லேபிள்கள்

திங்கள், 20 ஜூன், 2011

வெளிநாட்டில் வேலை


வெளிநாட்டில் வேலை
வெளிநாட்டில் வேலை என்று ஒரு வாய்ப்பு வருகிறது என்றால் உடனடியாக நாம் அந்த
நிறுவனம் உண்மையானதுதானா என்று சோதிப்பது எப்படி என்பதைப்பற்றித்தான்
இந்தப்பதிவு.
பல ஏஜென்சிகள் மூலம் தினமும் பத்திரிகையில் நாம் படிக்கும் செய்தி வெளிநாட்டு
வேலை வாய்ப்பு நேரடி முகாம் உடனடியாக செல்ல விருப்பம் உள்ளவர் என்று
தொடர்புகொள்ளுங்கள், இப்படி வரும் செய்திகளில் பல நம்பகத்தன்மை இல்லாத
நிறுவனங்களாகவே இருக்கிறது, ஒரு வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் இருந்து
வேலைக்கு ஆட்களை தேர்வு செய்கிறது என்றால் அந்த நிறுவனம் உண்மையானது தானா
என்பதை நமக்கு தெரிவுபடுத்து மத்திய அரசின் ஒரு தளம் உதவுகிறது.
இணையதள முகவரி : http://www.poeonline.gov.in
கொத்தனார் முதல் மெக்கானிக்கல் என்ஜினியர் வரை , எலக்ட்ரிசன் முதல்
கம்ப்யூட்டர் என்ஜியர் வரை அனைவருக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்று வரும்
செய்திகளை மட்டுமே நம்பி பல பேர் வெளிநாடுகளுக்கு சென்று கடும் இன்னலுக்கு
ஆளாகின்றனர், ஒரு நிறுவனம் அல்லது அந்த நிறுவனத்தின் ஏஜென்டிடம் இருந்து
விளம்பரம் வரும் போது அந்த நிறுவனம் இந்தியாவில் அனுமதி
 பெற்றுள்ள நிறுவனமா
என்பதை எளிதாக கண்டுபிடிக்கலாம், மேலே குறிப்பிட்டு இருக்கும் மத்திய அரசின்
தளத்திற்கு சென்று நாம் இடது பக்கம் இருக்கும் RA Information என்பதில் நம்
மவுஸ்-ஐ கொண்டு சென்றதும் வரும் Sub menu -வில் நிறுவனத்தின் பெயர் , RC
Number , ஏஜெண்ட் பெயர் என்று மூன்று விதமாக நாம் தேடலாம் , விளம்பரத்தில்
அவர்கள் எந்த பெயர் மற்றும் RC Number கொடுத்துள்ளனரோ எதை வைத்து
வேண்டுமானாலும் நாம் தேடி அந்த நிறுவனம் உண்மையானது தானா ,
 இந்திய அரசின்
அனுமதி
 பெற்றுள்ளதா என்பதையும் எளிதாக  தெரிந்து கொள்ளலாம் , வெளிநாட்டு
வேலைக்கும் செல்ல இருக்கும் நபர்களுக்கு இந்தப்பதிவை
 கொண்டு சேர்ப்பது நம்
நண்பர்களின் கடமை.

கொகா கோலாவின் உண்மையான கலவை


மக்களே உலக குளிர்பான வரலாற்றில் ஒரு மைல்கல் என்று வர்ணிக்கப்படும் கொகா கோலா குளிர்பானத்தின் ரகசிய பார்முலா வெளியாகியுள்ளது.

கடந்த 125 வருடங்களாக குளிர்பான தயாரிப்பில் ஈடுபடும் கொகா கோலா நிறுவனம் தனது குளிர்பான தயாரிப்பில் ஒரு கலக்கப்படும் கலவைகளில் ஒரு சில பொருட்களை மாத்திரமே தனது தயாரிப்பில் வெளியிட்டு வந்துள்ளது.

இது வரைக்கும் கொகா கோலாவின் உண்மையான கலவை பற்றிய பார்முலா ரகசியம் யாருக்கும் தெரியாமல் பாதுகாக்கப்பட்டு வந்தது. அந்த ரகசியத்தில் தான் கோலாவின் ருசியின் பார்முலாவே அடங்கியிருந்திருக்கிறது. தற்போது அந்த பார்முலா வெளியாகிவிட்டதினால் கோலா பற்றிய பல தகவல்கள் உலகுக்கு கிடைத்துள்ளது.

கோலாவின் பார்முலாவுக்குறியவர் யார்?

கொகா கோலாவின் மறைக்கப்பட்டிருந்த பார்முலாவை கண்டு பிடித்தவர் ஜான் பெம்பர்டன் என்ற மருந்தாளுனர் ஆவார். அவா் கண்டுபிடித்ததிலிருந்து 125 வருடங்களாக அந்த பார்முலா ரகசியமாக பாதுகாக்கப்பட்டே வந்தது.
1886-ம் ஆண்டு முதன் முதலில் இது தயாரிக்கப்பட்டு விற்பனையானது. அட்லாண்டாவில் மட்டும் விற்கப்பட்ட இந்த குளிர்பானம் தற்போது உலகம் முழுவதும் உள்ள200 நாடுகளில் வினியோகிக்கப்படுகிறது.நாள் ஒன்றுக்கு 160 கோடி பாட்டில் கொகாகோலா பானம் சப்ளை செய்யப்படுகிறது.

கொகா கோலா எதனால் உருவாகிறது.

கொகா கோலா அடைக்கப்பட்டுவரும்பாட்டில்களில் கொகா கோலாவின் தயாரிப்புக் கலவைகள்பற்றியஒருகுறிப்பும் இருக்கும். அந்தக் குறிப்பில் சக்கரை, தண்ணீர், மற்றும் நிறமிகள் (கலர்)கள் கலக்கப்படுவதாகவும், அத்துடன் காபைன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ற ஒரு வாசகமும் இருக்கும்.

ஆனால் இந்த காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் பற்றிய உண்மையான பார்முலா யாருக்குமே தெரியாது. அது ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வந்தது.

கசிந்தது பார்முலா ரகசியம்.

இந்த நிலையில் அதில் என்னென்ன பொருட்கள் கலக்கப்படுகிறது என்ற தகவல் 125 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது வெளியாகியுள்ளது. இந்த பார்முலா ரகசியத்தை அமெரிக்காவில் இருந்து ஒளிபரப்பாகும் ஒரு ரேடியோ தெரிவித்துள்ளது. அதன் நிகழ்ச்சி இணையதளத்திலும் வெளியாகி உள்ளது.

அந்தத் தகவலை பிரபல செய்தி ஊடகமான அல்ஜஸீராவும் வெளியிட்டுள்ளது.

இது வரைக்கும் இந்த பார்முலா அடங்கிய ரகசிய காகிதம் கொகா கோலா நிறுவனத்தின் மூலம் அமெரிக்க வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.

ஏற்கனவே 1979 ல் ஜார்ஜியா மாநில உள்ளூர் நாளிதழ் ஒன்றில் இது வெளியானதாக தெரிகிறது. ஆனால் இப்போது இருப்பது போல கோகா கோலாவின் புகழ் அப்போது பெரிதாக இல்லை என்பதால் அந்த செய்திக்கு முக்கியத்துவம் இல்லாமல் போனது.

கொகா கோலாவின் ரகசிய பார்முலா எது?

கொகா கோலா என்ற குளிர்பானத்தை தயாரிப்பதற்கு பயண்படுத்தப் படும் பொருட்களுன் சேர்த்து காபன் கலந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்களையும் சேர்ப்பதாக கொகா கோலா நிறுவனம் தனது தயாரி்ப்புகளில் வெளியிட்டாலும் அந்த இயற்கை சுவை கூட்டல் பொருட்கள் என்ன என்ற ரகசிய பார்முலா இப்போது தான் வெளியாகியுள்ளது.

இதுதான் அந்த ரகசிய பார்முலா.

Fluid extract of Coca 3 drams USP.

Citric acid 3 oz .

Caffeine 1oz .

Sugar 30 (it is unclear from the markings what quantity is required).

Water 2.5 gal.

Lime juice 2 pints 1 qrt.

Vanilla 1oz .

Caramel 1.5oz or more to colour.

7X flavour (use 2oz of flavour to 5 gals syrup).

Alcohol 8oz .

Orange oil 20 drops.

Lemon oil 30 drops.

Nutmeg oil 10 drops.

Coriander 5 drops.

Neroli 10 drops.

Cinnamon 10 drops.

பார்முலா வெளிவந்த விதம்.

கொகா கோலாவின் இந்த ரகசிய பார்முலா கலந்த ரகசியம் அந்த நிறுவனத்தின் மிக முக்கிய இரண்டு பேரைக் கொண்டுதான் தயாரிக்ப்படுகிறதாம்.

அவர்கள் மூலம் இந்த ரகசியம் வெளியாகி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. அமெரிக்க வங்கி லாக்கரில் இருக்கும் இந்த ரகசிய பார்முலாவின் எழுத்து வடிவ காகிதத்தின் போட்டோ பிரதியை This American Life's என்ற சஞ்சிகை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜஸீரா இணையதளம் வெளியிட்டுள்ள வீடியோவைப் பார்க்க இங்கு க்லிக் செய்யுங்கள்.

கொகா கோலா பற்றிய மார்க்கத்தின் நிலைபாடு என்ன?

கொகா கோலாவின் கலவையில் கலக்கப் படும் பல ரசாயனங்களில் அல்கஹாலும் ஒன்றாக இருக்கிறது. அல்கஹாலைப் பற்றிய மார்க்கதின் நிலைபாட்டை முதலில் நாம் தெரிந்து கொண்டாலே கொகா கோலா பற்றிய மார்க்கத் தெளிவை லேசாகப் புரிய முடியும்.

ஆல்கஹால் பற்றிய இஸ்லாத்தின் நிலைபாடு என்ன?

ஆல்கஹால் போதையை உண்டுபண்ணக் கூடிய ஒன்றாகும். போதை தரும் எந்தப் பொருளையும் நாம் உண்ணக் கூடாது என்பது மார்க்கத்தின் கட்டளை.

போதை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொன்றும் ஹராம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

6124 حَدَّثَنِي إِسْحَاقُ حَدَّثَنَا النَّضْرُ أَخْبَرَنَا شُعْبَةُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ لَمَّا بَعَثَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذَ بْنَ جَبَلٍ قَالَ لَهُمَا يَسِّرَا وَلَا تُعَسِّرَا وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا وَتَطَاوَعَا قَالَ أَبُو مُوسَى يَا رَسُولَ اللَّهِ إِنَّا بِأَرْضٍ يُصْنَعُ فِيهَا شَرَابٌ مِنْ الْعَسَلِ يُقَالُ لَهُ الْبِتْعُ وَشَرَابٌ مِنْ الشَّعِيرِ يُقَالُ لَهُ الْمِزْرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ مُسْكِرٍ حَرَامٌ رواه البخاري

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் அல்லாஹ்வின் தூதரே! எங்கள் யமன் நாட்டில் தேனில் "அல்பித்உஎனப்படும் ஒரு வகை பானமும் வாற்கோதுமையில் "மிஸ்ர்என்று கூறப்படும் ஒரு வகை பானமும் தயாரிக்கப்படுகிறது (அவற்றின் சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்போதை தரக் கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டது (ஹராம்) ஆகும்என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி)

நூல்: புகாரி 6124

அதிகம் (சாப்பிட்டால்) போதை தரக் கூடிய பொருளில் குறைவானதும் தடுக்கப்பட்டது (ஹராம்) தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: திர்மிதீ 1788> நஸயீ 5513> 3725

و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُنْتُ نَهَيْتُكُمْ عَنْ الْأَشْرِبَةِ فِي ظُرُوفِ الْأَدَمِ فَاشْرَبُوا فِي كُلِّ وِعَاءٍ غَيْرَ أَنْ لَا تَشْرَبُوا مُسْكِرًا رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தோல் பையில் தவிர வேறெதிலும் பழச் சாறுகளை ஊற்றிவைக்க வேண்டாம் என உங்களுக்குத் தடை விதித்திருந்தேன். இனி> நீங்கள் எல்லாப் பாத்திரங்களிலும் பருகுங்கள். ஆனால்> போதை தரக் கூடிய எதையும் பருகாதீர்கள்.

இதை புரைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (3995)

3728 وَفِي حَدِيثِ صَالِحٍ أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.

முஸ்லிம் (4071)

மேற்கண்ட ஹதீஸ்களில் போதை ஏற்படுத்துதல் என்ற காரணத்துக்காக இத்தகைய தன்மையுள்ள பானங்கள் தடை செய்யப்படுகின்றது. ஆல்கஹாலைப் பொறுத்த வரை அதைப் பருகினால் போதை ஏற்படும்.

எனவே அல்கஹாலைப் பருகுவதும் கூடாது அல்கஹால் சேர்க்கப்படும் கொகா கோலாவைப் பருகுவதும் கூடாது என்பது தான் மேற்கண்ட செய்திகளிலிருந்து நமக்குக் கிடைக்கும் மார்க்கத்தின் தெளிவான நிலைபாடாகும்.

அல்லாஹ்விடம் கையேந்துவோம்


அல்லாஹ்விடம் கையேந்துவோம்

நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

யா அல்லாஹ் ! என் பாவங்களில் சிறியது, பெரியது, முதலாவது, கடைசியானது, பகிரங்கமானது, மறைவானது ஆகியவற்றை எனக்காகப் பொருத்தருள்வாயாக.(முஸ்லிம்) 

யா அல்லாஹ் ! உன் பொருத்தத்தைக் கொண்டு உன்னுடைய கோபத்திலிருந்தும், உன் மன்னிப்பைக் கொண்டு உன்னுடைய தண்டனையிலிருந்தும் நிச்சயமாக நான் காவல் தேடுகிறேன். இன்னும் உன்னைக் கொண்டு உன்னிலிருந்து காவல் தேடுகிறேன். உன்னை வரையறுத்துப் புகழ்ந்திட நான் சக்திபெறமாட்டேன். நீயோ உன்னை நீ புகழ்ந்தது போன்றே உள்ளாய். (முஸ்லிம்) 

யா அல்லாஹ் ! எனக்காக பாவம் பொருத்தருள்வாயாக ! எனக்கு அருளும் செய்வாயாக ! எனக்கு நேர்வழியும் காட்டுவாயாக ! (நல்லறங்கள் செய்ய) என்னை நிர்பந்திப்பாயாக ! எனக்கு சுகத்தையும் நல்குவாயாக ! (சம்பத்துகளை) எனக்கு நல்குவாயாக ! (சுவனத்தில்) எனக்கு உயர் பதவியில் ஆக்குவாயாக ! (திர்மிதி) 

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் கப்ரின் வேதனையிலிருந்து உன்னைக் கொண்டு பாதுகாப்பு தேடுகிறேன். மஸீஹுத் தஜ்ஜாலுடைய குழப்பலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன். என் வாழ்வு மற்றும் மரணத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன். யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் பாவம் மற்றும் கடன் தொல்லையிலிருந்து உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன். (புஃகாரி)

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான், அநேக அநியாயங்களை எனக்கு நானே செ;யதிருக்கிறேன், உன்னைத் தவிர பாவங்களை மன்னிப்பவர் யாருமில்லை, ஆகவே என்னுடைய பாவத்தை மன்னித்தருள்வாயாக ! எனக்கு அருளும் செய்வாயாக ! நிச்சயமாக நீ தான் மிக்க மன்னிப்பவக், பெருங்கிருபையாளன். (புஃகாரி) 

யா அல்லாஹ் ! நான் முற்படுத்தியவற்றை , பிற்படுத்தியவற்றை, நான் மறைத்தவற்றை, பகிரங்கப்படுத்தியவற்றை, நான் வீண் விரயம் செய்தவற்றை, என்னைவிட அதுபற்றி நீ மிகவும் அறிந்தவற்றை ஆகிய அனைத்தையும் எனக்காக நீ பொருத்தருள்வாயாக ! நீ தான் (நன்மைகளைச் செய்ய) முற்படுத்தி வைப்பவன், நீயே (தீயவற்றைச் செய்யாது காத்து) பிற்படுத்தி வைப்பவன். வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு எதுவும், எவரும்) இல்லை. (முஸ்லிம்)

யா அல்லாஹ் ! உன்னை நினைவுகூர, உனக்கு நன்றியும் செலுத்த, உன்னுடைய வழிபாட்டையும் அழகிய முறையில் செய்ய எனக்கு நீ உதவி செய்வாயாக! (அபுதாவூது) 

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் கருமித்தனத்திலிருந்து(கஞ்சத்தனத்திலிருந்து) உன்னைக் கொண்டு பாதுகாவல் தேடுகிறேன், கோழைத்தனத்திலிருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், தள்ளாத வயதின்பால் தள்ளப்படுவதிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், இவ்வுலக குழப்பம் மற்றும் கப்ரின் வேதனையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.(ஃபத்ஹுடன் புகாரி) 

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் சுவனத்தை உன்னிடம் கேட்கிறேன், உன்னைக் கொண்டே நரகத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். (அபுதாவூது)

யா அல்லாஹ் ! நிச்சயமாக நான் உன்னிடம் பயன் தரக்கூடிய கல்வி, சுத்தமான (ஹலாலான) உணவு, (உன்னிடம்) அங்கிகரிக்கப்படும் நல்லறம் ஆகியவற்றைக் கேட்கிறேன். (இப்னுமாஜா) 

யா அல்லாஹ் ! நீதான் என் இறைவன், வணங்கப்படுபவன் உன்னையன்றி (வேறு எதுவும், எவரும்) இல்லை, என்னை நீ படைத்தாய், நானோ உன்னுடைய அடிமை, இன்னும், என்னால் இயன்றவரை உன்னுடைய உடன்படிக்கை மற்றும் வாக்குறுதியின் மீது உள்ளேன், நான் செய்தவற்றின் தீமையிலிருந்து உன்னைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன், நீ எனக்கு வழங்கிய உன்னுடைய அருட்கொடைகளை ஒப்புக்கொள்கிறேன், என் பாவத்தையும் நான் ஒப்புக்கொள்கிறேன். ஆகவே, என் பாவத்தை பொருத்தருள்வாயாக! ஏனெனில், உன்னைத் தவிர பாவங்களை மற்றெவரும் பொருத்தருளமாட்டார்.(புகாரி)
 

Paneer: பன்னீரை சமைத்து சாப்பிடுவது நல்லதா? நிபுணர்கள் கூறுவது என்ன?

Paneer Health Benefits: ஆரோக்கியமான பால் உணவான பன்னீர் , அனைவராலும் விரும்பப்படும் ஒரு உணவாக உள்ளது. ஆனால் , பன்னீர் சாப்பிடும் சரியான ம...

Popular Posts