும் பாத்துட்டு என்னமோ பரிட்சை எழுதுற மாதிரி விறுவிறுப்பா எழுதுவானுங்க. காப்பி வந்ததும் காப்பி சாப்புடுவானுங்க, மீட்டிங் முடிஞ்சதும் அப்படியே எந்திரிச்சி போய்டுவானுங்க. எதுக்கு மீட்டிங் வந்தானுங்க, என்ன பண்றானுங்க எல்லாம் படு சீக்ரெட்டா இருக்கும்...... அது யாருன்னு கேட்கவே எல்லாரும் பயப்படுவானுங்க..

இப்படி எல்லாரும் என்னத்தையாவது பேசி முடிச்ச உடனே பாஸ் வாய தொறப்பாரு. ஏற்கனவே அவரு அவர் பாசோட பேசி எடுத்த எல்லா முடிவையும் வரிசையா சொல்லுவாரு, சொல்லிட்டு பெருமையா(?)   ஒரு பார்வை வேற பார்ப்பாரு... ங்கொக்காமக்கா அதான் முடிவு பண்ணிட்டீங்கள்ல அப்புறம் என்ன கருமத்துக்குய்யா மீட்டிங்க கூட்டி ரணகளம் பண்றீங்க? பாஸ் சொன்னதைக் கேட்டது ஆடுனவன்லாம் பொட்டிப்பாம்பா அடங்கிருவானுங்க. எஸ்சார், அப்படியே பண்ணிடலாம் சார், முடிச்சிடலாம் சார்னு கோசம் போடுவானுங்க.  தலைவரும் உடனே கேனத்தனமா ஒரு இளிப்பு இளிச்சிக்கிட்டே ஓகே, எனக்கு இன்னொரு அர்ஜெண்ட் மீட்டிங் இருக்கு, அப்புறம் பேசுவோம் அதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சி வைங்கன்னு ஆர்டர் போட்டுட்டு நைசா எஸ்கேப் ஆகிடுவாரு.... நம்ம திரும்ப நம்ம சீட்டுக்கு வந்து என்ன செய்ய சொன்னாருன்னு அவர் வர்ர வரைக்கும் ஆராய்ச்சி பண்ணிட்டு இருக்க வேண்டியதுதான்.

முடியலடா சாமி, வாரா வாரம் மீட்டிங் போட்டுக் கொல்றாய்ங்க......... இந்தக் கருமத்தக் கண்டுப்புடிச்சவன் எவன்டா........ அவனுக்கு நான் எமன்டா.......

திங்கள், 23 ஜனவரி, 2012

குழந்தையை நாய் கடித்தால் என்ன செய்ய வேண்டும்?


   சில தகவல்கள்:

எல்லா நாய்க்கடியும் விஷம் கிடையாது. ரேபிஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால் மட்டுமே ஆபத்து

சரியான நேரத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்டால் எளிதில் தடுக்கலாம்

பூனை,குரங்கு ,நரி,ஓநாய், வவ்வால் போன்றவை  மூலமும் ரேபிஸ் பரவும் 

ரேபிஸ் உடலில் பரவி நரம்பு மண்டலத்தை தாக்கினால் அதன் பிறகு செய்வதற்கு ஒண்றுமில்லை.மரணம் நிச்சயம்

வெறிநாயின் எச்சிலிலும் ரேபிஸ் கிருமிகள் உண்டு.எனவே ஏற்கனவே காயம் இருந்து அதை நாய் நக்கினாலும் ரேபிஸ் பரவும்.

உணவு கட்டுப்பாடு ஏதும் கிடையாது .

 முதலுதவி :

நல்லா சோப் போட்டு கழுவ வேண்டும் .இது ரொம்ப முக்கியம். கடித்த இடத்தில் ரேபிஸ் கிருமிகள் கோடிக்கணக்கில் இருக்கும். குறைந்தது 2 நிமிடங்கள் ஓடும் டேப் தண்ணீரில் கழுவவேண்டும்.அதன் பின் ஆண்டிசெப்டிக் லோஷன் போட்டு கழுவலாம்.

கடி வாயை மூடக்கூடாது; தையல் போடக்கூடாது .

உடனே முதல் தடுப்பூசியை
 போட்டுக்கொள்ளவேண்டும்.

கடியின் வகைகள்:

category I : நாயை தொடுதல்,உணவு ஊட்டுதல்,காயம் படாத தோலை நக்குதல்

               மருத்துவம் : தேவையில்லை

category II: சிராய்ப்பு காயம்,கவ்வுதல்,குறைவான அளவில் ரத்தக்கசிவு

             மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி

category III: ஏற்கனவே உள்ள காயத்தை நக்குதல்,ஒன்றுக்கு மேற்பட்ட ஆழமான காயங்கள்,
 
நரி,ஓநாய்,வவ்வால் கடி

       மருத்துவம்: காயத்திற்கு முதலுதவி + ரேபிஸ் நோய்த்தடுப்பு ஊசி+ இம்முயுனோக்லோபின் தடுப்பு மருந்து

ஊசிகள்:

1. டிடி ஊசி - இது எந்த விலங்கு கடித்தாலும்
போடவேண்டியது

2. ரேபிஸ் ஊசி- அரசு மருத்துவமனையில் இது இலவசமாக் போடப்படும்
தனியாரில் ரூ 350-500 வரை ஆகும்

3.இம்யுனொக்லொபின் -அதிகமான அளவில்
உள்ள காயதிற்கு கட்டாயம் போட
வேண்டும்.இதுவும் இலவசமாக கிடைக்கும்

ஞாயிறு, 22 ஜனவரி, 2012

இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம்

காலையில் எழும்போதே காபி, அல்லது டீயின் முகத்தில் விழிப்பவர்கள்தான் அதிக அளவில் உள்ளனர். காபியோ, டீயோ எதுவென்றாலும் இன்றைக்கு சுத்தமானதாக இருப்பதில்லை. காசு செலவாவதோடு கலப்படத் தூளினை காய்ச்சி குடிப்பதால் உடல்நலம்தான் சீர்கேடு அடைகிறது. எனவே இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மூலிகை பானங்களை பருகினால் ஆரோக்கியமாக வாழலாம் என்று அறிவுறுத்தியுள்ளனர் இயற்கை ஆர்வலர்கள். பால் கலக்கத் தேவையில்லாத இந்த பானத்தை தயாரித்துக் குடிப்பதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம்.

செம்பருத்திப்பூ

மூன்று செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து டிகாசன் போல வடிகட்டி எடுக்கவும். அதனுடன் எலுமிச்சைப் பழச்சாறு, தேன் கலந்து டீயாகச் சுவைக்கலாம் இது இதயநோயை தடுக்கும். தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகிவர இதயம் வலிமை பெறும். படபடப்பு வலி, மாரடைப்பு ஏற்படாது.

ஆவாரம்பூ

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் ஒரு முறை சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும். இது பித்தப்பையில் உள்ள கல்லை நீக்கும். நீரிழிவை குணமாக்கும்.

மாம்பூ

மாம்பூ, மாந்தளிர் இரண்டையும் நீரில் போட்டு கொதிக்கவைத்து தேன் கலந்து இளம் சூட்டில் பருகிவர பல்வலி குணமடையும்.
 

நூறு கிராம் மாம்பூக்கள் எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு காய்ச்சி அடுப்பில் சுண்ட வைத்து காலை மாலை பருகிவர சீதபேதி குணமாகும்.

துளசி இலை

சில துளசி இலைகளை பறித்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். சளி, கபம் போக்கும்.

கொத்தமல்லி தழை

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும். சுவையான இந்த சுக்கு மல்லி காபி பித்தம் தொடர்பான நோயை போக்கும்

புதினா இலை

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம். இது அஜீரணத்தை அகற்றும். வயிற்றுப்போக்கை நிறுத்தும், சீதபேதிக்கு நல்ல பலன் கொடுக்கும். மாதவிடாய்த் தடங்கல்களை நிவர்த்தி செய்யும். சிறுநீர்த்தடைகளை நீக்கும். அகட்டு வாய்வை நீக்கும். பித்தம் தொடர்பான நோய்கள் அகலும். குடற்கிருமிகளை அழித்து வெளியேற்றும். ரத்தம் சுத்தியாகும். ரத்தக்குழாய்கள் பலமடையும். ரத்த உற்பத்தி அதிகரிக்கும்

கொய்யா இலை

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சலை கட்டுப்படுத்தும். கடுமையான இருமலால் அவதிப்படுபவர்கள் கொய்யா இலைகளை கொதிக்க வைத்து அதனுடன் தேன் கலந்து பருகிவர இருமல் கட்டுப்படும், காய்ச்சல் குறையும்.

சனி, 21 ஜனவரி, 2012

மகிழ்ச்சியான ரகசியங்கள் ஹெல்த் ஸ்பெஷல்



நீங்கள் செய்யும் ஒவ்வொரு நல்ல செயலுக்கும் ட்ரீட் வைத்துக் கொள்ளுங்கள்.

* ட்ரீட் என்றால், பெரிய ஹோட்டலுக்குச் சென்று காஸ்ட்லி உணவுகளைச் சாப்பிடுவது என்று அர்த்தமில்லை... ஐஸ்க்ரீம், வெங்காய பஜ்ஜி, பேல்பூரி, பானிபூரி, சாக்லெட் என்று சிக்கனமாகக்கூட ட்ரீட் வைத்துக் கொள்ளலாம்.

வாசிக்கின்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

* இரவு படுக்கப்போவதற்கு முன்பாக, உங்களுக்குப் பிடித்த வார இதழ்களை, நியூஸ்பேப்பரை பரபரப்பின்றி படியுங்கள். மனசு ரிலாக்ஸாகி, சட்டென்று தூக்கம் வந்து விடும்.

தூக்கத்திற்கு மட்டுமல்ல, உங்களை நீங்கள் வளர்த்துக்கொள்ளவும் நல்ல புத்தகங்கள் உதவும். எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் வருடத்திற்கு குறைந்தது மூன்று புத்தகங்களாவது விலைக்கு வாங்கிப் படிக்க வேண்டும் என்ற பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார். இது மாதிரியான உங்களுக்கு ஒத்து வரக்கூடிய நல்ல விஷயங்களைத் தேர்ந்தெடுத்து அதைத் தொடர்ந்து செய்தால், உங்களை அறியாமலேயே, உங்களிடம் ஒரு ஒழுங்கு வந்து, அந்த ஒழுங்கே உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

மனதுக்கு இனிமை தருபவை உங்களுக்குப் பக்கத்திலேயே இருக்கின்றன.

* காலையில் எட்டு மணி வரை தூங்கி விட்டு, அதன் பிறகு அரக்கப் பரக்க வேலையை ஆரம்பிக்கும் ஆளா நீங்கள்? உங்களிடம் ஒரு கேள்வி. இப்படி எட்டு மணி வரை தூங்கியும் உங்களால் அன்று முழுக்க ரிலாக்ஸ்டாக, களைப்பின்றி வேலை செய்ய முடிகிறதா? இல்லை தானே... காரணம், லேட்டாக எழுவதால் காலையில் உங்கள் வேலையை தாமதமாக அரக்கப் பரக்கத் துவங்குகிறீர்கள். விளைவு, எல்லா வேலைகளிலும் டென்ஷன்... டென்ஷன்... டென்ஷன். இதைத் தவிர்க்க இரவு கொஞ்சம் சீக்கிரமாகத் தூங்கச் செல்லுங்கள். காலையில் சற்று சீக்கிரமாக எழுங்கள். இனிமேல்தான் விஷயமே இருக்கிறது.

உங்கள் வீட்டில் மொட்டை மாடி இருந்தால் அங்கு சென்று சூரியன் உதிப்பதை ரசித்துப் பாருங்கள். கோயில் மணி, பக்கத்து வீட்டு சுப்ரபாதம், பால்காரனின் கூப்பாடு... எல்லாவற்றையும் ஒரு பத்து நிமிஷம் நோட்டமிடுங்கள். ஏதோ ஒரு இனம் புரியாத அமைதியும் குதூகலமும் உங்கள் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும்.

உங்களைச் சுற்றி நட்பு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

* யாரிடமும் பேசாமல், தனியாகவே வாழ்வதினால் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியுமா சொல்லுங்கள்? கலகலவென்று நல்ல நட்பு வட்டத்திற்குள் வாழும்போது, எனர்ஜி லெவல் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். பெண்களுக்கு இப்படிப்பட்ட நட்பு வட்டம் மிகவும் முக்கியம். ஏனென்றால், ஏதாவது ஒரு எமர்ஜன்ஸி என்றால் முதலில் கை கொடுப்பது பக்கத்து வீட்டு ஃபிரெண்ட்ஸ் தான்! நீங்கள் அபார்ட்மெண்ட்ஸில் இருக்கும் பெண்ணா? உங்களிடம் பக்கத்தில் இருப்பவர்கள் பழக மாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்களா? டோண்ட் வொர்ரி. ஈகோவைத் தூக்கி எறிந்து விட்டு, அவர்களிடம் நீங்களே வலியச் சென்று பேசுங்கள். உங்கள் வீட்டில் நடக்கும் முக்கியமான விசேஷங்களுக்கு (பர்த் டே, வெட்டிங் டே...) அவர்களை அழையுங்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகளோடு, உங்கள் வீட்டுக் குழந்தைகளை நட்பாகப் பழக விடுங்கள். பிறகென்ன? மெல்ல மெல்ல அவர்கள் உங்கள் வழிக்கு வந்து விடுவார்கள். இதில் மிகவும் முக்கியமான விஷயம். மிகவும் பர்ஸனலான விஷயங்களை டிஸ்கஸ் பண்ணுகிறேன் பேர்வழி என்று ஃபிரெண்ட்ஷிப்பைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

ஆஹா பைக் பயணம்!

* நீங்களும், உங்கள் கணவரும் மிகவும் டிப்ரஸ்டாக உணருகிறீர்களா? உடனே இருவரும் பைக்கில் ஏதாவது ஒரு நெடுஞ்சாலையில் பயணம் செய்யுங்கள். (சாயங்கால நேரம் இது மாதிரியான பயணங்களுக்கு ஏற்றது) சில்லென்ற காற்று முகத்திலடிக்க பயணிக்கும் போது, உங்களுக்குள் ஒரு ரொமான்டிக் உணர்வு ஏற்பட்டு விடும்.

அப்புறம் டிப்ரஷனாவது ஒண்ணாவது?

உணவிலும் மகிழ்ச்சியைக் கொண்டு வரலாம்!

* ‘சாக்லெட்மாதிரியான சந்தோஷத்தை ஏற்படுத்தும் உணவு வேறெதுவும் இல்லை. அதனால் உங்களுடைய பிரியமானவரோடு சாக்லெட் சாப்பிட்டுக் கொண்டே ஒரு வாக் சென்று பாருங்கள்! புதிதாய்ப் பிறந்தது போல உணர்வீர்கள்.

* ‘காரச் சுவைக்குமகிழ்ச்சியைத் தூண்டும் சக்தி இருக்கிறது. அதனால். மாதம் ஒருமுறையாவது ஸ்பைஸியான, காரமான உணவுகளைச் சாப்பிடுங்கள். (அடிக்கடி காரம் சாப்பிட்டால் வயிற்றுக்குக் கேடு. ஜாக்கிரதை!)

* தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டுப் பாருங்களேன். டிப்ரஷனைக் குறைக்கும் சக்தி ஆப்பிளுக்கு இருக்கிறது. ஆப்பிளில் இருக்கக் கூடிய ஃபிரக்டோஸ்எனர்ஜி லெவலை அதிகப்படுத்தும்.

மகிழ்ச்சியாய் இருக்க மசாஜ்!

* அதிகமான டிப்ரஷனால் (மனச்சோர்வினால்) அவதிப்படுகிறீர்களா? நம்பகமான ஆயுர்வேத நிலையங்களிலோ, பியூட்டி பார்லரிலோ மசாஜ் செய்து கொள்ளுங்கள். உடலுக்கான மசாஜ், மன பாரத்தையும் குறைக்கும்! மஸாஜ்க்கு டென்ஷன் மற்றும் ஸ்டிரெஸ்ஸைக் குறைத்து வாழ்க்கையின் மேல் பிடிப்பை ஏற்படுத்தும் சக்தி இருக்கிறது.

* நாய், பூனை, புறா, முயல், லவ் பேர்ட்ஸ் ஆட்டுக் குட்டி என்று நீங்கள் விரும்பும் ஒன்றை வளர்த்துப் பாருங்களேன். டயர்டாக நீங்கள் உணரும் போதெல்லாம் அது உங்களை மகிழ்விக்கும்.

* பண்டிகை நாட்களை பேருக்கு கொண்டாடி விட்டு டீ.வி. முன்னாலேயே பழியாகக் கிடக்காமல், அன்று ஒரு நாளாவது, உறவினர்களை சந்தித்து அவர்களுடன் சந்தோஷமாக மட்டும் (கவனிக்க... சந்தோஷமாக மட்டும்) பேசி பொழுதைக் கழியுங்கள். இந்தப் பழக்கம் உங்கள் குழந்தைகளுக்கு, ‘உறவுகளை நேசிக்க வேண்டும்என்கிற விஷயத்தைப் புரிய வைக்கும்.

* பூக்கள், குழந்தைகள் இரண்டையும் போல மகிழ்ச்சி தரும் விஷயங்கள் வேறெதுவும் இல்லை. பூச்செடிகளை வளர்த்தால் உங்களுக்கு மிகப்பெரிய ரிலாக்சேஷன் கிடைக்கும். உங்கள் வீட்டு அல்லது பக்கத்து வீட்டுக் குழந்தைகளை ஆசை ஆசையாகக் கொஞ்சுங்கள். அது அதைவிடப் பெரிய ரிலாக்சேஷன்.

* மனசு கஷ்டமாக உணருகிறீர்களா? கவிதை, ஓவியம், கைவேலை (எம்பிராய்டரி, கூடை பின்னுவது போன்றவை) என எதில் உங்களுக்கு ஆர்வம் இருக்கிறதோ அதில் மனதைச் செலுத்துங்கள். உங்களின் கான்ஸன்ட்ரேஷன் செய்கிற வேலையில் திரும்பி விடும்

* சில பேரைப் பார்த்தாலே மனதுக்கு ஒரு சந்தோஷம் வந்து விடும். பேசினாலோ, உற்சாகம் தொற்றிக் கொண்டு, வாழ வேண்டும் என்கிற ஆசை வந்துவிடும். நீங்கள் சோர்வாய் உணரும் போது, இப்படிப்பட்ட உற்சாகஆட்களை சந்தியுங்கள் அல்லது ஃபோனில் பேசி,இழந்த எனர்ஜியை ரிசார்ஜ் செய்துகொள்ளுங்கள்.

* மனசு பாரமாக இருக்குமபோது, நீங்கள் பளிச்சென்று டிரெஸ் பண்ணிக் கொண்டு எங்கேயாவது வெளியில் செல்லுங்கள். நம்பிக்கையாக உணர்வீர்கள். அழுது வடியும் உடைகள் உங்களை இன்னமும் சோர்வாக்கும்.

* நீங்கள் மிகவும் சென்ஸிடிவ்வான ஆளாக இருந்தால், உங்களது பலவீனத்தைப் பயன்படுத்தி உங்களை ஒவ்வொருவரும் சீண்டிக் கொண்டேயிருப்பார்கள். உங்களுக்காக உண்மையிலேயே அக்கறைப்படுபவர்களின் வார்த்தகளைத் தவிர மற்றவர்களின் டைம் பாஸ்கமெண்ட்களை கண்டு கொள்ளாதீர்கள். புறக்கணியுங்கள்.

பெண்களுக்கு முத்து.. முத்தான யோசனைகள்...




* கவரிங் நகைகளை வாங்கிய உடனேயே அவற்றின் மீது கலர்லெஸ் நெயில் பாலிஷைத் தடவி வைத்து விடுங்கள். மெருகு குலைந்து பல்லிளிக்காது.

* எலுமிச்சம் பழம் மலிவாகக் கிடைக்கும் போது வாங்கிப் பிழிந்து ஃப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் வைத்து விடுங்கள். தேவையான போது உபயோகித்துக் கொள்ளலாம்.

* எண்ணெயை மொத்தமாக வாங்கி வைக்கும் போது அதில் காரல் வாசனை எடுக்காமலிருக்க, அதில் நான்கைந்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு வைத்து விடுங்கள்.

* பழைய சாக்ஸுகளைத் துடைப் பத்தின் கைப்பிடிப் பக்கம் மாட்டிக் கட்டி விட்டால் துடைப்பம் கைகளை உறுத்தாமல் இருக்கும்.

* உளுந்து நிறைய வாங்கி விட்டீர்களா? அவற்றின் மேல் கொஞ்சம் எண்ணெயைத் தடவி வெயிலில் காய வைத்து எடுத்து வையுங்கள். பூச்சிகள் வராது.

* காலையில் செய்கிற காய்கறிகள் மீந்து விட்டனவா? பஜ்ஜி மாவில் அவற்றைக் கலந்து எண்ணெயில் போட்டுப் பொறித்தெடுத்தால் வித்தி யாசமான சுவையுடன் தூள் பஜ்ஜி கிடைக்கும்.

* கொசுவை விரட்ட உபயோகிக் கும் மேட் தீர்ந்து விட்டதா? முதல் நாள் உபயோகித்த மேட்டின் மேல் சில துளிகள் வேப்பெண்ணெயை விட்டு மறுபடி மிஷினில் வைத்து விடுங்கள். கொசு வராது.

* காரணமே இன்றி திடீரென வயிற்றை வலிக்கிறதா? உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக் கொண்டு, கொஞ்சம் தண் ணீரைக் குடித்து விட்டால் வலி பறந்து விடும்.

* காலை அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசரத்தில் கைக்குட்டை யைத் துவைக்க மறந்து விட்டீர்களா? அதை ஒரு முறை அலசி, சமைத்து வைத்துள்ள சூடான பாத்திரங்களின் மேல் சிறிது நேரம் பரப்பி வைத்து விடுங்கள். பட்டாகக் காய்ந்து விடும்.

* சைனஸ் தொல்லையால் படுக்கும் போது தலைவலிக்கிறதா? படுக்கும் போது தலையணையை ஒரு நியூஸ் பேப்பரால் சுற்றி விட்டு அதன் மேல் தலை வைத்துப் படுங்கள். வலி இருக்காது.

* ரசம் கொதித்து இறக்கும் போது அதில் ஒரு ஸ்பூன் கறிவேப் பிலைப் பொடியைத் தூவி இறக் கினால் வாசனை ஊரைத் தூக்கும்.
தனியே கறிவேப்பிலை போட வேண் டிய அவசியமுமில்லை.

* மிக்சியில் மாவு அரைக்கும் போது அது சீக்கிரமே சூடாகி விடும். இதைத் தவிர்க்க, மாவில் கொஞ்சம் ஐஸ் வாட்டர் தெளித்து அரைக்கலாம்.

* கூடியவரையில் சமையலை இரும்புப் பாத்திரத்திலேயே செய் யுங்கள். அதனால் நம் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்து கிடைத்து விடும்.

* அப்போதே அரைத்த தோசை மாவில் தோசை ஊற்றினால் கசக்கும். அதைத் தவிர்க்க அதில் மோர் கலப் பதற்குப் பதில் பழைய சாதத்துத் தண்ணீ ரைக் கொஞ்சம் கலந்து செய்யலாம்.

* தக்காளிப் பழங்கள் மீந்து விட்டால் அதை அரைத்து வடிகட்டி தோசை மாவுடன் சேர்த்து, கொஞ்சம் காய்கறி களை நறுக்கிப் போட்டு தோசையாக ஊற்றிக் கொடுக்கலாம். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

* காலையில் செய்த உருளைக்கிழங்கு மசாலா மீந்து விட்டதா? அதை லேசாக சூடு படுத்தி, பிரெட் அல்லது பன் உள்ளே வைத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.

* தேங்காய் சாதம் செய்கிறீர்களா? அத்துடன் வேர்க் கடலையை ஒன்றிரண்டாகப் பொடித்துப் போட்டு, காய்கறிகளையும் வதக்கிப் போட்டுச் செய்யலாம்.

* பூண்டு குழம்பு செய்யப் போகிறீர்களா? பூண்டை எப்படி உரிப்பது என்று மலைக்க வேண்டாம். முதல் நாள் இரவே பூண்டை ஃப்ரிட்ஜினுள் வைத்து விடுங்கள். அடுத்த நாள் உரிக்க சுலபமாக இருக்கும்.

* அரிவாள் மனையின் முகப்புப் பகுதி யில் ஒரு வெங்காயத்தைக் குத்தி வைத்து விட்டுப் பிறகு நறுக்கினால் கண்ணீர் வராது.

* புதினாவை மிக்சியில் அரைத்து கோதுமை மாவுடன் கலந்து சப்பாத்தி, பூரி போன்றவை செய்தால் வித்தியாசமான சுவையுடனும், நிறத்துடனும் இருக்கும்.

* மாதவிலக்கு சரியாக வராத பெண்கள் மாதவிலக்காகும் போது முதல் மூன்று நாட்களுக்கு கொள்ளுக் கஷாயம் வைத்துக் குடிக்கலாம். மாதவிலக்கும் முறைப்படும். உடலின் ஊளைச்சதைகளும் குறையும்.

* ரவை தோசை செய்யும் போது அதில் ஒரு ஸ்பூன் சோம்பை அரைத்துக் கலந்து செய்தால் வாசனை பிரமாதமாக இருக்கும்.

* பச்சை மிளகாயைக் காம்பு நீக்கி விட்டு, ஒரு பிளாஸ்டிக் டப்பாவினுள் போட்டு மூடி வைத்து விட்டால் ஒரு வாரம் வரை அப்படியே இருக்கும்.

* சீயக்காய் வாங்கி அரைக்கும் போது அத்துடன் சாதாரணமாகச் சேர்க்கும் பொருட்களுடன் ஒரு கைப்பிடியளவு வேப்பிலை யையும் போட்டு அரைக்க பேன், பொடுகுத் தொல்லை இருக்காது.

அனைத்து மொபைல்களுக்கான GPRS settings களும் ஒரே இடத்தில்


ஒரு சில புதிய கம்பெனியின் மொபைல்களில் GPRS settings இருப்பதில்லை. நமக்கு இன்டர்நெட் பயன்படுத்தும் விருப்பம் இருப்பினும் நம்மால் அந்த சேவையை நமது மொபைல்போனில் பயன்படுத்த முடியாமல் இருப்போம். 

கஸ்டமர் கேரில் கேட்டால் இந்த வகை போன்களுக்கு ஜி.பி.ஆர்.எஸ் செட்டிங் இல்லை என்று சொல்வார்கள். அத்தகைய மொபைல்களுக்கு மேனுவலாக நாமே தான் செட்டிங்ஸ் செய்ய வேண்டும். அவர்கள் சொல்லும் செட்டிங்ஸில் ஒரு தவறு ஏற்படினும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியாது.
 

ஏதாவது ஒரு சந்தர்ப்பதில் நாமாகவே செட்டிங்ஸை மாற்றிவிட்டால் கூட மீண்டும் அதை பெற சிரமப்பட வேண்டியிருக்கும். இனி அந்த கவலையே வேண்டாம். நீங்கள் இந்த தளத்தின் பக்கத்தை புக்மார் செய்துகொள்ளுங்கள்.

பல்வேறு வகையான கம்பெனிகளின் Manual GPRS செட்டிங்ஸ்களைக் கொடுத்திருக்கிறேன். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
 

நாட்டின் முதன்மையான இணைய வழங்கி BSNL க்கான Manual GPRS Settings

Account Name – BPL WAP
Username –
 
Password –
 
Proxy – Enabled/yes
Homepage – http://wap.mizone.bplmobile.com
Proxy and Server address – 10.0.0.10
Proxy and Server Port – 8080
Acces Point Name – mizone
Data bearer – GPRS/ Packetdata
Authentication Type – Normal

தமிழ்நாட்டில் முக்கிய நெட்வொர்க் Aircel-க்கான GPRS Manual Settings

NAME : Aircel Online
Homepage :http://google.com
User Name :Blank
Password :Blank
Use preferred Access Point :aircelgprs or aircelwap
Open Access Point Setting
Proxy:Enabled
Proxy address :192.168.035.201
 
port :8081
Data Bearer : Packet Data

நாட்டின் புதுமையை புகுத்தி வரும் இணைய வழங்கி Vodafone க்கான Manual GPRS Settings

Account Name – Vodafone_GPRS
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Access Point Name – portalnmms
Full Internet Access Point Name – www
Proxy and Server address – 10.10.1.100
Proxy and Server Port – 8080
Homepage – www.google.com
Authentication Type – Normal

 Airtelக்கான GPRS manual Settings

Homepage – any page you want to set.
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes.
Proxy and Server Adress – 202.56.231.117
Proxy and Server Port – 8080
Data bearer – GPRS or Packet Data.
Access Point Name – airtelgprs.com
Authentication Type – Normal
Use preferred access point – No

Airtel Live -க்கான Manual Settings

Account Name – Airtel_live
 
Homepage – http://live.airtelworld.com
Username – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Proxy and Server Adress – 100.1.200.99
Accespoint Name – airtelfun.com
Proxy and Server Port – 8080
Data bearer – GPRS/ Packet Data
Authentication Type – Normal

Idea-க்கான GPRS Manual Settings

Account Name – idea_GPRS
Username – Blank
Password – Blank
Homepage – http://wap.ideafresh.com
Proxy and Server Port – 8080
Proxy and Server adress – 10.4.42.45
Databearer – GPRS / Packetdata
Acces Point Name – imis
Proxy – Enabled/yes
Authentication Type – Normal

 Uninor-க்கான GPRS Manual Settings

Profile name: uninor
Homepage: www.google.com (you can use your own home page)
Enable Proxy
Ip address: 10.58.10.58
Port: 8080
Linger time: 90
Don’t enable DNS
Bearer: choose GPRS
Advanced settings:
APN: uninor
Login: Leave blank
Password: Leave blank

TATA DOCOMO-க்கான GPRS Manual Settings

Account Name – DOCOMO_GPRS
User Name – Blank
Password – Blank
Proxy – Enabled/yes
Access Point Name –TATA.DOCOMO.DIVE.IN
Full Internet Access Point Name – www
Proxy and Server address – 10.124.94.7
Proxy and Server Port – 8080
Homepage – http://divein.tatadocomo.com
Authentication Type – Normal

Reliance-க்கான GPRS Manual Settings
apn: rcomwap
proxy: 10.239.221.5
port: 8080
Homepage: wap.rworld.co.in

Videocon-க்கான WAP Manual Settings

Connection Name : Videocon GPRS
Data Bearer : Packet Data
APN : vgprs.com
Username & Password: Blank
Homepage : http://wap.live.in
Proxy server : 10.202.5.145
Proxy port : 8799

Videocon-க்கான GPRS Manual Settings

Connection Name : Videocon Internet
Data Bearer : Packet Data
APN : vinternet.com
Username & Password: Blank
Homepage : www.google.com
Proxy server : Blank
Proxy port : Blank

Videocon-க்கான MMS Manual Settings 

Connection Name : Videocon MMS
Data Bearer : Packet Data
APN : vgprs.com
Username & Password: Blank
Homepage : http://10.202.4.119:10021/mmsc/
Proxy server : 10.202.5.145
Proxy port : 8799
 

VINTERNETக்கான செட்டிங்ஸ்

Service Description: vinternet
APN: vinternet.in
no proxy and port

Virgin-க்கான GSM Manual Settings

VBYTES
APN: m.vbytes.in
Home Page: http://m.vbytes.in
1.Proxy Server: 10.124.94.8
port:8080

மேற்கண்ட செட்டிங்சில் உங்கள் மொபைலுக்குரிய செட்டிங்சை தெரிவு செய்து பயன்படுத்திக்கொள்ளுங்கள். இப்போது உங்கள் மொபைல்களில் இணையத்தை பயன்படுத்தி மகிழலாம்.

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts