லேபிள்கள்

புதன், 16 மார்ச், 2011

மயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .


மயிர் உதிர்தல் காரணங்களும்தீர்வுகளும் .
இன்றைய அவசர உலகம் நோய்களை தேடி அலைகிறது .அந்த வரிசையில்
தலையில் மயிர் வுதிர்தலும் அடங்கும் . இப்போது இளையோரின் சிக்கல் என்னவென்றால் தலையில் சிக்கல் ஏற்ப்படாமல் இருப்பதுதான் . அதாவது தலைமயிர் உதிர்தல் . தலையில் மயிர் இருந்தல்தனேஉதிர்வதக்கு இப்போதுதான் தலையில் மயிரே இருப்பதில்லையே .
தலைமயிர் உதிர்வதற்கும் இளைய வயதிலேயே மயிர் வெளுத்து போவதற்கும் கரணங்கள் இல்லாமல் இல்லை .இன்றைய அவசர உலகம் மனிதனை படுத்தும் பாடுஇருக்கிறேதே சொல்லி மாளாது.போலித்தனத்திற்கு கொடுக்கும் மதிப்பு உண்மைக்கு கொடுப்பதில்லை . அதனால் மனிதன் நோயில் விழுந்து தவிக்கிறான் .
எப்படியாவது நோவில் இருந்து மீட்டுவிட நினைக்கும் அறிவுசார் துறையினர் படும் படும் சொல்லிமாளாது .உலகத்தமிழர்களே உண்மையை சற்று திரும்பிபாருங்கள் என வேதனையோடு சொல்லவேண்டி இருக்கிறது .
பொதுவாக நோய்களுக்கான காரணகள் காரியங்கள் போன்ற வற்றை ஆய்வு செய்த பிறகே நோய்க்கு மருந்து எடுக்கவேண்டும் , மருந்து அளிக்கவேண்டும் என அன்போடு கட்டளையிடுகிறது நம் சித்தமருத்துவம்
அதைத்தான் மக்கள் கேட்பதுமில்லை நாடு வதுமில்லை .
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல் . என்கிறது வள்ளுவம்
நோய் வந்த காரணங்களை பருண்மையாக ஆய்வு செய்க என்பது அதன்சுருக்கம் .கொஞ்சம் பொறுமையோடு அணுகுவோம் .
பழங்காலங்களில் முறையாக வாழ்ந்தனர் நம் முன்னோர் உடலையும் பொன்னேபோல் காத்தனர் . நமிடம் இருந்த அறிவு செல்வங்களை கொண்டு சென்று பலநாடுகள் முன்னேறிவிட்டது . நமோ ஏழ்மையில் கிடக்கிறோம் .
இயற்கையோடு இணைந்து வாழ்ந்தோமானால் இப்போதும் குறைவில்லை .
நோயில்லாமல் வாழமுடியும் உலகமக்களையும் நோயில் இருந்து மீட்கலாம் .
இயற்கை முறையில் வாழ்ந்து மக்களை வழிப்படித்தினர் நம்முன்னோர் .தலைக்கு முறையான மூலிகைகளை கண்டறிந்து தேய்த்து குளித்து உடலையும் மயிரையும் காத்தனர் .
வாரம் இரண்டு நாள் நல்லெண்ணை தேய்த்து குளிப்பது இப்போது மறந்துவிட்டது . அதை தொடங்க வேண்டும் . தலைக்கு சீயக்காயும்மூலிகைகளையும் கலந்து தேய்க்கவேண்டும் .
இப்போது முளிகைகளுக்கு மாறாக ரசாயனங்களையும் ,சோப்புகளையும் பயன் படுத்துகின்றனர் சாம்புகள் எல்லாம் ரசாயனம் கலந்தவைகள் இவைகள் மயிரை உதிரவைப்பது இல்லாமல் வெளுக்க செய்கிறது இதைப்பற்றி கொஞ்சம் மக்கள் கவலை கொண்டால் நல்லது .இப்போது விளம்பரங்களிலும் , டப்பக்களின் மேல் தான் மூலிகைகள் இருக்கிறது உள்ளே இருக்குமா ? யாருக்கு வெளிச்சமோ
தலை கழுவ நாமே செய்த தூளை பயன்படுத்தலாம் .அவைகள்
சீயக்காய் - ஒருபங்கு 
மணிப்புங்கன் - கால்பங்கு 
கடலைபருப்பு - ஒருபங்கு 
பாசிபருப்பு - ஒருபங்கு
கார்போக அரிசி - நூறுகிராம் 
செம்பரத்தை - தேவையான அளவு 
நெல்லிகாய் - ஒருபங்கு
ஆவாரை பஞ்சாங்கம் - கால்பங்கு 
சடமான்சில் - ஐம்பது கிராம்
என தேவைக்கு ஏற்றபடி கூட்டியும் குறைத்தும் மருந்துகளை செய்து தலை கழுவலாம் . 
தலைக்கு திரிபலா, அதிமதுரம், கரிசாலை , பொடுதலை ,மருதாணி போன்றவற்றை சேர்த்து தேவையான எள் எண்ணெய் சேர்த்து பதமுற காய்ச்சி
தலைக்கு நாளும் தேய்க்கலாம் . இதனால் மயிர் உதிராமல் காக்கப்படுவதுடன்
கண்களையும் காக்கிறது
தலைமயிர் உதிர்ந்தவர்கள் - அளவிற்கதிகமான கவலையை நீக்குக .
வாரம் இரண்டுநாள் எள்எண்ணெய் குளியல் செய்க .
இரும்பு சத்து , போலிக் சத்து குறைபாடு மயிரை உத்திர செய்யும் .
உப்பு நீரும் தலைமயிரை உதிரசெய்யும் .
உப்புநீர் என்றால் படிகாரம் சிறிது தண்ணீரில் போட்டு குளிக்கலாம் .
வாழைப்பூ , புடலங்காய் , பேரிட்சை , அதிகம் சேர்க்கலாம் .
பொடுகு இருந்தால் மயிர் உதிரும் பொடுதலை என்ற மூலிகை
பயன்படுத்தி நீக்கிக் கொள்க .

இலந்தை இலை நன்கு அரைத்து சாறு எடுத்து நாளும் தேய்த்து குளிக்க லாம்
முசுமுசுக்கை என்ற மூலிகை சாரை நன்கு தலையில் தேய்த்து குளிக்கலாம்.
இவற்றினால் நல்ல முன்னேற்றம் காணமுடியும் .

காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இணைக்க:-


காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை விண்டோஸ் எக்ஸ்புளோரரில் இணைக்க:-
முதலில் கூறியவாறே விண்டோஸ் ரிஸ்டரியை ஒப்பன் செய்து கொள்ளவும். பின் கீழ்கண்டவாறு பட்டியல்களை தேர்வு செய்யவும்.
HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\
Explorer\FolderTypes\{5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7}
கடைசியாக தோன்றும் {5c4f28b5-f869-4e84-8e60-f11db97c5cc7} என்னும் துணைப்பிரிவில் வலதுகிளிக் செய்து New > Key என்பதை தேர்வு செய்யவும் தோன்றும் விண்டோவில் TaskItemsSelected குறிப்பிட்டு ஒகே செய்யவும். பின் வலது புறமாக தோன்றும் Default என்பதை டபுள் கிளிக் செய்யவும் தோன்றும் தோன்றும் விண்டோவில் Windows.Copy;Windows.Paste;Windows.Delete; என்னும் கட்டளையை இணைக்கவும்
பின் கணினியை ஒரு முறை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். இப்போது விண்டோஸ் எக்ஸ்புளோரரை ஒப்பன் செய்து பார்க்கவும். டூல்பாரில் காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்கள் இணைக்கப்பட்டிருக்கும்.
இந்த காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் பொத்தான்களை பயன்படுத்தி இனி எளிமையாக இந்த காப்பி, பேஸ்ட் மற்றும் டெலிட் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

செவ்வாய், 15 மார்ச், 2011

தெரியுமா உங்களுக்கு


  தெரியுமா உங்களுக்கு?

1.             இணைய இணைப்பின் வேகம் 8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.
2.“Start Me Up” 
என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது. 
3.
பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும். 
4.
அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து இருக்கும் கீகள் இணைந்து ஜாம் ஆகி நின்றுவிடக் கூடாது என்பதால் தான், கம்ப்யூட்டர் கீ போர்டாக குவெர்ட்டி கீ போர்டு எடுத்துக் கொள்ளப்பட்டது. 
5.
உங்கள் லேப்டாப் மீது தண்ணீர், காப்பி,டீ, கூல் ட்ரிங்க்ஸ் என ஏதாவது திரவும் கொட்டிவிட்டால், உடனே மின்சக்தி வரும் ப்ளக்கினை எடுத்து மின்சக்தியை நிறுத்தவும். அல்லது பேட்டரியினை வெளியே இழுக்கவும்.
6.
லேப்டாப்பின் பேட்டரி திறனை நீண்ட நாள் பாதுகாப்பாகப் பெற, திரையின் வெளிச்சத்தைக் குறைப்பது நல்லது.
7.
கம்ப்யூட்டர் கேம்ஸ்களில், மிக அதிகமாக விற்பனை செய்யப்பட்டது The Sims  என்ற கேம்.
8.
உங்களையும் அறியாமல், உங்களிடம் உள்ள ஒரே நகல் உள்ள ஒரு கோப்பினைக் கம்ப்யூட்டரிலிருந்து அழித்துவிட்டால், உடனே ரெகுவா போன்ற, கோப்பு மீட்டுத் தரும் அப்ளிகேஷன் புரோகிராமினைப் பயன்படுத்த வேண்டும். எனவே இதனை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைப்பது நல்லது.
9.
ஒரு பிரிண்டரை வெகுநாள் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என நீங்கள் திட்டமிட்டால், பிரிண்டரை வாங்கும் முன், ஒரு பக்கம் அதில் அச்சடிக்க எவ்வளவு செலவாகும் என்பதனையும்  கணக்கிட்டுப் பார்க்கவும். 
10. “Hotswapping” 
என்பது, கம்ப்யூட்டருடன் ஒரு சாதனைத்தை இணைத்துப் பயன்படுத்திய பின்னர், கம்ப்யூட்டரை ஷட் டவுண் செய்திடாமல் அல்லது ரீபூட் செய்திடாமல், இணைப்பை நீக்குவதனைக் குறிக்கும்.
11.
அப்ளிகேஷன் புரோகிராம் ஒன்றினை, கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்த பின், சிஸ்டம் முடங்கினாலோ, மிக மெதுவாக இயங்கினாலோ, உடனே சிஸ்டம் ரெஸ்டோர் பாய்ண்ட் மூலம், அந்த அப்ளிகேஷன் பதிந்த நாளுக்கு முன்னர் இருந்த நிலைக்குக் கம்ப்யூட்டரைக் கொண்டு வருவதுதான் சிறந்த வழியாகும். 
12.
ஒரு பிழைச் செய்தியைக் காட்டிய பின்னர், கம்ப்யூட்டர் முடங்கிப் போனால், அதற்கான தொழில் நுட்ப வல்லுனரை அழைக்கும் முன், அந்த பிழைச் செய்தி என்ன என்று குறித்து வைத்துக் கொள்வது சிறந்த வழி முறையாகும்முடியுமானால், அதனை செலக்ட் செய்து காப்பி செய்து, ஒரு டெக்ஸ்ட் பைலில் பேஸ்ட் செய்திடலாம்இயலாவிட்டால், அதனைப் பார்த்து எழுதிக் கொள்ளலாம். அதுவும் முடியாவிட்டால், அப்படியே அந்த பிழைச் செய்திக்கான திரையை, ஒரு இமேஜாக சேவ் செய்து, பின்னர் அதனைத் திறந்து அதில் இருப்பதைப் பார்த்து, டெக்ஸ்ட்  பைலாக சேவ் செய்து வைக்கலாம்.
13.  FAT16, FAT32, 
மற்றும் NTFS ஆகியவை வெவ்வேறு வகையான பைல் கட்டமைப்புகளாகும். 
14.
விண்டோஸ் என்.டி. (Windows NT)  யில் உள்ள என். டி. என்பதுNew Technology  என்ற சொற்களைக் குறிக்கிறது. 
15. 1977
ஆம் ஆண்டு,பில் கேட்ஸ் ஒருமுறை, மிக வேகமாகக் காரை ஓட்டியதற்காகக் கைது செய்யப்பட்டார். 
16.
விண்டோஸ் எக்ஸ்பியின் திரைத் தோற்றத்தில் மாற்றப்படா நிலையில் மிகப் பெரிய பச்சைப் புல்வெளி மேடும், பின்னணியில் மலையும் உள்ளதல்லவா? இதனை விண்டோஸ் பிளிஸ் (Bliss) எனப் பெயரிட்டுள்ளது. இந்த அழகான காட்சியைப் போட்டோவாக எடுத்தவர் பெயர் சார்ல்ஸ் ரியர்  (Charles O’Rear).கலிபோர்னியாவில் சொனாமா கவுண்ட்டி என்ற இடத்தில் இந்த போட்டோ எடுக்கப்பட்டது. இதனைப் பின்னர் மைக்ரோசாப்ட் பணம் கொடுத்து விலைக்கு வாங்கி, தன் எக்ஸ்பி சிஸ்டத்தில் மாறா நிலையில் உள்ள டெஸ்க்டாப் இமேஜாகப் பயன்படுத்தியது.

நெட்டி முறிக்கும் பழக்கம் உடையவரா நீங்கள்?

நம்மில் பலருக்கும் நெட்டி முறிக்கும் பழக்கம் உள்ளது. இப்படி நெட்டி முறிக்கும் போது ஒரு விதமான நிவாரணம் கிடைப்பது போல் தோன்றும். மேலும் அந்...

Popular Posts