லேபிள்கள்

ஞாயிறு, 8 மே, 2011

தொப்புள் கொடி:

  தாய்க்கும் சேய்க்கும்  இடையே  பாலமாக  செயல்பட்டு  உணவு மற்றும் உணர்வுகளை  பகிரும் ஒரு அற்புதமான அமைப்பே தொப்புள் கொடி .


       
இதனுள் மூன்று ரத்த குழாய்கள்  இருக்கும் . இரு தமனி (artery ) மற்றும் ஒரு  சிரை(vein ). பிறந்தவுடன்  கத்தரிக்கும் போது  குறுக்கு வெட்டு தோற்றத்தில்  இந்த மூன்று ரத்த குழாய்களும்  தெரியும் . பிறவி குறைபாடு ,இருதய குறைபாடு  உள்ள குழந்தைகளுக்கு ஒரு தமனி மட்டுமே இருக்கலாம் . (single umbilical artery )






தொப்புள் கொடி குழந்தை  பிறந்த 7 - 10  நாட்களில் விழுந்துவிடும் .இரண்டு வாரங்களுக்கு பிறகும்  விழவில்லை எனில்  நோய் தோற்று உள்ளது என்று பொருள் ,உரிய சிகிச்சை  செய்யவேண்டும்.



               
umbilical granuloma
சில நேரங்களில்  தொப்புள் கொடி விழுந்த பின்பும்  அந்த இடத்தில சிகப்பு நிறத்தில்  சதை கட்டி போல ஒட்டிக்கொண்டு  இருக்கும் .இதற்க்கு  umbilical granuloma  என்று பெயர் . 
இதற்க்கு silver  nitrate மருந்தை மருத்துவர்  அறிவிரையின் பேரில் பயன்படுத்தவேண்டும் .



cleaning
தினமும் தொப்புள் கொடி விழும் வரை  ஆன்டி செப்டிக்  மருந்து கொண்டு  சுத்தம்  செய்தால் போதும் . 



கிராமங்களில்  இன்னும்  சுருட்டு  சாம்பல் வைப்பது  , சாணம் தடவுவது  போன்ற செயல் களை செய்து வருகின்றனர் . இது முற்றிலும் தவறு .



தொப்புள் கோடியில் உள்ள ரத்த குழாய்கள்  கல் ஈரலில்  சென்று முடிகின்றன  , எனவே இங்கே  நோய்தொற்று  வந்தால்  கல்லீரலை  கூட பாதிக்கும் .கவனம் அவசியம் . 


தொப்புள் கொடிக்கு நிறைய மருத்துவ குணங்கள்  உண்டு . நாள் பட்ட புண்களை  ஆற்ற இதிலிருந்து  மருத்துகள் தயாரிக்க படுகிறது (placentrex ).


மேலும் தொப்புள்  கொடி ரத்தம் பல நோய்களுக்கு  ஒரு சரியான தீர்வாக  அமையபோகிறது -( cord blood  

கருத்துகள் இல்லை:

உடலில் இரத்தம் குறைவாக இருந்தால் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்.

இரத்த சோகை காரணமாக உடல் மிகவும் பலவீனமாக தோன்றும். எப்போதும் சோர்வாக இருக்கும். அடிக்கடி தலைவலி ஏற்படும். உடலில் ரத்தம் குறைவாக இருக்கும்ப...

Popular Posts